1237.Qatilen E Imam Hussain Ka Anjam...! (Part.05)

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1237
    [Qatilen E Imam Hussain Ka Anjam...! (Part.05)]
    இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொலை செய்தவர்களின் முடிவு...! (Part.05)
    முரடனான ஒருவன் ய(z)ஜீதின் படையில் இருந்தான். அவன் மிகப் பெரும் ஷைத்தானாவான். உர்முலா என்பது அவனுடைய பெயராகும். அவன் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் 6 மாத குழந்தையான (அவர்களின் மகனார்) அலி அஸ்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தொண்டையை நோக்கி அம்பு எய்தான். அந்த அம்பானது (6 மாத குழந்தையான) அலி அஸ்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களில் தொண்டையில் குத்தி அவர்கள் ஷஹீதானார்கள். இவர்களும் (கர்பலாவில்) மூன்று நாட்களாக பசித்திருந்தும், தாகித்திருந்தும் ஷஹீதானார்கள். இவர்கள் எப்படிப்பட்ட ஷஹீத் அந்தஸ்துமிக்கவர்கள். முஜாஹித் இப்னு முஜாஹித் இப்னு முஜாஹித் (இவர்களின் தந்தையும் ஷஹீத், இவர்களின் பாட்டானாரும் ஷஹீத், இவர்களும் ஷஹீத் ஆவார்கள்).
    2. அலி அஸ்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொலை செய்த உர்முலாவின் நிலை என்னவானது!. அவனுடைய வாயிலும், வயிற்றிலும் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டது. அவனுடைய வாயிலும், வயிற்றிலும் நெருப்பு எரிவதைப் போன்ற வெப்பம் ஏற்பட்டது. அவனுடைய பிட்டத்தில் பனிக்கட்டி வைக்கப்பட்டதைப் போன்ற குளிர் ஏற்பட்டது. ஆனால், வயிற்றிலும், வாயிலும் நெருப்பு எரிவதைப் போன்ற வெப்பத்தை அவன் அனுபவித்தான். அவனுடைய வாயிம், வயிறும் வெப்பத்தை உணராமல் இருக்கும் பொருட்டு மக்கள் அவனுடைய வாயிலும், வயிற்றிலும் தண்ணீரை தெளித்துக் கொண்டும், விசிறியினால் வீசிக் கொண்டும் இருந்தார்கள். மேலும், அவனுடைய பிட்டத்தின் பக்கம் நெருப்பு காட்டினார்கள். ஆனாலும், அவனுக்கு அந்த வேதனையிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை.
    3. அவனுக்குள் வெப்பத்தையும், வெளியில் பனியையும் அனுபவித்து வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான். இவ்வாறான வேதனையில் அவன் அலறிய வண்ணம், "தாகம்! தாகம்! தாகம்!" என்று கத்திக் கொண்டே இருந்தான். அவனுக்கு சத்துமாவும், தண்ணீரும், பாலும் கொண்டு வரப்பட்டது. ஐந்து குடங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவற்றை முழுவதும் அவன் குடித்துவிடுவான். இவற்றைக் குடித்தப்பின்னரும் கூட, "தாகம்! தாகம்! தாகம்!" என்று கத்திக் கொண்டே இருந்தான். இறுதியில் இவ்வாறு குடித்து, குடித்தே அவனுடைய வயிறு வெடித்துவிட்டது. ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொலை செய்தவனின் இறுதி முடிவு என்னவானது! என்பதை நான் என்னவென்றுக் கூற! இது மிகப் பெரிய சம்பவமாகும்.
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

Комментарии • 2