கடலுக்கடியில் புதைந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரசியக் கதை - முதல்முறையாக Theneer Idaivelai

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 фев 2021
  • #TheneerIdaivelaipoombuhar #Poombuharstory
    யாருக்கும் தெரியாத, குடியரசுத்தலைவர் கையால் விருது வாங்கிய பேராசிரியர் சி.கோவிந்தராஜன் அவர்கள் கண்டுபிடித்த பூம்புகார் நகரம், கண்டுபிடிக்கப்பட்ட கதையை விளக்குகிறார் அவரது மகனும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளருமான திரு. கோ. தெய்வநாயகம் அவர்கள்!!
    First time in the youtube history, this story is revealed by a Tamil scholar and archeologist Mr.Deivanayagam!
    Host : Pragadeesh
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 568

  • @gokulraj8614
    @gokulraj8614 3 года назад +28

    ஆயிரத்தில் ஓருவனு தமிழர்களை இழிவு படுத்தும் படங்களை எடுக்கின்றனர், ஆனால் இது போன்ற ஓரு உன்மை ஆராய்ச்சியை திரைப்பட மாக எடுத்தால் அது எப்பேர்பட்ட படைப்பாக இருக்கும். தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன் 😊

  • @mukunthsrinivas
    @mukunthsrinivas 3 года назад +111

    உலகம் முழுதும் தமிழ் பேசும் குடிகள் பேராசிரியர் கோவிந்தராசனார் குடும்பத்திற்கு கடன்பட்டுள்ளது..🙏🙏🙏🙏... ஆகச் சிறந்த இவ்வரலாற்று காணொளிக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @mohan9429
    @mohan9429 3 года назад +541

    அண்ணா நான் எப்படி சொல்லணும் தெரியல அழுகையா வருது.. இதை எழுதும்போது அழுதுகொண்டே எழுதுரேன்.‌ஏன்னு தெரியாது..நாம இந்த பெரிய மனிதர்களை எப்படி தெரிந்து கொள்ளாமல் விட்டோம் மறந்தோம்.. தயவு செய்து இவர்களை போன்ற மாமனிதர்களின் தகவல்களைப் தேடவும்...

    • @nawaratnamumaibalan632
      @nawaratnamumaibalan632 3 года назад +33

      சத்தியம் ! எமையும் அழவைத்திருக்கிறது பதிவு. ஆனல் ஆனந்தமான விடயம்தானே.. எதற்கு இப்படி. இனப்பற்று இதுதானோ.

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 3 года назад +28

      உண்மை. மனிதன் என்பவன் இது போன்ற துன்பத்தை எதிர் கொள்பவர் எல்லாம் வரலாற்றில் இடம் பெறுவார்கள். மக்கள் மனதில் இடம் பெறுவார்கள். இவர்கள் எல்லாம் தான் பொக்கிஷம். பூமி பிரசவித்துக் கொள்ளும் காலத்திற்கு ஏற்ற வகையில். இதை புரிந்து உண்மையில் படித்தவன் ஆடம்பரம் இல்லாமல் வேலை செய்பவர்கள். இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். அற்புதம். 🙏🙏

    • @drivereye1558
      @drivereye1558 3 года назад +10

      அருமை

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 3 года назад +7

      Totally right

    • @pachaimuthu8988
      @pachaimuthu8988 3 года назад +45

      இதற்கு காரணம் கம்யூனிஸ்ட்களும் திக காரங்களும் சினிமாத்துறையும் தான். இவர்களெல்லம் தமிழர்களை இனப்பற்று கொள்ளாமல் போகும்படி செய்துவிட்டனர்.
      நான் திகவிலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்ததால் உணர்ந்து சொல்கிறேன்.
      ஆராய்ந்து பாருங்கள் புரியும்.
      இவர்களெல்லாம் திட்டமிட்டு தமிழர்களை தமிழர்களே இழிவுபடுத்திக் கொள்ளும்படியான கருத்தை நம்மிடம் தொடர்ந்து விதைத்து வருகிறார்கள்.
      நக்கல் நையாண்டி மூலம் நம்மையே ஏற்கும்படி செய்கின்றனர்.
      அவர்கள் தங்களை மேதாவிகளைப் போல் காட்டிக் கொள்வதால் நாம் ஏமாந்து போகிறோம்.
      இந்த மேதாவிகளெல்லாம் பிற இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிக.
      நம்மை தொடரந்து மட்டமானவர்களாக காட்டிவருவதால்..
      தமிழர்களாகிய நாம் ஓர் உயர்ந்த பேராற்றல்கொண்ட பேறறிவு கொண்ட தமிழினத்தின் வாரிசுகள் நாம் என்று தெறிய வரும்போது அழுகை வராமல் என்ன செய்யும்.
      அழுகை வரும்.
      அழுகை வரனும்.
      அழுகை நிச்சயமாக வரும்.
      ஓ தமிழினமே கண்ணீரைத் துடைத்துக்கொண்டு....
      மேன்மைமிகு நமது வரலாற்றை தேடிப்படி.
      தமிழர்களிடம் ஆயிரம் குறைகளிருந்தாலும் விட்டுத்தராமல் ஒற்றுமையை இன உணர்வை ஓங்கங்செய்.
      நமது எதிரிகள் தெலுங்கர்கள் பிராமணர்கள் தற்போது இந்திக்காரர்கள் பெரும்காரப்ரேட் நிறுவனங்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் தேடிக்கற்று உணர்க.
      பிள்ளைகளுக்கு தமிழில் பெயரிடு.
      பிள்ளைகளுக்கு நமது வரலாற்றை கற்றுக் கொடு.
      தமிழில் பேசு எழுது.
      நமது தாய்மொழித் தமிழில்தான் நமக்கான அடையாளம்.. கல்வி..
      மருத்துவம்.. பண்பாடு.. கலை.. வானியல்.. சிற்பம்.. கட்டிடக்கலை.. போர்க்கலை... அரசியல்.. வாணிபம்.. ஆராயச்சி..
      சட்டம்.. இசை.. நிலயியல்.. கடலியல்.. .............
      போன்ற நமக்கான நமது அறிவுச் செல்வங்களெல்லாம் நமது மொழியில்தான் உள்ளது என்பதை உணர்க.
      நீ பிறமொழியில் பேசினாலோ பிறமொழி கலந்து பேசினாலோ
      நமது அறிவுச்செல்வம் நம்மிடம் இருந்து அழிந்துபோகிறது என்பதை உணர்க.
      தமிழில் பேசு எழுது.
      நம்மை நாமேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
      தமிழ் வாழ்க வளர்க.

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 2 года назад +60

    தமிழனத்தின் தன்னிகரில்லா சொத்து எங்கள் ஐயா கோவிந்தராசனார் தெய்வநாயகம் . 🥰

    • @originality3936
      @originality3936 Год назад

      கோவிந்தராசனார்...தமிழினத்தின் பொக்கிசம். தெய்வநாயகம் இங்குதான் இடிக்குது.

  • @ganesanrm7307
    @ganesanrm7307 Год назад +6

    இத்தனை காலம் வலை தளங்களில் தங்கள் உரைதனை கானாதது யாம் செய்ந பாவம் எங்கள் விஸ்வகர்மா குலத்தாரின் திறமை அருமை பெருமைகளை உலகிற்கு ஞாபகம் ஊட்டியமைக்கு எஙகள் சமுகம் சார்பில் நன்றி சமர்பிக்கிறோம் வீட்டிற்கு ஒரு பிள்ளையை நம் தமிழர் வரலாறு தேட உங்களை போல உருவாக்க ஆசை

  • @aravinthall2070
    @aravinthall2070 3 года назад +145

    கீழே முழுவதும் தமிழில் கருத்துக்கள் உள்ளதை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது 🤧. உங்கள் பணி தொடரட்டும் அண்ணா ❤️, தமிழ் என்றும் அழியாது ❤️❤️

    • @murugu678
      @murugu678 3 года назад +6

      அன்பு சகோதரா
      கடைசி வரியில்
      என்றும் தமிழ் வாழும்
      என்று எழுதுங்கள்
      நன்றி

  • @sureshgood7123
    @sureshgood7123 3 года назад +39

    மெய்சிலிர்த்து விட்டது எனக்கு✨✨✨❤️❤️

  • @malikbasha964
    @malikbasha964 3 года назад +46

    கேட்க கேட்க கேட்க பூரிப்பு , தமிழ் முன்னோர்கள் பற்றி கேட்க கேட்க இனிது, எம் தமிழ் மொழியே அமுது, தொடரட்டும் உம் பணி சிறந்து ❤️❤️❤️❤️

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 3 года назад +260

    தமிழினத்தின் பெருமைமிகு வரலாற்றை தேடி கண்டுபிடித்து புகழ் சேர்த்த அய்யாவின் பணியை பாராட்டி நன்றி யுடன் வணங்குவோம்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 года назад +2

      இந்த பெருமையை கொண்டு சாதிக்க போவது என்ன.

    • @kanniappangovindasamy9917
      @kanniappangovindasamy9917 3 года назад +4

      @@friendpatriot1554 பள்ளியில் வரலாற்று பாடம் எதுக்காக படித்து கொடுக்கபடுகிறது?

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 года назад +1

      @@kanniappangovindasamy9917 உபயோகம் இல்லாத சரித்திரம். உ-ம்.கரிகாலன் கல்லணை கட்டினான் இது சரித்திரம். இதனால் பயன் என்ன. அதன் தொழில் நுட்பம் படித்தால், தெரிந்தால் அதை இப்போது உபயோகிக்கலாம். பள்ளிஇந்திய சரித்திரம் இடதுசாரிகள் தயாரிப்பு மாணவனை மூளைசலவை செய்ய. அது பயனில்லை.

    • @venkateshsundharamoorthy8631
      @venkateshsundharamoorthy8631 3 года назад +7

      நீங்கள் உங்கள் தந்தையின் பெயரை உடன் சேர்த்து கொலவதன் பயன் என்ன ? வரலாறு இல்லாத வாழ்க்கையை வாழ்வது எதற்கு ,எப்படி ஒருநாள் இறப்போம் அதற்கு எதற்கு கடினப்ட்டு துன்பப்பட்டு துக்கபட்டு வாழ்ந்து இறக்க வேண்டும் ,பிறந்து உடன் இறந்து விடலாமே , வரலாறு முக்கியம் bigiluuu😁

    • @sssun7
      @sssun7 Год назад

      Payanatra pechu

  • @ramyavignesh3834
    @ramyavignesh3834 3 года назад +111

    இது போன்ற மிக பழமையான தகவலைத் தந்தமைக்கு நன்றிகள் பல...
    ஐயா போன்ற பல வயதான அறிஞர்கள் நமக்கு கிடைத்த நூலகம்....
    ஐயா போல் வயதான அறிஞர்களை நேர்காணல் செய்யலாம்... இவர் போன்ற வயதான(நூலகம்) அறிஞர்கள் கருத்தைக் கேட்பதற்கு ஆசையாக உள்ளது

    • @sakthivel2618
      @sakthivel2618 3 года назад +2

      Please he is cell phone number give me , Nan avaruku Vazhuthukalum nandrigalaum therivikkavendum, super your work sir

    • @arunav6130
      @arunav6130 Год назад +1

      ஜயா கோவிந்தராசனார், அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் -ஜயா அவர்களுக்கு நாம் தமிழர்

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 3 года назад +91

    பேராசிரியர் சி கோவிந்தராசனார் அவர்கள் ஒரு மிக பெரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் இந்த காணொளி போட்டு காட்டிய தேநீர் இடைவேளைக்கு எனது வணக்கம்🙏🙏🙏

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 года назад +26

    எங்கள் பூம்புகார் பற்றி இவ்வளவு விஷயம் இருப்பது ஆச்சரியம்

    • @ramakrishnansubbaiyan3798
      @ramakrishnansubbaiyan3798 2 года назад +2

      உண்மை. அன்னா ,அன்னை அம்மா பூனா ..பூனை..பூமா அலை..பூமாலை..

  • @shanthibaskaran1811
    @shanthibaskaran1811 Год назад +8

    தமிழ் புலமை, ஆங்கில புலமை, வரலாற்று செறிவு, அருமையான சொல்லாடல் கேட்க கேட்க இனிமை, தமிழின் இளமை நமது பெருமை

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +26

    தேடுதல் மானிட இயல்பு, ஆனால் சிரமங்கள் அதிகம். வணங்குகிறேன் ஆசானே, இன்றும் உன் தடத்தில் என் தடம். வாழ்க தொல் தமிழ்

  • @mn_bala_369
    @mn_bala_369 3 года назад +81

    சிலிர்த்தது உடல் கலங்கியது கண்கள் பிழல்கிறது நாவு
    யாம் தமிழர்.......
    🙏

  • @veslyanbu9210
    @veslyanbu9210 3 года назад +38

    வாழ்கையில்
    தோற்று போகாத ஓர் உண்மை
    தேடல்...

  • @SaranSavlogs
    @SaranSavlogs 3 года назад +104

    வரலாற்றுக்கு தனி ஈர்ப்பு உண்டு அதை மற்றொரு முறை நிரூபித்துள்ளது இந்த காணொளி

  • @krishnamurthik5994
    @krishnamurthik5994 7 месяцев назад +2

    சார் அப்பா கோவிந்தராஜன் அவர்களுக்கு எண்ணுடைய
    மனமார்ந்த நன்றி, நன்றி.

  • @Vekkey
    @Vekkey 3 года назад +39

    இந்த இரண்டு வீடியோக்களை பார்க்கும்போதே சுவாரசியமாக இருக்கிறது. அருமையான பதிவுக்கு நன்றி.. நான் கேட்ட குமரிக்கண்டத்தை பற்றி ஒரு சிறிய பதிவு வேண்டும் அண்ணா...

  • @lokesanlk
    @lokesanlk 3 года назад +17

    நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு அவசியம்,! இந்த பதிவுக்கு நன்றி அண்ணா 💐💐🌹🌹🌹🙏🙏🙏

  • @gopi374
    @gopi374 3 года назад +24

    அய்யா விவரிக்கும் போது ஒரு நிறைவான திரைப்படம் பார்த்து மன நிறைவு...

  • @traj5577
    @traj5577 3 года назад +42

    தமிழ் மொழிந்த வரலாறு கேட்டு. கண்ணீர் பொழிந்தேன்.ஐயாவின் சேவை போற்றுதலுக்குரியது, வணக்கத்துக்குரியது. தேனீர் இடைவேளை நண்பா மகத்தான செயல்.

  • @THAMIZHfromTHAMIZH
    @THAMIZHfromTHAMIZH Год назад +2

    மேன்மை மிகு கோவிந்தராசனார் அவர்கள்... சிலப்பதிகாரப் பாத்திரங்களில் ஒன்றாகவே.. எனக்குத் தென்படுகிறார்... வணங்கிப் போற்றுகிறேன்....

  • @manojkumar-lw7bq
    @manojkumar-lw7bq 3 года назад +10

    அருமை கேட்கவே ஆச்சர்யமகா உள்ளது.. நன்றி அய்யா

  • @ramkumarn1232
    @ramkumarn1232 3 года назад +40

    தமிழையும், அதன் பழமையும் அறியும்பொழுது. நான் இன்னும் நிறைய கற்கவேண்டும் என்ற ஆர்வம் தீயாய்🔥🔥🔥 எழுகிறது. இதேபோன்ற ஒளிப்பதிவுகளை எதிர்நோக்கி.

  • @user-io4ky5sk9m
    @user-io4ky5sk9m 3 года назад +27

    நன்றிகள் பல சகோதரா

  • @geethamahendrakumar7800
    @geethamahendrakumar7800 3 года назад +32

    மிகவும் ஆர்வத்துடன் இன்றைய பதிவை கண்டோம். வாய்ப்புகள் இருந்தால் இவருடைய நேர்காணலை தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி. 🙏🙏🙏

  • @masspugazh5405
    @masspugazh5405 3 года назад +10

    பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி தினம் இன்று 💐💐 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 года назад +15

    அருமையான வரலாற்று பதிவு அருமை நன்றி நன்றி நன்றி சகோதர🙏🙏🙏 ஐயா வுக்கும் அவர் அப்பா வுக்கும் என் வணக்கங்கள் பல 🙏🙏🙏🙏

  • @hh-sx5eh
    @hh-sx5eh 3 года назад +10

    நீங்க சொல்றது என்‌ கண்கள்ல ஒரு காட்சியாக தெரியுது...❤️❤️❤️🥺🥺

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 3 года назад +24

    அருமையான பதிவு! இவரைத் தொடர்ந்து பேச வைக்கவும்!

  • @ameermohamedr4982
    @ameermohamedr4982 3 года назад +45

    16.10 என்னை அறியாமல் கதறி அழுத இடம் 😭😭
    நானே கண்டு பிடித்ததை போல உணர்ந்த இடம்

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 года назад +7

    Great interview. Thank you. Hail sir Govindarasa. God bless

  • @ganaghasreenandhu8959
    @ganaghasreenandhu8959 3 года назад +9

    தேனீர் இடைவேளையில் ( மூலம்) கிடைத்த தமிழமுதம். பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 3 года назад +6

    இந்த அருமையான, விலை மதிப்பற்ற தகவலை கொடுத்ததற்கு மிக்க நன்றி தேநீர் இடைவேளைக்கு மிக்க நன்றி. ஐயா சி.கோவிந்தராஜன் மற்றும் தெய்வநாயகம் அவர்களுக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல

  • @Mr.Thamizhar
    @Mr.Thamizhar 3 года назад +7

    இதுபோன்ற விழியங்களை வெளியிட்டதற்காக ஆயிரம் நன்றிகள் 🙏
    வெல்க தமிழ் மீண்டும் ஆள்க தமிழ்

  • @rengaiyarenga3527
    @rengaiyarenga3527 3 года назад +2

    ஐயா மிக்க மகிழ்ச்சி நானும் தஞ்சைப் பகுதியை சேர்ந்தவன் தான் இன்றைய பூம்புகார் சில பகுதிகள் மட்டும் பாதுகாக்கப்பட்ட தாக இருந்தாலும் பெரும்பாலான பகுதிகள் இன்றும் கடல் அடியிலேயே காணப்படுகிறது

  • @Vivegnandp
    @Vivegnandp 3 года назад +13

    BG work samma .. great work from your team. Hats off.

  • @madh3694
    @madh3694 3 года назад +11

    அய்யாவின் உரை கல்வெட்டு என்பேன்🔥தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகளை தேடுகிறேன் கோர்க்க, கிடைக்கவில்லை.... கண்ணீர்துளிகளோடு, இதயத்தில் இணைபுறியா பாரம்😐 மிக்க நன்றி நண்பா🤝💐💐🔥 மேன்மேலும் தமிழை செம்மைப்படுத்தும் பணி சிறக்க வேண்டிக்கொள்கிறேன்💗

  • @ramcse1111
    @ramcse1111 3 года назад +8

    உடல் சிலிர்த்து விட்டது...... ஐயா பேச்சை கேட்டு.... மிக்க நன்றி...... தேனீர் இடைவேளை

  • @VasanthP-yl9co
    @VasanthP-yl9co 3 года назад +26

    இவர் போன்ற ஆராய்ச்சியாளர்களை தொடர்ந்து தெரியப்படுத்துக

  • @bharat4282
    @bharat4282 3 года назад +9

    Super jee, god bless you family. What a guts that father have, there is no word.

  • @chennainaveen38
    @chennainaveen38 3 года назад +2

    தமிழ் ஒரு அமிழ்த மொழி பல மர்மங்களை உள்ளடக்கி உள்ளது உலகின் பல விசித்திரங்களை கொண்டது எம் மொழி அய்யா உங்களின் தமிழ் பற்றுக்கு நான் தலை வணங்குகிறேன் ஒருவன் மொழிக்காக தன் உயிரையும் துச்சமாக எண்ணி அம்மொழியை காப்பவன் இவ்வுலகில் தமிழன் மட்டுமே அவனுக்கு நிகர் எவனும் இல்லை வாழ்க தமிழ் 💕💕💕💕

  • @kumarp7737
    @kumarp7737 2 года назад +2

    ஐயாவின் பெயரும் அன்னார் தந்தையார் பெயரும் தெரியாத அறிவிலிகளாக இதுவரை இருந்திருக்கிறோமே என்று ஆழ்நத வருத்தம் ஏற்படுகிறது.
    இவ்வாறு மறைக்கப்பட காரணமானவர்களை இந்த இனம் என்றும் மன்னிக்கவே கூடாது.
    அதுதான் இவர்களுக்கு ஆற்றும் நன்றி

  • @ramasamykuppusamy7974
    @ramasamykuppusamy7974 3 года назад +15

    Mesmerized by researcher and his son's explanation. Long live .

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 Год назад +2

    தமிழர் தம் பெருமையை கேட்க கேட்க ஆச்சர்யத்தில் உடல் புல்லரித்துப் போயிற்று... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 2 года назад +2

    மிகவும் தமிழ் உணர்வாளர்
    தமிழ் பற்றாளர், எம் சொத்தென்போம். வாழ்க அவர்
    பெயர் என்றும்.

  • @kumaresanv4889
    @kumaresanv4889 3 года назад +8

    அருமையான பதிவு....👍 தமிழும் தமிழனும் புகழின் உச்சத்தில்.... மெய் சிலிர்த்தேன் அவர் உரைத்த உண்மையில்.....♥️

  • @susmithaganesan6168
    @susmithaganesan6168 Год назад +5

    எங்களுடைய ஊர் மாயவரம்,எங்கள் குடும்பம் அடிக்கடி சுற்றுலாப் பயணம் செல்லும் ஊர்,பூம்புகார்.அய்யா,அவர்களுடைய தந்தை மற்றும் தேநீர் இடைவேளை சேனல் அனைவருக்கும் எங்களுடைய நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.நீடூழி வாழ்க...

  • @wanderingvideosofvelu8035
    @wanderingvideosofvelu8035 3 года назад +14

    வணங்குகிறோம்🙏...வார்த்தைகள் இல்லை கருத்து கூற...

  • @user-mq7sf7kd2c
    @user-mq7sf7kd2c 3 года назад +2

    என்ன தவம் செய்தேனோ? எம் தமிழ் மண்ணில் பிறப்பதற்கு.....
    மீட்டெடுத்த கதையை நேரில் பார்த்தாற் போன்ற உணர்வு. ...
    மெய்சிலிர்த்தது உடல்!

  • @pachaimuthu8988
    @pachaimuthu8988 3 года назад +7

    தமிழினத்தின் சிறந்த மகன் கோவிந்தராசனார்.
    வாழ்க.

  • @mageshwaran7911
    @mageshwaran7911 3 года назад +10

    அருமையான பதிவு, தொடரட்டும் உங்கள் பயணம்💐

  • @ekh-a-live7433
    @ekh-a-live7433 3 года назад +5

    ஐயா. உங்கள் பேச்சில் அத்தனை உயிரோட்டம்..உங்கள் தந்தையின் கடும் உழைப்பும்,ஆராய்ச்சியும் கேட்க கேட்க,என் கண்களில் கண்ணீர் பெருகியது...
    உங்கள் தந்தையின் சிறப்பு, இன்று இருக்கும் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்..
    Thank you so much the need idaivelli..

  • @kaarmukhilnilavan1285
    @kaarmukhilnilavan1285 Год назад +1

    வாழ்ந்தால் இப்படியொரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ வேண்டும்💚

  • @foodfeast3791
    @foodfeast3791 3 года назад +5

    சோழர் குல வள்ளி பட்டிணம் ( நாகப்பட்டினம்) முழுவதும் வரலாற்று பொக்கிஷங்களால் நிறைந்துள்ளது அத ஆராய்ச்சி செய்யத்தான் அரசாங்கத்திற்கு மனமில்லை, உலகின் முதல் கலாச்சாரமான தமிழ் கலாச்சார சின்னங்கள் இந்த மாவட்டம் முழுவதும் நிறைந்துள்ளது.

  • @gkm2926
    @gkm2926 3 года назад +12

    இந்த ஒரு பதிவுக்காக இந்த சேனலை பின்தொடர்கிறேன்.

  • @naturalfacts3436
    @naturalfacts3436 3 года назад +11

    Tamil history vera level ❤️

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 года назад +1

    அருமை அய்யா வரலாற்றை பகிர்ந்து நம் தமிழரின் பெருமையை நிலைநாட்டிய நன்றிகள்

  • @karthikeyannamachivayam8221
    @karthikeyannamachivayam8221 2 года назад +5

    # ஐயாவின் தன்னலமற்ற , தன்னுயிரை வருத்தி இழந்த வரலாறை மீட்டு கொடுத்ததை கேட்கும் போது மனம் விம்முகிறது....

  • @gokulthiru562
    @gokulthiru562 3 года назад +5

    ஐயா அவர்கள் விவரிக்கும் பொழுது திரைப்படத்தை காண்பது போன்ற ஒரு உணர்வு எத்தனை பெரு முயற்சி செய்து இதனை கண்டுபிடித்து இருக்கிறார்கள் நினைக்கும்போதே மெய் சிலிர்க்கிறது இத்தகைய பதிவுகளை தொடர்ந்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @sanjaimahalingan377
    @sanjaimahalingan377 3 года назад +2

    மெய்சிலிர்க்க வைத்த படைப்பு... 🥰🥰 உங்கள் தேடல் தொடரட்டும்... எங்கள் விழி நிறையட்டும்...

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 3 года назад +8

    மறைந்து விட்டாரா...?
    இல்லையில்லை
    இன்றும்
    வாழ்கிறார்....
    தமிழர் நெஞ்சங்களில்...
    நினைவுகளாக

  • @vsselvam4012
    @vsselvam4012 3 года назад +4

    மேலும் இது மாதிரி கணொளிகள் வேண்டும் அண்ணா♥️♥️♥️

  • @user-hs2bk3cy5m
    @user-hs2bk3cy5m 3 года назад +4

    பெருந்தகைக்கு நூற்றண்டு சிறப்பு செய்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த் நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @candajeg4882
    @candajeg4882 Год назад +1

    ஐயாவுக்கு எனது ஜென்ம கடன் வணக்கங்கள்.
    தமிழ் பொக்கிஷம் நீங்கள் உங்களை போன்றவர்கள் இந்த தமிழ் மண்ணில் பிறந்தது எங்களது பாக்கியம்.‌

  • @bylaw1987
    @bylaw1987 Год назад +3

    11:35 got tears about thinking her , 12:28 again cant control tears about thinking the TAMIL KING!!!!!

  • @tn6589
    @tn6589 3 года назад +3

    கேக்கவே ஆவேசமா இருக்கு சகோ இதுபோன்ற வரலாற்று பதிவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @nandhakumars3908
    @nandhakumars3908 3 года назад +4

    உங்கள் பணி சிறப்பானது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.மேலும் தொடவும்

  • @RajeshDirector
    @RajeshDirector Год назад +1

    அவர் வாழ்ந்த திசை நோக்கி எனது இரு கரங்கள் வணங்குகிறது..!

  • @karthijothi3024
    @karthijothi3024 3 года назад +2

    பெரும் புகழ் தமிழின வரலாற்றை உலக அறிய செய்ய அந்த வரலாற்றை ஆவணபடுத்திய ஐயா, பேராசிரியர் திரு கோவிந்தராசனார் அவர்களை போற்றி வணங்குவோம் !. நன்றி !. சத்தியமூர்த்தி.....

  • @pungody3007
    @pungody3007 Год назад +1

    எங்கள் சிரம் உங்கள் காலடியில்
    நீங்கள் பல நூறாண்டு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 3 года назад +5

    புல்லரிக்கிறது 🔥👌💐💐💐

  • @vigneshviky4673
    @vigneshviky4673 Год назад +1

    நான் பூம்புகார் ....தான்....எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...நன்றி

  • @guruajith4386
    @guruajith4386 3 года назад +7

    இந்த வீடியோ பார்கும் போது
    நம்ம எதுக்கு வாழ்கின்றோம் என்று யோசனை வருது

    • @tino.a.t2471
      @tino.a.t2471 3 года назад +2

      🙏 ஆம் அன்பரே! எனக்கும் அப்படிதான் வேலை, கார், வீடு, paper , cinema, serial, நம்ம குடும்பம் , ஆனால் இவர் தந்தை எப்படி உழைத்து வரலாறாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார், நானெல்லாம் இவர்களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்னத்த கிழிச்சேன் 🙏🇫🇷

  • @bas3995
    @bas3995 4 месяца назад

    இந்தக் காணொளியில் பெரும்பாலான கருத்துப் பதிவுகள் நம் செந்தமிழில் காண்பதற்கு பெரும் மகிழ்ச்சி உண்டாகிறது. அனைவரும் தொடர்ந்து நம் தாய் மொழியில் பதிவு செய்ய முனைய வேண்டுகிறேன்

  • @rosalinbaskar369
    @rosalinbaskar369 3 года назад +4

    நன்றி.🙏. மன நிறைவு. கண்ணால் காண்பது போல் இருந்தது. தமிழ் இலக்கிய வரலாறுகளை தொடர்ந்து பதிவிடவும்👍.

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 2 года назад +2

    Great excellent scientist sir your father

  • @itisthatissanthosh
    @itisthatissanthosh Год назад

    அய்யா திரு கோவிந்தராசனார் மற்றும் அய்யா திரு தெய்வநாயகம் அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த வணக்கங்கள் 🙏🙏🙏
    கண்ணீருடன் பார்த்தேன் இப்பதிவை...
    உம்மை தமிழ் இனம் என்றைக்கும் போற்றும் என்றைக்கும் வாழ்த்தும்... நன்றி ..

  • @nandan6137
    @nandan6137 3 года назад +5

    Future Hero's of RUclips

  • @9092586568
    @9092586568 3 года назад +8

    Thank you nanba for giving highly valuable informations...

  • @manuelsudhakar6173
    @manuelsudhakar6173 3 года назад +4

    மிகவும் சிறப்பாக இருந்தது, மிக்க நன்றிகள். மேலும் இது போன்ற காணொளி அதிகம் வெளியிடவும்.

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 3 года назад +1

    அருமையான பதிவு நண்பரே ஐயாவின் பேச்சை கேக்கும் பொழுது மெய்சிலிர்த்து விட்டேன்

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 2 года назад +3

    கற்கோவில் அண்ணன்,சொற்கோவில் தம்பி
    சொல்லாடல் அருமை அய்யா .
    விண்ணேற்றிப்பாறையை வண்ணாத்தி பாறையாக்கிய மூடர் கூட்டமானோமே...!!

  • @bhanumathivenkatasubramani6265

    மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதமான தொல் பொருள் ஆராய்ச்சி யாளர் பேராசிரியர் கோவிந்த ராசனார் மற்றும் தெய்வ நாயகம் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .எப்பேர்ப்பட்ட மாபெரும் செயல்

  • @captal6187
    @captal6187 3 года назад +2

    அருமையான கண்டுபிடிப்பு. இது அல்லவா ஆராய்வு!

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Год назад +3

    While narration, our seniors, suddenly, spur of the moment, recite intricate long Tamil verses flawlessly is astounding !! More you age ,memory lessons...but these people's memory fantastic !!

  • @rajam2031
    @rajam2031 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐

  • @k.ponnalasuresh3614
    @k.ponnalasuresh3614 3 года назад +1

    அண்ணா சிறந்த காணொளி ,புல்லரிக்கிறது .இது உங்களோட சிறந்த காணொளி

  • @ragavanananth2860
    @ragavanananth2860 3 года назад +3

    Goosebumps ❣️🔥🔥...

  • @anithafood
    @anithafood 3 года назад +1

    வரலாறு என்பது ஒரு இனத்தின், சமூகத்தின் அடையாளம்..என்னுடைய இனம் இப்படித்தான் வாழ்ந்தது என்பதை காட்டும் முகவாி..இவா்களை போன்ற சுயநலமில்லாத மனிதர்களுக்கு தமிழ் சமுதாயம் மிகவும் கடமை பட்டுள்ளது.. தேனி மாவட்டம், கூடலூர் அருகில் மலைகாட்டுக்குள் இந்த கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா.. கூட்டம் நிறைய வரும்...உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி🙏.

  • @KannanKannan-lt4cg
    @KannanKannan-lt4cg Месяц назад

    ஐயாவின் தமிழ் தொண்டு ... மெய்சிலிர்க்க செய்தது....

  • @thilibanr5809
    @thilibanr5809 Год назад +1

    இதை எப்போது கேட்டாலும் உடல் சலிர்த்து கண்ணீர் தான் வருகிறது...

  • @sugumara8496
    @sugumara8496 3 года назад +1

    இந்த நேர்காணல் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

  • @bas3995
    @bas3995 4 месяца назад

    வணக்கம் ஐயா
    தமிழ் மீது கொண்டுள்ள தீராக் காதலுக்கு நீர் ஊற்றி வளர்க்கிறது தங்களின் விழியங்கள். இதுவரை அறிந்திராத தகவல்கள், பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் போது எங்களுக்கு கொடுக்கப் படாமல் விட்டுப் போன களஞ்சியங்கள் அனைத்தும் பணி புரிந்து ஓய்வு பெற்றபின் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டி உள்ளது.
    தொடர்ந்து தங்களது காணொளிகள் கண்டு வருகிறேன். தங்களின் சீரிய பணி சிறக்க அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @inshikabuilders.tuticorin
    @inshikabuilders.tuticorin Год назад +2

    பூம்புகார் பற்றிய செய்திகள் கேட்கும் போது சிலப்பதிகாரம் படித்தது தான் ஞாபகம் வந்தது...

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 года назад +1

    அருமையான பதிவு அழகு தமிழ் கேக்க கொடுத்து வைத்திருகனும். நன்றி .

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 3 года назад +2

    Awesome 👏🏼 !

  • @sBabu-qb8yn
    @sBabu-qb8yn 2 года назад +1

    Thalaivan.... g.v music vera level 🔥வரலாறுக்காகவே படைக்கபட்ட இசை 🔥

  • @subujeba
    @subujeba 3 года назад

    ஐயா அவர்களிடையே பேட்சை கேட்டிருக்கிறேன், ஆனாலும் இது சிறப்பு, உங்களுடைய சிந்தனையில் ஐயா வந்தது பல உறவுகளுக்கு கொண்டுபோய் சேர்த்து விட்டீர்கள், வலையோலி உங்களுக்கும் பாராட்டுகள்.