குழந்தை பாக்கியம் மந்திரம் |குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி |Kulanthai Pakkiyam Pera Manthiram

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2020
  • Kulanthai Pakkiyam Pera Manthiram(Kulanthai Pakkiyam Pera in Tamil/Kulanthai Pakkiyam Pera Pariharam) - Abirami Anthathi Song 73 and Abirami Anthathi Song 65
    திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்துக் கனவு காண்பது இயற்கையே! இல்லற வாழ்வை அர்த்தமுடையதாக்குவது குழந்தை செல்வம் தான்.ஆனால் ஒரு சிலருக்கோ இக்குழந்தைப் பேறு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
    அபிராமி அந்தாதி பாராயணம்:
    அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம்.
    நாம் ஏற்கனவே முந்தய பதிவுகளில் சொன்ன மாதிரி, முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
    அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்: அபிராமி அந்தாதி 101 வது பாடல்
    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
    பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
    காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
    சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
    அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
    எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
    நாம் ஏற்கனவே சொன்னது போல அபிராமி அந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரியத்தைச் சித்தி செய்யக்கூடிய மந்திரசக்தி படைத்தவையாகும்.. இன்னைக்கு நாம குழந்தை வரம் அருளும் மந்திரசக்தி படைத்த இரண்டு மிக சிறந்த அபிராமி அந்தாதி பாடல்களை பற்றி தான் பாக்கபோறோம். அபிராமி அந்தாதி பாடல் எண் 73 மற்றும் பாடல் எண் 65 இந்த பாடல்கள் குழந்தை வரம் அருளும் மந்திரசக்தி படைத்த பாடல்கள் என்று குறிப்பிட பட்டுள்ளது.
    அடுத்து இன்னைக்கு நாம பக்க போற 2 காரிய சித்தி பாடல்களையும் பார்க்கலாம்.
    1. குழந்தைப் பேறு உண்டாக - அபிராமி அந்தாதி 73 வது பாடல்
    தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
    யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமெக் கென்றுவைத்த
    சேமம் திருவடி செங்கைகள் நான்கொளி செம்மை அம்மை
    நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே.
    Thaamam kadambu padaipancha paanam thanukkarumbu
    yaamam vayiravar eththum pozhudhu emakku enruvaitha
    semam thiruvadi sengaigal naangoli semmai ammai
    naamam thiriburai onrodirandu nayanangale.
    அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
    அபிராமி அன்னையே நீ அணியும் மாலை கடம்ப மாலை, நீ ஏந்திய படை ஐந்து மலர்க்கணைகள் மற்றும் கரும்பு வில். சிவாலயங்களை இரவில் காக்கும் வைரவர் உன்னை வணங்கும் நேரமானது நள்ளிரவு. நீ எனக்கென்று வைத்திருக்கின்ற செல்வங்களாவன..உனது திருவடித் தாமரைகள், செம்மையான உனது நான்கு திருக்கரங்கள், ஒளிபொருந்திய செம்மையான தாயே உன் திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம், இவற்றோடு உனது மூன்று திருக்கண்கள்.
    குழந்தைப் பேற்றை வேண்டுவோர் இத்திருப்பாடலைத் தினமும் பாட வேண்டும் எனப் பெரியோர்கள் கூறுவார்கள்.
    2. ஆண்மகப்பேறு அடைய - அபிராமி அந்தாதி 65 வது பாடல்(ஆண் குழந்தை பாக்கியம் தரும் மந்திரம்)
    ககனமும் வானமும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
    தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
    முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
    மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே.
    Kaganamum vaanum puvanamum kaanavir kaaman angam
    thaganammun seydha thavamberumaarku, thadakkaiyum sem
    muganum, munn naangiru moonrenath thonriya moodharivin
    maganum undaayadhu anro? valli nee seydha vallabame.
    அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
    மன்மதனை வானத்திலுள்ள தேவரும் பூமியிலுள்ள மனிதரும் கண்டறியும் படி எரித்த சிவபெருமானுக்கு, சிவந்த மேனியும் பன்னிரு கண்களும் அழகிய ஆறுமுகமும் கொண்ட ஞானக் குழந்தையாகிய திருமுருகப் பெருமானை அன்பின் அடையாளமாக அவதரிக்கச் செய்யும் சக்தியைக் கொடுத்தது அம்மையே உன்னுடைய வல்லமையால் தானே?
    இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்எனப் பெரியோர்கள் கூறுவார்கள்.
    அன்பர்கள் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த 2 கரிய சித்தி பாடல்கள்
    ஒவ்வொன்றையும் 3 முறை ஓதினால் அன்னையின் அருளால் குழந்தைப் பேறு நிச்சயம் கிட்டும்.
    நாம் ஏற்கனவே குழந்தை வரம் அருளும் பல மந்திரங்கள், பதிகங்கள், குழந்தை வரம் அருளும் திருக்கருக்காவூர் கர்ப ரக்க்ஷாம்பிகை ஆலயம் பற்றி பதிவிட்டிருந்தோம், அந்த பதிவுகளின் வீடியோ லிங்குகள் பின்வருமாறு. குழந்தை வரம் வேண்டும் அன்பர்கள் அந்த பதிவுகளை பார்த்து பயன் பெற வாழ்த்தி வணங்குகின்றோம்.
    குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை - • குழந்தை பேறு வரம் அளித...
    அகத்தியர் அருளிய குழந்தை பாக்கியம் தரும் விஷ்ணு காயத்ரி மந்திரம் - • அகத்தியர் அருளிய குழந்...
    குழந்தை வரம் அருளும் பதிகம் - • குழந்தை வரம் அருளும் ப...
    குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்த அகத்தியர் மந்திரம் - • குழந்தை வரம் தரும் சக்...
    குழந்தை செல்வம் அருளும் அரசமர வழிபாடு - • குழந்தை செல்வம் அருளும...
    #aalayamselveer #abiramianthathi #kulanthaipakkiyampera

Комментарии • 210

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 года назад +18

    குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை -

  • @VicstVizhiyarasi

    Amma enakku epdi yavathu un arulal kozhanthai thaa 😢

  • @KokilaMurugan-wb1hy

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் தயா அருள்புரிய வேண்டும் 6ஆண்டுகள் ஆகிறது

  • @bhavanisridhar5704

    அம்மா விரைவில் எங்களுக்கு பேர குழந்தையாக தாங்களே வந்து எங்கள் வீட்டில் பிறக்க வேண்டும்.

  • @kannappandrilla9334
    @kannappandrilla9334 Год назад +1

    Nandri ayya

  • @thiyaguthiyagusri
    @thiyaguthiyagusri Год назад

    amma thaye enakku kolainthai varam kotunkal 🙏🙏🙏

  • @nithyasrinithyasri810
    @nithyasrinithyasri810 Год назад

    Amma enaku kulathai pakiyam kutu amma thaye🙏🙏🙏🙏🙏

  • @ArunKumar-ff4mn
    @ArunKumar-ff4mn Год назад

    Amma anaiku golathay varam vatom amma

  • @kalaikrishnan9258
    @kalaikrishnan9258 Год назад +1

    Naan two times vanthuruken 18 yrs aachu daily 108potri solluven medicine ku selavu panni so many times failed. My body so week. I believe only God. Entha 2 paatum solluven. But still I am not conceive. Ennai konjam paarunag MA.

  • @mathinila2512
    @mathinila2512 Год назад +1

    amma intha maasam karu thangiduchinu nala seithi varanum amma athukku apram naa ella venduthalaiyum niraivethuran amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 Год назад +1

    Thanks 🙏

  • @vinochitras4993
    @vinochitras4993 Год назад

    Amma plz bless me to have a baby 😭😭😭

  • @pretibatiba4190
    @pretibatiba4190 2 года назад +1

    🙏

  • @lakshmilachu1925
    @lakshmilachu1925 2 года назад +2

    Amma ennaku kulathai pakkiyam kedaikkanum ennaku intha month test positive varanum

  • @marimuthumalliha8791
    @marimuthumalliha8791 2 года назад +3

    அம்மா தாயே ஓம்சக்தி சமயபுரம் மாாியம்மன் தாயே அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே ஓம்சக்தி அம்மா அ௫ள்புரிங்க🙏 தாயே🙏🙏🙏🙏🙏 😭😭😭😭

  • @muthunadar1145
    @muthunadar1145 2 года назад +1

    Amma

  • @logesapna3271
    @logesapna3271 2 года назад +1

    Ayya pen kulanthai piraka entha anthathi valipadanum nu konjam sollunga ayya

  • @priyapavi3947
    @priyapavi3947 2 года назад +3

    என் மகழுக்கு குழந்தைு வரம்அருல்வாய் அம்மயே🙏🙏🙏

  • @slakshmi1193
    @slakshmi1193 2 года назад +2

    Slokam for girl child please..

  • @jayapriya6838
    @jayapriya6838 2 года назад +2

    பன்னிரண்டு வருடம் இந்த ஸ்லோகம் சொல்றேன்... அம்மா கண் திரம்மா