திருப்புகழ் பாடுவதற்கு என்றே பிறவி எடுத்து உள்ளீர்கள் . இவருக்கு விருது வழங்கி கவுரவிக்க பட வேண்டும். தங்கள் இறைபணி சிறக்க வேண்டும் . மிக்க நன்றி அய்யா 🙏🙏
இந்த திருப்புகழை எழுதி வைத்து இவர் படிப்பது போல் படித்து முருகனை மனதார நினைத்து பாடி வந்தால் அனைத்து திருப்புகழையும் மனப்பாடம் செய்து விடலாம் ஆம் இதுவரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளாலும் முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தாலும் கடந்த 6மாதங்களில் 59திருப்புகழ் மனப்பாடம் செய்து படித்து வருகிறேன் என் ஆயுள் முடிவதற்க்குள்மீதம் இருக்கின்ற அத்தனை முருக திருபுகழையும் கருத்தினுள் சிந்தனை செய்து மனப்பாடம் செய்து பாடி வலம் வருவேன் முருகப்பெருமான் அனைத்து ஆலயங்களிலும்
அருணகிரி நாதர் மீண்டும் பிறந்து அறுபடை வீடுகளின் திருப்புகழைப் பாட நாமெல்லாம் கேட்டது போல உள்ளது ஐயா அவர்களின் குரல் வளம். அடியேனும் இது போல் திருப்புகழைப் பாட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகின்றது. அப்பன் முருகப் பெருமானுக்கும் ஐயா அவர்களுக்கும் மனமுவந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் வழங்கி பணிகின்றேன்.
ஐயா நமஸ்காரம். தங்கள் தெய்வப்பணி தொடரட்டும் . தாங்கள் பாடிய தேவாரம் திருவாசகம் திருப்புகழ் யூடியூப் வாயிலாக கிடைக்குமா? எவ்வளவு பணம் எப்படி செலுத்த வேண்டும். அறிய வாங்க விரும்புகிறேன். நன்றி
ஐயா உங்களின் குறல் மிக மிக இனிமையாக காதில் தேன் பாய்ச்சி யதுபோல் இருக்கிறது .உடம்பில் என்ன நோய் இருந்தாலும் இறைவன் முருகன் அருளால் காணாமலே பறந்து விடும். ரெம்ப ரெம்ப நன்றி ஐயா. வாழ்கவளமுடன். வெற்றி வேல் முருகனுக்கு ஆரோக்கியம். 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺 .
யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற கூற்றை நிருபிக்கும் வகையில் தங்கள் தேன் குரலில் பாடி அதை நாங்கள் கேட்பதற்க்கு என்ன தவம் செய்தோம் நன்றி ஐயா மிகவும் அற்புதம்
அற்புதமான. வார்த்ததை அருமையாக பாடிய நீங்கள் பால்லாண்டு வாழவேண்டும் இறைவனின் திருவிலையாடலை பாடி புரியாத என்னை போன்ற. இறைப்பற்று இல்லாதவர்க்கும் புரிய வைத்த இறைதொண்டிற்கு மிக நன்றி கள் பல 🚢
என்ன ஒரு கம்பீரமான குரல் ஐயா பகவான் ஆசி பெற்றால் மட்டுமே இப்படி ஒரு அருள் பெற முடியும். கண்மூடி கேட்கும் பொழுது மிகவும் இனிமையாக தெய்வீகமாக உள்ளது🙏🏻🤝👍🏻
அய்யா வணக்கம் ஆவுடையார் கோவிலில் சிறு கிராமத்தில் வாழ்ந்தது வருகிறோன்தாங்கக்ள்திருப்புகழ்பாட்ரடுக்குஅடிமைஉங்கள்பாதம்வணங்குகிறோன்தங்கள்.எனக்கு திருபுகள்கற்றுதரவேண்டும்எனக்குதிருப்புகள்க்நுரல்கள்வேண்டும்எங்குகிடைக்கும்முகவரிதரும்படிஅடியன்வேண்டுகிறோன்9942077004
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 மிகவும் அருமை யான குரலும் தெளிவான உச்சரிப்புடன் கேட்க மிகவும் இனிமையாக மனதில் பதியும் வண்ணம் உள்ளது. நன்றி நன்றி ஐயா.வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அவன் னிடத்தில் அமைவது ஞானம் அப் பெருமானின் திருப்புகழ் யென்னும் மெய்ஞானம். அமைவது அவன் னிடத்தில் பெறும் இறைஞானம். ஆகவே தங்களிடம் அருளியதும்,அருள செய்வதும் நீங்கள் பெற்ற அவனிடத்தில் அருட்பெருஞ் சோதியே...! நன்றி..! ஐயா...!
மாணிக்கவாசகரை நான் கண்டதில்லை. அருணகிரிநாதரையும் கண்டதில்லை. இருவரையும் ஒரு சேர கண்டேன் உங்கள் வழியில் உங்கள் குரல் வளம் உற்சரிப்பு மிகவும் தெளிவு. காந்த குரல் என்பர் ஆனால் உங்கள் குரல் வெண் மல்லிகை குரல் மனத்துடன் மயக்குகிறது. நான் உங்களிடம் கற்க்க விரும்புகிறேன். உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் சிவநெறி புரிய எண்ணுகிறேன் என் அடுத்த தலைமுறையினருக்கு நான் பயிற்றுவிக்கவும் விரும்புகிறேன். உங்கள் ஆசி எனக்கு வேண்டும் எனக்கு கற்பித்து தாருங்கள். ஈசனடி போற்றி.
மதிப்பிற்குரிய தமிழ் இசை நாயகரே முத்துக்குச் சிட்டுஎனத் தொடங்கும் (பழநியில்) அறுகுநுனி அனைய எனத் தொடங்கும் (திருவிடைமருதூர்) பதிகங்களை பாடி வெளியிட முருகன் அருளால் கேட்கிறேன்
மிக அருமை சகோதரி. கடினமான திருப்புகழ் பாடல்களை மனனம் செய்வது என்பது எளிதல்ல. வாழ்த்துக்கள். ஆனால் மனனம் மட்டுமே ஜனனம் அறுக்காது. நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கும் நீங்கள், அருணகிரிநாதப் பெருமான் பாடிய பாடல்களின் மையக் கருத்தை அறிந்தீர்களா? ஏனெனில்
ஐயா, நான் இன்று தான் தங்கள் குரலில் திருப்புகழ் பாடல்களை முதன்முதலாக் கேட்டேன். தங்களது கணீர்க் குரலிலும், தெளிவான தமிழ் உச்சரிப்பிலும், பொருத்தமான இசையிலும் இப்பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. கண்களில் நீர் கசிகிறது. இப்பாடல் வரிகளும், இனிமையான இசையும், தங்களது தேன் குரலும் கலந்து இதயத்துக்குள் நுழைந்து ஏதோ செய்கிறது. இதைக் கேட்பவர்களின் ஆத்மாவும் சந்தோசம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்களது இச்சிறப்பான பணி மேலும் மேலும் தொடர வேண்டும் ஐயா. நன்றிகள் ஐயா.
கடந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் இந்த பிறவியில் திருப்புகழ் பாடல்களை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. எந்த நிலையிலும் இந்த திருப்புகழ் என் மனதிற்கு மருந்தாகிறது.. கருணை கடலே கந்தா போற்றி.. ஐயா தங்கள் பாதம் பணிந்து வணங்கி நிற்கிறேன்..
திரு புகழ். பாடல் சொல்லும் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்வில் வெற்றி பெற வைத்தது பெருமான் அருள். அற்புதமான குரல் வளத்தில பாடும் அருள் முருகன் அருளால் கிடைத்த ஒரு தர்மம். ஓம் சரவண பவா குமரனுக்கு செந்தில் ஆண்டவருக்கு அரோகரா ❤
ஐயா. மனம் கசிந்து விழிவழி நீர் வழிந்து செயலற்று ஒடுங்கச் செய்தீர்கள்.யுகங்கள் பல ஆயின இப்படி ஐம்புலனும் ஒடுங்கி நின்று. உங்களால் பலர் அனுபூதி அடைவர் ஐயம் ஏதும் இல்லை.வள்ளி மணாளன் திருவருளும் குருமணி அருணகிரியாரின் நல்லாசியும் ஒருங்கே பெற்ற உங்களால் பெரும்பேறு உற்றோம் .வாழி தங்கள் மெய்யிசை . புலவர் நித்யானந்தம் .பெங்களூர்.
திருப்புகழ் பாடுவதற்கு என்றே பிறவி எடுத்து உள்ளீர்கள் . இவருக்கு விருது வழங்கி கவுரவிக்க பட வேண்டும். தங்கள் இறைபணி சிறக்க வேண்டும் . மிக்க நன்றி அய்யா 🙏🙏
உண்மை
அற்புதமான பதிவு மெய் மறந்து வார்தைகள் வரவில்லை வெற்றி வேல் முருகனுக்கு வீர வேல் முருகனுக்கு 🙏🙏🙏
❤️👌
தெய்வீக குரல்
@@somasundaramrajamanickam58 I w a friend dgtgewwwwww
முருகன் அருளால் தங்களின் திருப்புகழ் பாடல் பாடியதை கேழ் க்கும் பாக்யத்தை பெற்றேன். ஓம் சரவணபவ.
மன அழுத்தம் தாங்க முடியாம அழுது கிட்டு இருந்தேன்
ஆறுதல் வேணும்னு இந்த திருப்புகழ் கேட்டேன் ஒரு நிமிஷதுல அழுகை நின்னு போச்சு மனசும் வலிக்கல ❤
ஓம் முருகா
True.
Very devotional rendition of Arupadai thirupughazh. Muruga charanam
True
ஒரு இந்துவாகவும் ஒரு தமிழநாகவும் பிறந்ததற்கு பெருமைகொள்கிறேன். எப்பவோ அருணகிரிநாதர் சுவாமிகள் அருளியதை உங்களின் அருமையான குரலில் விதவிதமாக படைத்துள்ளீர்கள். நன்றிகள் ஐயா.
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.
Wk
இந்த பாடல்கள் வீடியோவில் இருந்தால் பதிவிடுங்களேன்
Thank you Supper
g
கருவையும் ஆட வைக்கும் குரல்...இறை தந்த வரம்...
அருணகிரிநாதர் மறுபிறவி எடுத்துவந்து பாடியதாக தோன்றுகிறது ஐயா.கோடான கோடி நமஸ்காரங்கள்.நன்றி நன்றி நன்றி பல 🙇🌹🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏
9 ok 9
மனிதனுக்கு மறுபிறவி இல்லை
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
இந்த 6 படை திருப்புகழை மனபாடம் பண்ணிவிட்டேன் . நன்றி முருகா🙏🏾
Super 🤩
அருமை👌👌👏👏 என்னால் ஒரு பாடலை மட்டும் தான் முழுமையாக பட முடியுது. அவனிதனிலே பிறந்து பாடல் மட்டும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்
👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
இந்த திருப்புகழை எழுதி வைத்து இவர் படிப்பது போல் படித்து முருகனை மனதார நினைத்து பாடி வந்தால் அனைத்து திருப்புகழையும் மனப்பாடம் செய்து விடலாம் ஆம் இதுவரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளாலும் முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தாலும் கடந்த 6மாதங்களில் 59திருப்புகழ் மனப்பாடம் செய்து படித்து வருகிறேன் என் ஆயுள் முடிவதற்க்குள்மீதம் இருக்கின்ற அத்தனை முருக திருபுகழையும் கருத்தினுள் சிந்தனை செய்து மனப்பாடம் செய்து பாடி வலம் வருவேன் முருகப்பெருமான் அனைத்து ஆலயங்களிலும்
❤திருப்புகழ்❤
பாடல் வரிகளை முழுமையாக உணர்ந்தவர்களால் மட்டுமே இப்பதிகங்களை தெளிவாக இனிமையாக பாடமுடியும் வாழ்க
அருணகிரி நாதர் மீண்டும் பிறந்து அறுபடை வீடுகளின் திருப்புகழைப் பாட நாமெல்லாம் கேட்டது போல உள்ளது ஐயா அவர்களின் குரல் வளம். அடியேனும் இது போல் திருப்புகழைப் பாட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகின்றது. அப்பன் முருகப் பெருமானுக்கும் ஐயா அவர்களுக்கும் மனமுவந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் வழங்கி பணிகின்றேன்.
என்ன சந்தம் என்ன உச்சரிப்பு பயம் பக்தி வெளிப்பாடு.வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா.நமஸ்காரம்
EVER RINGING IN OUR EARS SUCH A MELODIOUS VOICE. TAKES US TO DIVINE THOUGHT AT ANY POINT OF TIME.
அவனிதனிலே வரிகள் முருகப்பெருமானை மனதிலே நிறுத்தி கண்ணீரை வரவழிக்கறது!!!
உங்களின் மகத்தான இறைபணி தொடர எம்பெறுமான முருகப்பெருமான் என்றும் துணை பரிவார் 🙏
Q¹vqm❤❤7m😅😮😅😊😢😂❤❤😂😊😅
உண்மை மனதார
கேட்க வைத்து களிப்புற செய்ய விழைந்த ஐயா கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு நன்றி!! ஆஹா சந்தம் கொட்டுகிறதே அருணகிரியாரே! அய்யா சம்பந்த குருக்கள் வாழ்க பல்லாண்டு
ஓம் முருகா
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் என் மகனும் என் கனவரும் திருத்த வேண்டும் என்று முருக பெருமானிடம் மனமுருகி வேண்டி திரு புகழை கேட்டு கொண்டு இருக்கிறேன்
அய்யாவின் குரலில் திருப்புகழ் உயிரை உருக்கி உணர்வில் கலக்கிறது.
ஐயா நமஸ்காரம். தங்கள் தெய்வப்பணி தொடரட்டும் . தாங்கள் பாடிய தேவாரம் திருவாசகம் திருப்புகழ் யூடியூப் வாயிலாக கிடைக்குமா? எவ்வளவு பணம் எப்படி செலுத்த வேண்டும். அறிய வாங்க விரும்புகிறேன். நன்றி
@@chockalingam6402 பெருக்கச்சஞ் சலித்துக்கந்
தலுற்றுப்புந் தியற்றுப்பின்
பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
கலைக்குட்டங் கிடப்பட்சம்
பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே
புரக்கைக்குன் பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும்
புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்
புலப்பட்டங் கொடுத்தற்கும்
கருத்திற்கண் படக்கிட்டும்
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே
தருக்கிக்கண் களிக்கத்தெண்
டனிட்டுத்தண் புனத்திற்செங்
குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே
சலிப்புற்றங் குரத்திற்சம்
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்
சிரத்தைச்சென் றறுத்துப்பந்
தடித்துத்திண் குவட்டைக்கண்
டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே
சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
திருச்சிற்றம் பலத்தத்தன்
செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.
முருகனின் புகழை உங்கள் வாயால் பாடி கேட்க படைத்தாரோ அந்த முருகபெருமான். ஐயாதினமும் உங்கள் குரலை ஒலிக்க விட்டு தினமும் பாடுகிறேன் வாழ்க வளர்க நீடுழி
41
என்ன ஒரு தெய்வீக குரல்
ஐயா காலம் முழுவதும்
கேட்க கேட்க இனிமை 🙏🙏🙏
தந்தைக்கு மந்திரத்தை சாற்றிப் பொருளுரைத்த சிந்துகவி கந்தன் திருப்புகழ் பாடினால் துன்பம் யாவும் அகலுமே. அதைப் பாடியெமை மகிழவைத்த ஐயா... நீங்கள் வாழ்க வாழ்கவே...
அய்யா வின் இறைபணி இறைவன் அருளால் தொடரட்டும்
ஐயா உங்களின் குறல் மிக மிக இனிமையாக காதில் தேன் பாய்ச்சி யதுபோல் இருக்கிறது .உடம்பில் என்ன நோய் இருந்தாலும் இறைவன் முருகன் அருளால் காணாமலே பறந்து விடும். ரெம்ப ரெம்ப நன்றி ஐயா. வாழ்கவளமுடன். வெற்றி வேல் முருகனுக்கு ஆரோக்கியம். 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
.
எனக்கு மனதில் நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி தினமும் இரவு இந்த பாடல் களை கேட்க முருகன் அருள்வீரா
சிவாய நம....திருப்புகழ் பாடல்கள் பாட கற்றுகொடுத்து பரப்புங்கள்.வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏
யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற கூற்றை நிருபிக்கும் வகையில் தங்கள் தேன் குரலில் பாடி அதை நாங்கள் கேட்பதற்க்கு என்ன தவம் செய்தோம் நன்றி ஐயா மிகவும் அற்புதம்
யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று சொன்ன பாரதிக்கு தெரிந்த மொழிகள் 14. அதில் சிறந்தது என்று தமிழை குறிப்பிட்டார்.
@@2008bluestar phone QqQq1ot
Aa
AaaqqQ
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.
பாடல் கேட்கும் பொழுது அவணிதனிலே பரவசத்தின் உச்சம்.....சிவாயநம
அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேநடந்து இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதிய றுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த பெருமாளே
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
சிவாயநம
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களின் குரலில் மணம் மயங்கினேன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணாளனுக்கு அரோகரா ஜெயந்திநாதனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
ஜெய் யோகிராம் சுரத்குமார் 🦋🦋🌷🌺🌸🌻💐
இன்று காலை பொழுதில் முருக பெருமான் திருப்புகழ் பாடல் வரிகள் கேட்டு இன்புற்றேன். கோடான கோடி நன்றி ஐயா..
OM muruga thunai
இனிமை... ❤❤❤❤❤
அய்யாவின் குரல் வளத்தினால் எங்கள் உள்ளத்தை உருக்குகிறார்...🦚🦚🦚
அற்புதமான. வார்த்ததை அருமையாக பாடிய நீங்கள் பால்லாண்டு வாழவேண்டும் இறைவனின் திருவிலையாடலை பாடி புரியாத என்னை போன்ற. இறைப்பற்று இல்லாதவர்க்கும் புரிய வைத்த இறைதொண்டிற்கு மிக நன்றி கள் பல 🚢
பாதி மதி நதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
பாதி மதி நதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காதும் ஒரு விழி காகமுற
அருள் மாயன் அரிதிரு மருகோனே
காலன் எனை அணுகாமல்
உனதிரு காலில் வழிபட அருள்வாயே (2)
முருகா அருள்வாயே.
ஆதி அயனொடு தேவர் சுரர்
உலகாளும் வகையுறு சிறை மீளா
ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே
சூத மிகவளர் சோலை மருவு
சுவாமிமலை தனில் உறைவோனே
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
தேன் கலந்த தெவவவிட்டாத தெள்ளமுது.ஐயாவின் குரல்வளம் அபாரம்.உங்கள் பாதாரவிந்தங்களை பணிகின்றேன்.
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
......... பாடல் .........
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
அருமை
நன்றி ஐயா
Om muruga
Thank you
புத்தகத்தில் உள்ள வேறுபாட்டிற்கு நடைமுறைக்கு ஏற்ப பதிவிட்டமைக்கு நன்றி
அவனிதனிலே,பிறந்து திருப்புகழ் பாடல்,முருகனை மனதில் நிறுத்துகிறது.ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
என்ன ஒரு கம்பீரமான குரல் ஐயா பகவான் ஆசி பெற்றால் மட்டுமே இப்படி ஒரு அருள் பெற முடியும். கண்மூடி கேட்கும் பொழுது மிகவும் இனிமையாக தெய்வீகமாக உள்ளது🙏🏻🤝👍🏻
Vannakukiren
I am listening to his songs everyday...My great Respect and Regards to Our beloved Gurukkal.
பாலோடு தேன்கலந்த இனிய குரலில்
அருணகிரிநாதரின் பாடலை பாடிய ஐயாவின் பாதம் பணிகின்றேன்.
அருமை, இனிமை, ஐயாவின் குரல் வளமை ஸ்ரீ அருணகிரிநாதரின் பாடலை எல்லோரும் விரும்பி கேட்க வைத்துள்ளது. நன்றி பற்பல.
அமுதத் தமிழில் தெளிவாக உணர்வு தரும்படி பாடிய தாங்கள் இறையருளால் நிறைந்த மகிழ்ச்சியுடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்
அய்யா வணக்கம் ஆவுடையார் கோவிலில் சிறு கிராமத்தில் வாழ்ந்தது வருகிறோன்தாங்கக்ள்திருப்புகழ்பாட்ரடுக்குஅடிமைஉங்கள்பாதம்வணங்குகிறோன்தங்கள்.எனக்கு திருபுகள்கற்றுதரவேண்டும்எனக்குதிருப்புகள்க்நுரல்கள்வேண்டும்எங்குகிடைக்கும்முகவரிதரும்படிஅடியன்வேண்டுகிறோன்9942077004
எத்துனை இன்பம் .அருமையாக உள்ளது.எத்துனை முறை கேட்டாலும் இவை இனிமை பயக்கு மிவை..வாழ்நாளின் வளம் சேர்க்கும்
ஒவ்வொரு வரும் இந்த மாதிரியான பாடல்களை மனப்பாடமாக ராகத்தோட பாட வேண்டும்.அற்புதமான பாடல் அய்யா.தேன் போன்ற குரலிசை.
தங்களின் குரல் தேனினும் தித்திக்கும் திருபுகழை கேட்தில் மிக்க மகிழ்ச்சியாக. உள்ளது.மிக்க நன்றி அய்யா
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 மிகவும் அருமை யான குரலும்
தெளிவான உச்சரிப்புடன் கேட்க மிகவும் இனிமையாக
மனதில் பதியும் வண்ணம் உள்ளது.
நன்றி நன்றி ஐயா.வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அவன் னிடத்தில் அமைவது ஞானம் அப் பெருமானின் திருப்புகழ் யென்னும் மெய்ஞானம். அமைவது அவன் னிடத்தில் பெறும் இறைஞானம். ஆகவே தங்களிடம் அருளியதும்,அருள செய்வதும் நீங்கள் பெற்ற அவனிடத்தில் அருட்பெருஞ் சோதியே...! நன்றி..! ஐயா...!
ஓம் சரவணபவ ஓம் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா...ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பா என் அய்யா எனை ஆட்கொள்ளும் எம்பெருமானே ஒன்றொன்றையும் கேட்கும்போது என்கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அய்யாவின் சிறப்பான குரலை
மெச்சினேன் ..ஓம் சரவண பவ
அருணகிரிநாதா போற்றி போற்றி ..
❤❤❤❤❤❤ தெய்வீக குரல் கொடுத்த கருணைமிகு கந்தனுக்கு நன்றி 😊
ஆறுபடை வீட்டின் முருகனை அழகாக பாடி தானும் மகிழ்ந்து கேட்பவர்களையும் மகிழ வைத்து மனம் குளிர வைத்த ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
மாணிக்கவாசகரை நான் கண்டதில்லை. அருணகிரிநாதரையும் கண்டதில்லை.
இருவரையும் ஒரு சேர கண்டேன் உங்கள் வழியில் உங்கள் குரல் வளம் உற்சரிப்பு மிகவும் தெளிவு. காந்த குரல் என்பர் ஆனால் உங்கள் குரல் வெண் மல்லிகை குரல் மனத்துடன் மயக்குகிறது.
நான் உங்களிடம் கற்க்க விரும்புகிறேன். உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் சிவநெறி புரிய எண்ணுகிறேன் என் அடுத்த தலைமுறையினருக்கு நான் பயிற்றுவிக்கவும் விரும்புகிறேன். உங்கள் ஆசி எனக்கு வேண்டும் எனக்கு கற்பித்து தாருங்கள். ஈசனடி போற்றி.
உண்மை உண்மை உண்மை
இத்தனை வருடங்களாக இந்த அமிர்தத்தை பருகாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்.
I now 60 yrs, never hear thirupugal before. Now I come to know these grand songs. Thank you so much.
அய்யா உங்கள் குரலில் திருப்புகழ் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும்,நெஞ்சை உருக்குகிறது.நன்றி.நன்றி
அருமை அண்ணா 👌👌💐💐💐👌👌👌
மதிப்பிற்குரிய தமிழ் இசை நாயகரே
முத்துக்குச் சிட்டுஎனத் தொடங்கும் (பழநியில்)
அறுகுநுனி அனைய எனத் தொடங்கும் (திருவிடைமருதூர்) பதிகங்களை பாடி வெளியிட முருகன் அருளால் கேட்கிறேன்
தங்களின் இனிய குரல் இப்பிறவியில் யான் பெற்ற பாக்கியம்🙏🌹🕉️
இனிமையான அனுபவம்.உள்ளம் உருக்கும் குரல்.அருமை. நன்றிகள் பல.🙏💐
தங்களின் தெய்வீகக் குரலில் நூற்றுக்கும் மேலான திருப்புகழ் பாடல்களை மனனம் செய்துள்ளேன்🙏
🙏 திருப்புகழ் குரு🙏
ஒருநாள் குருதக்ஷணை அளித்து விடுகிறேன் 🙏
மிக அருமை சகோதரி. கடினமான திருப்புகழ் பாடல்களை மனனம் செய்வது என்பது எளிதல்ல.
வாழ்த்துக்கள்.
ஆனால் மனனம் மட்டுமே ஜனனம் அறுக்காது.
நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கும் நீங்கள், அருணகிரிநாதப் பெருமான் பாடிய பாடல்களின் மையக் கருத்தை அறிந்தீர்களா?
ஏனெனில்
முருக பெருமான் , திருப்புகழ் படைக்க அருணகிரிநாதர் சுவாமியையும், உணர்ந்து பாட ஐயா உங்களையும் தேர்ந்துள்ளார். அற்புதம்.
புதுச்சேரி ஈன்ற முத்து
திருப்புகழ் பாடி மகிழ்வித்த ஐயா வாழ்த்துகிறோம்
ஆறுபடை அப்பனே முருகா என் மகனுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளைக் கொடுங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
ஐயா, நான் இன்று தான் தங்கள் குரலில் திருப்புகழ் பாடல்களை முதன்முதலாக் கேட்டேன். தங்களது கணீர்க் குரலிலும், தெளிவான தமிழ் உச்சரிப்பிலும், பொருத்தமான இசையிலும் இப்பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. கண்களில் நீர் கசிகிறது. இப்பாடல் வரிகளும், இனிமையான இசையும், தங்களது தேன் குரலும் கலந்து இதயத்துக்குள் நுழைந்து ஏதோ செய்கிறது. இதைக் கேட்பவர்களின் ஆத்மாவும் சந்தோசம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்களது இச்சிறப்பான பணி மேலும் மேலும் தொடர வேண்டும் ஐயா. நன்றிகள் ஐயா.
உண்மை
❤❤❤❤❤❤❤❤
Very nice 👍❤
முருகா...... அய்யா என்ன குரல் வளம் .....அதுவும் அந்த அவனிதனிலே ...பழனி திருப்புகழ் ..... அருமை
திருப்புகழ் தேன். பிழிந்து ருசிக்கத்தந்த ஐயா அவர்கட்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
மனதை ஈர்க்கும் குரல்🙏
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களது உரையைக் கேட்ட பின்னர் இந்தத் தளத்துக்கு வந்தேன்.நன்றாக இருக்கிறது.
......... பாடல் .........
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
........ பாடல் .........
பெருக்கச்சஞ் சலித்துக்கந்
தலுற்றுப்புந் தியற்றுப்பின்
பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
கலைக்குட்டங் கிடப்பட்சம்
பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே
புரக்கைக்குன் பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும்
புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்
புலப்பட்டங் கொடுத்தற்கும்
கருத்திற்கண் படக்கிட்டும்
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே
தருக்கிக்கண் களிக்கத்தெண்
டனிட்டுத்தண் புனத்திற்செங்
குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே
சலிப்புற்றங் குரத்திற்சம்
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்
சிரத்தைச்சென் றறுத்துப்பந்
தடித்துத்திண் குவட்டைக்கண்
டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே
சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
திருச்சிற்றம் பலத்தத்தன்
செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.
......... பாடல் .........
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
......... பாடல் .........
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே.
🙏🙏
திருப்புகழ் பாடலை கேட்டு கேட்டு ஆனந்தக் கண்ணீர் வருகிறது
திருப்புகழ் இன்று தான் கேட்கிறேன் முருகன் அருளால்.
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது ஜயா உங்கள் குரல்.
ஐயா தினம் தினம் திருப்புகழ் பாடல் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். மனதை உருகி ய வரிகள் முருகனுக்கு உங்களுக்கு நன்றி ஐயா......
திருப்புகழைப்பாடப்பாட உள்ளம் உடல் ரீதியான எல்லாம் தலமாகும் என உணர்த்திய ஐயாவுக்கு வந்தனம்.
அய்யா ஓம் சரவணபவ
🙏🙏🙏💐💐💐
தின்தோறும் காலையில் நான் கேட்க்கும் முதல் பாடல் கோடானகோடி நன்றி ஐய்யா
தெய்வீக ப் பாடல் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. 🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏
மெய்சிலிர்க்க வைக்கும் குரல் 🙏🏼🙏🏼
இனிமையான குரல்.
உங்கள் தேன் நிரம்பிய குரலில் தித்திக்கும் தமிழ் உச்சரிப்புடன் கூடிய பாடல் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் அய்யா
கடந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் இந்த பிறவியில் திருப்புகழ் பாடல்களை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. எந்த நிலையிலும் இந்த திருப்புகழ் என் மனதிற்கு மருந்தாகிறது..
கருணை கடலே கந்தா போற்றி..
ஐயா தங்கள் பாதம் பணிந்து வணங்கி நிற்கிறேன்..
சூப்பர் அய்யா, உங்கள் குரல். என் கண்ணில் நீர் கொட்ட கொட்ட, நான் மெய் மறந்து அனுபவிக்கிறேன்
❤❤மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் திருப்புகழ் ஐயா முருகன் அருள் பெற்றவரே குரல் ❤❤வாழ்கபல்லாண்டு ❤❤
என்ன தவம் செய்தோனே தமிழனாய் பிறந்தத்திற்கு. தமிழில் திருப்புகழை படிக்க வாய்ப்பு கொடுத்து அருளிய கந்த கடவுளுக்கு மனமார்ந்த நன்றி. ஓம் சரவணபவ
முருகா சரணம் உன் பாதம்
கேட்க கேட்க உள்ளம் பெருகும் உன் அருள்
அற்புதம்.மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.அருமை.நன்றி ஐயா.
Namaskaram Ayya. Great work and heart melting divine voice. Waiting for Thiruvarutpa songs... please...
Mesmerizing voice , soothes the mind , calms down the emotions . It gives new experience every day while listening
ஐயா தங்களது குரல் மிகவும் அருமை. அதில் முருகனை பற்றி பாடுவது கேட்க்கும் போது மிகவும் மெய் சிலிர்க்கிறது...🙏🙏🙏
ஐயா தாங்களுடைய குரலில் அருணகிரிநாதர் அருளிய அறுபடை வீடு திருபுகழ் கேட்ட என் மனம் அமைதிபெற்றுவிட்டது. நன்றி ஐயா
அருமையான,,அருவிபோல்உச்சரித்தபாடல்கள்,,,வாழ்த்துக்கள்
ஓம் சரவண பவ 🙏🙏🙏 என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
Mikka nandri aiyya...kettukkonde erukalam pola eruku
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணாளனுக்கு அரோகரா ஜெயந்திநாதனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் சரவண பவ போற்றி போற்றி
கருணை கடலே கந்தா போற்றி போற்றி
ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
ஓம் கந்தா போற்றி போற்றி
ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
ஐயா இனிமையான குரலில் அமுதம் படைத்தீர்கள் நன்றி 🙏🙏💐💐
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼🌹🙏🏼 பதிவுக்கு நன்றி. ஓம் முருகா ஜெய முருகா ஜெய ஜெய முருகா ஓம் முருகா 🙏🏼🌹🙏🏼
தினமும் கேட்கிறேன் மிக அருனம
திரு புகழ். பாடல் சொல்லும் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்வில் வெற்றி பெற வைத்தது பெருமான் அருள். அற்புதமான குரல் வளத்தில பாடும் அருள் முருகன் அருளால் கிடைத்த ஒரு தர்மம். ஓம் சரவண பவா குமரனுக்கு செந்தில் ஆண்டவருக்கு அரோகரா ❤
அய்யா அவர்களுக்கு நன்றிகள்
பேரானந்தம் பெற்றேன் அய்யா..
சிவ மங்களம் 🙏
தெய்வீகமான குரல் வளம் ஐயா, என்றும் இறைப்பணி தெடர என் முருகன் துணை இருப்பார்
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
Your voice is mesmerizing Swamiji.
You are blessed to have this voice and to sing devotional songs 🙏🙏🙏
இறைவனின் அருளால் தங்கள் பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.
நன்றி ஐயா
Sinathavar Mudikkum --Awesome !!!
ஐயா. மனம் கசிந்து விழிவழி நீர் வழிந்து செயலற்று ஒடுங்கச் செய்தீர்கள்.யுகங்கள் பல ஆயின இப்படி ஐம்புலனும் ஒடுங்கி நின்று. உங்களால் பலர் அனுபூதி அடைவர் ஐயம் ஏதும் இல்லை.வள்ளி மணாளன் திருவருளும் குருமணி அருணகிரியாரின் நல்லாசியும் ஒருங்கே பெற்ற உங்களால் பெரும்பேறு உற்றோம் .வாழி தங்கள் மெய்யிசை . புலவர் நித்யானந்தம் .பெங்களூர்.
Feel blessed to listen to this Divine Rendering.
🙏