Это видео недоступно.
Сожалеем об этом.

ஓடக்காரி பூங்குழலி | Ponniyin Selvan | Bharathy Bhaskar | Pattimandram Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2022
  • #ponniyinselvan #ps1 #bharathybhaskar #pattimandramraja
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

Комментарии • 812

  • @varikuyil1372
    @varikuyil1372 Год назад +61

    ஏன் மேடம். நீங்கள் ஏன் முழு கதையையும் இதே போல் சொல்லக் கூடாது. ரொம்ப நல்லா இருக்கு கேட்க 💐💐💐💐

  • @sivakumar-cd8cl
    @sivakumar-cd8cl Год назад +120

    அப்பப்பா..அருமையான வர்ணனை..உங்களை எப்படி பாராட்டுடவதென்று தெரியவில்லை. இந்த கதையை எவ்வளவு அனுபவித்து படித்திருக்கிறீர்கள் என்பது உணர முடிகிறது..நன்றி பாரதி அம்மா..!! 🙏👌

    • @gnanamk7408
      @gnanamk7408 Год назад

      ரசித்துபடித்ததிருக்கீறீா்கள்.நானும் பள்ளீநாட்களில் திரும்ப திரும்ப படித்தீரூக்கிறேன்

    • @annamalaichandrakumar8425
      @annamalaichandrakumar8425 Год назад

      Excellent 👌

    • @devakivenkatesan6137
      @devakivenkatesan6137 Год назад

      👌

  • @rajasekarans262
    @rajasekarans262 Год назад +7

    அப்பா... என்ன ஒரு அற்புதமான குரல் வளம். என் சகோதரி உடன் உட்கார்ந்து கதை. கேட்பது போல் உள்ளது... 🌹🌹🌹🌹🙏🙏 நன்றி நன்றி....!!!!🌹🙏

  • @thiruarasu1405
    @thiruarasu1405 Год назад +108

    பாரதி மா! கதை சொல்லுவது என்ன அற்புதம்! உங்களை நாங்கள் பெற்றது எங்கள் வரம்! தமிழ் மகளுக்கு எந்தன் வாழ்த்துக்கள். இந்த பதிவுக்கு நன்றிகள் ஆயிரம்

  • @rameshmaiyel6543
    @rameshmaiyel6543 Год назад +50

    நீண்ட காலத்திற்கு பிறகு கதைக்கேட்டு மகிழ்ந்தேன். படம் பார்த்ததை விட நீங்கள் சொல்லும் பொழுது ஏற்படும் கற்பனை சுகமாக இருந்தது.நன்றி சூப்பர்
    🥰

  • @veeramanikandans9683
    @veeramanikandans9683 Год назад +9

    🙏🏾மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பாரதி பாஸ்கர் அவர்களுக்கு🙏🏾 இந்த உறையை கேட்கும்போது என் கண்முன்னே அந்த காட்சி தோன்றுவது போல் ஒரு உணர்வு👍

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 Год назад +45

    அருமை அருமை
    அற்புதம்
    ஆனந்தம்...
    👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
    💐💐💐💐💐💐💐
    கல்கியின்
    பூங்குழலி
    கதாபாத்திரம்
    திரையில்
    அவ்ளவு விரிவாக
    காட்ட முடியவில்லை போலும்...😞
    நீங்கள்
    அதை
    பூர்த்தி
    செய்து விட்டீர்கள்
    நன்றி பாரதி அவர்களே!🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @saiseetha9226
    @saiseetha9226 Год назад +78

    அம்மா உங்க குரல் வழியாக தமிழ் மொழின் அருமையுடன் பொன்னியின் செல்வன் கேட்கும் போது மெய்சிலிர்து போகிறது,,,,, நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏🙏

  • @arivurai1498
    @arivurai1498 Год назад +28

    நீண்ட காலத்திற்கு பிறகு கதைக்கேட்டு மகிழ்ந்தேன். படம் பார்த்ததை விட நீங்கள் சொல்லும் பொழுது ஏற்படும் கற்பனை சுகமாக இருந்தது.நன்றி சூப்பர்

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Год назад +56

    இந்த படம் ஆரம்பித்த நாள் முதல் எவ்வளவோ பேர். யூ. டியூப் பில் கதை. கதையாய் சொல்லிவிட்டார்கள்.. ஆனால் எங்களுக்கு பிடித்த உங்கள்.. குரலில் கேட்கும் போது இன்னும் மெறுகேறியது இந்த க்கதை.👍நன்றிகள் பாரதி அம்மா💐🙏

    • @vijayalakshmic6626
      @vijayalakshmic6626 Год назад

      Nice narration from nice voice
      Nice mam nice story nice characters
      It's the nicest time.

    • @santhikannapiran
      @santhikannapiran Год назад +1

      பாரதி அருமையான பதிவு.அற்புதம்

    • @poongothaiselvaraj7767
      @poongothaiselvaraj7767 Год назад

      மேடம் சூப்பர்
      நீங்க பொன்னியின் செல்வன் புதினத்தை முழுவதும் கதையாக சொன்னால் கேட்டுகொண்டே இருக்கலாம்

    • @mohansethurao4671
      @mohansethurao4671 Год назад

      கல்கி அவர்கள் பாத்திரங்களை பாரதி அவர்கள் விவரிக்கும்போது தான் அதன் அழகு பன்மடங்கு கூடுகிறது.

  • @venkateswarir6138
    @venkateswarir6138 Год назад +13

    தாங்கள் பூங்குழலியை பற்றிக் கூறிய விதம் பூங்குழலியை நேரிலேயே பார்ப்பது போல்த் தோன்றியது . மிகவும் சிறப்பு . பாராட்டுகிறேன் தங்களை .

  • @iwinkishore5947
    @iwinkishore5947 Год назад +6

    பொன்னியின் செல்வன் புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் இப்படி கதையாக கூறினால் நன்றாக இருக்கும் அம்மா🙏

  • @sdvmickey4983
    @sdvmickey4983 Год назад +5

    கல்கியின் எழுத்தும் உங்களின் வர்ணனையும்....... wow ....super ♥

  • @jeevavengat
    @jeevavengat Год назад +5

    My fav character பூங்குழலி தான் .. நீங்க சந்தோசமா எவ்ளோ அழகா சொல்றீங்க‌‌. ... 😍😍😍

  • @umaganesh4518
    @umaganesh4518 Год назад +16

    நீயே உனக்கென்றும் நிகரோ!!! உங்கள் தமிழ் இந்த கதைக்கு மேலும் அழகு சேர்கிறது👌👌👌👌👌

  • @balaravindran958
    @balaravindran958 Год назад +9

    படத்தில் விட்டுப் போன இந்த சுவாரஸ்யமான பகுதியை அருமையாக எடுத்துரைத்த பாரதிக்கு நன்றி..

  • @geethaiasan8478
    @geethaiasan8478 Год назад +2

    திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு: உங்களது கதை கூறல் என் அம்மாவை தான் நினைவு கூர்ந்தது என் மனம். மிக்க நன்றி

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 Год назад +45

    அமரர் கல்கி
    வடித்த
    பொன்னியின்
    செல்வனில்
    வரும்
    அனைத்து
    கதாபாத்திரத்திரங்களின்
    Intro scenes
    மட்டும்
    கல்கியின்
    வரிகளில்....
    உங்கள் குரலில் கேட்க ஆசை....
    ❣️❣️❣️❣️❣️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நிறைவேற்றுவீர்கள் என்று
    நம்புகிறேன்
    நன்றி😍
    வணக்கம்😍
    🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivathaniselvaraj6065
    @mathivathaniselvaraj6065 Год назад +11

    பூங்குழலியின் அறிமுக பாகத்தை காட்சிகளாய் விரித்து விவரித்தது மிக அருமை! வந்தியத்தேவனும் பூங்குழலியும் என் மனங்களில் தடம் பதித்து சென்றது நினைவில் நிழலாய் அசைகிறது! நன்றி பாரதி பாஸ்கரன் 🙏🏼😊

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 Год назад +5

    பாரதி பாஸ்கர் வாயிலாகவே கதை முழுவதும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது. அருமை, மிக மிக அருமை.

  • @abinaya6222
    @abinaya6222 Год назад +37

    இந்த கதையை கேட்கும் போது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி....🥰🥰🥰 இதே போல பொன்னியின் செல்வன் கதையை சொல்லுங்க அம்மா

    • @subramaniansankaran8788
      @subramaniansankaran8788 Год назад

      இதைக் கேட்கும் பொழுது எனது எண்ணத்திலும் இதுவே தோன்றியது

  • @VinothKumar-nr5le
    @VinothKumar-nr5le Год назад +4

    மேடம் நீங்க சொன்ன விதத்தில் அந்த கலங்கரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது அப்போது இப்படிப்பட்ட ஒரு ஞானி ஞானம் நிறைந்த ஒரு மனிதன் இருந்திருக்க முடியுமா என்று நினைத்தால் மிகப்பெரிய ஆச்சரியம்
    பொன்னியின் செல்வன் பற்றிய பூங்குயில் காதல் கதையை
    ( நீங்கள் சொன்ன விதம் மிக அருமை...)

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Год назад +14

    Excellent ...., இது போல் பொன்னியின் செல்வன் முழு நாவலையும் இவ்வளவு அற்புதமான விளக்கத்துடன் கூறினால் நிச்சயம் அதுவும் ஒரு சிறந்த பொக்கிஷமாக அமையும். நன்றி, கவியரசரின் 'சேராமன் காதலி' என்ற சாகித்ய விருது பெற்ற நாவலும் இது போல் ஒரு நாள் ஒரு பிரமாண்ட திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

  • @srividya2192
    @srividya2192 Год назад +3

    PS படம் வந்தபிறகு தான் இந்த நாவல் படித்தேன்....கல்கி 🙏🏼🔥
    இதில் எனக்கு மிகவும் பிடித்தவள், பூங்குழலி ♥️அவளை பற்றி நீங்கள் பேசும்பொழுது,அவளின் மீதான காதல் அதிகம் ஆகிறது.
    நன்றி அம்மா...🙏🏼

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Год назад +26

    தமிழ் உங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது பாரதி பாஸ்கர் அவர்களே. தமிழை இவ்வண்ணம் தெளிவாக தங்கு தடையின்றி சரளமாக பொழிவதால் தமிழன்னை அகமகிழ்ந்து உங்களை முன்பைவிட இளமையாக ஜொலிக்கவைத்திருக்கிறாள் என்று எண்ணத் தோன்றுகிறது. எல்லா வளங்களுடனும் நீங்கள் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறேன்.

  • @sampathkumar8024
    @sampathkumar8024 Год назад +8

    நான் உங்கள் தமிழ் பேச்சுக்கு மரம் ரசிகன். உங்கள் குரலில் முழு கதையையும் கேட்க விரும்புகிறேன்

    • @sampathkumar8024
      @sampathkumar8024 Год назад

      மரம் என வாசிக்கவும்

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 Год назад +1

    மிகவும் அருமையான படம் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது🙏👍 💖👌

  • @anumurugan3550
    @anumurugan3550 Год назад +182

    நான் இன்னும் PS-1 பார்க்கவில்லை நான் படித்து கற்பனை செய்த காதபத்திரங்கள் இடங்கள் அனைத்தும் படம் பார்த்தால் மாரி விடுமோ என்ற எண்ணம்.... ஆனால் படம் பார்த்தவர்கள் நம்பிக்கையான கருத்துக்களை சொன்னதால் பார்க்க போகிறேன்... எனக்கு மிகவும் பிடித்த கதா பாத்திரம் பூங்குழலி... நான் படித்த அதே சுவாரசியதுடன் அழகாக விவரித்தீர்கள் நன்றி🙏🙏🙏

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад +14

      மாறி என்று வல்லினம் போ ட வேண்டும்.

    • @limatnasara4679
      @limatnasara4679 Год назад +4

      நானும் அப்படிதான் இருந்தேன். ஆனால் படத்திற்கும், நம் கற்பனையும் மாறவில்லை... மணிரத்தினம் great..

    • @usham9666
      @usham9666 Год назад +2

      I'm so happy and proud of this film. We must support this film. very nice movie.this Film is one of the gem 💎 to our Tamil litrature and culture

    • @ushamanoharan6043
      @ushamanoharan6043 Год назад +1

      எனக்கு குந்தவை character

    • @kayalvilijayaram8729
      @kayalvilijayaram8729 Год назад +3

      You are right it is so rushed out and they skipped a lot of information. I can understand that the entire book can't be illustrated as a movie but I feel that it was not justified. The book and even the audio version keep me excited and was very detailed whereby the movie was very rushed. Of course all actors did a great fantastic job but storywise I was not satisfied compared to the book.

  • @mahendraruban7317
    @mahendraruban7317 Год назад +4

    அருமை, சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் அழகு பட தெளிவாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையின் ஒரு பகுதியாகிய ஓடக்காரி பூங்குழலியின் கதை அமைப்பை கூறியது அருமையிலும் அருமை.

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Год назад +3

    சினிமா பார்ப்பதை விட தங்கள் கதைத் தொகுப்புக்களை அதாவது பொன்னியின் செல்வன் கதை முழுவதும் தங்கள் வாயால் கேட்பதே ஆனந்தம் அளிக்குமே. இந்த அருளைக் கொடுத்த இறைவன் தங்களை எப்போதும் காப்பார். வாழ்க உங்கள் தமிழ்ப் புலமை .

  • @shanthirh1767
    @shanthirh1767 Год назад +19

    நாற்பது வருடங்களுக்கு முன்பு எனது பதின் பருவத்தில் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் படித்தேன்.படம் பார்க்க முதல் நாளே நைட் ஷோ டிக்கெட் கிடைத்தது. இயக்குனர் கல்கி வாசகர்களை ஏமாற்றவில்லை.👍🙏

  • @umamaheshvari3032
    @umamaheshvari3032 Год назад +1

    அருமை அருமை மிக அருமையாக சொன்னீர்கள் .பொன்னியின் செல்வன் புத்தகத்தை இரண்டு முறை படித்துள்ளேன் ,இருந்தும் நீங்கள் சொல்வது எனக்கு புதிது போல கேட்டுக் கொண்டே இருந்தேன் .இது மாதிரி ஒவ்வொரு கதாபாத்திரங்கள் பற்றியும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கடுமையான முயற்சிக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் அவர்கள் கதையின் கருத்து குலையாமல் கொடுத்திருக்கிறார் .ஆனாலும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள் .அதைக் கேட்கும் போது ஆதங்கமாக இருக்கிறது.

  • @muthukaruppanramasamy549
    @muthukaruppanramasamy549 Год назад +3

    உங்களுடைய தடை இல்லாத கதை விவரிப்பு வியக்க வைக்கிறது. நான் இன்னும் படம் பார்கவில்லை. கல்கி அவர்களின் எழுத்து நடை அருவி பிரவாகமாக கொட்டுகிறது. மிக்க மகிழ்ச்சி.

  • @venkatesanr5561
    @venkatesanr5561 Год назад +67

    நான் ஏற்கனவே எனது 19 வயதில் விடாமல் தொடர்ந்து 3 நாட்கள் படித்தேன்.இப்போது அனைத்தும் மறந்து விட்டேன்.பாரதி பாஸ்கர் அவர்களின் பூங்குழலியின் குண நலன்களை சொல்லும்போது உண்மையிலேயே அழுது விட்டேன்.

  • @singamraja6666
    @singamraja6666 Год назад +3

    பாரதி மேடம் வணக்கம்...
    பொன்னியின் செல்வன் படத்தை பற்றி நீங்கள் எடுத்துரைத்த விதம், வேற லெவல் மேடம்... வாழ்த்துக்கள்...
    உங்களது அழகான தமிழ் உசரிப்புக்கும், உங்களுடைய தமிழ் பற்றுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள்... வாழ்த்துக்கள் மேடம்...
    தமிழ் கடவுள் முருக பெருமான், என்றும் உங்களுக்கு துணை இருக்கட்டும்...🙏

  • @stard6606
    @stard6606 Год назад +2

    உங்க voice ல கேட்கிறது ஒரு ஸ்பெஷல் .....நீங்க இன்னும் ஒரு சில காட்சிகளை உங்கள் அழகான தமிழில் விவரிக்க மாட்டீர்களா என்று ஆவலாக இருக்கிறது❤️

  • @suganthir6764
    @suganthir6764 Год назад +8

    பாரதி மேடம் நீங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த வரம். உங்கள் குரலில் பொன்னியின் செல்வன் காதில் நுழைந்து இதயத்தை வருடுகிறது.
    வாழ்கவளமுடன்

  • @chandraeswar2481
    @chandraeswar2481 Год назад +10

    திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களின் கொஞ்சும் தமிழும் உச்சரிப்பும் மிகவும் அருமை.. 🥰🥰❤️❤️

  • @gayathrichandrasekar1733
    @gayathrichandrasekar1733 Год назад +2

    I used to admire Poonkuzhali's character. She is selfless, unique and revolutionary young woman. She is really an inspiration. Thank you so much Mam. loved it!

  • @jayalakshmiraghavan9366
    @jayalakshmiraghavan9366 Год назад +1

    அருமை! நான் பொன்னியின் செல்வன் படித்ததில்லை, (இங்கே, இப்போது புஸ்தகம் கிடைக்கவில்லை)..ஆனால் உங்கள் குரல் வழமும், காட்சி வர்ணனையும், மனதை நெகிழ வைத்தது! மிக்க நன்றி. நான் உங்கள் ரசிகை...பட்டிமன்றதிலும், யூ டுபிலும். 🙏🙏💕

  • @kaveriazad7528
    @kaveriazad7528 Год назад +11

    எண்ணற்ற முறை படித்துப்படித்து மகிழ்ந்த இந்த நாவலில் கல்கியின் இனிய, கண்ணியமிக்க (சாண்டில்யன்போல் இல்லாமல்) வர்ணனையும், கற்பனையும் யாராலும் முழுமைமிக்கதாக படமாக்க இயலாது என்ற எண்ணத்தால், படம் பார்க்கத் தயங்கினேன்! உங்களது ஆடியோ அதை மாற்றிவிடும் போல் உள்ளதே!!

  • @divs3414
    @divs3414 Год назад +161

    Ma’am please narrate Ponniyin selvan for Thamizh audience. You are the best person who can give the exact emotions what Kalki has written

    • @anuswami85
      @anuswami85 Год назад +5

      Absolutely......Bharathi mam.... marvelous.....u r into the story and depicting the characters in your own beautiful way ...கண்ணை மூடிக் கதை கேட்டால் ஆஹா.. என்ன ஒரு ஆனந்தம்..,. படம் பாகம் ஒன்று இரண்டு என வரும்படி வரட்டும்.. நீங்கள் உங்கள் குரலில் கதையைத் தொடருங்களேன்.... ஆவலாய்க் காத்திருக்கிறோம்....

    • @sarumathiyogalingam4780
      @sarumathiyogalingam4780 Год назад

      S I too thot the same

    • @balajiksb92
      @balajiksb92 Год назад +2

      Pls check with Spotify application already available in the same

    • @renushan4057
      @renushan4057 Год назад +4

      Totally agree! Maam, please narrate it for us, would love to hear from you.Thanks in advance!

    • @amnchampak
      @amnchampak Год назад +4

      I second that 👍

  • @DalesGuy71
    @DalesGuy71 Год назад +14

    Madam, your story telling is spell bounding. I have read the book only few months ago. But still your narration of the interesting encounter between Poonguzhali and Vanthiyathevan is more interesting than reading the book. Please give us more such gems. Thank you so much.

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey Год назад +1

    கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் வரும் நாயகி பூங்குழலி குறித்து மிகவும் அருமையாக தங்கள் நடையில் விளக்கினீர்கள்.எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @paramesnataraj
    @paramesnataraj Год назад +2

    அருமை, மிக அருமை மேடம், தங்களின் படம் பற்றிய சில கருத்துக்களும் - முக்கியமாக வந்தியத்தேவன் மற்றும் பூங்குழலி உரையாடல்கள் குறித்து தாங்கள் கதை சொல்லிய விதமும்...
    நான் இன்னும் படம் பார்க்கவில்லை...ஆனால் தங்கள் கருத்துக்களை / உரையைக் கேட்டபிறகு, விரைவில் பொன்னியின் செல்வன் படம் பார்க்கும் ஆவல் என்னுள் எழுகிறது என்று மட்டும் என்னால் உணரமுடிகிறது...
    நன்றி மேடம்...

  • @BadmaSelvam
    @BadmaSelvam Год назад

    மேடம் ரொம்ப அழகாக எடுத்துறைத்து இருக்கீங்க நான் பூங்குளலியை அறிமுக சீன் படித்த அனைத்தும் மிக அழகா கோர்வையா சொல்லிஇருக்கீங்க மெய் சிலிர்த்து விட்டது தாயே மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @rmTrustTruth
    @rmTrustTruth Год назад +3

    அருமை அம்மா! கல்கியின் பல பக்கங்களின் வர்ணணைகளை , மணிரத்னம்.... சில செய்கைகளில் சிறப்பாக செய்து விட்டார்...
    பூங்குழழி பூங்குழழி ... என வல்லவராயன் அழைக்க...கடலின் சமுத்திர குமாரி கடலிலிருந்து வந்து நம்மை வியக்க வைக்கிறார்.🙌👌👍🙏
    சமுத்திரகுமாரி வாழ்க!

  • @saraswathiravichandran2433
    @saraswathiravichandran2433 Год назад +1

    அழகான தமிழில், அருமையான வர்ணனைகளுடன்‌ உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளீர்கள்.உங்களுடைய குரலில் பொன்னியின் செல்வன் முழூகதையும் கேட்க ஆவலாக உள்ளேன்.நான் இக்கதையை நிறைய முறை படித்துள்ளேன்.இருந்தும் நீங்கள் சொல்ல கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.நன்றி.

  • @kavithakbalaji6108
    @kavithakbalaji6108 Год назад +1

    கதையை வர்ணனையுடன் சொல்வதில் தான் எத்தனை அழகு.கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது .👌👌🙏🙏

  • @aalde
    @aalde Год назад +1

    பாரதி அம்மையே.. ஆஹா.. அற்புதம்.. நன்றி.. மிக்க நன்றி..

  • @ramadhanavanthini7206
    @ramadhanavanthini7206 Год назад +108

    அலைக்கடலுடன் கொஞ்சி விளையாடி பூங்குழலியாகவே வாழ்ந்து விடக் கூடாதா என்னும் ஆசை அவ்வப்போது தோன்றும்.....

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Год назад +2

      பூங்குழலி எல்லாப் பெண்களின் உள்ளக்கிடக்கையையும் வெளிப்படுத்தும் மங்கை, உள்ளத்துணிவு பெண்களுக்கு உண்டு,உடல் வலிவும் உண்டு என்பதைக் காட்டுவதால் எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும்.

    • @malathimalathi4097
      @malathimalathi4097 Год назад

      💯💯💯💯

    • @loganayakilogi5505
      @loganayakilogi5505 Год назад

      Me too😍

    • @vidhyaannadurai8792
      @vidhyaannadurai8792 Год назад

      Yah true...

    • @sovietrani6820
      @sovietrani6820 Год назад

      அம்மா நீங்கள் வர்ணிக்கும் விதம் படம் பார்ப்பது போல் மனக்கண் முன் ஓடுகிறது. முழுக் கதையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.

  • @lingamrajasekar6775
    @lingamrajasekar6775 Год назад +6

    என் இனிய உடன் பிறவா அருமை சகோதரி

    • @induselviaparna6585
      @induselviaparna6585 Год назад

      madam movie nalla irukku but pesara tamil nalla illa madam mutinja ungkala maathari tamil pesa sollungka madam

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +1

    நான் பார்த்து விட்டேன் அருமையாக இருந்தது பூங்குழலி கேரக்டர் சூப்பராக இருந்துச்சி 🙏

  • @natarajans1237
    @natarajans1237 Год назад +27

    வணக்கம் நடராசன் நான் படம் பார்த்தேன்.கதையும் படித்து இருக்கிறேன். கதையில் குதிரை வீரன் வருவதில் ஆரம்பம்.அதை அப்படியே காப்பி அடித்து இருக்கவேண்டாம். கதை படிக்காதவர்களுக்கு பாத்திரங்களை புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது. படம் முதலில் சோழ அரசவையை காட்டி எல்லா பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி விட்டு இரண்டு மகன்களும் வெளியூர் சென்று இருக்கிறார்கள் என்பதை கூறி விட்டு பின்னர் சோழமன்னர் நோயுறுவதாக காட்டி பின்னர் கதையை தொடர்ந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தில்லானா மோகனாம்பாள் படத்தில் தங்கவேலு சிவாஜிக்கு சொல்வது போல் அறிமுகப்படுத்தி விடுவார்.மனோரமா வந்து சிவாஜி கூட இருப்பவர்களை வம்பு இழுப்பது போல நமக்கு புரியவைப்பார்.அது போல முதல் காட்சியில் பிரமாண்டமான தர்பார். அறிமுகங்களை செய்து இருந்தால் பாலோ செய்ய உதவியாக இருக்கும்

    • @janardhansubramanian4485
      @janardhansubramanian4485 Год назад +2

      திரைக்கதை திறமையாக செல்லவில்லை..கதையைச்சுருக்கி சொல்லவேண்டிய நிர்ப்பந்தம்.. ஆனால்பல முறை கதையை ப்படித்த பேர் கூட ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் .. கதையில் இல்லாத சில சம்பவங்களை(குந்தவை-ஆதித்தன்உரையாடல்) சேர்த்தவர்கள், கதையின் உயிர்நாடியான சில நிகழ்வுகளை சித்தரிக்காத து ஏமாற்றத்தை கொடுக்கிறது.. உதாரணம்:: குந்தவை - வந்தியத்தேவன் சந்திப்பு.. சோதிடர் இல்லத்தில்… மீண்டும் அரிசிலாற்றங்கரையில் வந்தியத்தேவனின் வேல் வீச்சு கண்டு குந்தவையின் வியப்பும் உவகையும்!!
      கல்கியின்படைப்பு திரைக்கு வந்தது மகிழ்வே! ஆனால் மணிரத்தினத்திடம் இன்னும் எதிர்பார்த்தோம்..
      திருமதி பாரதி இ்ப்படி விட்டு ப்போன காட்சிகளை அவரது பேச்சு வல்லமையால், இனிய குரலில் எங்களுக்கு தர வேண்டும்..கண்களுக்கு உணவு இல்லாத பொழுது சிறிதேனும் செவிக்கு விருந்து தர உங்களால்தான்முடியும்..

  • @karuppiahjegadeesan1105
    @karuppiahjegadeesan1105 Год назад +2

    இந்த கதையை இரண்டு முறை படித்து இருக்கிறேன். படிக்கும் போது பூங்குழலியை மிகவும் பிடித்திருந்தது.

  • @karunagurusamy2076
    @karunagurusamy2076 Год назад +1

    Nan padhinindhu varudangaluku mun ponniyin
    selvan novel padikkum bodhu enakku piditha padal varigal i like poonguzhali

  • @maxl2062
    @maxl2062 Год назад +18

    I really wished that Mani sir had included the first meeting of Pooguzhali and Vanthiyadevan. Fingers crossed that keep it in Part 2. I agree, more that pleasing audience who don’t know the novel, it’s better to please the ones that know it. I loved my experience because I’ve read it.

  • @banumathig5353
    @banumathig5353 Год назад +1

    வாழ்க வளமுடன்.👌👌. கதையை ரசித்து கதா பாத்திரங்கள் பற்றி கதையை பற்றி நீங்கள் சொன்ன விதம் ரொம்ப அழகாக இருந்தது.👌👌🙏🙏🌹🌹

  • @vijaya6459
    @vijaya6459 Год назад +5

    The whole PS1 is good. Awesome. Added to that your description and the way you narrated it is extremely good. When I heard about your headache problems and now when I see you. I really awestyck that God has sent you once again to give us wonderful speech. Thanks for the narration. Really enjoyed your story.

  • @mohanajesmi6791
    @mohanajesmi6791 Год назад

    அம்மா நீங்க சொல்ல சொல்ல கேட்க இனிமைய இருக்கின்றது முழு கதையும் உங்கள் மூலம் கேட்க ஆசையாக இருக்கிறது

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 Год назад +1

    நீங்கள் என்ன பேசினாலும் கேட்க மிக சுவாரசியம். கேட்பவர்களை ஈர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @balasubramanianpalanisamy302
    @balasubramanianpalanisamy302 Год назад

    மிகவும் அருமையான சரித்திரம், எளிமையான அருமையான விளக்கம், வாழ்த்துக்கள் பாரதி பாஸ்கர் நன்றி vanakkam

  • @arutselvan8427
    @arutselvan8427 Год назад +1

    நன்றி இதுவரை எத்தனையோ முறை நாம் நாங்கள் நாம் அனைவரும் பொன்னியின் செல்வன் என்ற காவியத்தை ஒருவர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையெனில் அந்த நாவலை நாமோ படித்து தெரிந்து கொண்டிருக்கிறோம் இல்லையெனில் தற்சமயம் இந்த கலியுகத்தில் இந்த டெக்னாலஜி முன்னேறிய இந்த உலகத்தில் ஆடியோ புக் வழியாக கேட்டிருப்போம் ஆனாலும் இருந்தாலும் நாம் இதை புத்தக வடிவில் வாசிப்பது என்பது மிகப்பெரிய ஒரு அனுபவமாக நமக்கு இருந்திருக்கும் அதை நான் பலமுறை உணர்ந்து இருக்கிறேன் ஏன் எனில் பொன்னியின் செல்வன் என்ற இந்த மிகப்பெரிய நாவலை நான் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆனால் இந்த நாவலை படிக்கும் போது நமக்குள் ஒரு கற்பனை உண்டாகும் அந்த கற்பனை ஏனெனில் அந்த கேரக்டரில் அதாவது அந்த கதாபாத்திரத்தில் படிக்கும் நபர்கள் ஏதோ ஒரு பாத்திரத்தில் ஒன்றி விடுவார்கள் அது பொன்னியின் செல்வனாக இருக்கலாம் வந்திய தேவனாக இருக்கலாம் ஆதித்த கரிகாலச் சோழனாக இருக்கலாம் குந்தவையாக இருக்கலாம் நந்தினி இருக்கலாம் வானவியாக இருக்கலாம் பூங்கொள்ளியாக இருக்கலாம் இன்னும் ஏற்ற கதாபாத்திரங்கள் இதில் உள்ளது அதில் ஒரு கதாபாத்திரத்தில் நாம் இணைந்து விடுவோம் பதிந்து விடுவோம் இந்த கதையை நாம் படித்து அதை நாம் உணர்வோடு புரிந்து கொண்டு இருப்போம் ஆனால் இன்று அது திரையில் வந்திருக்கிறது அதை நமது சகோதரி பாரதி பாஸ்கர் மிகவும் தெளிவாக பூங்குழலி என்ற கதாபாத்திரம் எப்படி அமைந்தது என்று சுருக்கமாக சொல்லியிருக்கிறார் மிகவும் அற்புதம் ஆனால் பொங்கலில் என்ற கதாபாத்திரம் மிகப்பெரிய நீண்ட ஒரு கதாபாத்திரம் அதில் இந்த புத்தகத்தில் உங்களில் எங்கும் நிறைந்து இருப்பாள் அற்புதமான ஒரு பாத்திரம் ஆனால் இந்தக் கதையை நாம் உணர்வோடு மனதோடு உள்ளத்தோடு நாம் படித்திருப்போம் ஆனால் திரையில் வரும் போது இதில் மிகப்பெரிய மாற்றங்கள் சிறு சிறு மாற்றங்கள் பெரும் பெரும் மாற்றங்கள் நடந்து இருக்கும் ஆதலால் இதை நாம் புறம் தள்ளி இந்த கதையை நாம் திரையில் ரசிக்க வேண்டும் அது எதுவாக இருந்தாலும் இந்த பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய காவியத்தை படைத்த நம் முன்னோர் கல்வி ஐயாவின் அந்த எழுத்து வடிவில் வந்திருக்கும் பெண்ணின் செல்வனே விரைவடிவில் நாம் பார்த்து ரசித்து அதை மற்றவர்களுக்கும் நமது குழந்தைகளுக்கும் எதிர்கால சந்தை சந்ததியினருக்கும் நம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் நான் எப்போதும் பொன்னியின் செல்வனின் ரசிகன் ரசிகன் ரசிகன் அந்த ராஜ ராஜ சோழன் சில சமயம் நமக்கு குருவாக தெரிவார்

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Год назад +1

    அருமையான உரையாடல் . நேரில் காண்பதுபோல இருந்தது் நன்றி.

  • @prasannaramapriyan7330
    @prasannaramapriyan7330 Год назад +1

    பாடல்களும், வசனங்களும் படத்தின் பலம் அல்ல ,பலவீனங்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.... நடிகர்கள் தேர்வு பெரும்பாலும் சிறப்பு, பிண்ணனி இசைக்கோர்ப்பு சிறப்பு, முக்கிய கதாப்பாத்திரங்களின் நடிப்பு நன்று, ஒளிப்பதிவு மிகச்சிறப்பு, கலை இயக்கம் அற்புதம்.... எந்த ஒரு கதாப்பாத்திரமும் மனதில் ஒட்டாதது இயக்குனருக்கு மிகப்பெரிய சறுக்கல்.... திரைப்படத்திற்காக இன்னும் சற்று emotions கூட்டியிருந்தால் இன்னும் நம் மனங்களில் ஆழமாகப் பதிந்திருக்கும்.... இருப்பினும், அமரர் கல்கியின் பொ. செ. கதையை பெரிதாகக் கொடுக்காமல் எடுத்ததற்காகவும், இந்த மிகப்பெரிய முயற்சிக்காகவும் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.... 💐🙏😊

    • @prasannaramapriyan7330
      @prasannaramapriyan7330 Год назад

      *கெடுக்காமல் எடுத்ததற்காகவும்*

  • @Nareshkumar-pq2qr
    @Nareshkumar-pq2qr Год назад +1

    Super superb madam. Indha padam parrkum podhu nan migavum magzhithen. Poongulalzhi charcter innnum konjam neram irrunthirundhal, nandraga irrukum endru thonriyadhu, ippo adhum therthadhu thangalal. Great madam.

  • @nagarajannatesa9260
    @nagarajannatesa9260 Год назад +2

    பாரதியின் விளக்கம் மிக அருமை. இந்த படத்தின் பாடல் வெளியிட்ட நகழ்ச்சியிலும் அற்புதமாக பேசினார் 👏👏

  • @sankartlbalaji5980
    @sankartlbalaji5980 Год назад +2

    திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் அழகான வர்ணனுக்குப் பிறகுதான் எனக்கு பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் மிகுந்துள்ளது

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 Год назад +1

    அருமையான பதிவு. நன்றி. நாவில் நடனமாடும் தமிழ் உங்களுக்கு ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டுகிறேன்

  • @goldenrules256
    @goldenrules256 Год назад +1

    அருமையான பதிவு...பூங்குழலி யை ஆவலுடன் உள்ளேன்

  • @kattupuchidotcom4849
    @kattupuchidotcom4849 Год назад +1

    இதில் இவ்வளவு பெரிய ஆழமான கதை இருக்கிறது என்று திரைப்படத்தில் தெரியவில்லை. நான் கதை படித்தது இல்லை.. மக அருமை..!

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 Год назад +4

    கல்கியில் தொடராக வெளிவந்த தமிழ்த் கதையை கண்முன்னே நடித்துகாட்டிவிட்டாயபாரதிமகிழ்ச்சி

  • @vinothja
    @vinothja Год назад +1

    என்ன அழகு ... பூங்குழலி யை நேரில் கண்டது போல் எனக்குள் ஒரு ஆனந்தம் ...

  • @2sridhark
    @2sridhark Год назад +1

    Excellent presentation about Poonkuzhali's character.
    The part played by Poonkuzhali is my favorite and i can never be tired of reading or listening about it!

  • @romuiyer5791
    @romuiyer5791 Год назад +19

    Simply mesmerizing narration!!!!! Meisilirkkirathu!!!!! Feel like listening to you hours together, such is the magic of your voice and narration (tw)! God bless you mam (tw)! 💐

  • @selvielangovan6665
    @selvielangovan6665 Год назад

    அருமையான கதாபாட்திரம் பூங்குழலி அதை விரிவாஹ் அருமையான தமிழில் விளக்கிய பாரதி பாஸ்கையின் பேச்சு அருமையிலும் அருமை

  • @jollymanora2315
    @jollymanora2315 Год назад +3

    பாரதி, உங்களைப்போல் கதை சொல்ல இன்னொருவர் இல்லை, அதுவும் பொன்னியின் செல்வன் உங்கள் பாணியில் கேட்க we are so lucky

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 Год назад +7

    Waiting for this mam. Eppo Eppo neenga pesuvinga nu wait pannite irunthen. Ithe mari each character ku sollunga mam super ah irukum

  • @baskarn1115
    @baskarn1115 Год назад

    வழக்கம் போல உங்கள் பேச்சாற்றல் எங்களுடைய உள்ளம் ஈர்த்தது என்றால்.... அதை கல்கி அவர்களின் படைப்பின் பகுதியாக அளித்தது இரட்டிப்பான விருந்தாய் அமைந்தது. நன்றி பாரதி அம்மையீர் அவர்களுக்கு.... மேலும் எப்போதோ படித்த பொன்னியின் செல்வன் கதை வரிகளை மீண்டும் அசை போட வைத்தது உங்களின் பதிவு.... நன்றிகள் பல....
    நல்ல வேளை இலங்கை கடற்படையினர் அப்போது இல்லை....

  • @chitravelanrajamanickam8613
    @chitravelanrajamanickam8613 Год назад +35

    கல்கியின் கதையை யார் வேண்டுமானாலும் படம், நாடகம், உரை செய்யலாம். ஒரு போதும் அந்த கதை சொன்ன விதத்தை படித்தால் தவிர அனுபவிக்க முடியாது.
    பிற்கால frame by frame describing various character and connecting them into single incident was briefed over by him.
    என் பதின்ம பருவத்தில் இந்த கதை வரலாறு என்று நம்பிய அபத்தம் உண்டு.
    இந்த குழலி கதாபாத்திரமாக முதல் மரியாதை ராதாவை அந்த காலத்தில் நான் யோசித்தது உண்டு.
    புத்தகத்தை மூடிய பின்னும் மனதில் நிழலாடிய கதாபாத்திரங்களில் அரச கம்பீரம் குந்தவை, எளிய அன்பு குழலி, just do it நம் உள்ளம் கவர்ந்த வந்திய தேவன்.
    கல்கி காலம் கடந்து வாழ்வார்.

  • @rukmanyy8958
    @rukmanyy8958 Год назад

    நன்றி மா கதை சொன்ன விதம்
    அப்பப்பா அருமை நீங்கள் எங்களின் வரம்

  • @umamaran5126
    @umamaran5126 Год назад +1

    அற்புதம்நீங்க நீங்கள் கதை சொல்லும் விதம் காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருகிறது

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 Год назад

    நன்றி சகோதரி. 14 வது வயதில் படிக்க ஆரம்பித்தேன் .இது வரை பலமுறை படித்து உள்ளேன். குந்தவை வருமானத்தைவிட சிறைச்சாலையில் தன் காதலைச் சொல்வதையும் மணிமேகலை பயணத்திற்குப் பின் வந்திருந்தேன் தன் குறும்பைப் விடுவதையும் பதிவிடவும்

  • @Wipronew3
    @Wipronew3 Год назад +2

    Mam, I never red any novels in my lifetime but after hearing your wonderful narration i would like to read all the volumes of ponniyin selvan novel.......

  • @gomathynannan5999
    @gomathynannan5999 Год назад

    Great ma
    Nicely explained iam 67 yrs old
    I enjoyed the movie so much
    I don't know how many times I have read the story. GO for karikalan intro.what a novel
    Tq

  • @dr.sarassaras282
    @dr.sarassaras282 Год назад

    மிக அருமை. தங்களின் கதை சொல்லும் விதம் மனத்தைக் கவர்ந்தது. மீண்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது! நாவலைப் படிக்கவும் சொல்கிறது..

  • @sandeee3
    @sandeee3 Год назад

    Ponniyin Selvan Kalkiyil varumpozhudhu padiththirukkiren..ovvoru vaaramum wait pannuvom gate il, pusthagam vaanga, paper kaaranidamirundhu. Bharathi neengal kadhaiyei rasiththu padiththirukkireergal yena therigiradhu. Ungal kural Tamizhukke oru azhagu kodukkiradhu. Nall Tamizh kaetbadhe aridhaaga irukku. Nandri, miga miga nandri

  • @raajya1492
    @raajya1492 Год назад

    அருமை அருமை ..கல்கியின் பூங்குழலியை உங்கள் குரல் மூலம் மீண்டும் கண்டு ரசிக்க செய்தமைக்கு நன்றி..இதே போல் நந்தினி யின் வஞ்சம் கலந்த பேரழகையும் குந்தவையின் அழகு கலந்த கூர் மதியையும் வானதியின் மென்மையையும் , அருள்மொழிவர்மனின் பேராண்மையும் உங்கள் குரலில் வடிக்க வேண்டுகிறேன் ..எழுத்து வடிவில் வந்த கல்கியின் இந்த காவியத்தை மணிரத்னம் அவர்கள் திரைக்கு கொண்டு வந்தது மாபெரும் முயற்சி ..அது மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று எங்களை போன்ற வாசகர்களின் அவா...உங்களை போன்றோர் குரல் அந்த ஆசைக்கு வலுசேர்க்கும்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Год назад +2

    மிகவும் தெளிவாக கதையை சொன்னீர்கள் சகோதரி 👏

  • @dharmu2297
    @dharmu2297 Год назад +1

    பாரதி அம்மா... உங்க தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ❤️🙏🏻🙏🏻💙

  • @gopalakrishnannarayanan8809
    @gopalakrishnannarayanan8809 Год назад

    I read this story in my school days. Mam your mesmerizing explaining skills once again taken me to that beautiful days. Thanks a lot Mam. GOD BLESS YOU

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 Год назад +2

    Yenna oru explanation.sabash madam.great great 👌👌👌🙏🙏🙏

  • @sureshbabu-jo3ep
    @sureshbabu-jo3ep Год назад

    உங்களுடைய எத்தனையோ பட்டிமன்ற பேச்சுகளை கேட்டு பிரமித்துள்ளேன்.படத்திற்குத் அருமையான விளக்கம்,பொன்னியின் செல்வனை பற்றிய கதை.மிக மிக அற்புதம்

  • @sshanmugamqhse6478
    @sshanmugamqhse6478 Год назад +1

    மிக்க நன்றி மிக அருமயான பதிவு தொடருட்டும் பணி,வாழ்த்துக்கள்

  • @sivakarthik104
    @sivakarthik104 Год назад +1

    Ungala yenaku romba pudikum mam... Unga voice la intha story a keatathula romba happy mam

  • @gowthamarumugam2685
    @gowthamarumugam2685 Год назад

    Ivlo nala enga poneenga. Unga story narration kagavum kathirunthen. Iniku afternoon notification vanthathum mudivu panniten inniku night itha kettu than thoongarathunu. அகமகிழ்வு nu solluvangaley atha nejamaley unarnthen unga notification vanthathum. Athum romba pudicha poonguzhali pathi pesureenganathu magilchi retipachu.... ❤️🤩

  • @ramaadevirangnathan7686
    @ramaadevirangnathan7686 Год назад +1

    Fantastic narration ..கதையும் படித்து சினிமாவையும் பார்த்த திருப்தி

  • @ushastinyworldushavenkates2866

    பூங்குழலி யை பற்றி தாங்கள் கூறிய விதம் மிகவும் அருமையோ அருமை அம்மா🙏🏻🙏🏻😍😍😍❤️👍

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 Год назад +2

    உங்க அளவுக்கு இந்த கதை அமைப்பு யாரால் கூற முடியும்.....
    Just imagining that film store really very supper madam......

  • @jansirani4601
    @jansirani4601 Год назад

    பாரதிபாஸ்கர் அவர்கள் குரலைக் கேட்க அவ்வளவு இனிமை.பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்தீர்கள்.ஒவ்வொரு வரிகளையும் ரசித்து ரசித்து சொல்லும் அழகே அழகு. அழகான ஏற்றம் இரக்கம்.