"தந்தை பெரியார் சதுக்கம்" - பெயர் பலகை அமைக்க திராவிடர் கழகம் கோரிக்கை
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- ஓசூரில், பெரியார் சதுக்கம் பெயர் பலகை நிறுவ மாநகராட்சிக்கு திராவிடர் கழகம் கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், முனீஸ்வர் நகர், வ உ சி நகர் மற்றும் உள் வட்ட சாலை இணைக்கும் பகுதியை பெரியார் சதுக்கம் என பெயர் சூட்டப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று கடந்த 2023 ஆம் ஆண்டு அந்தப் பகுதிக்கு "தந்தை பெரியார் சதுக்கம்" என பெயர் சூட்டுவதற்கான அரசாணையை அரசு பிறப்பித்திருந்தது.
இதனை அடுத்து அந்த இடத்தில் தந்தை பெரியார் சதுக்கம் என்ற பெயர் பலகையை மாநகராட்சி சார்பில் நிறுவ வேண்டும் எனக் கூறி திராவிடர் கழகம் சார்பில் அரசாணையை மேற்கோள் காட்டி கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
இதுவரை அங்கு பெயர் பலகை நிறுவப்படாத நிலையில், தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும்
இந்த வேளையில் அங்கு அரசு சார்பில் "தந்தை பெரியார் சதுக்கம்" என்ற பெயர் பலகையை உடனே நிறுவ வேண்டும் என திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆமா... ரொம்ப ரொம்ப முக்கியம்... வேலை வெட்டி இல்லாத ஓசி சோத்து கும்பல்....
எப்படா அந்த ஈர வெங்காயம் சாதியை ஒழிச்சான்.. 😅😅😅😅