சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நடராஜர் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடைபெறும். ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று (03.07.2024) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு அருகே பஞ்சமூர்த்திகள் எழுந்தருளச் செய்யப்பட்டு உற்சவ ஆச்சார்யாரால் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க தீபாராதனை நடைபெற்றது.கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Комментарии • 2

  • @redbro6
    @redbro6 Месяц назад +1

    தில்லை அம்பலத்தானே பகவானே அப்பனே நீயே துணை 🥺🙏🙇🙇🕉️🔜💜❤️

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Месяц назад

    🙏🌿🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🌿📿