அச்சோ பதிகம் | திருவாசகம் | வான் கலந்த மாணிக்கவாசகர் | வாதவூரடிகள் | sivalogam | vadhavoradigal
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- திருவாசகத்திலிருந்து அச்சோ பதிகமும் வான் கலந்த மாணிக்கவாசகரின் முக்திக்காட்சியும்... மனதை உருக்கும் பாடல்...
தவத்திரு.வாதவூரடிகள் ஐயா அவர்களின் தெய்வீகக்குரலில்... இசை அன்பகம் பிரவீஷ் ஆனந்த்,
தனிமையில் கேட்டால் தன்னிலை உணர்த்தும் ஓர் உன்னத படைப்பு...
Subscribe- / சிவலோகம்சிவமயம் "
"சோறு " நித்திய அன்னதான சேவை SORU - Daily food service (Annadhaanam)
click: • #சோறு நித்திய அன்னதான ...
To donate us: gpay - +91 9087839991,
chennai sivalogathirumadam trust
HDFC bank : 50200041181745
Branch cmbt , chinmaya nagar
IFSC code: HDFC0001072
(தில்லையில் அருளியது)
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே.
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே.
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்
அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ
ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை
அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா
அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி
வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை
சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட
ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.
திருச்சிற்றம்பலம்
#அன்பே சிவம்
#அன்புமயம் சிவலோகம் #அண்ணாமலை
#gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக் உருகார்
நமச்சிவாய வாழ்க 🙏
வழியும் கண்ணீரை, துடைக்க மறக்கும் அளவுக்கு, உருக்கமான படைப்பு... மணிவாசகர் மலரடிகள் போற்றி போற்றி..❤❤❤❤
Om nama shivaya. Sarvam un oru moochil nindrathu. Om.
Nandru Thiruchirambalam.
நமச்சிவாய வாழ்க
Aum Nama Shivaya
ஓம் நமசிவாய நமஹ திருச்சிற்றம்பலம் நற்பவி 🙏🙏
நமச்சிவாய வாழ்க 🙏
atumyiyilum atumyi iyya excdellent mind melting anbae sivam ambae gngnam thilliambalam
திருச்சிற்றம்பலம் நமசிவய
நமச்சிவாய வாழ்க 🙏
சிவ சிவ
மெய்யை உணரவைக்கும் ஒரு அற்புத படைப்பு 👣🙏👣🙏👣🙏👣🙏
நமசிவாய வாழ்க 👣🙏👣🙏
நமச்சிவாய வாழ்க 🙏
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரையார் கழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்று அத்தன் எனக்கு இக்கானொளியை அருளியவாரு ஆர் பெறுவார் அச்சோவே!!..
நமச்சிவாய வாழ்க 🙏
திருச்சிற்றம்பலம்
🙏🏻Om namah shivaya 🙏🏻🔥🪷💫🔥💕🪷💫
ஓம் நமசிவாய 🌹
🙏🌿🌺சிவ சிவ💐🌹🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
நமச்சிவாய வாழ்க 🙏
எம் ஞான குருவே திருவடி போற்றி சிவாயநம
நமச்சிவாய வாழ்க 🙏
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில்👣 இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன்.
நமச்சிவாய வாழ்க 🙏
ஐயா சிவாய என் தொழில் ஆட்டோ ஓட்டுபவர் மாணிக்கவாசகர் ருத்ராட்ச பந்தல் போடுபவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் அருமைஇது வரை நான் இதை பதினோரு முறை பார்த்திருக்கிறேன் இன்னும் பார்ப்பதற்கு ஆசையாகவே சிவாயநம திருச்சிற்றம்பலம்
Entha padal varikaludan vanthal mekaum nandraka errukum
Om namashiva
நம்மையும் ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்து அம்மை என்னக்கு அருளியவார் ஆர் பெறுவார் அச்சோவே....!
நமச்சிவாய வாழ்க 🙏
NAMASIVAYA🙇♀️🙏அம்மை எனக்கு அருளியவர் ஆர் பெறுவார் அசோவே....GURUVADI போற்றி போற்றி திரு வடி போற்றி போற்றி....,🙏🙇♀️
Hara hara mahadheva🥰🙏 thiruchitrampalam🙏 siva siva 🙏arumai manivasaga adigale potri 📔🙏🥰🤲✍😍🙏🙏🙏🙏
நமச்சிவாய வாழ்க 🙏
❤❤❤❤❤❤❤
💞💞💞
நமசிவாய ஐயனே..சிவ சிவ உள்ளம் உருகி உருகி.. சிவ சிவ
நமச்சிவாய வாழ்க 🙏
சொல் இறந்த தன்மை...உணர்வில் கலந்தது 😢🙏🙏🙏
நமச்சிவாய வாழ்க 🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🌹🌹💐💐அருமை அற்புதம் 🙏🙏👌🏼👌🏼🌹🌹
என் இரு விழி நீரே தட்சனை அய்யா
தட்சனை அய்யா 😭😭😭😭😭
வனங்குகிறேன் வனங்குகிறேன்....🙇🙇🙇🙇🙇🙇🙇
Guruvae saranam ❤️ heart melting voice.......❤️
🙏🙏
இந்த பாடலை சந்தோசமான தொணியில் கேட்கவே விரும்புகிறேன் ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏿🌹 திருச்சிற்றேமம் 🌹🙏🏿
Siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏
ஓம் நமசிவாய நமக 🪔
ஓம் நமசிவாய சிவ சிவ
ஓம்நமசிவாய வாழ்க
திருச்சிற்றம்பலம்
Om nama shivaya 🙏🙏🙏🙏🙏