திருமண வரன் அமைய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- ஒவ்வொருமுறை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிறைவடைந்த பின்னர், திருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களின் தாயார் தங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்ய பல தடைகள் வருகிறது சாமி இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று கேட்பார்கள். வாரியார் சுவாமிகள் சத்திய வாக்காக அனைவருக்கும் சொல்லும் அற்புத மந்திரம் தான் அருணகிரி நாதர் சுவாமிகள் இயற்றிய இந்த திருமணத் திருப்புகழ்
முருகனின் திருருவ படத்திற்கு முன் விளக்கேற்றிவைத்து இந்த திருப்புகழ் மந்திரத்தை. 6 முறை சொல்ல வேண்டும். தினமும் 6 முறை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சொல்ல வேண்டும். திருமண வயதில் இருக்கும் பெண்கள் அல்லது பெண்ணின் தாயார் அல்லது மணமகன் அல்லது மணமகனின் தாயர் இம்மந்திரத்தை தொடர்ந்து கூறினால் உடனடியாக பலன் உண்டு. திருமணமானவர்கள் தொடர்ந்து இம்மந்திரத்தை கூறினால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
அடியார் பெருமக்கள் பலபேரின் வேண்டுகோலுக்கு இணங்க இந்த
மந்திரத்தை எல்லோரும் பாராயணம் செய்து பயன்பெறும்
வகையில் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சிககொள்கிறேன். மகாலிங்கம் ஆர்மி யூ டூயுப் சேனளுக்காக அருணகிரிநாத சுவாமிகள் அருளிசெய்த இம் மந்திர திருப்புகழை 6 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது அடியேன் உங்களில் ஒருவன் A Mahalingam Army. நன்றி வணக்கம்.
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த …… தனதான
……… பாடல் ………
ஓம் விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து …… வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் …… வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப …… மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து …… குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்
மகிழ்ந்து வழிபாடு தந்த …… மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த …… அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் …… களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த …… பெருமாளே.
எங்கள் குறைதீர வந்து குறுகாயோ அலைவாயு கந்த …… பெருமாளே.
🙏ஓம் சரவணபவ🙏
Om muruga saranam
🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏
Nantri Iya
🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏
Arumaiyana pathivu muyachi thodarattum
🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏
ஓம் முருகா சரணம் ❤❤❤❤❤❤❤
குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்
நமசிவாய
🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏