திருமணத்தடை நீங்க நல்ல வரன் அமைய அபிராமி அந்தாதி | Thirumana Thadai Neenga Manthiram
HTML-код
- Опубликовано: 18 май 2020
- திருமண வயது நெருங்கியும், கடந்தும் பல்வேறு காரணங்களால் பலருக்கு திருமணம் தள்ளி போய்க்கொண்டேயிருக்கும். இப்படி ஏற்படும் அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, விரைவில் நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் கைகூட உதவும் மிக சிறந்த அபிராமி அந்தாதி பாடல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.
அபிராமி அந்தாதி பாராயணம்:
அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம்.
நாம் ஏற்கனவே முந்தய பதிவுகளில் சொன்ன மாதிரி, முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்: அபிராமி அந்தாதி 101 வது பாடல்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
நாம் ஏற்கனவே சொன்னது போல அபிராமி அந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளது இதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரியத்தைச் சித்தி செய்யக்கூடிய மந்திரசக்தி படைத்தவையாகும். அதில் பாடல் எண் 17 மற்றும் பாடல் எண் 35 நல்ல வரன் அமையவும், விரைவில் திருமணம் நிறைவேறவும்உதவும் மந்திரசக்தி படைத்த பாடல்கள் என்று குறிப்பிட பட்டுள்ளது.
அடுத்து இன்னைக்கு நாம பக்க போற 2 காரிய சித்தி பாடல்களையும் பார்க்கலாம். திருமணம் தாமதம் ஆகும் அன்பர்கள், நல்ல வாழ்கை துணை வேண்டும் அன்பர்கள் அவர்களே இந்த பதிகங்களை தாங்களே தினமும் பாராயணம் செய்து அம்மாவை மனமார வேண்டி வந்தால் மிகவும் நல்லது, இல்லை என்றால் அவர்களின் பெற்றோர்கள் கூட இதை தினமும் பாராயணம் செய்யலாம்.
1. நல்ல வரன் அமைய - அபிராமி அந்தாதி 17 வது பாடல்
அதிசய மான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதிசய மான தபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசய மாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
அபிராமி அன்னை மிகவும் அதிசயமான வடிவத்தைக் கொண்டவள், உலகத்து அத்தனை தாமரைகளும் பெறத் தவமிருக்கும் முக அழகைக் கொண்டவளும், ரதியின் கணவனான மன்மதனின் வெற்றியைத் தன் நெற்றிக் கண் பார்வையால் தோல்வியாக்கியவரான சிவா பெருமானின் விருப்பம் வெற்றிகரமாக நிறைவேற அவரின் இடப் பாகத்தை ஏற்று, இன்னும் மேம்பட்ட வடிவைப் பெற்றவளும் ஆன அன்னை அபிராமி அல்லவா எனக்குத் துணையானவள்.
2. திருமணம் நிறைவேற - அபிராமி அந்தாதி 35 வது பாடல்
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட் கொருதவம் எய்தியவா! எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்களையுடைய ஆதி சேஷன் மேல் துயில் கொள்ளும் பரம்பொருளே.(இங்கே அபிராமி பட்டர், அன்னை ஆதிபராசக்தியே வைஷ்ணவி என்னும் திருநாமத்தோடு திருமாலின் அம்சமாகக் காட்சியளிக்கின்றாள் என்று பாடுகிறார்). ஈசனின் திருமுடியிலுள்ள பிறைச்சந்திரனைப் போல் அழகிய தோற்றமும் ஒளியும் கொண்ட நறுமணம் வீசும் உன் திருவடிகளில் தலை வைத்து வணங்கும் வாய்ப்பு தேவர்களுக்கும் ஏனைய வானவருக்கும் கிடைக்குமோ? அவர்களுக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு உன் அடியார்களான எங்களுக்குக் கிடைத்தது எங்கள் தவப்பயனே.
அன்பர்கள் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த 2 கரிய சித்தி பாடல்கள் ஒவ்வொன்றையும் 3 முறை ஓதினால் அன்னையின் அருளால் திருமண தடைகள் அனைத்தும் விலகி நல்ல வாழ்க்கை துணையுடன் விரைவில் திருமணம் கைகூடம்.
#aalayamselveer #thirumanathadaineenga
திருமணத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் அன்னை அருளால் நல்ல வாழ்க்கைத் துணையுடன் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்.
என் மகனுக்கு விரைலில் நல்ல திருமண வாழ்கை அமைய வேண்டும் அம்மா அபிராமி யே உன் கடைக்கண் பார்வையை காட்டியருளுவாய்
திருமண தடைகளால் கவலயுரும் என் போன்ற அம்மாக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு மிக மிக நன்றி!🙏🙏🙏🙏
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே
அந்த அபிராமி அண்ணையை வேண்டிக்கொள்கிறேன் இரண்டு வருடங்களாக என் சகோதரிக்கு வரன் தேடிக்கொன்டிறுக்கிறோம் கூடிய விரைவில் திருமணம் நடைபெற அந்த அபிராமி அண்ணை அருள் புரிய வேண்டுகிறேன்
அம்மா அம்பிரமியே என் மகளுக்கு நல்ல வரன் சீக்கிரம் அமைய வேண்டும் தாயே
வணக்கம் அன்னா ஒரு வீட்டில் ஒறுத்தறுக்கு திருமணம் நடக்க வில்லை என்றால்லே கஷ்டமாக இருக்கும் ஆனால் எங்கள் வீட்டில் மூன்று பேர் இறுக்கிறோம் என்னுடைய சகோதரி வயது 32. சகோதரன் வயது 29.எனக்கு 26. ஆகியும் இதுவரை திறமணம் நடக்க வில்லை என்ன செய்வது
எனக்கு திருமணம் நடைபெற அன்னை அபிராமி ஆசிர்வதிக்கட்டும்
Enaku thirumanam nadaga pray panuga frnds🙏🙏🙏🙏
தாயே என் இரண்டு மகன்களுக்கும் நல்ல படியாக வரன் அமைந்து நல்ல படியாக திருமணம் நடக்க அருள் புரிவாய் தயே
anna ennaku pathiraigai adichi nikkara suzhal yerpattudiuchi, ithuku mantra solunga , en kodambam manam poga kudathu
Amma, en maganuku viravil thirumanam ammayanum
Aen annan manimaran innum thirumanam akala Dhanu Rashi pooradam nachathiram mailaduthurai
என் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையவேண்டும்
எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே
En maganuku thirumanam mudiya aurul.purivayaga Abirami Thaye amma
En akka magal thirumanam viraivil nadaka anaivarum asirvatham seiungal
என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக அபிராமி அம்மன் துணை
🌿🌿🌿🌺🌺🌺🙏
Eanku thirumanam aganum ma en rashi simam rashi ku thirumanam aganum amman 🌿🌿🌿🌺🌺🌺🙏🙏🙏