Это видео недоступно.
Сожалеем об этом.

Sambandam Gurukkal Thirupugazh

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 авг 2023
  • அருணகிரிநாதர் திருப்புகழ்
    தலம்: சேயூர்
    பாடல்: முகிலாமெனும்
    ராகம்: தர்பாரிகானடா
    தாளம் :ஆதி

Комментарии • 20

  • @ponerulan.1986
    @ponerulan.1986 6 дней назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
    ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @SDRajofficial
    @SDRajofficial 11 месяцев назад +9

    முகிலாமெனும் வார்குழ லார்சிலை
    புருவார்கயல் வேல்விழி யார்சசி
    முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர்
    முலைமாலிணை கோபுர மாமென
    வடமாடிட வேகொடி நூலிடை
    முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார்
    அகிசேரல்கு லார்தொடை வாழையின்
    அழகார்கழ லார்தர வேய்தரு
    அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி
    அனமாமென யாரையு மால்கொள
    விழியால்சுழ லாவிடு பாவையர்
    அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ
    ககனார்பதி யோர்முறை கோவென
    இருள்காரசு ரார்படை தூள்பட
    கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா
    கமலாலய நாயகி வானவர்
    தொழுமீசுர னாரிட மேவிய
    கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா
    மகிழ்மாலதி நாவல்ப லாகமு
    குடனாடநி லாமயில் கோகில
    மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா
    மதிமாமுக வாவடி யேனிரு
    வினைதூள்பட வேயயி லேவிய
    வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 11 месяцев назад +7

    அத்தனை திருப்புகழையும் அருமையான உங்கள் குரலில் கேட்க மனமார ஆசைப்படுகிறேன் என்ன அழகாக பாடுகிறீர்கள் உச்சஸ்தாயில் குரல் அனாயாசமாக சஞ்சரிக்கிறது இந்த திருப்புகழை கேட்டவுடன் என் கண்களில் நீர் வந்துவிட்டது நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமோடு வாழ வேண்டும் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவணபவ

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 11 месяцев назад +1

      கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
      குருவாய் வருவாய் அருள்வாய் குகனே....
      நமச்சிவாயம்.

  • @TP-fr7sv
    @TP-fr7sv 11 месяцев назад +2

    சேயூர் முருகபெருமானே போற்றி!
    வளவாபுரி மயில்வாகனப் பெருமாளே போற்றி!

  • @sumathiv2400
    @sumathiv2400 8 месяцев назад

    Murugaa saranam 🙏🪔

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 11 месяцев назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
    மிகவும் அருமை ஐயா 🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 11 месяцев назад +2

    ஓம் சரவணபவ. நன்றி ஐயா

  • @ganeshkumara4786
    @ganeshkumara4786 11 месяцев назад +1

    அருமை அருமை ஐயா
    உங்கள் திருவடி வாழ்க

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 11 месяцев назад +1

    🙏🥀🌷சிவ சிவ🙏🥀🔥🏵️🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 11 месяцев назад +1

    முருகா சரணம் 🙏

  • @kumaarasaamys6168
    @kumaarasaamys6168 6 дней назад

    💐🍎🎉

  • @deepasairam2609
    @deepasairam2609 11 месяцев назад +1

    அருமை ஓம் நம சிவாய

  • @manosadasivam
    @manosadasivam 6 месяцев назад

    தேவகானம் ஐயா நீங்கள் பாடும் திருப்புகழ்

  • @kanchanachidambaram8826
    @kanchanachidambaram8826 11 месяцев назад +1

    🙏🙏🙏

  • @ecityquery6203
    @ecityquery6203 3 месяца назад

    பணிவான வேண்டுகோள்: தயவு செய்து பெண்களை வருணிக்கும் திருப்புகழ் பாடல்களை விடுத்து, முருகனையும் ஆன்மீகம் பற்றி மட்டுமான திருப்புகழ் பாடல்களை மட்டும் பாடவும். 🙏

  • @ecityquery6203
    @ecityquery6203 4 месяца назад

    அருணகிரி நாதரை சந்தத்தில் மிஞ்சும் கவி இல்லை. ஆனல்: பல பாடல்களில் பெண்களை வெகுவாக வருணித்து, பெண்ணாசையிலிருந்து மீட்கக் கடைசியில் முருகனை வேண்டுகிறார். சில பாடல்களில் வள்ளியில் உடலையும் வருணித்திருப்பது மனதுக்கு நெருடலாயிருப்பதால் அவ்வரிகளை விடுத்து ஏனைய வரிகளை மட்டும் வாசிக்கத் தோன்றுகிறது. குருக்களையாவின் குரலில் இருக்கும் தெய்வீகம், அந்தக் குறையை மறக்கச் செய்கிறது. இந்திரன் மகள் தெய்வானையை, உயர்குலம் என்பதாலோ என்னவோ அதிகம் வருணிக்கவில்லை. ஆனால் குறமகள் வள்ளியை மட்டும் பல பாடல்களில் வருணிக்கிறார். முருகப் பெருமானுக்குக் கோபம் வராதா அருணகிரியர் மேல்? அந்த வேலாலேயே ஒரு தட்டு தட்டியிருக்க வேண்டாம்?

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 Месяц назад

      மன்னிக்க வேண்டும் ஐயா.பெண்களை வர்ணிக்கும் பாடல் எதில் இல்லை சொல்லுங்கள். அபிராமி அந்தாதியில் பட்டர் பெருமான் அம்பாளை வர்ணிக்கவில்லையா?திருவாசகத்தில் மாணிக்கவாசகர் வர்ணிக்கவில்லையா?மற்ற தேவார முதலிகள் மூவரும் வர்ணிக்கவில்லையா?இல்லை என்று நீங்கள் கூறினால் தாங்கள் முற்றாகக் கற்கவில்லை என்பதே பொருள்..லலிதா சஹஸ்ரநாமத்திற்கு அடியேன் பிரதி வெள்ளி தோறும் முகநூலில் பொருள் சிறுசிறு பகுதிகளாக எழுதி வருகின்றேன். மிக நீண்டதாக இருப்பதால் இப்படி எழுத வேண்டியுள்ளது. கேசாதி பாத வர்ணனை அம்பாளின்.....இதனைக் கேளாது இருப்பீர்களா...அல்லது சங்கோசப்படுவீர்களா...
      அருணகிரிநாதர் முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட போதே அவர் உலக மாயையில் இருந்து விடுபட்டு விட்டார். எனினும் அந்த நாளில் திருவண்ணாமலைப் பகுதி முழுவதுமாக உள்ளவர்கள் தாசி மோகத்தில் வீழ்ந்து தம் குடும்பத்தைக் கவனியாது சீரழிந்து வந்தனர். இவர்களை ஒவ்வொருவராக முருகப்பெருமான் ஆட்கொள்ளவா முடியும்..அதனால் முருகப்பெருமான் அருணகிரிநாதரைத் தேர்ந்து எடுத்து அவர் மூலம் அரிய தமிழ் திருப்புகழ் உள்ளிட்ட மற்றப் பாடல்களையும் பாட வைத்து அதன் மூலம் மற்றவர்களும் இல்லற வாழ்விற்கும் பக்தி மார்கத்திற்கும் வர வழிகாட்டினார். இதில் தவறு எங்கே உள்ளது. எங்கள் மனத்தில் தான். அதனைக் களைந்து விட்டுப் பாருங்கள்.
      குருங்கள் ஐயா போன்று முழுக்க முழுக்க தெய்வப் பாடல்கள் படிப்பவர்களுக்கு இதில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஏனெனில் இது போன்ற அனேக பாடல்களை அவர்கள் கண்டிருப்பர். இது தவறு என்றால் இந்தக் காலத்திற்கு தேவையற்றது எனின் எப்போதோ அழிந்து போன மற்றப் பாடல்கள் போல இவற்றையும் இறைவன் அழித்திருப்பார். நீங்களும் உங்களைப் போன்ற மற்றவர்களும் புரிந்து கொள்ளவே இவ்வளவு விளக்கமாக எழுதினேன். நானும் ஓர் பெண் தான்.
      நமச்சிவாயம்.