4. நல்ல வரன் அமைந்து, விரைவில் திருமணம் நடக்க படிக்கச் வேண்டிய பதிகம் | Padhigam for Marriage

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2021
  • திருமணஞ்சேரி பதிகம்:
    அயிலாரும் அம்பதனாற்புர மூன்றெய்து
    குயிலாரும் மென்மொழியாளொரு கூறாகி
    மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
    பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 1
    விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
    நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
    மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
    பதியானைப் பாடவல்லார்வினை பாறுமே. 2
    எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
    இப்பாலா யெனையும் ஆள வுரியானை
    வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
    மெய்ப்பானை மேவிநின்றார்வினை வீடுமே. 3
    விடையானை மேலுலகேழுமிப் பாரெலாம்
    உடையானை ஊழிதோறூழி உளதாய
    படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
    அடைவானை யடையவல்லார்க்கில்லை யல்லலே. 4
    எறியார்பூங் கொன்றையினோடும் இளமத்தம்
    வெறியாருஞ் செஞ்சடையார மிலைத்தானை
    மறியாருங் கையுடையானை மணஞ்சேரிச்
    செறிவானைச் செப்பவல்லார்க் கிடர் சேராவே. 5
    மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
    பழியாமைப் பண்ணிசையான பகர்வானை
    வழியானை வானவரேத்து மணஞ்சேரி
    இழியாமை யேத்தவல்லார்க்கெய்தும் இன்பமே. 6
    எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
    கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
    மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
    பெண்ணானைப் பேசநின்றார்பெரி யோர்களே. 7
    எடுத்தானை யெழில்முடியெட்டும் இரண்டுந்தோள்
    கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
    மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
    பிடித்தாரப் பேணவல்லார்பெரியோர்களே. 8
    சொல்லானைத் தோற்றங்கண்டானும் நெடுமாலும்
    கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
    வல்லார்நன் மாதவரேத்தும் மணஞ்சேரி
    எல்லாமாம் எம்பெருமான் கழல் ஏத்துமே. 9
    சற்றேயுந் தாமறிவில்சமண் சாக்கியர்
    சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
    வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
    பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. 10
    கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
    தண்ணார்சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
    மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
    பண்ணாரப் பாடவல்லார்க்கில்லை பாவமே. 11
    திருப்புகழ் 1:
    விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
    மிகவானி லிந்து வெயில்காய
    மிதவாடை வந்து தழல்போல வொன்ற
    வினைமாதர் தந்தம் வசைகூற
    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
    கொடிதான துன்ப மயல்தீர
    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
    குறைதீர வந்து குறுகாயோ
    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
    வழிபாடு தந்த மதியாளா
    மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
    வடிவேலெ றிந்த அதிதீரா
    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
    மடியாரி டைஞ்சல் களைவோனே
    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
    அலைவாயு கந்த பெருமாளே.
    திருப்புகழ் 2:
    நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
    நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
    மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
    மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
    வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
    வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
    நாலந்த வேதத்தின் பொருளோனே
    நானென்று மார்தட்டும் பெருமாளே.
    1. இக்கட்டான சூழ்நிலையிலும் மன அமைதியைத் தரும் பதிகம் | Padhigam which gives Peace of Mind
    • 1. இக்கட்டான சூழ்நிலைய...
    2. கெட்ட கனவுகள் & எம பயம் வராமல் தடுக்கும் பதிகம் | Padhigam to avoid bad dreams & fear about Yaman
    • 2. கெட்ட கனவுகள் & எம ...
    3. உலக நன்மைக்காக படிக்க வேண்டிய பதிகம் | Padhigam to be read for Global benefits & Peace
    • 3. உலக நன்மைக்காக படிக...
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 948

  • @ni1622
    @ni1622 2 года назад +182

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த வயதான பெற்றோர் காக பிராத்திக்கவும்

  • @srikanthl2859
    @srikanthl2859 2 года назад +25

    அக்கா விறல் மாறனைந்து என்ற பதிகத்தால் நான் பயன் அடைந்து உள்ளேன். முதலில் அபிராமி அந்தாதியில் வரும் 35 தாவது பதிகமான திங்கட் பகவின் மணம்நாறும் என்ற பதிகத்தை நீங்கள் சொல்லி படித்தேன். எனக்கு திருமணம் உறுதி செய்ய பட்டபின்பு அத்தோடு விரல்மாரனைந்து என்ற பதிகத்தை வள்ளி தெய்வானை அவர்களோடு முருகப் பெருமான் இருக்கும் படத்தை வைத்து நெய் தீபம் ஏற்றி என் ஒன்று விட்ட சகோதரி சொன்னது போல் நாற்பத்தெட்டு நாட்கள் படித்தேன். அதன் பின்பு இப்போது நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே என்ற பதிகத்தை கடந்த அம்மாவாசை முதல் படிக்கிறேன். எனக்கு இந்த மாதம் August 20 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அதற்கு எனது திருமண அழைப்பிதழை அனுப்புகிறேன். இந்த சகோதரனுக்கு உங்கள் ஆசிர்வாதங்கள் என்றும் வேண்டும்.

  • @ajaysindu9746
    @ajaysindu9746 Год назад +25

    உண்மையே இந்த பதிகங்களை படிக்க விரைவில் திருமணம் நடக்கும். அனுபவ உண்மை.

  • @devis2176
    @devis2176 3 года назад +72

    Viral Maranaithu thirupugal na padichen 48days la enaku marriage fix agi ipo na 8month convince a iruken na pona year ninga intha pathivu potueunthinga atha pathu na padichen enaku marriage nadanthu ningathan karanam amma rempa Rempa nantri itha na maddum padikala enoda oruthangalum itha padicha avangalukum 48days la fix agi avangalum ipo convince a irukanga nantri nantri amma life LA epavume maraka matten

  • @devipattinamnews
    @devipattinamnews Год назад +17

    எனக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் நண்பர்களே அதே மாதிரி இங்க எத்தனை பேருக்கு திருமணம் நடக்கமா வந்துருக்கிங்க அவகளுக்கும் மிக விரைவில் என்னை மாதிரி திருமணம் நடக்கனும்னு வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @gokilaramani8282
    @gokilaramani8282 2 года назад +21

    நான் திருப்புகழ் 1 பதிகம் படித்த பின்புதான் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து இருகுழந்தைகளுடன் நலமாக இருக்கிறோம், அம்மா

  • @sivamayamsiva8180
    @sivamayamsiva8180 3 года назад +11

    இதற்கு முன் பதிவுகளில் ஔ நீங்கள்சொல்வது போல திரு புகழ் பாடலைமனதில் நினைத்து பாடியதால் வழிபாடு துவங்கி மூன்றாவது வாரத்திற்குள் நல்ல தகவல் வந்து திருமணம் முடிந்து இப்போது என் கணவர் தம்பி மனைவி வளைகாப்பு நிகழ்வு நடக்கும் நிலை யில் உள்ளது நன்றி அம்மா

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 года назад +9

    இந்த மாதிரி புணிதமான பதிவை தருவதற்கும் யாரும் இல்லாத காரணத்தினால் ஏழை,எளியவருக்கும் சரிவர தெரிவதில்லை என்பதே முழுக்க,முழுக்க உண்மை.இதற்கும் டிஸ் லைக் பன்னியவர்களை என்ன சொல்வது,அவர்கள் புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லை என்பதே உண்மை.தேவாரம்,திரு வாசகம்,திருப்புகழ்,அபிராமி அந்தாதிகளை இனி வரும் காலங்களில் நானும் படிப்பேன்.அதற்கு கடவுளும் அருள் புரிய வேண்டுகிறேன்.ஒம் நமசிவாய,சீவாய நமக.சிவ,சிவ.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +9

    அம்மா வணக்கம்.நான் திருமணஞ்சேரி உட்பட 50 மற்றும் 60 ஆலயங்களில் பரிகாரம் செய்தும் என் மகன் மகளுக்கு வரன்கள் அமையவில்லை. தாங்கள் சொல்லும் திருப்புகழ் பாடல்களை தினமும் காலையில் பாடுகிறேன்.எல்லாம் இறைவன் செயல்.

  • @kalaivani.j4944
    @kalaivani.j4944 Год назад +15

    நிச்சயம் செய்த திருமண நின்று விட்டது இந்த பதிகத்தை நான் என் மகனுக்காக பிடிக்கின்றேன் உங்கள் வாய் முகூர்த்த படி என் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடும் வேண்டும் நன்றி அம்மா

  • @kasthurisuppiah8457
    @kasthurisuppiah8457 14 часов назад

    i already done 48day but until now results zero 😭

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 14 дней назад

    My daughter has 78 pavam in the corroscope. So , difficult to get the suitable boy . She is 28 years old ….. I am praying amma …. செவ்வாய் is on no one 🙏🙏👌

  • @karthikakarthi8608
    @karthikakarthi8608 14 дней назад +1

    Amma nanum 48days indha Tuesday oda padichu mudichen amma

  • @SelviDharshini-le6gi

    Om muruga potri

  • @BanupriyaPriya-de5zx

    Enga annanukku thirumanam viraivil aaganum amma

  • @Pandy-ws3df

    Amma Na Ungalai thodurpukola vendam enga veetil thadai athigama iruku Atha sari pana enna pathigam padikalam amma konjam solunga

  • @jayalakshmimanoharan1585

    நன்றிங்க அம்மா வணக்கங்கள் பல 👍🙏

  • @selvik717

    என்மகனுக்குநல்லபழக்கவழக்கங்களைகொடுக்கவேண்டும்நல்லபெண்அமயவேண்டும்