1238.Qatilen E Imam Hussain Ka Anjam...! (Part.06)

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1238
    [Qatilen E Imam Hussain Ka Anjam...! (Part.06)]
    இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொலை செய்தவர்களின் முடிவு...! (Part.06)
    ஹழ்ரத் அபூஷை(kh)க் கூறினார்கள், ஒரு மஜ்லீஸில் (கூட்டத்தில்) சிலர் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். ஹழ்ரத் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு யாரெல்லாம் உதவினார்களோ, அவர்கள் மரணிப்பதற்குள் துன்யாவில் ஏதாவதொரு பேரழிவிலும், முஸீபத்திலும் சிக்கிக் கொண்டார்கள் என்பன போன்றவற்றைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்தில் ஒரு கிழவன் அமர்ந்திருந்தான். "நானும் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொலை செய்தவர்களுக்கு உதவினேன். ஆனால், எனக்கோ ஒன்றும் ஆகவில்லையே!" என்றுக் கூறினான். இதனைக் கூறிவிட்டு அந்த கிழவன் (சிம்னி அகல் போன்ற விளக்கு) விளக்கேற்றுவதற்காக எழுந்தான். அப்போது அவன் மீது நெருப்பு பற்றிக் கொண்டது. அவன், "நெருப்பு! நெருப்பு! என் மீது நெருப்பு பற்றிக் கொண்டது! நான் நெருப்பில் எரிகின்றேன்!" என்றுக் கத்தினான். ஆனால், அவனுடைய கதறல் (அருகிலிருந்த) யாருடைய காதிலும் விழவில்லை. (f)பராத் எனும் ஆற்றில் அந்த கிழவன் விழுந்தான். இருந்தபோதிலும், நெருப்பானது அனையவில்லை. ஆற்று நீரில் மூழ்கியும் கூட நெருப்பானது அனையவில்லை. அல்லாஹ்வுடைய வேதனையின் உருவில் உண்டான நெருப்பானது அனையக்கூடியது அல்ல. அவன் அந்த நெருப்பிலேயே எரிந்து மரணித்தான்.
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

Комментарии •