சிதம்பரத்தில் ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் குருபூஜை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • தில்லை வனமாக இருந்த சிதம்பரத்தில் பல மகான்கள் இங்கு தவமிருந்து இறைவனடி சேர்ந்துள்ளனர்.அப்படி பலகாலம் சிதம்பரத்தில் தவமிருந்து இறைவனடி சேர்ந்தவர் ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள். கடலூர் மாவட்டம், சிதம்பரம் கஞ்சி தொட்டி மேற்கு பகுதியில் வடகோடியில் இருக்கும் நந்தவனம் பகுதியில் அவதூத சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது. இந்த ஜீவசமாதியில் வியாழக்கிழமை, பௌர்ணமி,அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் அவதூத சுவாமிகள் இறைவனடி சேர்ந்த ஆனி மாதம் சதய நட்சத்திரத்தில் அவருடைய குருபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (27.6.2024) காலை அவதூத சுவாமிகள் ஜீவசமாதியில் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. குருபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Комментарии • 1

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 месяца назад

    🙏🌿🌹சிவாய நம🙏🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤❤🎉