அனைத்து சமையலுக்கும் ஒரே மசாலாதான்/ Day in my Life / Tamil vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #காயல்_மசாலா_தூள்
    வத்தல் - 1 கிலோ
    மல்லி - 200 கிராம்
    மிளகு - 100 கிராம்
    மஞ்சள் - 50 கிராம்
    சீரகம் - 50 கிராம்
    சோம்பு - 50 கிராம்
    பொதுவாக காயல்பட்டினத்தில் மசாலா தூள் செய்வதற்கான ஜட்டங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், வீட்டுக்கு வீடு அளவு வித்தியாசப்படும். எங்கள் வீட்டில் பட்கல் வத்தல் சேர்ப்பது இல்லை.. மல்லியில் அளவும் வெகு குறைவாகவே இருக்கும்.. மல்லியை அதிகமாக சேர்க்கும் போது நிறம்+ மணம் வித்தியாசப்படும். பலரும் நல்ல நிறம் வேண்டும் என்பதற்காக பட்கல் வத்தல் மற்றும்காஷ்மீரி வத்தலை சேர்க்கின்றனர். அதில் நிறம் இருக்குமே தவிர காரம், ருசி இருக்காது.
    நாட்டு வத்தல் சேர்ப்பதால் உணவு சமைக்கும்போது சிறிதளவு மசாலா சேர்த்தாலே போதுமான நிறமும், காரமும் வந்துவிடும். இதனால் உபயோகிக்கும் மசாலா பொடியின் அளவும் கனிசமாக குறையும். நீண்ட நாட்கள் வைத்து உபயோகிக்கலாம். இந்த முறையைக் கையாளும்போது நாம் சமைக்கும் இறைச்சியும், மீனும், காய்கறிகளும் பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அதீத சுவையுடன் இருக்கும்.
    #குறிப்பு:
    ♦இந்த மசாலா தூளை, காய்கறி, இறைச்சி, மீன் என அனைத்து வகை சமையலுக்கும் பயன்படுத்தலாம்.
    ♦காயல் மசாலா தூள் பயன்படுத்தும் போது இன்ன பிற பொடிகள் சேர்க்க தேவையில்லை. (உதா: மஞ்சள்பொடி, மல்லிப்பொடி, ஜீரகப்பொடி போன்றவை)
    -காயல் கிச்சன்

Комментарии • 246