மீடியா நம்ம கிட்ட இருந்து எத மறைக்குறாங்க..? மலைக்கு மேல் காத்திருக்கும் மர்மம்!
HTML-код
- Опубликовано: 2 авг 2024
- ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
01:04 - விசித்திரமான கோவில் டிசைன்
02:35 - விசித்திரமான கட்டிடக்கலை
03:41 - முதல் மரபணு மாற்றம்
05:22 - யாளியின் வகைகள்
07:26 - அழிந்து போன மிருகத்தின் சிற்பம்
09:27 - மாடர்ன் துவாரபாலகர்
10:28 - பழங்காலத்து Calling Bell?
11:24 - கோவிலின் கருவறை
11:51 - கோவில் கட்டுமானம்
12:40 - இந்த கோவில கட்டினது யாரு?
15:09 - வினோதமான சிற்பங்கள்
16:48 - மர்மமான இடத்தில் கட்டப்பட்ட கோவில்
18:49 - முடிவுரை
Hey guys, ரொம்ப தூரம் தள்ளி ஒரு மலை உச்சில பழங்காலத்து கோவில் இருக்கு, இங்க அவ்வளவா யாரும் சுத்தி பாக்குறதுக்கோ, இல்ல சாமி கும்பிடுறதுக்கோ வர்றதில்ல. ஆனா researchers, historians அப்பறம் archaeologists இவங்க எல்லாரும் இந்த இடத்த ஆராய்ச்சி பண்ணது மட்டுமில்லாம, இந்த இடத்தால அவங்க எல்லாரும் மண்டைய பிச்சுக்குற அளவுக்கு குழம்பி போய் இருக்காங்க. இந்த கோவிலோட origin, இதோட டிசைன் அப்பறம் இதுல மறைஞ்சுருக்கற codes இப்படி இந்த கோவில பத்தின எல்லாமே மர்மமாவே இருக்குது. வாங்க, இந்த extraordinary-ஆன (மர்மமான) கோவில போய் பாக்கலாம். இந்த கோவிலோட பேரு விஜயாலய சோழீஸ்வரம். அங்க மரத்துக்கு பின்னாடி இருக்கற கோவில் கோபுரத்த உங்களால பாக்க முடியுதா? அது தான் நாம தேடி வந்த கோவில், இன்னைக்கு இந்த கோவிலோட பேரு விஜயாலய சோழீஸ்வரம், ஆனா இதோட உண்மையான பேர் என்னனு, experts-லாம் கூட argue பண்ணிட்டு இருக்காங்க.
இதுக்குள்ள நுழையுறப்பவே இதோட design-அ பாத்து எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. இந்த கோவிலுக்கு main entrance எதுவும் இல்லையா? இது ரொம்ப shocking-ஆ இருக்குல்ல? எந்த ஒரு ஹிந்து கோவில வேணா எடுத்துக்கோங்க, அதோட மெயின் entrance, மெயின் கோபுரத்துக்கு straight-ஆ போற மாறி, அந்த கோவிலோட டிசைன் இருக்கும். அங்க ஒரு மெயின் கோபுரம் இருக்கும், அப்பறம் கோவிலோட entrance-ல at least இன்னொரு கோபுரமாவது இருக்கும். ஆனா இந்த டிசைன் complete-ஆ வித்தியாசமா இருக்கு. அதுமட்டுமில்ல, கோவிலுக்கு எதுத்தாப்புல(எதிர்ல) ஒரு நூறு அடி தூரத்துல, பெரிய மலை இருக்கறதையும் நம்மளால பாக்க முடியும்.
இதுக்கு என்ன அர்த்தம்னா, யாருமே இந்த கோவிலுக்கு பெருசா, grand-ஆ எந்த ஒரு கோபுரத்தையும் உருவாக்கல (கட்டல). ஒரு ராஜா, யான மேல ஏறி, இந்த கோவிலுக்குள்ள நுழையுறாருன்னு கற்பனை பண்ணிக்கோங்க. அவரால அத பண்ண முடியாது, அவரு இந்த வழியா வரணும், அப்படி இல்லனா, இந்த வழியா வரணும், அது விசித்திரமா இருக்கும், correct-ஆ? ஆனா இது அத விட விசித்திரமா இருக்கு, பின்னாடி கூட ஒரு சின்ன entrance இருக்கு, ஆனா அது சென்டர்ல இல்ல, ஒரு ஓரமா தான் இருக்கு. ஏன்? கவனமா பாத்தீங்கன்னா, அது ஏன்னு உங்களுக்கே புரியும். Entrance அப்பறம், compound சுவர் இதெல்லாமே வெறும் renovations தான், அதாவது புதிப்பிச்சது தான். அதெல்லாமே original கோவிலோட பகுதிங்க இல்ல. இந்த விஷயம் archeologists அ மொத்தமா குழப்பி விட்டுருச்சு.
இங்க எந்த ஒரு symmetry-அவுமே follow பண்ணல, இதோட டிசைன் வழக்கமான கோவில் டிசைன் மாறி இல்லங்கறத உங்களால இங்க பாக்க முடியும். வெளில இருந்து இந்த domes-அ உங்களால பாக்க முடியும். அதெல்லாம் சிதைஞ்சு போய் இருந்தாலும், அது கோவில் கோபுரம் மாறி தான் இருக்குல்ல? அப்போ நீங்க என்ன நினைப்பீங்க? இதெல்லாம் சாமி சன்னதின்னும், இதுக்குள்ள ஹிந்து சாமி-லாம் இருக்காங்கன்னும் தான் நினைப்பீங்க. ஆனா இந்த structures-க்குள்ள என்ன இருக்கு? நீங்க இந்த சன்னதிக்குள்ள / மண்டபத்துக்குள்ள (structure-க்குள்ள) நுழையுறப்பவே இங்க ஒண்ணுமே இல்ல empty-ஆ தான் இருக்குன்னு நீங்க புரிஞ்சுப்பீங்க.
இங்க சிலை இருந்ததுக்கான எந்த ஒரு அடையாளமோ இல்லனா, தடையமோ இல்ல, இந்த structures-லாம் ஒரு வேள empty-ஆவே இருந்துருக்கலாம். ஏன்? இந்த structures-அ எல்லாம் கட்டுறதுக்கு என்ன காரணமா இருக்கும்? ஏதாவது விசித்திரமான scientific experiments-காக அவங்க இதையெல்லாம் பயன்படுத்திருப்பாங்களா? நான் எதுக்காக ஒரு கோவில்ல இருக்கப்ப scientific experiment-அ பத்தி பேசுறேன்? அதுக்கு காரணம், இங்க இருக்கற சிற்பங்கள் தான். இங்க genetically modified ஆகிருக்கற மிருகங்கள, அதாவது மரபணு மாற்றப்பட்ட மிருகங்கள நீங்க பாக்கலாம். ஒவ்வொரு சிற்பங்கள்ல இருக்கறதையும் நாம யாளின்னு சொல்லுவோம். யாளி அப்படின்னா என்ன அர்த்தம்?
இன்னைக்கு நாம புது species-அ உருவாக்கிருக்கோம். பாதி சிங்கமும், பாதி புலியும் சேந்த அத liger-ன்னு சொல்லுறோம். Lion-ல இருக்கற மொத ரெண்டு எழுத்தையும், Tiger-ல இருக்கற கடைசி மூணு எழுத்தயும் சேத்து experts அத liger-னு சொல்றாங்க. ஆனா இது ஒன்னும் புதுசு இல்ல, நம்ம நாட்டுல இத பழங்காலத்துலயே பண்ணிட்டாங்க. யாளி அப்படின்ற வார்த்த நம்ம பழங்காலத்து தமிழ்ல இருந்து வந்தது தான்னு உங்களுக்கே நல்லா தெரியும். யாளி அப்படின்றது யானையும் புலியும் சேந்த ஒரு hybrid மிருகம். அதனால தான் யானை-ன்ற வார்த்தைல மொத பாதியவும், புலி -ன்ற வார்த்தைல இருக்கற கடைசி பாதியவும் எடுத்து வச்சு இத யாளின்னு சொல்றாங்க.
நெறய மிருகங்களோட DNA-வ சேத்து, நெறய புது புது species-அ உருவாக்குறதுக்கு, இந்த யாளி genetic hybrid ஒரு model-ஆ கூட இருக்கலாம். இப்போ இங்க கேள்வி என்னனா, இது வெறும் கற்பனையா? இல்ல, பழங்காலத்து தமிழர்கள் (இந்தியர்கள்) இந்த DNA-வ வச்சு, இந்த மிருகங்களோட hybrids-அ experiment பண்ணிருப்பாங்களா?
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.பல்லவ மற்றும் எகிப்து மன்னருக்கும் உள்ள தொடர்பு!- ruclips.net/video/i0A6Vro6PKI/видео.html
2.என்றும் நிலைக்கும் தமிழர் பெருமை!- ruclips.net/video/zGoWH3FFXl0/видео.html
3.நிலத்துக்கடியில் பதுங்கி இருக்கும் ரகசிய பிரமிடு?- ruclips.net/video/M8aZbYoA27Q/видео.html
அருமையான பதிவு 🙏
அற்புதமான பதிவு 🙏
அதிசயமான பதிவு 🙏
Nice...I too have seen some different animal like structures in 500 year old temple at Erode district. Like whale, Dugong and many.
@@arajesh6944 please tell me details.
@@mohanamathi1253 Ponkulali Amman temple, Erode district
@@arajesh6944 thank u.
உங்க வீடியோ பாத்துட்டு இப்போ எங்க கோவிலுக்கு போனாலும் உங்க நியாபகம் அதிகமா வருது சிற்பங்களோட அர்த்தங்களை எங்களாலயும் புரிஞ்சிக்க முடியுது நன்றி வத்தியாரே நீங்க ஒரு அற்புதமான மனிதர் வாழ்க வளமுடன் இன்னும் நிறைய சொல்லி குடுங்க கத்துக்குறோம் 👌🏻♥️
।yes
உண்மைதான்
நியாபகம் இல்ல
ஞாபகம் 🤝
Yes it's true.
Unmaithan
எந்தக் கோயிலுக்குப் போனாலும் பிரவீன் மோகன் தான் ஞாபகம் வரார் 😀😀 அற்புதமான ஆராய்ச்சி... அற்புதமான மனிதர் ❤️
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை என்ற இடத்தில் உள்ள கோவில் தான் இது. ஆச்சிரியங்காலும், மர்மங்களும், விசித்திரங்களும் நிறைந்த இந்த
கோவில் இன்றைக்கு கேட்பாரட்டு
கிடக்குறதே என்று நினைக்கும் போது மனதிற்கு வேதனையாக
உள்ளது. இதை யாராவுது அரசின்
பார்வைக்கு கொண்டு சென்றால் கோடி புண்ணியம் கிடைக்கும் 🙏🙏
புதுக்கோட்டை அணைத்து கோவில்களும் தமிழ் கல்வெட்டு இருக்கு எல்லாமே யாரும் கண்டுகொள்ளவில்லை கோவில்தான் மிகவும் வேதனையாகத்தான் உள்ளது
உண்மை சகோ
அதை நீங்க கூட பண்ணலாம் அண்ணா 😌
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அமைந்துள்ளது இந்தக் கோயில். இந்த இடத்திலிருந்துதான் சோழர்கள் தங்களுடைய பெருவுடையர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக கற்களை வெட்டி சென்ற இடம், கேட்பார் அற்று அதிகமாக வழிபாடு பண்பாடு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது, 😭😭😭😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾இந்த இடத்தை காண்பித்த வைக்கும் சிறந்த வாழ்த்துக்கள் இந்த சேனலுக்கு 👍👍👍🙏🏾
நன்றிகள் பல😇..!
Hi bro ேகாவில் உள்ள கருவறை சுற்றி ஒவியபம் நிறைய வள்ளது
நல்ல தகவல் தந்தீர்கள் 🙏🙏🙏🙏
👍👌👌 இறைவனை எப்படி வழிப்பட வேண்டும் என்ற மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு. துவார பாலகரை வணங்கி நாம் வந்த விசயத்தை கூறி விட்டு பின் தான் கருவறையில் உள்ள மூலவரை வணங்க வேண்டும் என்ற பழங்கால வழக்கத்தை எவ்வளவு அழகாக சொன்னீர்கள். இன்று அந்த முறைமைகள் பின்பற்றப் படுவதில்லை. சூப்பர் சூப்பர் தம்பி 👍🙏🙏🙏
தங்களின் முயற்சிகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தொடரட்டும் உங்கள் பணி.
நீங்க பழங்கால கோவில்கள் பற்றி சொல்லும்போதே ஒரு மர்ம கதை படிக்கும் உணர்வு வருகிறது... ஆனால் அந்த மர்ம முடிச்சு எப்போது அவிழும் என்றுதான் தெரியவில்லை 😭... தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மனம் பரபரக்கிறது
சீரிய சிற்ப சிந்தனை. கோயில்களுக்கு போனாலும் இதைப் போல் யாரும் கூறுவார் களா? என்பது சந்தேகமே. 1000 வருடங் களுக்கு முந்தை ய சிற்பிகளின் எண்ண ஓட்டம். புரிகிறது. சிற்பிகளுக்கு ஆணை யிட்ட மன்னன் . மன்னனுக்கு ஆணை யிட்ட குரு .குருவுக்கு ஆணை யிட்ட புராணம்.. நன்றி திரு. பிரவீன மோகன் அவர்களே .
புதுக்கோட்டை,மாவட்டம்(திருச்சி செல்லும் சாலையில்) நாா்த்தாமலை.என்னும் ஊரில் உள்ளது இந்தகோவில்...
Hi Praveen sir I have no words to say thodarattum thangal aanmeega pani
நல்ல தகவல்
நன்றி
உண்மையில் ஆசிரியர் கல்கியின் மறு அவதாரம் sir நீங்க👍
அருமையான பதிவு அண்ணா... உங்கள் காணொளி மற்றும் வாய்மொழி மூலம் நான் இவ்விடத்தை நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது அண்ணா 🥰.... வாழ்க வளமுடன்.
உங்க வார்த்தைக்கு ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏
வணக்கம் பிரவீன்......வாழ்த்துகள்.....
369 ...பற்றி ,அந்த எண்களுக்கும் ,energy க்கும் உள்ள ஏதோ ஒரு தொடர்பு பற்றி இந்த இடம் சில தடயங்களை சொல்வது உங்களுக்கு புரியுது...அதை எங்களுக்கு சொல்றீங்க........இவை எல்லாம் நம் போன்ற சாதாரண மனிதர்கள் செய்தவை அல்ல.......
இந்த கோவிலில் கள ஆய்வுக்கு சென்று இருக்கிறேன் தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோயிலுக்கு செல்வதற்கு முன்பு ஒரு விநாயகர் கோயிலும் அதன் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய நீர் தேக்கம் உள்ளது அங்கு ஒரு சிவலிங்கம் தண்ணீருக்கு அடியில் உள்ளது நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ளது சித்தனாவாசல் தேனிமலை குமாரமலை என பல வரலாற்று பொக்கிஷங்கள் உள்ளன அந்த கோவில் வழிபாட்டுக்கு உட்படுத்தாமல் அன்னியர் படைப்பு மூலம் அழிந்துவிட்டது கோவில்களில் விக்ரகங்கள் பெரும்பாலும் இல்லை மீண்டும் அங்கு விக்கிரகங்கள் சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் மலைகளின் காதலன் யூடுப் சேனல் சார்பாக களப்பணிக்கு சென்று வருகிறேன் வாழ்த்துக்கள் உங்களுக்கும்
நல்லது தம்பி 💐👍💪
வணக்கம் ப்ரவீன். சத்தியமா சொல்றேன் உங்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து சொல்ல முடியாது ப்ரவீன். உண்மையில் உங்களால் நம் சனாதன தர்மம் பெருமைப்பட வேண்டும். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை ப்ரவீன். ஆராய்ச்சி மூளை உங்களுக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ப்ரவீன். ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீ ராம். பாரத் மாதா கி ஜே!
மிக்க நன்றி..!
இந்தக் கோயில் அருமை. இந்தக்
கோயில் தாண்டி பல கோயில்கள்
சென்றுவந்துள்ளோம். விஜயாலய
சோழீச்வரம் செல்ல சந்தர்ப்பம்
இல்லை. இக்காணொளியைச்
கண்டபிறகு உடனே சென்று வர
வேண்டும் என ஆவல் எழுகிறது பனிரெண்டு திருமாலையும்
விதவிதமான யாழிகளையும்
கண்டு வரவேண்டும்
ப்ரவீன் தவிர வேறு யாரும் இப்படி யோசிக்க முடியுமா தெரியவில்லை good job
உங்க வார்த்தைக்கு ரொம்ப நன்றி சகோ 😇🙏
அற்புதம் கண்டு பிடிப்பு..... யாரும் போக முடியாத இடத்துக்கு எல்லாம் போய்..... சிலை...கலை ஆராய்ச்சி செய்வது பாராட்டத்தக்கது.... சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது..... நன்றி
சரித்திரம் பயன்படுத்த வேண்டாம் தமிழில் வரலாற்று முக்கியத்துவம் பயன்படுத்தவும்
Many thanks
இனி எந்த கோவிலுக்கு போனாலும் எங்கள் கண்களும் இன்ச் இன்ச் அ research பண்ணும் sir...
ஓட்டப் பந்தய வீரர் மாதிரி கோவில சுத்திட்டு வரும் நாம் ஒவ்வொரு சிலையையும் ஒவ்வொரு கோவிலையும் நிதானமாய் கவனித்து பார்த்தால் இந்த ஆயுள் போறாது...+ கலை அழகில் மயங்கி வாழ்வின் உண்மை நிலையாமை புரிந்து ஞானி ஆகிவிடுவோம்
இன்றைய நமது சிறப்பான
தமிழ் ஆராய்சியாளர் .
பழங்காலத்து தமிழன் எல்லாத் துறைகளிலும் சிறந்து நின்றான் என்பதை உங்களைப் போன்றவர்களால்தான் உலகிற்கு உணர்த்த முடியும்.தலை வணங்குறேன் !
Indian
எல்லா த்துறையிலும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. வயிறு நிரம்பி இருக்கிற போது பக்தி இசை கல்வி மேல் எழும். நதிக் கரை வாழ்வு சிறந்த தாலேயே நதிக்கரை கோயில் கள் சிறந்தன.
எங்களுக்கா நிறைய செய்திகளை சிரமப்பட்டு சேகரித்து தருகிறீர்கள் நன்றி பிரவீன் சார்
மிக்க நன்றி..!
ஸார் நீங்க இடத்தோட பெயர் குறிப்பிட்டால் நல்லாருக்கும்....நீங்க எவ்வளவு அருமையான தகவல்கள் தர்றீங்க....அதை மேலும் முழுமையாக உணரனும்னா நீங்க இடத்தோட பெயர் பற்றியும் சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்.
நார்த்தாமலை புதுக்கோட்டை மாவட்டம்
@@kksk8737 நன்றி ஸார்.
எல்லாமே ஒரு கேள்விக்குறியில் நிற்கிறது முடிவுகளை நீங்கள்தான் சொல்லவேண்டும் அந்த தகுதி உங்களை போல ஆராச்சியாளரிடமேதான் உள்ளது காணொளி வெகு ரசனை சகோ🙏
நன்றிகள் பல😇..!
உங்களது ஆராய்ச்சி வீடியோக்கள் நம் நாட்டின் பெருமையை விளக்குவதாக உள்ளது.
உங்கள் சேவை தொடரட்டும்.
வாழ்த்துக்கள்!
விஜயசோழிங்கபுரம் போகும் வழி எது?
நீங்கள் Google Maps சில் ஃபோட்டோக்கள் பதிவிடுகிறீர்களா?
அற்புதம், 👏👏💐💐
நம் முன்னோர்கள் genetic science இல் ரொம்ப advanced ஆ இருந்திருப்பாங்க போல... ஏற்கனவே உங்க DNA spirals ம் இதை தான் சொல்லியது...
அருமை வாழ்த்துக்கள் 👏👏👏
நன்றி நண்பரே🙏..!
நமது நாட்டின் தொன்மையான வரலாறு தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.🙏🏻🙏🏻🙏🏻தற்கால cloning முறையை போன்ற ஒன்றோ (2, 4, 6 12,24).மிக்க நன்றி பிரவீன்.அருமையான காணொளி 👌🏻👌🏻👌🏻.
ரொம்ப நன்றி சகோ!
இவ்வளவு ஒதுக்குப்புறமான இடத்தில் வித்தியாசமான அமைப்பில் ரகசிய குறியீடுகளுடன் கட்டப்பட்ட இக்கோயில் மூலம் நமக்கு எதையோ உணர்த்த முயன்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் .ஆராய்ந்து அறிவீர்கள் என்று நம்புகிறேன்..வாழ்த்துகள் நண்பரே
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
என்ன சொல்வது...அவ்வளவு முக்கியமான பதிவு.நன்றிகள் கோடி.
😇😇🙏🙏🙏
Ithu atagam sium idam
ஜெய் முத்துராஜா 💥🙏🦁👏⚔️
சகோ ௭ங்களால இதுமாதிரியான கோவில் பார்கும் வாய்ப்பு ௭ங்களுக்கு கிடைக்கவில்லை ௨ங்களால் கானமுடிகிரது நன்றி
Yeppadi Sir ethellam kandu pidikkireenga yevvalavu Nunnarivu vungaluku.ennum niraya video pottu neenga niraiya famous aaganum Nanbaa👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻
பிரவீன் சார்.
உங்களின் கண்டுபிடிப்பு உண்மையோ பொய்யோ ஆனால் அதற்கான விளக்கம் பிரமாதம். இதில் நிச்சயமா இன்னும் ஏராளமான அற்புதங்கள் அடங்கி உள்ளன. வினோதமான விளக்கம்.
இவையெல்லாம் ஏன் உலக அதிசய மாக இடம் பெறவில்லை. பாராட்டுக்கள் நண்பா.
நீங்க எங்களுக்கு கெடச்ச பொக்கிஷம் sir நீங்க ரொம்ப நாள் ஆரோக்கியமா இருக்கனும் sir
நன்றிகள் பல😇..!
இது கோவில்களுக்கான மாடல் கோவிலாக இருக்குமோ எல்லா வகையான சிற்பங்களையும் செதுக்கிக் பார்த்து மற்ற கோவில்களை கட்டி இருப்பார்களோ அருமை நன்றி சகோதரா
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
நீங்கள் சொல்வது போல நிறைய வாய்ப்பு இருக்கிறது. சோழ மன்னன் புதுக்கோட்டை அரசனின் மகளை மணம் முடித்து தனது மாமனார் கட்டியிருந்த சிறியதொரு கல்லினால் கட்டப்பட்ட கோவிலை கண்டு வியந்து அதை model ஆக கொண்டு பெரிய கோவிலை எழுப்பியதாகவும்...தஞ்சையை சுற்றி எந்த மலையும் இல்லாத பட்சத்தில் வெளியிலிருந்து கொண்டு வந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப் படுகிறது.
ஒருவேளை இந்த மலையிலிருந்து தஞ்சை கோவிலுக்கு கற்கள் எடுத்து செல்லப்பட்டிருக்கலாம்.
kovilai
பிரவின் sir உங்களுடைய பதிவை மத்திய அரசுக்கு தெரியபடுத்துங்கள் நிச்சயம் உங்களுடைய முயற்ச்சிக்கு நல்ல அங்கிகாரம் கிடைக்கும்
அண்ணா எனக்கு 11 வயசு நான் உங்க kaனொலி இப்பொது தான் பார்க்கிரேன்
I love history
Hi Praveen sir, sometimes I think you are the ancient architect who cured these beautiful & mysterious temple & now rebirth as Praveen mohan to people aware about the richness of ancientors& their research , well explained and unique point of view sir, keep explore more for us,😎😎😎
So nice of you
அருமை... உண்மை
@@PraveenMohanTamil
எசலாம் செப்பேடுகள் உள்ள
கோவில் தெரியுமா?
Well said.!!!
துவாரபாலகர்கள் பற்றிய ஆய்வு மிக அற்புதம்...உங்களின் பதிவுகள் அனைத்தும் காக்கப்படவெண்டிய பொக்கிஷம் ...🙏
🙏🙏🙏
இந்த கோவிலின் geometrical structure மற்றும் சிலைகளை பற்றி தெரிந்து கொள்ளனும் னா cosmology பத்தி தெரிஞ்சிக்கனும். இந்த கோவிலோட structure and hybrid animals la cosmology and history பற்றி சொல்லக்கூடியது.I think jain religion la இதே structure la நிறைய drawings இருக்கு..
இந்த கோவில் முத்தரையர் மன்னர்களால் கட்டப்பட்டது. இவர்கள் கட்டிய கோவிலில் சிவனும் விஷ்ணுவும் இருப்பது அவர்களது சிறப்பு.
3 , 6, 12, 24.... இது எதையோ குறிப்பால் உணர்த்த முற்படுவது போல் உள்ளது
வெளியில் பெருமாள் ,உள்ளே
சிவன்
இதன் பொருளும் விளங்கவில்லை விசித்திரம்.
தஞ்சை கோவிலின் முன்மாதிரியாக (model) இருக்கலாம்👍
பிரவின் மோகன் என்ற ஒரு தமிழன் னாள் மட்டுமே இது முடியும்🙏🙏🙏🙏🙏 💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍
நன்றிகள் பல😇..!
Hi Praveen Beautiful temple at Narrthamalai ,pudukottai. ..இது 6ம் நூற்றாண்டு அல்லது 4/5 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் குகைகள் /// குடைவரைக் கோவில்களைக் கொண்ட சமண கோவில். இது மலையை ஒட்டி உள்ளது.
இல்லை சமண கோவில் இருக்காது.சோழர்முறை கோவிலாகவே தெரிகிறது. சுற்றுச் சுவர் மேல் நந்தி இருப்பதால் அப்படி நினைக்கிறேன்
வாழ்த்துக்கள் பீரவீன்சார்.உங்கள் தேடல் கள் மூலம் நாங்களும் பார்க்கமுடியாத இடங்களையல்லாம் பார்க்கமுடிகிறது புரிந்து கொள்ள முடியாத ரகசியங்களையல்லாம்தெரிந்துகொள்ளமுடிகிறது.நீங்கள்சொல்லும்எண்கள் எல்லாம் அந்தந்த உயிர்களின் மரபணுவின் கூட்டுப் புள்ளிகளாக இருக்க கூடும்.இது எனது அனுமானம் தான்.உண்மையை வெளிப்படுத்த நீங்கள் தான் முன்வரவேண்டும்.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உங்களிடம் ஆலோசித்தால் விரைவில் கண்டுபிடிக்க முடியும்.வாழ்த்துகள்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
இந்த ஜென்மம் பூரா உக்காந்து யோசிச்சாலும் எங்களுக்கு புரியபோரது இல்ல நீங்களே தயவுசெய்து சொல்லிடுங்க
😀
காலை வணக்கம் பிரவின் அண்ணா🙏 வாழ்க வளமுடன்....
காலை வணக்கம் 😇🙏
ஆம்அண்ணா அவர்கள் தான் குகைவாசிகள்பலம்பொருந்திய அறிவுஅதிம்நாகரியமுடையபலசாலிகள்......நம்மழவிட ஆற்றல்நிறைந்தநம்மூதாதையர்
ஆராய்ச்சி செய்வதற்கு என்றே இந்த கோயில்கள் கட்டப்பட்ட து என்றே தோன்றுகிறது. அதிலும் genetic experiments.praveen seems to be very brilliant and inquisitive
Worthful research for future generation 🤩
Thank you so much 😇🙏
எப்படி பிரவீன் மோகன் இதையெல்லாம் கண்டு பிடிக்கறீங்க நான்உங்களின் அறிவை கண்டு ஆச்சர்யப்படுகிறேன் அருமை அதைவிட தங்களின் தெளிவான விளக்கம் சூப்பர் நன்றி தம்பி .எம்.சந்திரா.திருப்பூர்.
நன்றிகள் சகோ 🙏
உங்கள் படைப்புகளை பார்க்க பார்க்க மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது. இந்திய மற்றும் தமிழ் கலாசாரத்தை மிகத் தெளிவாக காட்டுவதற்கு நன்றி. அற்புதமான ஆராய்ச்சிகள்.
praveen mohan sir, கோவில் சென்றால் உங்கள் ஞாபகம் தான் வருகிறது.
பிரம்மாண்டமாய் இருக்கிறது.... தமிழனின் படைப்பும்....தங்களின் விளக்கமும்..... அருமையான பதிவு...
நன்றிகள் பல😇..!
Excellent job, keep it up Parveen🙌
Thanks a lot 😊
As u said,if they used fa genetically modified research here, trying to say can make double if v combine together...even clone also possible that vishnu resembles...3 ,6 ,12,24. ...3+3=6,6+6=12,12+12=24...just my opinion...u r doing a great job..ur videos everyone should see across the country especially our govt...
Yes. Your answer makes sense. Super
நீங்க சொன்ன பிறகு தான் கோவிலோட அர்த்தங்கள தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு
மிக்க நன்றி..!
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி பிரவின் மோகன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் சிறப்பு மிக்க ஒரு இடம் குறிப்பாக உங்கள் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் நிறைய விவரங்கள் கூறினீர்கள் ஆனால் இந்த இடம் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்று நீங்கள் கூறவில்லை என்று நினைக்கிறேன் இதை தெரிந்து கொள்ள ஆவல்? அற்புதமான காணொளி நன்றி 🙏👍
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
முத்தரையர் மன்னரால் கட்டபட்ட கோவில் .... இதை சொல்வதில் என்ன தயக்கம் ????
ப்பிரவின் ஒரு கடவுள் பிறவி வாழ்த்துக்கள்
😲😲😲🙏🙏🙏
உங்கள் வலைதளத்தில் கூறப்பட்ட கருத்து விளக்கம் சிறப்பு சிறப்பு சிறப்பு. நல்ல பயனுள்ள தகவல்.
புதுக்கோட்டை ஆக சிறந்த பழமை மிகுந்த புராண சின்னங்கள் உள்ள ஊர் எங்கள் ஊர்...
தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
தங்களுடைய பதிவு மிக சிறப்பு.
வாழ்க வளர்க ...
TN 55 👑💯🔥
இந்த கோவில் சூரிய குல சத்திரிய வம்சத்தை சேர்ந்த கரிகாலச் சோழன் வழிவந்த மன்னர் இளங்கோ அதிஅரையர் என்கிற முத்தரையர் மன்னரால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது சோழ முத்தரையர்களின் கட்டிட கலையின் ஆரம்பம் என வரலாறு கூறுகிறது.பின்நாட்களில் விஜயாலய சோழன் அரியணை ஏறிய பின்னர் இந்த கோவிலை பராமரித்து பாதுகாத்து வந்துள்ளார் எனவே இக்கோவில் விஜயாலயசோழீஸ்வரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.🟡🔴வாழ்க தமிழ்!!!வாழ்க சோழமுத்தரையர் வம்சம்! வாழ்க முத்தரையர் மக்கள்! வளர்க சோழமுத்தரையர் புகழ்!🟡🔴(குறிப்பு): தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட முதல் மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் 👑🦁🟡🔴🟡🔴
நீங்க வேற லெவல்.ஊங்களால் மட்டும் தான் முடியும். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
😇😇🙏🙏🙏
யாழி.என்ற.பெயருக்கு.
அர்த்தம்.சூப்பர்.சார்.இந்த.மாதிரி.இருக்கும்.கோவில்
களை.பாராமரிப்பவர்கள்.
யார்.சார்..
😇😇🙏🙏🙏
@@PraveenMohanTamil 🙏
Small domes or temples may be empty because the idols might have been stolen without a trace of evidence
அற்புதமான பொக்கிஷம் இந்த கோவில்.அருமை உங்களது பணி👏👏👏👏
நன்றி நண்பரே🙏..!
சகோதரா இது என்னைப் பொறுத்தவரை அரசர்களின் பள்ளி என்று நினைக்கிறேன். பனிரெண்டு தலைமுறை கரை சேர பணிரெண்டு விஷ்ணு சிலைகள் செதுக்கி இருக்கலாம்.
பழமையான புத்தகங்கள் மற்றும் ஏட்டு சுவடிகள் ஆராய்ச்சி மையம் சென்றால் ஒரு வேளை பதில் கிடைக்கலாம் நன்றி பிரவீன்
மிக்க நன்றி சகோ 😇🙏
🙏
தம்பி பிரவீன் மோகன் தங்களின் தங்களின் ஆராய்ச்சியும் வெற்றி பெறட்டும். வாழ்த்துக்கள்.
நன்றிகள்
நார்த்தாமலை
உங்கள் ஒவ்வொரு படைப்பும் அருமை.பார்க்க பார்க்க மிகவும் ஆணந்தமாக இருக்கின்றது இதற்காக தங்களுக்கு தலைவணங்குகிறேண்.இந்திய கலாசாரத்தை மிகத் தெளிவாக காட்டுவதற்கு நண்றி.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
You are Really great scientist praveen Mohan. No one can discovered like you brother. You are the really genius.
Friend i too have seen such a different animal structure at one very old temple in erode district...like whale, Dugong etc..
பிரவீன் சார் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அருமை
நன்றிகள் பல சகோ 🙏😇
Sir explanation as usual super 👍in your own style...videos gives the real experience as visiting the temple. one suggestion pls mention the name of the place in introduction💐
Thank you very much, kindly check the description for location 😇🙏
Ok sir
அருமை💪ஒவ்வொரு வார்த்தைக்கும் புரியும் வகையில் பதில் சொல்வது பாராட்டிற்குரியது👍
🙏 நன்றி 😊
நிறைய கோயில்கள் தொடர்பான புதிய தகவல்களைத் தருவதற்கு
மிக்க நன்றி தம்பி !!
வாழ்த்துக்கள் !!
நன்றிகள் பல😇..!
1:18 wat a beautiful coverage and example video to make the viewers understand... Thank u
Glad you liked it
பிரவின் மோகனுக்கு நன்றி.. எங்களுக்கு தெரியாத தகவல்களையெல்லாம் ஒன்று விடாமல் சொல்லியிருக்கீறீர்கள்.
நன்றி நண்பரே🙏..!
நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க வளத்துடன்
நன்றிகள் பல 😇🙏
Your study about this rare old temple is very good and interesting. Keep going
Thank you so much 🙂
பிரவீண் உங்களால் நாங்கள் நிறைய பார்க்க முடியாத கோவில்களை அழைத்துப்போய் காட்டுகிறீர்கள் . God bless you .
Hats off to you
நன்றிகள் பல😇..!
From the temple name itself states that this temple might be built during the rule duration of Vijayalaya Cholan. I'm pretty sure this temple is built by Vijayalaya cholan or might be built in his duration. He's the ancestor of adhitya,paranthaka, arinjaya,sundara and raja raja cholars. So it's possible...he might be the predecessor to the later cholars in Temple Architect
அருமை அருமையான விளக்கம் ப்ரவீன் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
தங்களது சேவை இந்த நாட்டிற்கு மிக மிக பயனுள்ளது👏🏽
உங்கள் தேடல் கள ஆய்வு வர்ணனை யாவும் சிறப்பு பிரவீன் மோகன் தொடரட்டும் உங்கள் அர்பணிப்பு சேவைகள்
ரொம்ப நன்றி சகோ!
நான் உங்கள் சேனலின் மிகத்தீவிர ரசிகன் பல விடியோக்களை முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தற்போது தமிழிலும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன்.
பிரவீன் மோகன் நீங்கள்
மிகப் பெரிய திறமைசாலி
வாழ்த்துகள்
இந்த அறிய பொக்கிசத்தை நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாக்கவேண்டும்.
வாழ்க வளமுடன் சகோ. தொடரட்டும் உங்கள் சமுதாயப்பணி. 💐
நன்றிகள் பல😇..!
உங்களுடைய இந்த பதிவிற்கு றெம்ப நன்றி👍👍👍👍
நன்றிகள் பல😇..!
அருமை நன்றி வாழ்க வளமுடன்
நன்றிகள் பல சகோ 😇🙏
i am following you gd job plz instead of asking viewers about the comments about mystries plz tell your assumtions bcos it makes us puzzelled👍
Hi Praveen.thanks for bringing to our knowledge such a mysterious sculpture.
My pleasure, thank you so much
அற்புதமான வீடியோ அற்புதமான பதிவு சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💐
Intha koviluku nan poiruken nanba narthamalai 🙋🙏 😃
வாழ்த்துக்கள் 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐
ரெம்ப. அழகாக. இருக்கிறது. கோயில்🙏🙏🙏
நன்றிகள் பல😇..!
Excellent thanks valga valamudan sir
Mikka Nandri 🙏😇
Interesting video sir...🙂You are an intelligent person💞...No one could ever replace you...
Thank you so much 😀