திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர் கோவில் தல வரலாறு | Thirumanikuzhi Vaamanapuriswarar Koil History

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #cuddalore #thirumanikuzhi #vamanapuriswarar #lordshiva #thiruvannamalai #thirumanajeri #madurai #chidambaram #viralvideo #devotional #hindu
    தொடர்ந்து இது போன்ற காணொளிகள் காண நம்ம தங்க மயில் சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க
    / @thangamayil-23
    கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கீ.மீ. தொலைவில் திருமாணிகுழி உள்ளது.
    1) கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து எண் 14 திருமாணிகுழி வழியாகச் செல்கிறது. இதில் வந்தால் கோயிலின் வாயிலிலேயே இறங்கலாம்.
    2) கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம் வழியாக நடுவீரப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.
    3) கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.
    இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 முதல் இரவு 8-30 வரையிலும் திறந்திருக்கும்.
    கோவிலின் அமைப்பு: தலமும் கோயிலும் கெடில ந்தியின் தென் கரையில், காப்பர் குவாரி என்று அழைக்கப்படும் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்திலுள்ள பக்கவாட்டு வாயில் வழியே உள் பிரகாரத்தை அடையலாம். இந்த உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், பஜலட்சுமி சந்நிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. உள்ளே கருவறையில் மூலவர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.
    கோவிலின் சிறப்பு: இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம் இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தருவார்கள். அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.
    இத்தலத்தின் தலமரமாக கொன்றையும், தீர்த்தங்களாக சுவேத தீர்த்தம் மற்றும் கெடில நதியும் விளங்குகின்றன.
    புராண வரலாறு: திருமால் பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). இத்தலத்தை சம்பந்தர் உதவிமாணிகுழி என்றே தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். இதனால் உதவி என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழி என்னும் கோயிற் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட, இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் "உதவி" என்றே குறிக்கப் பெறுகின்றது.
    இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது. திருவாசி இல்லை.
    திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
    நன்றி ஆலய அர்ச்சகர் சதீஷ் குருக்கள் மற்றும் சகோதரர்கள் கோபி & சுந்தர்
    WhatsApp & Call : 6380906151

Комментарии • 17

  • @samanmalathi586
    @samanmalathi586 18 дней назад +1

    அருமையாக விளக்குகிறார் அர்ச்சகர்அதிசயமானசிவன்நேரில்பார்க்க ஆவலாய்உள்ளதுசிவன்அருள்வார்

  • @saranyarenuga2392
    @saranyarenuga2392 14 дней назад

    23.08.2024... இன்று நாங்கள் சென்று எம்பெருமானை தரிசித்தோம்... அந்த இரண்டு நிமிடம் நல்ல தரிசனம்... மன மகிழ்ச்சி ஏற்பட்டது... ஓம் நசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @mythiliselvaganapathy9148
    @mythiliselvaganapathy9148 4 месяца назад +1

    Complete explanations excellent 🙏🙏

  • @PrakashPrakash-im6ky
    @PrakashPrakash-im6ky Год назад +3

    🙏🙏🙏

  • @Idhu_enga_area
    @Idhu_enga_area Год назад +2

    Nice

  • @spurushothaman5584
    @spurushothaman5584 Год назад +2

    Om Om namah ShivaOm Om Namah Shivaya

    • @thangamayil-23
      @thangamayil-23  Год назад +1

      சிவனே போற்றி.. நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பகிர்ந்து சிவன் அருள் பெறுக..

  • @priyadarshinisekar48
    @priyadarshinisekar48 3 месяца назад

    நாங்கள் போனவாரம் சென்று தரிசனம் செய்தோம். எல்லாம் இறைவன் செயல்.ஓம் நமசிவாய.

  • @revathydennan4068
    @revathydennan4068 5 месяцев назад

    Om Namah Shivaya 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹 Wonderful explanation by Satish Gurukul..,🙏🏼 Can we get Gurukal 's contact number?

  • @r.lakshmipriya2266
    @r.lakshmipriya2266 7 месяцев назад

    திருமாணிக்குழியும்,திருவந்திபுரமும் ஒன்றா?

  • @govindarajank92
    @govindarajank92 Месяц назад

    வேறு? வேறு

  • @rtssoundsservice5496
    @rtssoundsservice5496 Год назад +3

    🙏🙏🙏