1242.Qatilen E Imam Hussain Ka Anjam...! (Part.10)

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1242
    [Qatilen E Imam Hussain Ka Anjam...! (Part.10)]
    இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொலை செய்தவர்களின் முடிவு...! (Part.10)
    ஹழ்ரத் அல்லாமா இமாம் ஹா(f)பிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள், ஹழ்ரத் ஸாலிஹ் அவர்களிடமிருந்து ஷாமிலிருந்து பின்வரும் செய்தியை அறிவிக்கின்றார்கள். ஹலப் என்பது ஷாம் தேசத்தின் ஒரு நகரமாகும். நான் ஹலபில் ஒரு கனவு கண்டேன். கருமை நிற நாய் ஒன்று கடுமையான தாகத்தினால், அதன் நாக்கை நீட்டிக் கொண்டு இருந்தது. நான் அந்த நாய்க்கு தண்ணீர் கொடுக்க நினைத்தேன். விலங்குகளின் மீதும் கருணைக் காட்ட வேண்டும் அல்லவா!. இதுவே இஸ்லாத்தின் தாலிமாத்தாகும். அப்போது மறைவிலிருந்து, "இந்த நாய்க்கு தண்ணீர் புகட்டக் கூடாது. இது நாய் அல்ல. ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொலை செய்தவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவனாவான். கியாமத் நாள் வரை இவ்வாறே தாகத்துடன் இருக்க வேண்டும் என்பது அவனுக்கான தண்டனையாகும்" என்கிற அசரீரி சப்தம் கேட்டது. ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொலை செய்தவர்களில் ஒருவன் நாயாக உருமாறிவிட்டான்.
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

Комментарии • 1