ஓசூரில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • ஓசூரில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுர குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு,
    ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான, ஒய் பிரகாஷ், ஓசூர் மாநகர திமுக செயலாளரும், மாநகர மேயருமான, எஸ் ஏ சத்யா, திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு. வனவேந்தன் உள்ளிட்ட திமுக மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    இதைத் தொடர்ந்து தந்தை பெரியாரின் சிலை முன்பு அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

Комментарии •