Aarumugan Thiruneetru Padhigam || ஆறுமுகன் திருநீற்று பதிகம் - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • 1. கொண்ட கொண்டிட்டவெகு
    சொரூபங்களுக்கழகு கொடுக்கச் சமைந்த நீறு
    கொடிய வெண்ணாயிரஞ் சமணரைக் கழுவினிற்
    கொலை செய்து கண்ட நீறு
    துண்டகண்டப்படக் கொடூர வெஞ்சூரனுடல்
    துணிக்கவேல் தொட்டநீறு
    சொல்லரிய பூதப் பிசாசு பில்லி
    சூனியஞ்சுடரிட்டெரித்த நீறு
    செண்டுபோற் கயிலை மலையெடுத்தவன்
    கூன் முதுகு செவ்வையாய் நிமிர்த்தநீறு
    சிவபக்தியில்லாத முழு மூடர்
    நெஞ்சந்திடுக்கிடத் தொடுத்தநீறு
    அண்ட நவகண்ட முதல் வணங்கித்
    துதித்திட ஆண்மையாய் வந்த நீறு
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    2. சம்பந்தராகவே தென்னவன்
    கூடலிற் சமணரையழித்த நீறு
    சகல குருபரவனாக அரசனுக்கு
    வுபதேசந்தானாயுரைத்த நீறு
    நம்பின அடியவர்கள் ஈடேற
    வினையோட நாதனாய் வந்தநீறு
    நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகள்
    முனி சித்தர்கள் நம்பியே பூசுநீறு
    கம்ப மதயானை மாமுகவனுக் கிளையவன்
    கருதியே தந்த நீறு
    காலனிட தூதனை நாடாமல் எந்நாளும்
    காக்கவே வந்த நீறு
    அம்பிகை திரிசூலி சுந்தரி சவுந்தரி
    அபிராமிவல்லி தந்த
    அடியவர்க்கருள் கிருபை பொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    3. அரவங்கள் பூதங்கள் மிருகங்கள்
    பேய்களை அடக்கவே இட்டநீறு
    அஷ்டபாக்கிய லட்சுமி இஷ்ட
    முடலெந் நாளும் அகலாமல் இட்டநீறு
    இரவுபகல் மறவாமல் முருகர்
    திருநாமமே இறைஞ்சித்தரித்தநீறு
    எதிராளி நெஞ்சங் கலங்கிப்
    பயந்தோட ஏற்கவே இட்டநீறு
    பரவு பல பிணிகளும் உறவு கெடுகோள்களும்
    பணிந்தோட விட்டநீறு
    பஞ்சபாதகமுடன் மிஞ்சிடும் வல்வினை
    பணிந்திட வணிந்த நீறு
    அரசனுடன் மந்திரியாண் புவி வீரரும்
    மதி வசியமான நீறு
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    4. இருப்பான தலமெலா மென்றுந்
    துதிப்பதற் கீடேற்றஞ் செய்யுநீறு
    எங்கெங்கிருந்தாலுமேத்திப்
    பணிந்திடவெதிராக நிற்குநீறு
    திருப்பரங்குன்றமுஞ் செந்தில்
    கதிர்காமமுந்திருச்சோலைக்குகந்தநீறு
    திருத்தணிகை சுவாமிமலை திருவேரகம்புகழ்
    செவ்வேலர் தந்த நீறு
    பொருப்புகள் முடிதோறும் பதகமலமுத்திரை
    புகழ்பெருக வந்தநீறு
    பூசைசெய் யைவராற்றிருவா வினன்குடி
    போதிக்க வந்தநீறு
    அருட்பாதம் நத்தியே நினைப்பவர்கள்
    நெஞ்சினில் அகலாதிருந்த நீறு
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    5. நூலைப்பகுத்த விடைமாதர்க்கு
    வேலாக நுதலிற்றரித்த நீறு
    நூரு நூறாயிர மீமிசை வந்தாலுமொரு
    நொடிற்றொலைக்கு நீறு
    வேலைக்கடிந்து வெகு சூரர்கள் மடியவே
    வெற்றிவேல் தொட்டநீறு
    வேதனைச் சிறையிட்டு பிரணவத்துட்பொருள்
    விமலற்குரைத்த நீறு
    வாலைப் பருவமாய் வயது நூறாகவே
    வசியகரமான நீறு
    மாறாத செல்வமும் பேறான வாழ்வுடன்
    வரிசை தர வந்தநீறு
    ஆலவாய்ச் சொக்கருடன் ஆனந்தத்
    தாண்டவம் ஆடிச் செழித்த நீறு
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    6. ஓராறு சென்னியு மீராறு
    புயமென்னுள்ளம் பதித்தநீறு
    ஓதுதமிழ் மதுரையி லுமை பெண்
    பேசவே உபதேசமான நீறு
    காரானை முகவனுக்கிளையவன்
    விராலிமலைக் காங்கேயன் தந்த நீறு
    கயிலைமலை யொரு நொடியில்
    அரனை வலமாகவே காணவே வந்த நீறு
    பேரான வசுரருங்குன்றமும்
    வேலாற்பொடிபடத் துணித்த நீறு
    பொற்சந்தி மலையிலுறை வள்ளியுட நாயகன்
    பொன்னாடி வணங்கு நீறு
    ஆறாடு செஞ்சடைக் கயிலை நாய
    கனுமைக்கழகு பெறவந்த நீறு
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    7. எத்தேச காலமும் முத்தைய
    ரென்னுமிவ் வேழைக் கிரங்குநீறு
    எழிலான கிருத்திகை தவறாமல் அனுஷ்டிக்க
    இன்பங்கள் தந்தநீறு
    சிற்றிடை வள்ளியுடன் தினைப்புனங் காத்திடச்
    சிவசித்தாய் நின்றநீறு
    சிற்றூரு வேடர்கள் சிவபக்த ராகவே
    திருவுருக்கொண்ட நீறு
    முத்தமிழ்க்காகவே அருணகிரிநாதருக்கு
    மோக்ஷங் கொடுத்தநீறு
    முப்பத்து முக்கோடி தேவாதி தேவரும்
    முருகரென வந்தநீறு
    அத்தனருள் கந்தனார் நித்தம்
    விளையாடவே அகலாமலிட்டநீறு
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    8. வேதாள பூதப் பிசாசு பில்லி
    சூனிய மிரட்டித் துரத்தநீறு
    வெண்டையந்தண்டையொடு கிண்கிணி
    சிலம்பசைய வீரவேல் தொட்டநீறு
    சூதான களபமுலை வள்ளியிட நாயகன்
    சுப்பிரமணியர் தந்தநீறு
    தும்புரு நாரதர் கிம்புருடர் போற்றித்
    துலங்கவே வந்தநீறு
    ஓம் முருகாவென்று உள்ளமது
    குளிரவே உற்றதுணையானநீறு
    ஓம் நமசிவாய குருஞானாதி தேசிகன்
    ஒளியாகி வந்தநீறு
    ஆதாரமாகவே நெஞ்சினில் எப்பொழுது
    மறவாது நின்றநீறு
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    9. துஷ்டப் பிசாசு பிணி கிட்ட
    வெட்டாமலே சுடரிட்டெரித்த நீறு
    சுற்றவே நிற்கின்ற அஷ்டதிசை பாலரும்
    சொல்லுமுன் வணங்குநீறு
    வட்டமாய்ப் படர்தேகம் பதினெட்டு
    குஷ்டமும் வாராமற் பூசு நீறு
    வாளரவம் வண்டுகடி சிலந்தி தேள்
    விஷமெலாம் வாங்கவு மணிந்தநீறு
    கொட்டமிடு சூரரை வெட்டிப் பலியிட்டு
    செயங் கொள்ளவே வந்தநீறு
    கூறுமொழி நக்கீரர் மேன்மை பெற
    வேல்வாங்கி குன்றைப் பிளந்தநீறு
    அஷ்டதிசை பதினாறு முக்கோண சட்கோண
    மறுபத்து நாலுகலையும்
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    10. மருமலர் கமலத் துதித்தவன்
    கிளைவழி வாழ்விக்க வந்தநீறு
    மன்னுபிர மாமுனி அகஸ்தியர்
    போகருடன் வழிகொள்ள வந்தநீறு
    சரணமலான்பனாங் குலாலகுலத்
    திருக்கை தண்டமிட்டுதவுநீறு
    சண்முக நதிமூழ்கி கிரிவலம் வந்தோர்க்கு
    சகலபிணி தீர்த்தநீறு
    வறுமைபடு மெளியார்க்குங் கொலை செய்த
    பாவற்கும் வருவிதர மொத்தநீறு
    வாழ்வு கார்த்திகை சோம சுக்கிர வாரஞ்சஷ்டி
    வந்திப்போர்க் கருளுநீறு
    அருமறைகள் பரவுகுரு சிவசமயந்
    தழைக்கவே அவதரித்தருளு நீறு
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    11. பத்தான கவிதையும் மனதிற் உதிப்போர்க்குப்
    பாக்கியந் தந்தநீறு
    பரிவாக எந்நாளும் சரவணபவா வென்ன
    பரிசுபெற வைக்கும்நீறு
    கஸ்தூரி குங்குமம் கமழ
    வள்ளி நாயகன் காங்கேயன் தந்தநீறு
    கார்த்திகை நாள் தோன்றி வெற்றி வேலாயுதன்
    கடம்பனார் தந்தநீறு
    முத்து நவரத்தினத் தண்டையணி பாதநன்
    முடிமேற்றரித்த நீறு
    முழு நீல மயிலேறி வந்துமுன்
    நின்றுமே முன்கையிற்றந்த நீறு
    அத்தனாற் பங்கினிற் சத்துரு சங்காரியாய்
    அபிராமிவல்லி தந்த
    அடியவர்க்கருள் கிருபைபொழி
    பழனியங்கிரி அறுமுகவர் திருவெண்ணீறே.
    .

Комментарии • 48

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +7

    முருகா நீ இருக்க பயமேன் இந்த தைபூசம் திரு நாளில் உலக மக்கள் அனைவரையும் நோய் நொடி இன்றியும் வேண்டிய செல்வத்தையும் கொடுத்து அருள வேண்டும் முருகா இவர் பாடிய பாடலை கேட்ககும் பாக்கியம் கிடைத்த முருக கோடி வணக்கம். வாழ்க வளமுடன் நலமுடன்

  • @thangavelthangavel3757
    @thangavelthangavel3757 2 года назад +2

    அருமையான.பாடல்.வாழ்கமுடன்.ஓம்சரவணபவ. முருகா சரணம் அழகா வெற்றி வேல் முருகா சரணம்

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 2 года назад +2

    தைப்பூசம் இன்று.... உங்கள் பாடல் அருமையாக இருந்தது..... உங்கள் குரல்.... முருகன் திருவடியில் காணிக்கை செய்ய வேண்டும்.... சூப்பர்...... தொடருங்கள்.... வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்.....

  • @srajendran7021
    @srajendran7021 Год назад +1

    ஓம் முருகா சரணம்

  • @balasaraswathi1836
    @balasaraswathi1836 2 года назад +1

    முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி

  • @ramachandranmunuswamyraj1625
    @ramachandranmunuswamyraj1625 2 года назад +2

    இனிய வணக்கங்கள் அன்பானவர்களே!
    பழமுதிர்த்த சிறுவனுக்கு அரகரோகரா...
    சிறுவனருள் தங்களுக்கு ஏராளமாக உண்டு!
    என்பதை இந்த பின்னுட்டமே! நீயும் கூறு.....ஊ.!
    நன்றிப்பா!
    இராமச்சந்திரன்.மு. திருச்செங்கோடு.
    ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான்
    பாரத் மாதா கீ ஜெய்.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @srajendran7021
    @srajendran7021 Год назад +1

    ஓம் சரவணபவ

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் முருகா போற்றி

  • @KarunakaranR-sd4ei
    @KarunakaranR-sd4ei 6 месяцев назад

    Om muruga potri potri Kanda potri potri valgavala mudan tanks ❤😅🎉❤❤ and very nice and beautiful ❤️😍😍😍❤️

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 11 месяцев назад

    Om muruga saranam thank you medom rasakalaivani saradha raaghav

  • @rajivenkat7945
    @rajivenkat7945 2 года назад +1

    Om Saravanabhava....Om Bhavaya Namaha🙏🙏🙏🙏

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +1

    முருகன் முதல் சித்தனே போற்றி

  • @ShivaSankaraTv
    @ShivaSankaraTv 2 года назад +2

    மிகவும் அருமை சகோதரி 👌👌👍👍
    முருகா போற்றி 🙏

  • @kskanchanakumar241
    @kskanchanakumar241 2 года назад +1

    Om muruga poatri

  • @mahemasyourchannel3946
    @mahemasyourchannel3946 2 года назад +2

    ஓம் சரவண பவ 🙏

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +1

    சரவணபவ

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 2 года назад +1

    Extraordinary voice.

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад +1

    Very good voice om saravanabavaya poetry poetry

  • @balasmusings
    @balasmusings 2 года назад +1

    Ohm Muruga.

  • @dhanyahospital5761
    @dhanyahospital5761 2 года назад +3

    Powerful song in a divine voice 🙏🙏🙏

  • @everdrive3427
    @everdrive3427 2 года назад +1

    Super

  • @sekar6568
    @sekar6568 2 года назад +2

    Murugaa.................Aum

  • @dharshinirv6591
    @dharshinirv6591 2 года назад +1

    Mantramavathu Thiru neeru !!! Vanavar melathu Thiru neeru !!! 🙏🙏🙏

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 года назад +1

    Descriptionil pottadhku thanks ellame ippdi podunga nalla irukum

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 2 года назад +2

    Dear Saradha Raagav sisters ..
    Heartly conguralation sister's 1lakhs subscribers to change into crores subscribers as soon as step by step its My grace.your signing voice is always very cute to Every peoples to liked to your singing voice. To your Every songs are very very Absolutely divine.its really ture sisters.thanks lots.

  • @muthusamy4255
    @muthusamy4255 2 года назад +1

    Super voice

  • @ch.muralikrishna2842
    @ch.muralikrishna2842 2 года назад +1

    🌹🙏శ్రీ వల్లీ ~దేవసేనా సమేత శ్రీ షణ్ముఖ దేవ దేవాయ నమస్తే నమస్తే ఓం నమఃశివాయ 🙏🌹

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 2 года назад +2

    உங்கள் பதிவுக்கு நன்றி. என்நாளும் நன்நாளாகட்டும். 👍வாழ்த்துக்கள் 💐🙏

  • @smfancystoreambatturp.sara9537
    @smfancystoreambatturp.sara9537 2 года назад +1

    super sister your

  • @malli.harikrishnaroyal
    @malli.harikrishnaroyal 2 года назад +1

    OM NAMO SRI VALLI DEVASENA SAHITA SUBRAMANYA SWAMYEY NAMAHA❤️🌹🙏💚🌹🙏💛🌹🙏💙🌹🙏🧡🌹🙏

  • @muralikrishnacherukuri8361
    @muralikrishnacherukuri8361 Год назад +1

    షణ్ముఖ దేవదేవా నమో నమస్తే

  • @VasanthakumarRagupathy
    @VasanthakumarRagupathy 2 месяца назад

    Thanks

  • @alameluragavan5338
    @alameluragavan5338 2 года назад +1

    💚🖐Thiruneetru pathigam is very nice 👌 Amazing 👏 👌 👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sundararajank8596
    @sundararajank8596 2 года назад +2

    Good

  • @nagavalli9665
    @nagavalli9665 Год назад +1

    🙏🌹🌹🌹🪔🪔🌹🌹🌹🙏

  • @venkatesandsc6604
    @venkatesandsc6604 2 года назад +1

    Om Saravanabhava.

  • @vanjae1813
    @vanjae1813 2 года назад +2

    Na

  • @sarasuarunachalam2484
    @sarasuarunachalam2484 2 года назад +1

    🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @vennilaselvaraj5474
    @vennilaselvaraj5474 2 года назад +1

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaverikaviya7214
    @kaverikaviya7214 2 года назад +1

    Arohara 😔😔😔😔😭😭😭😭🙏🙏🙏😭

  • @gsdeepa9963
    @gsdeepa9963 2 года назад +1

    Vetri vel murugannukku arogaraa arogaraa

  • @palanichami7082
    @palanichami7082 2 года назад +1

    👏👏👏🙏🙏🙏

  • @banudharma9057
    @banudharma9057 2 года назад

    Wood

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @sundararajank8596
    @sundararajank8596 2 года назад +1

    Excellent