திருப்புகழ் அமிர்தம் கந்தர் அநுபூதி | THIRUPPUGAZH AMIRTHAM - JUKEBOX | G VENKATESAN | VIJAY MUSICAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • THIRUPPUGAZH AMIRTHAM - KANDAR ANUBHUTI - THIRUPPUGAZH MURUGAN SONGS
    SINGER : PAZHANI G VENKATESAN
    MRIDANGAM : THIRUVANNAMALAI T M SIVAKUMAR
    VIOLIN : Dr. D PATHRI NARAYANAN
    MUGARSING : MADURAI V THIRUMURUGAN
    Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
    LORD : MURUGA, KANDA, KADAMBA, KATHIRVELA, KARTHIRKEYA, VADIVELA, SASTI VIRATHAM, Kuga , Kumara , Soorasamharam
    #thiruppugazhsongs#kandaranuboothi#VijayMusicals
    திருப்புகழ் அமிர்தம் - திரு அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய கந்தர் அநுபூதி பாடியவர் : பழனி K வெங்கடேசன்
    மிருதங்கம் : திருவண்ணாமலை T M சிவகுமார்
    வயலின் : Dr. D பத்ரி நாராயணன்
    முகர்சிங் : மதுரை V திருமுருகன்
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    கடவுள் : முருகன், கந்தன், கடம்பன், கதிர்வேலன், கார்த்திகேயன், வடிவேலன், சஷ்டி விரதம், சூரசம்ஹாரம்
    விஜய் மியூஸிக்கல்
    குருவாக வந்து அருளினான் கந்தன்
    ------------------------------------------------------------------------------
    உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
    =======================================
    பாடல்கள் :
    பாக்கரைவி சித்திரமணி
    மனக்கவலை யேதுமின்றி
    அரையாடை இன்றி
    அதலசேடனாராட
    விறல்மாரனைந்து
    தரணி தனில்
    அண்டர்பதி குடியேற
    அரோகரா அரோகரா
    சேல்பட்டு அழிந்தது
    நாடா பிறப்பு முடியாதோ
    நாளென் செய்யும்
    சிவனார் மனங்குளிர
    தெய்வத் திருமலை
    அதிருங்கழல் பணிந்து
    மாணிக்க நிறை கங்கையாடி
    வசனமிக வேற்றி
    உன்னைத்தவிர மற்றொன்று
    பழனிமலை முருகன்
    கந்தர் அனுபூதி

Комментарии • 69

  • @om8387
    @om8387 Год назад +8

    ஐயா பண்ணிசையின் முறையாக திருப்புகழ் பாடும் உங்கள் தொண்டு திருமுருகனருளால் மென்மேலும் பெருக வாழ்த்துகிறோம் வாழ்க பல்லாண்டு

  • @rajalakshmi6292
    @rajalakshmi6292 4 года назад +48

    ஐயா, அனைத்து திருப்புகழ் பாடல்களையும் இனணயத்தில் பதிவிடுமாரறு முருகன் பக்தர்களின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 2 года назад +3

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🌺🙏🙏🙏🌺🔥🔥🔥🙏🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌺🙏🙏🙏🙏🌺

  • @standmohan3792
    @standmohan3792 4 года назад +7

    அருமையான தொன்டு!! அருமையான சாரீரம் !! கேட்க கேட்க இனிமை அரோகரா!

  • @shanthabalakrishnan
    @shanthabalakrishnan Год назад +2

    Mesmerizing lyrics and soothing voice used by Sri .G .Venkatesan is sooooper And the Raaghaas selected for all the songs deserve a Big Clap👏👌🤘🙏🏻🤘😭🤧🤥. Ka ettukkonndhaevirukkalaam ! Thanks Sir Shaaaan Baalaa

  • @k.m.thamilselvanselvan9660
    @k.m.thamilselvanselvan9660 8 дней назад

    Supet

  • @abiramis6480
    @abiramis6480 Год назад +1

    ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏
    ரொம்ப ரொம்ப நன்றாகவும் உருக்கமாகவும் இனிமையாகவும் உள்ளது
    அரோகரா very fine 👌

  • @PTRAAJAN-mo4pe
    @PTRAAJAN-mo4pe Год назад

    Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kaleem Klowm Sowm Namaha ❤❤❤

  • @jeevikaammu
    @jeevikaammu Год назад +2

    I'm very proud that I know Vengatesh uncle personally since I was a kid, seriously he is God's gifted person. 1:27:27 Pazhanimalai Murukan is My personal favourite.

  • @subramaniannagarajan1555
    @subramaniannagarajan1555 Год назад +1

    இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை.மனம் மகிழ்ச்சியுற்று கேட்டேன்.மிக்க நன்றி.

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 8 месяцев назад

    Excellent
    Lovely
    Unbelievable
    God's gift

  • @msvelavan7430
    @msvelavan7430 9 месяцев назад

    பழனி வேதஸ்தானத்துக்கு பெருமை அன்னாவால்

  • @PTRAAJAN-mo4pe
    @PTRAAJAN-mo4pe Год назад

    Om Saravanana Bhava Shanmuga Sthothiram ❤❤❤

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 9 месяцев назад

    Wonderful rendering, thanks a lot. it is a blessing to listen to this.

  • @sumathiv2400
    @sumathiv2400 6 месяцев назад

    Murugaa saranam saranam 🙏💕

  • @seshoo76
    @seshoo76 4 года назад +6

    திருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி (விநாயகர்)
    தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
    தத்ததன தத்ததன ...... தனதான
    ......... பாடல் .........
    பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
    பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
    பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
    திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
    செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
    செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
    இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
    எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
    டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
    ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
    மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
    விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
    வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
    வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
    பட்சி எனும் உக்ர துரகமும் ... அங்கவடி, பேரழகான மணி,
    பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும்
    பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும்,
    நீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தின் நன்கு பூத்த
    மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும்,
    அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி
    வேலும் ... அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன்
    மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில்
    உள்ள கூர்மையான வேலையும்,
    திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... திக்குகள் எட்டும்
    மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும்,
    ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ...
    காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு
    தோள்களையும்,
    செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு
    என எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே
    வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று
    எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.
    இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு,
    அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய்,
    எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி,
    அவல், துவரை, இள நீர், தேன்,
    பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப
    வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம்,
    இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம்
    எனக் கொள் ... பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள்,
    சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக்
    கொள்ளும்
    ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற,
    வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே,
    கருணை மலையே,
    குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த
    சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான
    அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே,
    மருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பு** உடைய
    பெருமாளே.
    * திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர்
    அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு
    தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு
    தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார்.
    அந்த அபூர்வமான பாடல்தான் இது.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 года назад +4

    மிக்கநன்றி வணக்கம் வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா 🌺🌺🌺

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 10 месяцев назад

    ஓம்சரவணபவ இனிய குரல் வளம்❤❤❤

  • @seshoo76
    @seshoo76 4 года назад +7

    திருப்புகழ் 182 மனக்கவலை ஏதும் (பழநி)
    --------------------------------
    தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
    தனத்ததன தான தந்த ...... தனதான
    ......... பாடல் .........
    மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
    வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே
    வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
    மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி
    வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
    மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே
    வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
    மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்
    மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
    மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்
    வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
    மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா
    தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
    செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே
    செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
    திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    மனக்கவலை யேது மின்றி ... மனத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல்,
    உனக்கடிமை யேபு ரிந்து ... உனக்குத் தொண்டு செய்யும் பணியையே
    பூண்டு,
    வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே ... வகையாக அமைந்துள்ள
    நீதி நூல் முறைகளிலிருந்து தவறாமல்,
    வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி ...
    நல்ல முறையில் மன விருப்பங்கள் எண்ணிய விதத்திலேயே அமைந்து,
    மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடி ... சந்தேகம்
    அற்றுப்போகும்படி வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து,
    வினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) ... வினையைக் கொடுக்கும்
    பாவச்செயல்களை அறவே அகற்றி,
    உவகை யால் நினைந்து ... ஆனந்தத்துடன் உன்னைத் தியானித்து,
    மிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே ... மேலான பொருளைக்
    கொண்ட ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறையின்படி,
    வெகுட்சிதனையே துரந்து ... கோபம் என்பதையே முற்றிலும் விலக்கி,
    களிப்பினுடனே நடந்து ... மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து
    நடந்து,
    மிகுக்கும் உனையே வணங்க ... யாவர்க்கும் மேம்பட்டு விளங்கும்
    உன்னையே வணங்குதற்கு
    வரவேணும் ... (வேண்டிய அருளைத் தர) நீ வரவேண்டும்.
    மனத்தில்வருவோனெ என்(று) ... தியானித்தால் மனத்தில்
    வருபவனே என்று நினைத்து
    உன் அடைக்கலம் அதாக வந்து ... உன் அடைக்கலப் பொருளாக
    வந்து சேர்ந்து
    மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள் ... உன் மலர்த் திருவடியே
    பணிந்த முனிவர்களுக்கும்,
    வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும் ... பிற
    வரசிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும்,
    மனமேயிரங்கி ... மனம் இரக்கப்பட்டு,
    மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா ... பயமுறுத்தி வந்த
    சூரரை வென்ற கூரிய வேலனே,
    தினைப்புனமுனே நடந்து ... தினைப்புனத்துக்கு முன்னொருநாள்
    நடந்துசென்று
    குறக்கொடியையே மணந்து ... குறவர்கொடி வள்ளியையே
    மணஞ்செய்து,
    செகத்தை முழுதாள வந்த பெரியோனே ... இந்த உலகம்
    முழுவதையும் ஆட்கொண்ட பெரியோனே,
    செழித்தவளமே சிறந்த ... செழிப்புற்ற, வளம் பொலிந்த
    மலர்ப்பொழில்களே நிறைந்த ... மலர்ச் சோலைகள் நிறைந்துள்ள
    திருப்பழநி வாழவந்த பெருமாளே. ... திருப்பழனியில் வீற்றிருக்க
    வந்த பெருமாளே.

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Год назад +1

    OM SARAVANABAVA OM

  • @rexgamingtamil6307
    @rexgamingtamil6307 4 года назад +2

    OM MURUGA...OM MURUGA...OM MURUGA..OM MURUGA...OM MURUGA..OM MURUGA

  • @manokarthiagarajan9763
    @manokarthiagarajan9763 Год назад

    கேட்போர் தகைக்கும்...அமிர்த குரல்

  • @sumathisri8760
    @sumathisri8760 2 года назад +3

    அமிர்தம் அமிர்தம் ஐயா🙇🙇🙇🙇

  • @user-ez7um7wv9u
    @user-ez7um7wv9u 2 года назад +1

    🙏🙏🙏🙏 Sir

  • @user-bq7rk8ju5f
    @user-bq7rk8ju5f Год назад

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @narayananmanickam5762
    @narayananmanickam5762 4 года назад +2

    இனிப்பு சுவை மற்றும் இனிய மனநிலை.🤩🤩🤩

  • @dearkrish1
    @dearkrish1 4 года назад

    Very Nice! Muruga Kumara Guha!

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 года назад +1

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @murugaananth186
    @murugaananth186 Год назад +1

    🙏🙏🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா🙏

  • @sujathapattu2245
    @sujathapattu2245 Год назад

    Suuuuuuuuuuuuuuper

  • @hgr1645
    @hgr1645 4 года назад +2

    அற்புதம்

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 10 месяцев назад

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @srikanthakdkd9154
    @srikanthakdkd9154 Год назад

    Om muruga

  • @sothinayakimurugavel2479
    @sothinayakimurugavel2479 Год назад

    Om murukapootyom

  • @thandavangsivam6389
    @thandavangsivam6389 4 года назад +2

    திருபுகழ்.வித்தகர்

  • @sivacnccentre4917
    @sivacnccentre4917 4 года назад +1

    OM MURUGA

  • @arasukdm8359
    @arasukdm8359 2 года назад +1

    🙏🙏🙏🙏👌👌👌👌👍👏

  • @pandimdu46
    @pandimdu46 5 лет назад +5

    THIRUPPUGAZH AMIRTHAM 🙏

  • @thavamrajendram6485
    @thavamrajendram6485 Год назад

    Om saravanapava muruganuku arokara

  • @rajanr1288
    @rajanr1288 2 года назад +1

    🙏🙏

  • @gajalaxmil3
    @gajalaxmil3 Год назад +1

    Arunagirinathar thirupughaz Motcha m tharum

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 Год назад

    அருமை இனிமை

  • @jeyakumarysaspaanithy6585
    @jeyakumarysaspaanithy6585 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 года назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Год назад

    Thanks

  • @aparnaregu8491
    @aparnaregu8491 3 года назад

    Divine

  • @user-uk5hx6tq3v
    @user-uk5hx6tq3v 7 месяцев назад

    Chevi inbam

  • @astrologytemple
    @astrologytemple 11 месяцев назад

    ruclips.net/video/HH6nBu8aEyc/видео.html தொடர்ச்சி சினிமாவாக விரைவில்.. Cinema..

  • @mamindsastereo2823
    @mamindsastereo2823 2 года назад +3

    "தனன தான தானான தனன தான தானான
    தனன தான தானான ...... தனதான
    ......... பாடல் .........
    அதல சேட னாராட அகில மேரு மீதாட
    அபின காளி தானாட ...... அவளோடன்
    றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
    அருகு பூத வேதாள ...... மவையாட
    மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
    மருவு வானு ளோராட ...... மதியாட
    வனச மாமி யாராட நெடிய மாம னாராட
    மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
    கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
    கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
    கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
    கனக வேத கோடூதி ...... அலைமோதும்
    உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
    உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
    உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
    னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே."
    Source: www.kaumaram.com/thiru/nnt1053_u.html

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 2 года назад

    Anandama murugan padal ketkumbodu continuous ad

  • @sivakamisivakami7869
    @sivakamisivakami7869 4 года назад +1

    Add violinist name.

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 4 года назад

    appanae muruga tired of births deaths

    • @snarendran8300
      @snarendran8300 2 года назад

      There is surely a solution for birth and death in this Kaliyuga.

    • @chandrakrs6157
      @chandrakrs6157 Год назад

      ​@@snarendran8300🙏🙏🙏🙏

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 2 года назад

    Why Ad coming frequently

  • @meganathanmeganathan9463
    @meganathanmeganathan9463 4 года назад

    Pls connect

  • @sundarsundar9952
    @sundarsundar9952 4 года назад +6

    ஐயா, அனைத்து திருப்புகழ் பாடல்களையும் இனணயத்தில் பதிவிடுமாரறு முருகன் பக்தர்களின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @theoccationguy
    @theoccationguy 4 года назад +2

    Om Saravana bava