Sivapuranam - Thiruvasagam | சிவபுராணம் | Vadhavooradigal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சிவபுராணம் - திருவாசகம் | Sivapuranam - Thiruvasagam | வாதவூரடிகள் | Bakthi TV | #SIvapuranam
    Sivapuranam -Thiruvasagam is a Tamil Devotional Song on Lord Sivan Sung by Thiruvasagapiththar SIva Thiru.Vadhavooradigal
    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
    எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
    விலங்கு மனத்தால், விமலா உனக்கு
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

Комментарии • 4,8 тыс.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 2 месяца назад +338

    யாருக்கெல்லாம் சிவபுராணம் மனப்பாடமாக பாடத் தெரியும்? ஹர ஹர மகாதேவா!

    • @balajicdm4388
      @balajicdm4388 2 месяца назад +17

      Shivaya namaha.

    • @suryanarayanan415
      @suryanarayanan415 2 месяца назад +5

      ❤❤

    • @suryanarayanan415
      @suryanarayanan415 2 месяца назад

      ​@@balajicdm4388❤❤❤

    • @vardhinisisters5737
      @vardhinisisters5737 Месяц назад +3

      முதல் மூன்று வரி மட்டும் தான் தெரியும்

    • @lal394
      @lal394 Месяц назад +14

      14 வயசு ல இருந்து தெரியம்

  • @BalaG-gu7fo
    @BalaG-gu7fo 3 месяца назад +386

    நான்.எனது பள்ளியில் 5ஆம் வகுப்புபடிக்கும்போது படிப்பேன் உங்கலுக்கு பிடிக்குமா? அப்படி என்றல் ஒரு👍👍பன்னுங்கள் நன்பா😊

  • @jilranjithjilranjith2233
    @jilranjithjilranjith2233 Год назад +1026

    நான் படித்த பள்ளியில் பாட்டு போட்டியில் இந்த பாடலை பாடி முதல் பரிசு பெற்றேன் 🙏🙏

  • @nandhadurga112
    @nandhadurga112 Месяц назад +40

    அப்பனே முருகா வேல் மாறல் கேட்டு தான் இந்த வேண்டுதல் வைக்கிறேன் என் கணவர் மலேசியா ல இமிகிரேசன் மாட்டிக்கிட்டாரு உள்ள வச்சிருக்காங்க fine amt கட்டிணாதான் விடுவாங்க இல்லனா விடமாட்டாங்கனு சொல்றாங்க பசங்கள வச்சிக்கிட்டு வெளில சொல்ல முடியாம செத்துக்கிட்டு இருக்கேன் பா fine amt கம்மியா வாங்கிட்டு அவர ஒரு வாரத்துக்குள்ள ஊர்க்கு அனுப்பி வைக்கனும் முருகா நீங்க தான் எனக்கு நல்ல வழிய காட்டனும் அப்பா முருகா

  • @gowria3798
    @gowria3798 20 дней назад +33

    சிவபுராணம் கேட்டால் நினைத்தது கிடைக்கும்

  • @VanithaShanmugam-od8si
    @VanithaShanmugam-od8si 2 месяца назад +118

    இந்த பாடலை எத்தனை பேரு பாடி இருந்தாலும் இந்த குரலில் கேக்கும் போது ஈசனே முன் வந்து நிற்பது போல் உள்ளது... இந்த குரலில் அப்படி ஒரு வசிகரம் உள்ளது... நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...

  • @banu8072
    @banu8072 Год назад +64

    இறைவா என் வாயில் இருக்கும் நோய் இல்லாமல் செய் இறைவா எனக்காக சிவபெருமான் இடம் வேண்டிகொள்ளுங்கள். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @mailavankugadas7482
    @mailavankugadas7482 28 дней назад +11

    எனது பாடசாலை ரத்மலானை இந்து கல்லூரியில் (இலங்கை) ஒவ்வொரு வெள்ளியும் எங்கள் பாடசாலை கோவிலில் சிவபுராணம் பாடுவோம் ❤ எம்பெருமானே ❤

  • @NaniNithik
    @NaniNithik 21 день назад +8

    நான் படித்த பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும்.. சிவபுராணம் சொல்வோம்... இன்றும் என்ன மனதில் நிலையாக உள்ளது 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @nagarajannagarajan7369
    @nagarajannagarajan7369 4 месяца назад +84

    மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் எழுதிய பாடல் திருவாசகம் என்னும் தேன்
    ஓம் நமசிவாய சிவாய நம

  • @ArasukumarArasukumar-cb9et
    @ArasukumarArasukumar-cb9et 5 месяцев назад +56

    எம் ஐயனை வணக்க இந்த பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ ,,,ஓம் நம சிவாய

  • @prasanthsp1197
    @prasanthsp1197 10 месяцев назад +288

    ௭ந்த பிறவியில் ௭ன்ன புண்ணியம் செய்தேனோ❤ இன்று ௭ன் அப்பன் மீது இத்தனை நேசம் கொண்டுள்ளேன். ஐயனே உன் பார்வை ௭ன்மேல் விழ ௭ன்ன புண்ணியம் செய்தேனோ ❤ஓம் நமசிவாய 🙏

  • @yogarajan4489
    @yogarajan4489 3 года назад +26

    நான் படித்த பள்ளியில்
    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை பள்ளிக்கூடத்தில் திருவாசகம் பாடி தேவாரம் பாடித்தான் பள்ளிக்கூட பாடங்கள் ஆரம்பமாகும். கொழும்பு விவேகானந்த மகா வித்தியாளயத்தில் .நன்றி அய்யா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthibana1132
    @parthibana1132 3 месяца назад +8

    ஓம் நமசிவாய தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @VanithaShanmugam-od8si
    @VanithaShanmugam-od8si 3 месяца назад +12

    இந்த குரலை கேக்கும் போது மனம் அமைதி அடைகிறது பாடியவர் பெயர் தெரிந்து கொள்ள விருப்பம்

  • @அஸ்வத்தாமன்
    @அஸ்வத்தாமன் 4 месяца назад +49

    என் இறைவன் ஈசனை நினைக்கும் போது... முக்தி_யை உணர முடிகிறது !!
    நமசிவாய வாழ்க🙏

  • @supan5591
    @supan5591 Месяц назад +4

    எல்லாம் சிவ மயம் சர்வம் சிவமயம் ஓம் நமசிவாய சிவாய நம என் ஈசனே மீண்டும் வேண்டாம் இந்த பிறவி போதும் சிவனே பட்ட கஷ்டங்கள் எல்லாம் போதும் இனி எந்த பிறவியும் வேண்டாம் இறைவா நான் உன்னை சரணடைந்தால் போதும் என்னப்பன் ஈசனே சிவாய நம

  • @aravindanm2548
    @aravindanm2548 26 дней назад +3

    தினந்தோறும் என் அப்பா பாடிய பாடல் அவரை நினைத்து போற்றி வழிபடுகிறேன் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmiraj697
    @lakshmiraj697 Месяц назад +4

    🙏சிவபெருமானே அப்பா…
    எங்களுக்கு தொழில்மேன்மையும் மனம்நிறைந்தநிம்மதியும், சந்தோசமும், என்மகனுக்கு நல்ல பொண்ணும் அமைய அருள்புரிங்க🙏🙏🙏🙏

  • @bharathk4667
    @bharathk4667 11 месяцев назад +26

    மாணிக்கவாசக பெருமானார் அருளிய திருவாசகம் நமக்கெல்லாம் கிடைத்த அரிய பொக்கிஷம்.காந்த குரலில் கேட்பதும் நமக்கு கிடைத்த வரம்.சிவாயநம...

  • @banu8072
    @banu8072 2 года назад +323

    எத்தனை கோடி பணம் இருந்தாலும் சிவபுராணத்துக்கு ஈடுஇணை இல்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Karthickbaskar380
    @Karthickbaskar380 Месяц назад +14

    திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகதுக்கும் உருகார்.. ஓம் நமசிவாய..

  • @DEEPAKRAJA.K.
    @DEEPAKRAJA.K. 2 месяца назад +36

    ஆகா ஆகா திகட்டாத தேனமுதே ... தித்திக்கும் இசை அமுதே ... நாவில் ருசி கண்டதுண்டு ... என் காதும் இனிக்குதடா ...நமச்சிவாயமே உன் புகழ் கேட்பதினால்

  • @kalavathyv3516
    @kalavathyv3516 3 месяца назад +45

    நான் தினந்தோறும் சிவபுராணம் கேட்காமல் தூங்குவதில்லை போற்றி ஓம் நமசிவாய

  • @magictricks4998
    @magictricks4998 4 месяца назад +5

    ❤ Om namah shivaya ❤

  • @deepa_571
    @deepa_571 4 месяца назад +10

    ஓம் நமச்சிவாய அய்யனே துணை 🙏🏼🙏🏼🙏🏼

  • @kuttyshivanofficialksoavi
    @kuttyshivanofficialksoavi Год назад +84

    திருச்சிற்றம்பலம். சிவபெருமானை மகிழ்ச்சி படுத்தும் பாடலை பாடுகிறேன் இதை இசை போட்டு பாடுங்க. திருநெறி பாடல். சிவமென்று கூறடா சிந்தனை மகளும் சிவமென்று கூறடா ஆனந்தம் பொழியும் சிவவென்று கூறடா சிவமயமாகும் சுகம் என்று கூறடா சிவமாய் மாறும் ும் சிவமென்று கூறடா ஜோதியாய் மாறும் சிவம் என்று கூறடா சிவனை அடைவோம் சிவம் என்று கூறடா நெறிவாழ்வு கிடைக்கும் சிவம் என்று கூறடா எங்கும் சந்தோஷம் சிவம் என்று சொல்லடா சிவம் வந்து போகும் சிவம் என்று கூறடா அண்ணாமலை மா வரும் சிவவென்று கூறடா குருவாய் மாறும் சிவமென்று கூறடா சிவமாய் நிற ்கும் சிவமென்று கூறடா தீராத நோய் தீரும் சிவம் என்று கூறடா ஆறாத புண்ணாக ஆறு மூவி சிவம் என்று கூறடா ஆனந்த மழை பொழியும் என்று கூறடா இசையும் மாலும் சிவம் என்று கூறடா சிவகிரி அடைந்து சிவமென்று கூறடா பிறப்பையறுக்க வேண்டும் சிவம் என்று கூறினால் சிவலோக பயணம் சிவம் என்று கூறினால் அன்பினால் நடக்கும் சிவம் என்று கூறினால் இன்னிசை பாடும் சிவமென்று கூறினால் ஆகவும் நிற்கும் சிவா என்று கூறினால் ஆன்மீகம் தோன்றும் சிவமென்று கூறினால் தொல்லைகள் தீரும் சிவமென்று கூறினால் எங்கும் நிறைந்திருக்கும் சிவமென்று கூறினால் அங்கம் அடங்கும் சிவம் என்று கூறினார் ஆனந்தம் பெருக கும் சிவம் என்று கூறினால் திருவருள் தோன்றும் சிவமென்று கூறினால் திருமுறை தோன்றும் சிவன் என்று கூறினால் திருவாசகம் தோன்றும் சிவன் என்று கூறினாய் தெரு நெறிகள் தோன்றும் நிலங்கள் அதிரும் சிவவென்று கூறினார் நீர் நிலை மாறும் சிவவென்று கூறினால் ஆனந்தமாய் மாற ும் சிவமென்று கூறினால் நல்ல நிலை பெறுவோம் சிவமென்று கூறினால் ஆரனாக மாறும் சிவமென்று கூறினால் சிவமே அணிந்து ஓம் சிவம் என்று கூறினால் பிரச்சனை தீரும் சிவம் என்று கூறினால் அர்ச்சனையேறும் சிவன் என்று கூறினால் சிந்தனை மகளும் சிவமென்று கூறினால் பிறப்பறுக்கும் நாயகன் சிவமொன்று கூறினால் எங்கும் நிலைக்கும் சிவமென்று கூறினால் பிறப்பை அறுத்து ஆட்கொண்டு என்னை உன்னுடன் கலக்கச் செய்து உன்னுடைய பிள்ளையாய் மாற்றி என்னை ஆட்கொள்வாய் சிவபெருமானே போ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @firstfitzonegym603
    @firstfitzonegym603 10 месяцев назад +51

    எமது ஜிம்மில் எமது வீட்டில் நான் செல்லும் இடம் எல்லாம் தினம் ஒலிக்கும் குரல் சிவசிவ நமசிவாய வாழ்க❤😊

  • @mathi.m2587
    @mathi.m2587 3 года назад +499

    தினமும் காலையில் இப்பாடலை கேட்ட பிறகுதான் என்னுடைய பணியை தொடங்குவேன்.
    ஓம் நமசிவாய. 🙏🙏🙏

  • @sivaramakrishnansrk5835
    @sivaramakrishnansrk5835 Год назад +165

    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே🙏

  • @baraniparamakudi
    @baraniparamakudi 6 месяцев назад +32

    முதலும் , முடிவும் இல்லாதவர் எம் சிவபெருமான்.அவரை கும்பிடுவதற்கே அவருடைய அனுமதி வேண்டும்...🙏

  • @aravindanm2548
    @aravindanm2548 22 дня назад +4

    ஓம் நமசிவாய சிவபெருமானே உன்னைப் போற்றி வழிபடும் என் இல்லத்து மனைவிக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க வேண்டியதை கிடைக்க அருள வேண்டுகிறேன்.நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @bharathk4667
    @bharathk4667 4 месяца назад +64

    நம் முன்னோர்கள் நமக்கு கோயில் கட்டி குளம் ஆறு ஏரி அமைத்து இறைவனை பாட பாடல் புராணம் எழுதி வைத்து சென்றார்கள்.நாம் அதை பின்பற்றினாலே போதும் அழிக்காமல்..வாழ்க தமிழ்..சிவபுராணம்..தந்த மாணிக்கவாசகர்..

  • @sayeeanjaneyasevatrust660
    @sayeeanjaneyasevatrust660 Год назад +63

    ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    ஓம் நமசிவாய

  • @ramanfamily42
    @ramanfamily42 9 месяцев назад +18

    இதை கேட்கும்போது மனது மிகவும் அமைதி யாக இருக்கிறத.

  • @SaraswathyMilk
    @SaraswathyMilk 10 дней назад +2

    அப்பாஅம்மாசிவாயநமக❤
    திருச்சிற்றம்பலம்❤திருபொன்னம்பலம்❤திருஅருணாச்சலம்அப்பா❤மகேஸ்வரமகாதேவாய
    மத்தியார்சுனாசே❤❤❤❤

  • @Kjggftyjj
    @Kjggftyjj 4 месяца назад +8

    ஓம் நாம சிவயா ❤❤❤

  • @ganesanprvn8706
    @ganesanprvn8706 6 месяцев назад +16

    சிவன் அவன் என் சிந்தனை யுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se 2 месяца назад +4

    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IndianYoutuberMamta
    @IndianYoutuberMamta 3 месяца назад +2

    Om namah shivaya 🙏🌷

  • @SriVallilingam
    @SriVallilingam 3 года назад +435

    சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை..
    அவனோடு ஒப்பார் யாவரும் இல்லை...🙏😭🔱🕉️

  • @ramyaraam5762
    @ramyaraam5762 Год назад +189

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
    விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
    எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
    விலங்கு மனத்தால், விமலா உனக்கு
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Год назад +10

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அடியேன் அனுதினமும் கேட்கும் பாடல்.அருமை.அருமை.🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🌹🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-uy3bi
    @RajaRaja-uy3bi 24 дня назад +2

    Eswara naa en kulanthaikala vachuttu rompa avathipadaren yelathaiyum thaangum alavukku mana sakthiya kudunga om namashivaaya❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manualstudio8194
    @manualstudio8194 7 месяцев назад +4

    மெய்ஞ்ஞானமாகி மிலிகின்ற மெய் சுடரே....
    ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய...

  • @padminivibhakarhi5
    @padminivibhakarhi5 Месяц назад +3

    OMM Nandhiiswara pottri
    OMM Nameshivaya pottri
    OMM Arelekesi Thaye pottri 🙏🙏🙏🙏🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +208

    எங்கள் வீட்டு பூஜை அறையில் காலை மாலை இந்த சிவ புராணம் பாடல் தினமும் ஒலிக்க கேட்கிறோம்.ஓம் நமசிவாய .🙏🙏🙏

  • @karthikpalaniandy1995
    @karthikpalaniandy1995 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏

  • @mrmmani01
    @mrmmani01 Месяц назад +6

    அப்பா 🙏🏻

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 4 месяца назад +6

    பக்தி ஸ்ரத்தையாக துதித்துள்ளார், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாதவூரடிகளுக்கு ஈஸ்வரனின் பரிபூரண கடாக்ஷம் இருக்கிறது. அவர் அம்மா அடிகளுக்கு விபூதி இட்டு விடுவது வெகு அழகு

  • @prabhakaranspeaks6913
    @prabhakaranspeaks6913 2 года назад +12

    ஓம் நமசிவாய.. தெய்வீக குரலில் திருவாசக தேனை பருகிய உணர்வு.

  • @gamingmannan7026
    @gamingmannan7026 Месяц назад +2

    மனம் திடம்பட இறை வணங்க ஆசி தரவேண்டும்

  • @Logeshkaruppusamy123
    @Logeshkaruppusamy123 2 месяца назад +13

    நற்றுணையாவதும் நமசிவாயவே...
    நமச்சிவாய வாழ்க...

  • @chithiravarman2763
    @chithiravarman2763 Год назад +9

    Om namashivaya nama 🙏🙏🙏🙏🙏🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏🙏🙏🙏🙏♥️🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyadevi8444
    @nithyadevi8444 2 года назад +293

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்..😌🥳🥳
    ஓம் சிவாய நம🙏🙏

  • @Sudha55555
    @Sudha55555 8 месяцев назад +29

    சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
    சிவ சிவ என்றிட தீவினை மாளும்
    சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
    சிவ சிவ எண்ணச் சிவகதி தாமே...
    ஓம் நமச்சிவாய

  • @hemnathk866
    @hemnathk866 3 года назад +59

    சிவன் என் தந்தை

  • @alaguqueen7917
    @alaguqueen7917 Год назад +198

    எனது பள்ளி பருவத்தில் வெள்ளி கிழமை அன்று காலையில் சிவபுராணம் படிப்பது வழக்கம் இன்று ஞாபகம் வருகிறது 🙏🙏🙏

  • @magisivam4457
    @magisivam4457 3 года назад +31

    சிவன் இல்லாமல் வாழ முடியாது என்று அன்புடன் மகிசிவம்

  • @user-sw6nw3tm3x
    @user-sw6nw3tm3x Месяц назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤

    • @user-sw6nw3tm3x
      @user-sw6nw3tm3x Месяц назад +1

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @lakshmikumaresan2259
    @lakshmikumaresan2259 2 года назад +11

    நெஞ்சை உருக்கும் திருவாசகம்
    கேட்க கேட்க பக்திப் பரவசமாய்
    இருக்கிறது
    தென்னாடுடைய சிவனை போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா
    போற்றி

  • @nisyahhh994
    @nisyahhh994 2 года назад +53

    Thiruchitrambalam!!!
    Thollai irum piravi, soozhum thalai neeki
    Allal aruthu aanandham aakiya nae
    Ellai maruva neri alikkum, vaadhavoar engon
    Tiruvasagam enum thean, tiruvasagam enum thean……
    Nalam tharum sivapuranam naalum padidu manamae
    Sivan varuvan arul tharuvan vaazhvil anudinamae...
    Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
    Imai podum yennenjil neengaadhan thal vazhga.
    Kokazhi aanda guru manithan thaal vaazhga,
    Agamam aagi nindru annippan vaazhga,
    Yekan anegan iraivan adi Vaazhga(1-5)
    Vegam keduthu aanda vendhan adi velga,
    Pirapparukkum pinjakan than pey kazhalgal velga,
    Puratharkkum cheyon than poomkazhalgal velga,
    Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga,
    Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.(6-10)
    Eesan adi Potri, Yenthai adi Potri,
    Nesanadi Potri, Sivan Sevadi Potri,
    Neyathey nindra nimalan adi Potri,
    Maya pirappu arukkum mannan adi Potri,
    Cheeraar perum thurai nama devan adi Potri(11-15)
    Aaratha inbam arulum malai Potri,
    Sivan avan yen sinthayul ninra athanaal,
    Avan arulaale avan thal vanagi,
    Chinthai magizha Sivapuranam thannai,
    Munthai vinai muzhuthum oya uraippan yaan.(16-20)
    Kannuthalaan than karunai kan kaatta vandeythi,
    Yennutharkettaa yezhilaar kazhal irainji,
    Vin nirainthum, man nirainthum mikkai vilangoliyaai,
    Yenn iranthu yellai illathaane nin perum cheer,
    Pollaa vinayen pugazhum maru ondru ariyen.(21-25)
    Pullagi, poodai puzhuvai maramaki,
    Pal virugamagi pravaiyai, paambaagi,
    Kallai, manitharaai peyai, ganangalaai,
    Val asuraragi, munivaraai, devaraai,
    Chellaadhu nindra, ith thavara sangamathul,
    Yella pirappum piranthu, ilaithen, yem perumaan.(26-31)
    Meyye Un ponnadikal kandu indru veedu uttren,
    Uyya yen ullathul ongaramai nindra,
    Meyya, vimala, vidaipaaka, vedangal,
    ayya yena vongi aazhndu agandra nunniyane (32-35)
    Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,
    Poi aayina yellam poi akala vandharuli,
    Mei jnanam aagi milirgindra mei chudare,
    Yejnanam illathen inba perumale,
    Agjnam thannai agalvikkum nal arrive. (36-40)
    AAkkam alavu iruthi illaai, anaithulagum,
    AAkkuvaai, kaapaai, azhippai, arul tharuvaai,
    Pokkuvaai, yennai puguvippaai nin thozhumpin,
    Naatrathin yeriyai cheyai, naniyaane,
    Mattram manam kazhiya nindra maraiyone . (41-45)
    Karantha paal kannalodu nei kalanthar pola
    Chiranthu adiyar chinthanaiyul thean oori nindru,
    Pirantha pirappu arukkm yengal peruman,
    Nirangal oar aiynthu udayai, vinnorgal yetha,
    Marainthu irunthai yem peruman,valvinai yen thannai,
    Marainthida moodiya maaya irulai,
    Arambhavam yenum arum kayitraal katti,
    Puram thol porthu, yengum puzhu azhukku moodi,
    Malam chorum onpathu vayil kudilai,
    Malanga pulan aiynthum vanchanayai cheyya(46-55)
    Vilangu manathal, Vimalaa unakku,
    Kalantha anbaagi, kasinthu ul urugum,
    Nalam than ilatha siriyerkku nalgi,
    Nilam than mel vanthu aruli, neel kazhalkal kaatti,
    Nayir kidayai kidantha adiyerkku,
    Thayir chirantha dhayavana thatthuvane (56-61)
    Masattra jyothi malarntha malar chudare,
    Desane, theanar amudhe, Shivapurane,
    Pasamaam pattru aruthu paarikkum aariyane,
    Nesa arul purinthu nenjil vanjam keda,
    Peraathu nindra perum karunai peraare.(62-66)
    AAraa amudhe, alavilaa pemmane,
    Oraathaar ullathu olikkum oliyaane,
    Neerai urukki yen aaruyirai nindraane,
    Inbamum thunbamum illanae, ullanae. (67-70)
    Anbarukku anbane, Yavayumai, allaiyumai,
    Chothiyane thunnirulae, thondra perumayane,
    Aadhiyane antham naduvagi allane,
    Eerthu yennai aat konda yenthai perumane,
    Koortha mey jnanathaal kondu unarvar tham karuthin,
    Nokkariya nokke, nunukku ariya nun unarve.(71-76)
    Pokkum varavum punarvum illa punniyane,
    Kakkum yen kavalane, kanbariya peroliye,
    Aatru inba vellame, Atha mikkai nindra,
    Thottra chuddar oliyai chollatha nun unarvai. (77-80)
    Maattramaam vaiyakathin, vevverae vandhu arivaam,
    Thettrane, thetra thelivae, yen chindhanai ul,
    Oottraana unnar amudhe, udayaane,
    Vetru vikara vidakku udambin ut kidappa,
    Aattrean yem ayya arane oh yendru.
    Potri pugazhndharaindhu poi kettu mei aanaar (81-86)
    Meet ingu vandhu vinai piravi Chaaraame,
    Kalla pula kkurambai kattu azhikka vallane,
    Nal irulil nattram payindru aadum nadhane,
    Thillai ul koothane, then pandi naattane.(87-90)
    Allal piravi aruppaane oh endru,
    sollarkku ariyanai solli thiruvadi keezh,
    solliya paatin porul unarnthu solluvaar,
    Selvar shiva purathin ullaar, Sivan adi keezh,
    Pallorum yetha panithu….
    Tiruchittrambalam!!!!!!!!

  • @kalakaru2120
    @kalakaru2120 3 года назад +191

    தினசரி காலை இந்த பாடலை கேட்டு தான் என் வேலைகள் தொடரும்.... ஓம் நமசிவாய

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 3 месяца назад +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @Maverick_Ind
    @Maverick_Ind Год назад +14

    ஓம் நம சிவாய 🙏. திருச்சிற்றம்பலம்.
    நம் எல்லா சிவ சொந்தங்களுக்கும் நன்றி.
    பிரம்ம முகூர்த்தத்தில் சிவபுராணம் பாராயணம் செய்தல் மிகவும் சிறந்தது. நம் எல்லா பிரார்த்தனைகள் நிறைவேற்றி தருவார் நம் சிவபெருமான்.
    திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @Hi-gd5zd
    @Hi-gd5zd Месяц назад +3

    Om Nama Shivaja ✨❤🙏

  • @parthasarathya10
    @parthasarathya10 4 года назад +19

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாடவருக்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

  • @hemalathaa2146
    @hemalathaa2146 18 дней назад +2

    From my childhood, I use to say with my father.after my father s death, I think lod siva as my father. And daily I pray lord siva. The whole universe is under his feet and save all of us.

  • @shanmugamsoni6445
    @shanmugamsoni6445 Год назад +32

    எனக்கு புடிச்ச ஒரு தெய்வம் 🙏🙏🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் உன்னை வணங்கி மகிழ்கிறேன் அப்பனே எனக்கு நீ ஒருவனே துணை ஈசனே என்றும் என்ன நீ மறவாதே அப்பா

  • @SSP3309
    @SSP3309 3 года назад +64

    What a divine sing
    எனக்கு வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் கண்கள் பனித்தன
    இதனால் தான் " திருவாசகத்திற்கு உருகார், ஓரு வாசகத்துக்கும் உருகார்" என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்..
    என்ன ஓரு தெளிவான உச்சரிப்பு

  • @Loanservice24
    @Loanservice24 2 месяца назад +9

    ஓம் நமசிவாய

  • @sriramnatarajan1389
    @sriramnatarajan1389 26 дней назад +2

    திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தில்லையம்பலம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Charu_Loves
    @Charu_Loves 3 года назад +11

    தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கேட்போம்

  • @chitra5662
    @chitra5662 5 месяцев назад +15

    அப்பா அம்மா எல்லாம் நீங்கள் தான் அய்யா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவ சிவாய நம 🙏🙏

  • @santhimariappan5377
    @santhimariappan5377 3 года назад +9

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @punniamurthyvairasamy9807
    @punniamurthyvairasamy9807 6 дней назад +1

    ஆணவம் கன்மம் மாயை அகற்றி நல்லறிவு தந்தருள வேண்டுகிறேன்.

  • @geethakumaar8907
    @geethakumaar8907 8 месяцев назад +11

    ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @krishnamoorthy1282
    @krishnamoorthy1282 4 месяца назад +8

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @wisdom1000
    @wisdom1000 4 года назад +111

    அப்பன் சிவனே என்று உணர்ந்தால் நீயும் நானும் ஒன்றேன்றே உணர்வாய்!

  • @hemeshwar7397
    @hemeshwar7397 6 месяцев назад +2

    1980 - 81 இல் எங்கள் சென்னை, மே. மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயிலில், விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய சிவபுராணம் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.. அது தான் நான் முதன் முதலாக வாங்கிய பரிசு..
    அவனருளாலே அவன் தாள் வணங்கி...

  • @ponnuswamy73
    @ponnuswamy73 3 года назад +7

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாடவற்கும் இறைவா போற்றி!....
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.

  • @trailerslide1869
    @trailerslide1869 2 года назад +9

    Really such a beautiful voice. மத்த பாடல்களை போல் ரொம்பபெருசா இல்ல So Super
    சிவாயநம

  • @rasaveluchinnayan3181
    @rasaveluchinnayan3181 2 года назад +19

    அடியும் அவனே முடியும் அவனே...
    அப்பன் இருக்கையில் ஏது பயம்....

  • @dr.savithagandhi2550
    @dr.savithagandhi2550 5 месяцев назад +1

    Namasivaya

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +314

    உள்ளம் நிறைந்தவனே
    உயிரில் உறைந்தவனே
    உயர்வெலாம் அருள்பவனே
    அழகில் சிறந்தவனே
    அப்பனே ஈசனே
    உன் திருவடி சரணம்
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான வணக்கங்கள

  • @sugumar2891
    @sugumar2891 3 года назад +15

    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தைபெருமானே❤❤🙏

  • @vasantha1958
    @vasantha1958 8 месяцев назад +15

    Namashivaya My day starts and ends with this. திருவாதவூர் அடிகளுக்கு என் மனம் கூறும் பல கோடி நன்றிகள்

  • @vivekviveha9541
    @vivekviveha9541 11 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Год назад +8

    எல்லாம் செயல்கூடும் என்ஆனை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ஓம்நமசிவாயா

  • @Rajali-007
    @Rajali-007 3 года назад +145

    வரிகளுக்கு ஏற்றவாறான, சரியான ஏற்ற,இறக்கம் கொண்டு பாடப்பட்டதும்,சிறப்பான உச்சரிப்பும்,பாராட்டத்தக்கது.

  • @-CC-SUJITHAAS
    @-CC-SUJITHAAS Месяц назад +1

    இப்பாடலை கேட்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது

  • @chinnaiyank1076
    @chinnaiyank1076 3 года назад +27

    மன அமைதிக்கு அனைவரும் தினமும் இறைவன் திருவடி நினைந்து பாடவேண்டும்... M

  • @dhanammalarkkan1
    @dhanammalarkkan1 3 года назад +107

    அருமை யான குரல் வளத்துடன் உணர்வு பூர்வமாக தெளிவான உச்சரிப்பு டன். சிறப்பாக உள்ளது
    வாழ்த்துக்கள்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +110

    சூப்பர் வரிகளுடன் கொடுத்தவருக்கு மிக்க நன்றி ஓம் நமசிவாயநம

  • @sharvenkumar364
    @sharvenkumar364 2 месяца назад +1

    சிவன் கோவில்களில் சிவனை வழிபடும் போது கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம் மற்றும் சிவபுராணம்

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn 3 года назад +65

    எல்லாம் நீயே சிவபெருமானே
    ஓம் நமசிவாய 🌺🌷🌹🌷🌹🌼🌹🔥🔥🔥🔥🔥

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h 2 года назад +36

    ஆகச் சிறந்த இறைவன் துதி இந்த பாடல் மட்டுமே...இதை அனைவரும் மனனம் செய்வது மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும்.

  • @TNPSC1716
    @TNPSC1716 Месяц назад +1

    என் அம்மா வழி தாத்தா கோவிலில் பாடிய பாடல்கள் என் மூலமும் பரவ
    இறைவன் மனது வைத்தான் போலும் 🙏🙏🙏

  • @kuttyshivanofficialksoavi
    @kuttyshivanofficialksoavi Год назад +4

    திருவாசகத்தை தினமும் பாடினால் சிவபெருமானுடைய அருளை பெறலாமா தென்னாடுடைய சிவனே போற்றி என்ன தோன்றுகிறது பொருள் என்ன நீங்க சொல்லுங்க

  • @krishnankuppusamy5499
    @krishnankuppusamy5499 Год назад +7

    நமசிவாய வாழ்க