Это видео недоступно.
Сожалеем об этом.

🔴பெண் விடுதலை | Bharthiyar kavithaigal | 8D Audio | Ajith bharathi | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2020
  • நூல்:
    பாரதி கவிதைகள்
    பாடியவர்:
    மகாகவி. பாரதியார்
    தலைப்பு:
    பெண்கள் விடுதலைக் கும்மி
    கவிதை:
    காப்பு
    பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
    பேசிக் களிப்பொடு நாம்பாடக்
    கண்களி லேயொளி போல வுயிரில்
    கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.
    கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
    குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
    நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
    நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
    ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
    வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.(கும்மி)
    மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
    மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
    வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
    வெட்டி விட்டோ மென்று கும்மியடி!(கும்மி)
    நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த
    நாயிடம் யோசனை கேட்ப துண்டோ?
    கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
    கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.(கும்மி)
    கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
    வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
    வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.(கும்மி)
    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
    பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
    எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
    இளைப்பில்லை கணென்று கும்மியடி!(கும்மி)
    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
    வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
    சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
    சாதி படைக்கவும் செய்திடு வோம்.(கும்மி)
    காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
    காரியம் யாவினும் கைகொடுத்து,
    மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
    மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!(கும்மி)
    பாடல் பொருள் :
    பெண்கள், தாம் புதிதாகப் பெற்ற விடுதலையை மகிழ்வுடன் சேர்ந்து கூடிப் பாடி ஆடிக் கொண்டாடுகின்றனர்.
    தமிழ்நாடு முழுதும் குலுங்கிடப் பெண்கள் கை கொட்டிக் கொண்டாட்டம் நடத்துகின்றனர்.
    பெண்கள், தம்மைப் பிடித்த பிசாசுகள் போயின என்று கொண்டாடுகின்றனர். அவர்களைப் பிடித்த பிசாசுகள் யாவர் எனும் கேள்விக்கு, அதன் பின் வரும் வரிகளில் விடைகள் கிடைக்கின்றன.
    எனவே, பெண்கள் கவலையீனமாக இருந்தால், போனபிசாசுகள் திரும்பவும் வரக்கூடும் எனும் கருத்தும் அவ்வடிகளில் உள்ளது என்பது எம் சிந்தனை.
    பெண்கள் ஏட்டைத் தொடுவது கூட, அதாவது சாதாரணக் கல்வியை எட்டிப் பார்ப்பது கூட, முன்னர் பெண்களுக்கு, பல்லாண்டுகளாகத் தீமை என மறுக்கப் பட்டது என்பதும், அதனால் பெண்கள் வீட்டிற்குள் அறியாமையுடன் பூட்டி வைக்கப் பட்டார்கள் என்பதும்,
    மாடுகளைத் தொழுவங்கங்களில் அடித்து வசக்கிக் கட்டி வைப்பதைப் போல் பெண்களையும் நடத்த எத்தனித்தவர்களை வென்று, பெண்கள் கூட்டாக அவ் வழக்கத்தை ஒழித்து விட்டார்கள் என்பதும் இக் கவிதையில் கூறப்பட்டுள்ளது.
    அடுத்து, நாய்களைப் போல் பெண்கள் சீதன விலை கொண்டு அவர்களின் கலந்தாலோசனை இன்றியே விற்கப் பட்டார்கள் என்பதும், ஆனால் மணத்தின் பின்னர் ஓரளவாவது வீட்டுப் பிரச்சினைகளில் அவர்களின் யோசனைகள் கேட்கப் பட்டன என்றும்,
    ஆண்கள், பெண்களை, வசதி வந்தால் கொன்றேயிருப்பர் என்றும், ஆனால் அதற்கு துணிவு இல்லாமலே விட்டு விட்டார்கள் என்றும் இக் கவிதையில் கூறப் பட்டிருக்கிறது.
    அத்துடன் பெண்களுக்கு மட்டுமே, கற்பு நிலை வேண்டும். ஆண்கள் எத்தனை பெண்களையும் காதலிக்கலாம், கூடி வாழலாம், என்றவாறு நடந்து வந்தார்கள் என்றும்,
    பெண்கள், தங்களுக்கு விரும்பிய காதலரையும் கணவன் மாரையும் தெரிவு செய்யச் சுதந்திரமின்றி, அவர்களின் பெற்றோர்களும் ஆண் சகோதரர்களும் தெரிவுசெய்தவர்களையே முற்காலத்தில் மணம்செய்யவேண்டி இருந்தது என்றும்,
    இப்படியான தீய வழக்கங்களில் இருந்து விடுதலை பெற்ற பெண்களே இன்று கொண்டாடுவதுமாக, இந்தக் கவிதையில் பாரதியார் கற்பனை செய்து பாடியிருக்கிறார்.
    இந்தப் புதிய திருப்பங்களால் பெண்கள் ஊக்கம்அடைந்து உந்திக்கப் பட்டு...
    வீட்டிலும் நாட்டிலும் ஆட்சிப் பட்டங்களைப் பெற்றுப் பணிகள் செய்வதற்கும், சட்டங்கள் ஆக்குவதில், ஆண்களுடன் சம பங்கு கொண்டு சமூக சேவை செய்வதிலும்,
    கல்வியையும் அறிவையும் பெறுவதிலும், ஆணுக்குப் பெண்கள் சரி நிகர் சமானம் ஆனவர்கள் என்னும் புதிதாகப் பெற்ற அறிவுடனும், கடமை உணர்ச்சியுடனும்,
    வேதங்கள் படைப்பதிலும் நீதி நிறுவனங்களைப் பரிபாலனம் செய்வதிலும் சம பங்கை ஏற்கத் தாம் தயாராக இருக்கின்றார்கள் என்றும் கூடிப் பாடிக் கும்மியடித்து உறுதி கூறிப் பெண்கள் ஆடுகின்றனர் என்றும் பாரதி தன் கவிதையில் சொல்லுகிறார்.
    இவற்றை எல்லாம் செய்துகொண்டு, ஆண்கள் சாதாரணமாகச் செய்யாத, செய்ய விரும்பாத, அல்லது செய்ய முடியாத வேலைகளாகிய: உணவாக்கிப் படைத்தலையும், குழந்தைகளைப் பெற்று, தெய்வங்களின் நற் குணங்களும் ஆற்றலும் கூடிய ஒரு தெய்வச் சாதியாகிய தமிழ்ச் சந்ததியை உருவாக்கும் கருமங்களையும், தாம் விரும்பித் தொடர்ந்து செய்வோம் என்றும், மேலும், ஒவ்வொருவருடைய தனித்துவமான சொந்த விருப்பு வெறுப்புகளின் படி பூரண சுதந்திரத்தினுடன் தங்கள் காதலர்களையும் கணவன்மாரையும் தாமே தேடித் தெரிந்து கைப்பிடித்து மணந்து, அவர்களின் நற்செயல்களை ஊக்கி, உதவி செய்து, முற்காலத்தை விடக் கூடிய அளவில், பெண்களின் விசேட கடமைகளை ஆற்றி, பெண்மையை மாட்சி பெறச் செய்வோம் எனப் புது நம்பிக்கையுடன் பறை சாற்றித், தாம் அண்மையில் பெற்ற சுதந்திரத்தைப் பெண் விடுதலைக் கும்மி அடித்துக் கொண்டாடுவதாக, முன்னோடியாகக் கற்பனை செய்து, பாரதியார், நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பெண்கள் விடுதலைக் கும்மி எனும் கவிதையில் பாடியுள்ளார்.
    #bharathiyar #bharathiyarquotes
    #bharathi #bharathiyarkavithaigal #bharathiyar_varigal #bharathikannamma #bharathiyarsong #bharathiar #bharathiyarkavithai #bharathiyarquotesareinspiring #kadavulbharathi #bharathiyarmedia #bharathiyarkavithaigalismyinspiration🔥 #bharathilove #bharathians #Ajithbharathi #bharathi #tamilan #ajithbharathi #tamil #kavithaigal #bharathistatus #mahakavi #bestpoems

Комментарии • 12