105. பாகப்பிரிவினை சம்பந்தமான கேள்விகள் & பதில்கள் Partition deed - Questions & Answers

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • பாகப்பிரிவினை சம்பந்தமான கேள்விகள் & பதில்கள்

Комментарии • 636

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 года назад +16

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 2 года назад +3

      ஐயா 🙏கடல் போல பிரச்சனைகள் உள்ள இந்த சிவில் வழக்கு விஷயத்தை மிகவும் தெளிவாக கேள்வி பதில் நிகழ்ச்சிவாயிலாக எந்த ஒரு விபரம் தெரியாத மக்களுக்கு உங்களது சேவை இந்த காலகட்டத்தில் நாட்டிற்கு தேவை, கண்டிப்பாக உங்களது பதிவின்படி வளர்ச்சிக்கு உதவ முன் நிற்பது எனது கடமை ஆகும் நன்றி 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      @@nagarajannagarajan7946 மகிழ்ச்சி

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 2 года назад

      @@selvampalanisamyஐயா 🙏நேற்று ரூ 200 நன்கொடை செய்த மெசேஜ் வரவில்லை, உங்கள் கணக்கில் வரவு வந்து உள்ளதா என்பதை தெரிவிகவும் நன்றி 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      @@nagarajannagarajan7946 வரவில்லை

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 2 года назад

      ஐயா 🙏 உங்கள் thanks செயலி வழியாக நன்கொடை செலுத்த முயற்சிதும் முடியவில்லை, வேறு வழி சொல்லுக, அனுப்புகிறேன் நன்றி 🙏

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 2 года назад +3

    ஐயா நான் இது வரை பார்த்த கேட்ட பதிவுகளில் இதுபோல் ஒரு அருமையான பதிவுவாக பார்க்கிறேன், அருமை 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajasekaranrajendran294
    @rajasekaranrajendran294 2 года назад +3

    ஐயா, வணக்கம், தங்களது வீடியோகல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றன.
    நன்றி

  • @balasubramaniankmani3598
    @balasubramaniankmani3598 2 года назад +2

    நல்லபதிவு பலவிஷயங்கள் தெளிவு படுத்துள்ளீர்கள் நன்றி...

  • @nithi_nithilan
    @nithi_nithilan 4 месяца назад +1

    எங்கள் குடும்பத்தில், பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சினை, சொத்து எங்கள் தகப்பனாரல் எங்களுக்கு காண செட்டில்மன்டு செய்யப்பட்டது, எங்கள் அண்ணன் காலமாகிவிட்டார், அவரின் வாரிசுகளுக்கு இடையே பிரச்சினை இருப்பதால், அவர்கள் பாக் பிரிவினைக்கு ஒத்துழைப்பு அளிக்க வில்லை, இப்போது நாங்கள் எங்கள் பாகங்களை எப்படி பாகப்பிரிவினை செய்துகொள்ள முடியும்

  • @rajamoulimouli9333
    @rajamoulimouli9333 Год назад +1

    ஐயா இந்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது எனக்கு நன்றாக புரிந்தது

  • @Rajtamizhan
    @Rajtamizhan 11 месяцев назад +1

    6:04 இது மாதிரி சட்டத்தில் சொல்லியிருந்தால் பிரிவுகள் அல்லது நீதிமன்ற தீர்புகள் குறிப்பிடவும்.
    நீங்க சொன்ன மாதிரி பிரித்தால் முன் பக்கம் கடைசி வாரிசுக்கு போகும்.
    முன் பாகத்தில் ஒரு வீடு இருக்கும் பின்னாடி ஒரு 100 அடி நீளத்துக்கு காலி இடம் இருந்தால்.
    கடைசி வாரிசுக்கு மட்டும் வீடு மற்றும் பிரதான வழி கிடைக்கும் அதன் மதிப்பு அதிகம்.
    மீதம் உள்ள மூத்த வாரிசுகள் சந்து வழியாக சென்று தான் தங்கள் பாகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதன் மதிப்பு குறைவு. இது எப்படி சரி சமமான பங்காக இருக்கும்.
    ஆனால் மற்ற பதில்கள் அருமை. நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 месяцев назад +1

      நான் சொன்னது சட்டப்படி அல்ல. அது போன்ற வழக்கம் இருந்துள்ளது.

    • @Rajtamizhan
      @Rajtamizhan 11 месяцев назад

      @@selvampalanisamyஎங்களிடம் சொத்து அவணம், வாரிசு மற்றும் தந்தை இறப்பு சான்றிழ்கள் எதுவும் கிடையாது. இவை எல்லாம் 1 மகனிடம் உள்ளது.இவையெல்லாம் இல்லாமல் பாக பிரிவினை வழக்கு தொடர முடியுமா என் சொன்னால் கூட உதவியாக இருக்கும்.
      எங்க அப்பா உயிருடன் இருக்கும் போதே தன் மறைவுக்கு பிறகு மகன்கள் சரி சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என settlement பத்திரம் செய்து விட்டார் ஊரிலும் இது போல தான் பிரிக்கும் வழக்கம் இருக்கு என்று சொல்றாங்க. ஆனால் இப்படி பிரித்தால் எங்க பாகம் கடைசியில் இருப்பதால் மிகவும் குறைவான பணம் தான் கிடைக்கும்.
      அதனால் பாக பிரிவினைக் வழக்கு போடலாமா அல்லது வேறு வழிகளில் சுமுகமாக பிரித்து கொள்ளும் முறைகள் என்ன என்பது குறித்து உங்களிடம் ஒரு குறிப்பிட்ட பணம் செலுத்தி ஆலோசனை பெரும் வசதி ஏதேனும் உள்ளதா சார்.
      .

  • @rameshneshan3810
    @rameshneshan3810 Год назад +2

    நீங்கள் சொல்லும் அத்தனை செயலும் எனக்கும் சேர்ந்துள்ளது எங்களுக்கும் நேர்ந்துள்ளது

  • @NaanUngalSilambarasan
    @NaanUngalSilambarasan 2 года назад

    Hi anna, 2007 லில் பத்திரம் செய்தோம், ஆனால் நிலத்தை என் அப்பா மற்றும் சித்தப்பா use பண்ணவே இல்லை. 2020 யில் என் சித்தப்பா எங்கள் நிலத்தில் 8அடி நீளம் வரை வரப்பு சேர்த்து அவர் நிலத்தில் ஓட்டி சமம் செய்து விட்டார். நாங்கள் கேட்டதுக்கு நிலத்தை அளந்து எடுத்துக்கொள்வோம் என்றார். பிறகு New year 2021 யில் தனி பாட்டாவாக மாறியது. பின்பு நிலம் பிரிக்கும் போது என் அப்பாவின் நிலம் சரியாக வந்துவிட்டது. என் சித்தப்பாவின் நிலத்தில் பெரியப்பா வீடு கட்டி விட்டார் மற்றும் பக்கத்து நிலத்தினர் சிறிது ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவர்களிடம் வாங்க முடியாமல். என் சித்தப்பா எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை கம்பி வேலி போட விடாமல் தடுக்கிறார். ஏன் என்று கேட்டால், நாங்கள் என் சித்தப்பா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து வாங்கி தர வேண்டும். இல்லை என்றால். எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை விட மாட்டோம் மற்றும் இப்போ இது என் அனுபவம் நிலம் என்கிறார் என் சித்தப்பா😢😢? அவர்கள் காவல் ஆய்வாளர்க்கு காசு குடுத்து போலீஸ் காரர்களும் அவர் அனுபவம் என்கிறார்கள் 2 ஆண்டு முன்பு என் நிலத்தை பயன்படுத்தி விட்டால் அவர்கள் அனுபவமா
    இப்போ
    என்ன செய்வது. ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      பெரியவர்கள் மூலமாக பேசிப் பாருங்கள். சரிவரவில்லை என்றால் கோர்ட்டுக்குத்தான் போகவேண்டும்

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Год назад +1

    சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு சூப்பர் ❤️👍👌❤️👍👌🤝💐🎉🎊

  • @pashanmuk
    @pashanmuk 2 года назад +1

    அய்யா வணக்கம் உங்களது பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தற்பொழுது எனக்கு உள்ள பிரச்னை என்ன வென்றால், ஆண் வாரிசு மூன்று பேர் பெண் வாரிசு மூன்று பேர் ஆகமொத்தம் ஆறு நபர்கள், ஆண் வாரிசுகள் முறையே ஆளுக்கு 94சென்ட் என வாரிசு தாரரர்களின் தகப்பனார் வாய்வழியாக பிரித்து கொடுத்தார் ஆண்டு 1994, அந்த ஆண்டே தகப்பனார் இறந்தும் விட்டார், முதல் இரண்டு வாரிசு இருவரும் வேற சர்வே நம்பர் கொண்ட சொத்தை விற்று விட்டனர்., மூன்றாம் ஆண் வாரிக்கு தனி சர்வே நம்பர், அதற்க்கு கையப்பமிட அழைத்தால் இருக்கும் சொத்தில் பாகப்பிரிவினையாக பங்கு கேட்டு வருகின்றனர், நான்தான் கடைக்குட்டி வாரிசு எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை,.தங்களின் உதவியை நாடி வந்துள்ளேன் தங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என நம்புகிறேன்,...

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      வழக்கறிஞரை அணுகி பலன் பெறுங்கள்

  • @bs9950
    @bs9950 2 года назад +1

    Sir unga channel very clarity....thanks for info sir

  • @velusamy1900
    @velusamy1900 5 месяцев назад

    Velu. DUBAI. Very super. Video. Sar. And. PERAMBALUR. D.k

  • @swamynathan936
    @swamynathan936 6 месяцев назад

    ஐயா,வணக்கம்.
    தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது தந்தையின் சொத்தில் பாகப்பிரிவினை செய்து அதில் உள்ள வரிவிதிப்பு எண்ணில் தென்புறம் பாகம் ஒருவருக்கும் அதே வரிவிதிப்பு எண்ணில் வடபுறம் பாகம் மற்றொரு குடும்ப உறுப்பினரருக்கும் இருந்தால் சொத்துவரி விதிப்பில் யார் பெயரில் சட்டப் படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  6 месяцев назад

      இருவரும் இணைந்து விண்ணப்பியுங்கள்

  • @user-wr9ei9bd7m
    @user-wr9ei9bd7m 6 месяцев назад

    ஐயா வணக்கம் உங்கள் பதில்கள் என்னை சிலிர்க்க வைக்கிறது ஐயா எனது குடும்பத்தில் சொத்து பாகப்பிரிவினை வழக்கில் உள்ளது இதில் ஆறு பேர் வழக்கு உள்ளது இதில் எனக்கு எனது அக்காள் இருவரின் சொத்தை விட்டுக் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அவர்களும் பங்கை பெறுவது எப்படி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  6 месяцев назад

      வழக்கு முடிய வேண்டும்

  • @rajadurairajakumar3732
    @rajadurairajakumar3732 2 года назад +6

    தெற்கு நோக்கிய மனை. இதில் அகலம் சுமார் 50அடி நீளம் 200அடி. இதில் முன்று நபருக்கு பங்கு எப்படி பிரிப்பது. இதில் அனைவருக்கும் மனை தேவை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      நீதிமன்றம் முடிவு செய்யும்

    • @gunasundari7415
      @gunasundari7415 3 дня назад

      மொத்தமாக 10000சதுர அடி வருகிறது. அகலம் 50அடி என்று குறிப்பிட்டூள்ளீர்கள். அதில் ஒரு பக்கம் எட்டு அடி அகலத்திற்கு பொதுவழி விட்டு மீதமுள்ள 42 க்கு 200அடி என்கிற மனையை 1) 42 அடி அகலம் 66அடி நீளம் 2) 42அடி அகலம் 67அடி அகலம் 3) 42அடி அகலம் 67அடி நீளம் என்று பிரித்து கொள்ளலாம். முன்பகுதியை எடுத்துக்கொள்பவர்கள் ஓரிரண்டு அடி குறைவாக பங்கிட்டு கொள்வதால் ஒன்றும் ஆகிவிடாது . முன்பகுதி கிடைப்பவர்களுக்கு சில அனுகூலங்கள் இருப்பதால் விட்டு கொடுத்து போவது நல்லது. நம் உடன் பிறந்தவர்கள்தானே..

  • @Tailorpc
    @Tailorpc 2 года назад

    வணக்கம் ஐயா என் கணவர் கடைசி பிள்ளை . மொத்த வாரிசு நான்கு நபர்...பாகம் பிரித்ததில் என் கடைசிபிள்ளை அவருக்கு தெற்கு பாகம் கொடுக்கப்பட்டுள்ளது... எங்கள் மாமனார் தானசெட்டுல்மெண்ட் பேரன்கள் பெயருக்கு கொடுத்து விட்டார் இப்போது என் மகன் அந்த சொத்தின் பெயரில் கேஸ் போட்டால் எங்கள் பாகங்களை மாற்றி கொடுப்பார் களா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      அது அவரது இஷ்டம். பாகமே கொடுக்காமல் இருக்கவும் அவரால் முடியும்.

    • @Tailorpc
      @Tailorpc 2 года назад

      எங்க மாமனார் இறந்து விட்டார் ....மணியார் வந்து அளக்கும் போது மோட்டார் கிணறு பாதை மூன்றில் ஒரு பங்கு என்றும் என் கணவருக்கும் பங்கு கொடுக்க வில்லை நாங்கள் வேறு ஊரில் இருக்கிறோம் என்று மோட்டார் செட் கிணறு பாதை மொத்தம் ஆறு செண்ட் என் கணவருக்கு கொடுக்க வில்லை....இதற்கு நீங்கள் மூவரும் பணம் கொடுக்கல் என்றும் கேட்டோம்.... அதுவும் கொடுக்க வில்லை இப்போது வீடு இடம் பிரிக்கும் போது அதுபோல செய்ய இருக்கிறார்கள்.. ஆனால் மாமானர் காலமாகிவிட்டார்.... இப்போது நாங்கள் என்ன செய்ய.... சொல்லுங்கள் சார் எங்களுக்கு வேற வழியே இல்லை யா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      @@Tailorpc தாசில்தாரிடம் புகார் அளியுங்கள்

  • @lingavaal8169
    @lingavaal8169 2 года назад +3

    பட்டாவிற்கு முன்பு சாலையோர புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி ஒரு காணொளி விண்ணப்பத்தை பதிவிடுங்கள் ஐயா

  • @NaalaiNamNaadu
    @NaalaiNamNaadu 3 месяца назад

    பாகப்பிரிவினை இரண்டு பத்திரமாக பதிவு செய்ய முடியுமா?

  • @sastigalechumi81
    @sastigalechumi81 Год назад +1

    ஐயா, எங்க வீட்லா இரண்டு ஆண்பிள்ளைகள்... நான் மூத்தவன். கிராமத்துல என்னுடய சம்பாத்தியத்தில் ஒரு வீடு போட்டு இருக்கேன்.. சென்னை ல என் அப்பா என்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு ஒரு சிறு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு இருக்கு... என்னால சம்பாதித்தில் தான் என் குடும்ப வளர்த்துச்சு...
    ஆனா இப்போ.. நான் உடம்பு முடியாம இருக்கேன்.. அம்மா, அப்பா, தம்பி எல்லாம் என்னை ஏமாற்றுராங்க..... நான் சம்பாதித்து போட்ட property எனக்கே கிடையாது னு சொல்லுராங்க...

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      ஆதாரம் இருந்தால், அவர்களால் அப்படி சொல்ல முடியாது

  • @karambakudi
    @karambakudi Год назад

    ஐயா. எங்கள் தந்தை 2007ல் இறந்து விட்டார். என் கூட பிறந்தவர்கள் 3பேர் 2மூத்த சகோதரி 1மூத்த சகோதர். 2008ல் நானும் என் சகோதரும் பாக பிரிவினை செய்து கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்துள்ளது அவர் அதில் அதிக மதிப்பு கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் அவர் பாகத்தில் எழுதி கொண்டார் என்று தெரியவந்துள்ளது இப்போது நான் என் பங்குகளை பெற நீதிமன்றம் செல்லாம இதில் என் சகோதரிகள் கையெழுத்து இடவில்லை

    • @senthilkumaaran8951
      @senthilkumaaran8951 Год назад +1

      சகோதரிகள் கையெழுத்து இல்லாததால் இந்த பாகப்பிரிவினை செல்லாது

    • @karambakudi
      @karambakudi Год назад

      Nantri..

  • @francisxavier6509
    @francisxavier6509 11 месяцев назад

    சார் வணக்கம்
    என்னுடைய தந்தை 2018 இறந்து விட்டார் .சொத்துக்கள் கூட்டு பட்டா வில் உள்ளது .நானும் என்னுடைய அம்மா , அக்கா,வாரிசு தாரர்.சித்தப்பாவும் உள்ளார், பத்திரம் எழுத சென்றால் பகாபிரிவினை பண்ண முடியாது .கிரையபதிரம் தன் எழுத முடியும் சொல்றார் ரெஜிஸ்டர் .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 месяцев назад

      தவறாக சொல்கிறார்

  • @ravichandransrinivasan1131
    @ravichandransrinivasan1131 18 дней назад

    Excellent sir

  • @x_xeshx_x
    @x_xeshx_x 4 месяца назад +3

    எங்கள் வீடு கட்டபோகிறோம் என் அப்பாவிற்கு முதல் உரிமையா இல்ல என் அப்பாவின் அக்காவிற்கு முதல் உரிமையா?

  • @keruthigababy7848
    @keruthigababy7848 2 месяца назад

    ஐயா என் அப்பா வர வேண்டிய பாகத்தை எங்க பெரியப்பா எடுத்துட்டு அவர் பாகத்தை எங்க அப்பா பதிவு பண்ணிட்டு இடம் விற்க முயற்சி பண்ண வாங்க வருபவர் முன் இடம் வேணும் சொல்லுறாங்க இப்ப நாங்க வழக்கு போட்டு முதல் பாகம் கேட்டு ஜெயிக்க முடியுமா எனக்கு உதவி பண்ணுங்க ஐயா எனக்கு அவசரம்

  • @mssheshathri1977
    @mssheshathri1977 5 месяцев назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @angelantony1299
    @angelantony1299 2 года назад +2

    Sir thanks for your message even I got confused. My father married my mom after death first wife
    1stwife has 1son 1doughter
    2nd wife has 2son 4doughter
    How to divide the property sir. Could you advise me.

  • @Vinothkumar-lo7xb
    @Vinothkumar-lo7xb Год назад +1

    ஐயா, 1961 ஆம் அண்டு என்னுடைய தாத்தா மற்றும் தாத்தாவின் சகோத்தார் இருவரும் சேர்ந்து பாகப்ரிவினை செய்கிறனார். அதில் 3.56 சென்ட் விஸ்திரம் கொண்ட பூமியில் இதில் சரிபாதி தென்புறம் 1.78 சென்ட் பூமி என்னுடைய தாத்தாவிற்கும், இதில் சரிபாதி வடபுரம் 1.78 சென்ட் பூமி தாத்தா வின் சகோதற்கும் பாகப்ரிவினை செய்கிறனார். இதில் என்னுடைய தாத்தாவிற்கு பாத்தியா பட்டா 1.78 சென்ட் பூமியில் இதில் 0.03 சென்ட் பூமியை தாத்தாவின் சகோத்தார் தென்னை மரம் நட்டு சாகுபடி செய்துள்ளார். இந்த 0.03 சென்ட் பூமி எங்குளுக்கு பாத்திய பட்டா பூமி என்று தெரிய வந்துள்ளது. 2021 ஆண்டு தாத்தாவின் சகோத்தார் வாரிசுகள் இந்த 0.03 சென்ட் பூமியை என்னுடைய கையெழுத்து இல்லாமல் கிரியம் செய்துள்ளனர். கேட்ட நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்று சொல்லறாங்கள்...இது செல்லுமா, இல்லா மோசடி ஆவணம் ரத்து செய்யமுடியுமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்யுங்கள்

  • @Skrajuadmk
    @Skrajuadmk 2 года назад +2

    முதல் மனைவி இறந்தபிறகு உம் திருமணம் முதல் மனைவி 3 மகன் 2ம் மனைவி | ஆண் பூர்விகம் செந்து பங்கு சமமாக வா அல்லது எப்படி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      எத்தனை திருமணம் செய்தாலும் குழந்தைகளுக்கு சமபங்கு உண்டு. அந்த குழந்தைகளின் தந்தை உயிரோடு இல்லாவிட்டால்தான் இப்படி குழந்தைகளுக்கு பங்கு கிடைக்கும்.

  • @NAVEENSELVAMA
    @NAVEENSELVAMA 3 месяца назад

    Partition deed pani registration lam mudincha piragu... Antha bhaaga pirivinai equal ahh pirikalanu case poda mudiyuma

  • @maragathavalli-kv6bj
    @maragathavalli-kv6bj Год назад +2

    ஐயா, நாங்கள் 6 சகோதரர்கள் ஒரு சகோதரர் ஊனமுற்றவர், திருமணம் ஆகவில்லை. அவரும் இறந்துவிட்டார், எங்களுக்கு தனிப்பட்ட பட்டா உள்ளது, ஆனால் சில பட்டா வெவ்வேறு அளவீடுகள். எப்படி சரிசெய்வது. ஒரு சகோதரர் வீட்டு சர்வேயை ஏற்கவில்லை, 3 சகோதரர்கள் பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்வதை எதிர்க்கின்றனர். அடுத்து என்ன செய்வது.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      நீதிமன்றம்தான் செல்ல வேண்டும்

  • @vasavicomputers5267
    @vasavicomputers5267 Год назад +1

    பாகப்பிரிவினை செய்யும் போழுது பொது வழி பாதை எப்படி பிரிக்க வேண்டும். அடுத்த கேள்வி அப்படி பிரித்த பொது வழி பாத்தியை கிழே பொதுவாக விட்டுட்டு விட்டு மேல அவர் அவர் பாகத்துக்கு வழியை மறைத்து கட்டிக்கொள்ளலாம் ? அல்லது கிழே பொதுவாக விட்டது போல் மேலேயும் விடவேடுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      யாருக்கும் பாதிப்பு வராதபடி நியாயமாக இருக்கும்படி பிரித்துக் கொள்ளுங்கள்

  • @mishalmobile6708
    @mishalmobile6708 2 года назад +3

    ஐயா வணக்கம்
    1)பாகப்பிரிவினை செய்யும்போது அனைத்து வாரிசுதாரர்களும் கையெழுத்திட வேண்டுமா
    2) பாகப்பிரிவினையின் போது ஒரு மட்டும் சம்மதிக்கவில்லை என்றால் எப்படி பிரச்சனை இல்லாமல் பாகப்பிரிவினை செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +2

      நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை

  • @venkataramang8608
    @venkataramang8608 2 месяца назад

    வணக்கம் ஐயா. திருமணம் ஆன ஒருவர் அகால மரணம் அடைந்துவிட்டார்.மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இறந்தவர் பேரில் உள்ள சொத்துkku அவரின் அப்பா அம்மா இருவருக்கும் vaarisu உரிமை உள்ளதா? ஆம் என்றால் எவ்வளவு சதவீதம்?

  • @ganeshkumararumugam7773
    @ganeshkumararumugam7773 Год назад +3

    ஐயா பத்திரம் எனது பெயரிலும், சகோதரர்(மூத்தவர்)பெயரிலும் உள்ளது.18*18 மனையின் அளவு.Ground floor & first floor building உள்ளது.Partition deed பண்ணிணால் எப்படி பிரிப்பார்கள்.Main street east west direction. 3 அடி சந்து South north direction. எந் த Direction l Partition deed ண்ணுவாங்க....9*18,9*18 East west a or south north direction la partition deeDபண்ணுவாங்களா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад +1

      பொதுவாக இது போன்ற சொத்துக்களை பிரிக்கும்போது சில சிக்கல்கள் வரலாம். உங்கள் இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துப் போனால் நல்லது.

    • @ganeshkumararumugam7773
      @ganeshkumararumugam7773 Год назад

      I m ready to deal anyone ( me or him) settled as per market rate. He told doesnt has money . He doesn't want to settle me also thats y i m asking ur opinion i have idea to go legally so court how is divide this land(building)main street(east to west) or sandhu (north south).

    • @ganeshkumararumugam7773
      @ganeshkumararumugam7773 Год назад

      What kind of issue will come can u tell me pls

    • @Rajtamizhan
      @Rajtamizhan 11 месяцев назад

      @@ganeshkumararumugam7773 எங்களுக்கும் இதே மாதிரி பிரட்சனை தான். பேசாமல் வீட்டை 3 நபரிடம் விற்று வரும் பணத்தில் 1/2 போட்ட கொள்ளலாம் இல்லை என்றால் வழக்கு.

  • @hajimohamed7890
    @hajimohamed7890 2 года назад +3

    நல்ல தகவல் அண்ணா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      மகிழ்ச்சி

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 Год назад +1

      @@selvampalanisamy sir fmly l lamd property pro doubt clear panuvinkala sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      @@geethahariniboomigeetha4904 சொல்கிறேன். தமிழில் கேளுங்கள்

  • @muthukrishnant6577
    @muthukrishnant6577 Год назад +1

    ஐயா, எங்களுடையா நிலத்திற்கு பட்டா உள்ளது ஆனால் pathirathil settlement kiraiyam panna villai (pakapirivinai seiyya villai) ippoluthu naan antha land use பண்ண முடியும ethir manuthaarar பிரச்சனை பண்ணுகிறார் enna pannuvathu

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Год назад +2

    சட்டம் பணம் உள்ளவர்களுக்கு, frame சட்டம் ஏழைகளுக்கு.

  • @garudacollections416
    @garudacollections416 Год назад +1

    வணக்கம் அய்யா. எனது அப்பாவிற்கு நீதிமன்ற உத்தரவு படி 2005 ஆம் ஆண்டு பாகப்பிரிவினை நடந்தது. எங்கள் வீட்டு பட்டா எங்கள் தாத்தா பெயரில் உள்ளது. எனது அப்பா எனது பெயரில் செட்டில்மென்ட் செய்துள்ளார்கள். நீதிமன்ற உத்தரவை இதுவரை ரிஜிஸ்டர் செய்யவில்லை. இதனால் ஏதாவது பிரட்சைனை வருமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      செய்தால் நல்லது. இப்போதுகூட செய்யலாம்.

  • @nkffgaming2144
    @nkffgaming2144 25 дней назад

    ஐயா எனது அம்மா பெயரில் எனது அப்பாவின் உழைப்பில் வாங்கிய சொத்து எனது அண்ணனுக்கும் தங்கைக்கும் மட்டும் பிரித்துக் கொடுத்துள்ளார் நான் சட்டபூர்வமாக என்ன செய்ய வேண்டும்

  • @s.gpandian.3193
    @s.gpandian.3193 Год назад +1

    ஐய்ய வணக்கம் எனக்கு ஒருதகவல் வேண்டும் தந்தைக்கு 3 மகன்கள் ஒருமகனுக்குதெரியாமல் மற்றமகன்கள் தனித்தனி நாட்களில் அவர்களே ஒருபாகத்தை ஒதுக்கிவிட்டு பாகப்பிரிவினை செய்தால் அது செல்லுமா மற்றவர்அந்த பாகப்பிரிவினையை மருக்கமுடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      மறுக்க முடியும். அது செல்லாது.

  • @hussainbangkok
    @hussainbangkok Год назад +2

    தந்தை உயிரோட இருக்கும் போது இரண்டு மகள்களில் ஒரு மகளுக்கு மட்டும் சொத்தை எழுதி வைத்து விட்டார்.இன்னொரு மகளுக்கு அதில் பங்கு பெறுவது எப்புடி?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад +1

      அது அவரது விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு வேளை வேறு யாராவது ஒருவருக்கு அவர் தனது சொத்தை எழுதி வைத்திருந்தாலும் இதுதான் முடிவு.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 Год назад

      என்ன சொல்ரிங்க.அவரின் சுய சம்பாத்தியம்ன சரி. இதுவே பூர்வீக சொத்தாக இருந்தால் அவர் விருப்பம் போல் முழுசொத்தையும் யாருக்குவேண்டுமானாலூம் கொடுத்து விட முடியுமா. 2 . 3கோடி நிலத்தை 6 வாரிசுகள் நீதிமன்றம் மூலமாக பாகபிரிவினை செய்ய கோர்ட்பீஸ் எவ்வளவு ? .பாகபிரவினை வழக்குக்கு கட்டண சீலிங் உண்டா ? .

  • @karthielavarasan4747
    @karthielavarasan4747 8 месяцев назад

    Sir property adamanathula iruku..... Varisu tharargal oruthar kitta thara virupam illa..... Adamanam vangiya person antha varisu tharagal kulla iruka orutharku adamana medovar vanga mudiyuma sir

  • @vaikundarajraj5720
    @vaikundarajraj5720 2 года назад +3

    வணக்கம் ஐயா..
    எங்கள் ஊரில் ஐந்து சகோதரர்களுக்கு பாகப்பிரிவினை மூலமாக சமமான நிலம் கிடைத்தது. அதில் ஒருவர் (Raj), தனது சகோதரரின் மனைவிக்கு (Rani) 1993 வருடம் விற்றுவிட்டார். தற்போது நிலத்தை வாங்கிய(Rani) என்பவர் நிலத்திற்கு DTCP உரிமை பெற்று பிளாட் செய்து விற்று வருகிறார். ஆனால் 1993ஆம் வருடம் நிலத்தை விற்றவரின்(Raj) மகன் மற்றும் மகள் எங்களுக்கு தாத்தா சொத்தில் உரிமை உண்டு என வழக்கு செய்து நிலுவையில் உள்ளது. நிலத்தை விற்றவர் தற்போது உயிரோடு உள்ளார். இப்போது இந்த வழக்கில் யார் வெற்றி பெறுவார்? அந்த நிலம் பிளாட்டை வாங்கலாமா? தயவு செய்து விடை அளிக்கவும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +3

      இந்த விசயத்தை பொறுத்த அளவில், தாத்தா சொத்தில் உரிமை இருக்கிறது என்று பேரன் பேத்திகள் கேஸ் போட்டால் அது செல்லாது. அந்த பிளாட்டை தாராளமாக வாங்கலாம்

    • @prakash8910
      @prakash8910 Год назад

      அதுவே பாகபிரிவினை மூலமாக வந்த சொத்தாக இருந்தால்

  • @pksunilkumarsavitha369
    @pksunilkumarsavitha369 2 месяца назад

    காலமான என் தாத்தாவின் சொத்தில் உரிமையாளர்கள் ஐந்து பிலைகல .. இதை விற்கும் பட்சத்தில் ஒருவர் மட்டும் சம்மதிக்கவில்லை.. பக்ஷத்தில் எப்படி விற்பனை... செயவதூ

    • @selvampalanisamy
      @selvampalanisamy  12 дней назад

      நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யுங்கள்

  • @selvarasur2131
    @selvarasur2131 Год назад +1

    தாத்தாவின் உயில் மூலம் பெற்ற கிராமநத்தம் மனையை தாத்தா பெயரில் இருந்த பட்டாவையும் முறைப்படி தாசில்தார் மூலம் மூன்று சகோதரர்கள் பெயருக்கும் பட்டா மாற்றம் செய்து கொண்டோம் .அதன் பின்னர் சர்வே எண் சப்டிவிஷன் செய்து மூன்று பேரும் தனித்தனி பட்டா வாங்க மூன்று பேரில் ஒருவர் ஒத்துழைப்பு இல்லை என்ன செய்யலாம் .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      அவரது ஒத்துழைப்பு தேவை இல்லை.

  • @srinivasanib3448
    @srinivasanib3448 Год назад

    Amount of share of the property to other legalheirs- Market value or guideline value?

  • @palaniraja4054
    @palaniraja4054 2 года назад +2

    ஐயா 2010ல எனது தம்பியும் நானும் குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்து கொண்டோம் அந்த சொத்தில் எனது தம்பி பெயரில் எங்க அம்மா எழுதி வச்ச சொத்தை ஒரு ஏக்கரை அவர் பாகத்தில் காட்டாமல் ஏமாற்றிவிட்டார் அது தற்பொழுது தான் எங்களுக்கு தெரியும் பாராட்டணியில் கட்டுப்படாமல் சில சொத்து நின்று போய்விட்டால் அந்த பாக அட்டவனை செல்லுமா செல்லாதா எனக்கு ரிப்ளை கொடுக்கவும் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      பாகப்பிரிவினை செய்யும் போது, அதில், தனிப்பட்ட முறையில் அம்மா தனக்கு எழுதி வைத்த சொத்தை உங்கள் தம்பி காட்டாதது தவறு இல்லை.

    • @manjuladevi8372
      @manjuladevi8372 Год назад

      En ammavin appa udaiya poorviga sothai en ammavin than gai mattum eluthi vaangittar. Idu selluma

  • @logeshlogi2076
    @logeshlogi2076 Год назад +1

    ஐயா வணக்கம் எங்கள் தாத்தா சொத்து மூன்று ஏக்கர் ஐயா அது எங்க மாமா எங்க அம்மா வுக்கு 10 சென்ட் னு பாகப் பரிவினை தந்தரு அதை எங்க அம்மா வங்கிவதுடங்கா இப்போ அந்த சொத்துக்கு வழி இல்ல வழி கேட்ட இல்ல சொல்றாங்க அதை இப்ப போய் செட்டில்மெண்ட் எனக்கு விருப்பம் எல்லாம் சொல்லிட்டு கேஸ் பதிவு பண்ண முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      தெளிவாக கேளுங்கள். புரியவில்லை

    • @logeshlogi2076
      @logeshlogi2076 Год назад +1

      ஐயா எங்க மாமா வந்து எங்க அம்மாவுக்கு செட்டில்மெண்ட் கொடுத்தார்கள் ஐயா மொத்தம் மூன்று ஏக்கர் அதுல வந்து எங்க அம்மாக்கு 10 செண்டு சொன்னார்கள் ஐயா அந்த பத்து சென்ட் ஓகே ன்னு சொல்லிட்டு எங்க அம்மா அந்த செட்டில்மெண்ட் ஓகே நான் வாங்கிட்டு வந்துட்டாங்க இப்ப அந்த பத்து செண்டுக்கு வழி இல்லையா அது கேட்டால் வழி தர முடியாது கொடுத்து தான் சொல்றாரு இப்ப எங்களுக்கு செட்டில்மெண்ட்ல வந்து உடன்பாடு இல்லைன்னு சொல்லிட்டு கேஸ் பைல் பண்ண முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      @@logeshlogi2076 இன்னமும் உங்கள் கேள்வியில் தெளிவில்லை. செட்டில்மெண்ட் கொடுக்கப்பட்ட சொத்து யாருடையது? உங்கள் அம்மாவிற்கு எதற்காக உங்கள் மாமா செட்ட்டில்மெண்ட் செய்தார்?

  • @thenmozhiramanathan2934
    @thenmozhiramanathan2934 Год назад

    அய்யா அவர்களுக்கு வணக்கம்
    எனது சந்தேகம், பாகப்பிரிவினை ஆவணத்திலே தங்களுக்குரிய பாகத்தை மற்றொருவருக்கு விட்டுக் கொடுத்து எழுதித்தரலாமா, விடுதலை ஆவணம் போடாமலேயே இது சட்டப்படி செல்லுமா.
    தங்களின் விளக்கத்தை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      விடுதலைப் பத்திரம் எழுத வேண்டும்.

  • @GaneshKumar-qk3tm
    @GaneshKumar-qk3tm Год назад +1

    எங்கள் வீட்டில் 6 பாகங்கள் உள்ளன அதில் 4 பெண்கள் 2 ஆண்கள் உள்ளன 4 நபர்கள் இந்த குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத ஒருவரிடம் விற்க முயற்சி செய்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒரு ஆளாகிய நான் அதை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறேன் என்னால் வேறு ஒருவர் வாங்குவதை நிறுத்த முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      அடுத்தவர் கொடுக்கும் தொகையினை நீங்கள் கொடுத்தால் முடியும்

  • @user-xq6ig8lw4y
    @user-xq6ig8lw4y 6 месяцев назад

    ஐய்யா.வழக்கம்.நாங்கள்.மூன்று.மகன்கள்.மூன்று.மகள் கல்.எங்கள்.பாகம் பிரிந்து.12ஆன்டுகள்.ஆகின்றன.இப்போவந்து.மோட்டார்.பம்புசெட்டிள்.இறைக்காதே.என்று.தடுக்கிறான்.அவன்.தடுக்காமள்இருக்க.நான்.என்னசெய்யவேன்டும.❤❤❤

    • @selvampalanisamy
      @selvampalanisamy  6 месяцев назад

      காவல்துறையில் புகார் அளியுங்கள்

  • @nkffgaming2144
    @nkffgaming2144 25 дней назад

    ஐயா வணக்கம் எனது அம்மா பெயரில் இருக்கும் சொத்தை என் அண்ணனுக்கும் எனது தங்கைக்கும் மட்டும் பிரித்து கொடுத்துள்ளார் நான் கோர்ட் மூலம் நான் எப்படி தீர்வு காண்பது

  • @chinnathambi8906
    @chinnathambi8906 Год назад +1

    ஐயா ,எனது தந்தையும்,அவருடைய அண்ணனும்,1982ல் 2.75 ஏக்கர் நிலத்தை கூட்டு பத்திரம் மூலமாக வாங்கி அனுபவித்து வரும்பொழுது 1991 ல் எனது பெரியப்பா மட்டும் பாகபிரிவினை செய்யாமல் ரோட்டிற்கு அருகாமையிலே 1.28 ஏக்கர் நான்கு புறம் எல்லை போட்டு விற்றுவிட்டார் எங்களுக்கு பாதை ஏதும் விடாமல் தற்பொழுது என்ன செய்வது உடனடியாக கூறவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      பாகப்பிரிவினை செய்யாமல் விற்பனை செய்தது செல்லாது. மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்

  • @ganesanganesh3997
    @ganesanganesh3997 10 месяцев назад

    வணக்கம் அய்யா, என் தந்தை வழி தாத்தா சொத்து, அதில் என் தந்தையின் சித்தப்பாக்கள் 3 பேருக்கும் பங்கு உண்டு, என் தந்தை இறந்துவிட்டார் 20 ஆண்டுகள் மேலாகி விட்டது, என்னிடம் எந்த ஆவணமும் இல்லை, அவர்கள் என் பாகத்தை தர மறுக்கிறார்கள் இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் உங்கள் ஆலோசனை தாருங்கள் அய்யா,
    நன்றி வணக்கம்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  10 месяцев назад

      வழக்கு தொடுங்கள்

  • @anbumurugan12
    @anbumurugan12 Год назад

    1) சொத்தில் ஆண் பெண் இருவருக்குமே சம பங்கு உண்டு அதில் பெண் தன்னுடைய சொத்தை ஆண் வாரிசுகளை பகிர்த்து கொள்ளட்டும் என்று கூறினால் ஆண் வாரிசுகள் மட்டும் பாகப் பிரிவினை செய்யலாமா?
    2) பாகப் பிரிவினையின் போது 4 ஆண் வாரிசுகள் உள்ளனர். அதில் இறுதி ஆண் வாரிசு இறந்து விட்டார் அவருக்கு குழந்தைகளும் இல்லை ஆனால் மனைவி உயிருடன் உள்ளார் அவர் நிலத்திற்கு பதில் ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று கொள்ள தயாராக உள்ளார் அப்படி ஆனால் மற்ற 3 ஆண் வாரிசுகள் நிலத்தை பாக பிரிவினை செய்யலாமா?

  • @sathisharumugam9304
    @sathisharumugam9304 Год назад +1

    சார், என் அப்பா இறந்துவிட்டார், என் தாத்தா மற்றும் பாட்டியும் இறந்துவிட்டனர். என் தாத்தாவிற்கு மொத்தம் 5 மகன்கள். எனக்கு சேரவேண்டிய பங்கை பிரித்துத்தர சம்மதிக்க மாட்டுகிறர்கள். நீதிமன்றம் சென்றால், கோர்ட் பீஸ் என்னால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் எனது பங்கை பேர என்ன செய்யவேண்டும்?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      முதலில் அவர்களிடம் நேரடியாக அல்லது நண்பர்கள் , உறவினர்கள் மூலமாக பேசி பாருங்கள்

  • @ArunKumar-pu9hv
    @ArunKumar-pu9hv Год назад +1

    ஐயா.வணக்கம்; எங்கள் வீட்டில் கூட்டு பட்டாவாக உள்ளது;அன்றைய காலத்தில் பஞ்சாயத்தின் பூர்விகம் வீடு எங்களுக்கு என்று பிரித்து விட்டனர்;இதில் தற்பொழுது நாங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்:வீட்டு வரி மற்றும் கரண்டு பில் கட்டி வருகிறோம்.இதில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று எங்கள் பங்காளி கேட்கின்றனர்.பாகம் பிரித்து சுமார் 34 ஆண்டுகள் ஆகும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      பயப்படத் தேவையில்லை

  • @blacklub4602
    @blacklub4602 2 месяца назад

    அண்ணன் தம்பிக்கு இடையில் பாகப்பிரிவினை பிரச்சனை வந்து கேஸ் கொடுத்தால் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை எத்தனை மாதங்கள் முதல் எத்தனை வருடங்கள் வரை அந்த கேஸ் எடுத்துக் கொள்ளும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  12 дней назад

      இது நீதிமன்றத்தையும், வழக்கில் தாக்கல் செய்யும் ஆவணங்களையும், வழக்கை நடத்தும் வழக்கறிஞர்களையும், உங்களையும் பொறுத்தது

  • @prem_rmk
    @prem_rmk Год назад

    ஐயா வணக்கம். 1975 இல் பதிவு செய்யப்பட்டுள்ள பாகபிரிவினை பத்திரத்தில் புல எண் 1249 என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1994இல் அதே இடத்திற்கு வழங்கப்பட்ட மனைவாரி தோராய பட்டாவில் புல எண் 1245/2D என குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது பதிவு செய்யப்பட்ட பட்டாவில் உள்ள நபர்கள் யாரும் உயிருடன் இல்லை. அந்த இடத்தில் பெருமாள், ராமையா என அண்ணன் தம்பி இருவருக்கும் கூட்டாக நிலம் உள்ளது. இருவரின் வாரிசுகள் பெயர்கள் பட்டாவில் இணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உட்பரிவு செய்ய survey அலுவலகத்தை அனுகிய போது அவர்கள் புல எண் வெவ்வேறாக உள்ளது என கூறுகின்றனர். தற்பொழுது அந்த இடத்தை எவ்வாறு இருவருக்கும் தனி தனியாக உட்பிரிவு செய்வது என்று கூறுங்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад +1

      பட்டாவில் ஏற்பட்டுள்ள தவறை திருத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்யுங்கள்

  • @vijayakumarelumalai9714
    @vijayakumarelumalai9714 2 года назад +1

    உடன் பிறந்த தம்பியும் தங்கைகளும் பாக பிரிவினைக்கே வரவில்லை இருக்கின்ற இடமோ 800 ச.அடியில் உள்ள பழைய 1+1 வாரிய குடியிருப்பு வீடு, இரண்
    டு தங்கைகளுக்கு தனியாக 2400 ச.அடி மனை எங்கள் தாயார் வாங்கி கொடுத்து விட்டார்கள். தந்தையும் தாயாரும் உயிருடன் இல்லை பாகபிரிவினை பேசுவதற்கே வராமல் இழுத்தடிக்கிறார்கள் இதற்கு நல்ல ஒரு வழியை கூறுங்கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      நீதிமன்றம் செல்லுங்கள்

  • @prasadnatchiappan2733
    @prasadnatchiappan2733 2 года назад

    ஐயா ஒரு பட்டாவில் பல சர்வே எண்கள் உள்ளன அதில் சில எண்கள் உள்ள சொத்தை மட்டும் பாகம் பிரிக்க வேண்டும், மற்ற சர்வே எண் சொத்தை அவரவர் தனித்தனியே எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இந்த நிலையில் அந்த பாகம் பிரிக்க வேண்டிய சொத்தை மட்டும் பாகப்பிரிவினை பத்திரம் மூலமாகவும் மற்ற சொத்தினை பாக விடுதலை பத்திரம் மூலமாகவும் தனித்தனியே பதிந்து கொள் முடியுமா, உங்கள் ஆலோசனை எதிர்பார்த்து காத்திருக்கிரேன்🙏

  • @devadass8239
    @devadass8239 2 года назад +1

    வணக்கம் ஐயா அவர்களே என் தாய் இறந்துவிட்டார் பிறகு தந்தைக்கு இரண்டாவது மனைவியும் இறந்து விட்டார் தந்தை மூன்றாம் திருமணம் செய்து கொண்டார் முதல் மனைவி க்கு இரண்டு பேர்களும் மூன்றாம் மனைவிக்கு ஐந்து பிள்ளைகள் சொத்தை எப்படி பாகப்பிரிவினை செய்வது எப்படி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      உங்கள் தந்தை சொத்து சம்பந்தமாக எந்த ஏற்பாடும் செய்து வைக்காமல் இறந்தால்தான் நீங்கள் பாகப்பிரிவினை செய்ய முடியும்.

  • @myhands22
    @myhands22 Год назад

    ஜயா, வணக்கம் எனது ஐயா (எனது அப்பாவின் அப்பா) மகள்களுக்கு சொத்தில் பங்கு இல்லாதவாரும் (மகள்களுக்கு திருமணம் முடித்து வைத்து செய்வதை எல்லாம் செய்து வைத்து விட்டேன் என்றும்) மகன்கள் மட்டும்தான் சொத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு என்றும் (உயிலில் பாகப்பிரிவினை செய்யவில்லை பொதுவாக மகன்கள் சொத்தை அனுபவித்துக் கொள்ளலாம் என்று) உயில் எழுதி பதிவு செய்துள்ளார். அந்த சொத்தை எப்படி மகன்கள் பாகப்பிரிவினை செய்வது?
    இப்படி இருக்கும் பட்சத்தில் மகள்கள் சொத்தில் பங்கு கேட்க உரிமை உண்டா?
    இல்ல அந்த சொத்தை விற்கும் பொழுது பாகப்பிரிவினை செய்யும் பொழுதும் மகள்களும் கையெழுத்து போட வேண்டுமா?
    இதற்கு எனக்கு விளக்கம் கொடுக்கும்படி தங்களை கேட்டுக்கொள்கிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      அது அவரது சுயசம்பாத்தியமாக இருந்தால் அவர் எழுதிய உயில்பிரகாரம் உங்களுக்கு சொத்து கிடைக்காது. மகன்கள் ஒன்றுபட்டு அந்த சொத்தை பிரித்துக் கொள்ள வேண்டும். அது அவர்கள் இஷ்டம்

    • @myhands22
      @myhands22 Год назад +1

      @@selvampalanisamy தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      @@myhands22 மகிழ்ச்சி

  • @ganesanc-zq2nf
    @ganesanc-zq2nf 4 месяца назад

    நான் என்னுடைய குடும்ப உறுப்பினரிடம் விடுதலை பத்திரம் வாங்குவதற்காக வெளிநாட்டில் உள்ள எனது சகோதரன் எனது அம்மாவிற்கு பவர் கொடுத்து அதை பதிவு அலுவலகத்தில பதிவு செய்யப்பட்டு விட்டது.ஒரு வருடம் ஆகி விட்டது. இப்போது மற்ற எனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் எனது பெயருக்கு பதிவு செய்வதற்கு வெளிநாட்டுல உள்ள எனது சகோதரனிடம் வேறு எந்த ஆவணமும் வாங்க வேண்டுமா பதில் கூறவும். நன்றி.

  • @bharathiganeshsivathanupil7849

    ஐயா..! எங்கள் வீட்டில் 2 ஆண் பிள்ளைகள், 1. பெரியமகனானாகிய நான் சிறு வயதிலே வேலைக்கு சென்று இடம் வாங்கி வீடு போட்டேன். நான் செலவழித்த தொகை 9 லட்சம்... என் தந்தை 4 லட்சம் செலவழித்தார்.. இரண்டவதாக என் தந்தைக்கு சென்னையில் குடிசை மாற்று வாரிய வீடும் உள்ளது... இதை எப்படி பிரிப்பது?
    இதற்கு எந்த உதவியும் தம்பி செய்ய வில்லை... இப்போது மனைவி வந்த ஒரு வருடத்திற்குள் பங்கு பிரித்த்து கொடு... இல்லை சட்டப்படி பார்த்து கொள்ளலாம்...
    ஏன் என்று கேட்டால் கடன் வாங்கி வீடு போடும் போது உனக்கு சோறு போட்டேன் என்று கூறுகிறான். எப்படி சொத்தை பிரிப்பது... உதவுங்கள்... தாய் தந்தையும் அவன் பக்கம் தான் உள்ளனர்..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      நீங்கள் செலவழித்ததற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே, அதிக பங்கை பெற முடியும்.

    • @bharathiganeshsivathanupil7849
      @bharathiganeshsivathanupil7849 Год назад +1

      @@selvampalanisamy மிக்க நன்றி..!

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      @@bharathiganeshsivathanupil7849 மகிழ்ச்சி

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 2 года назад +1

    Sir kootu patta ulla veedu thanipatta vaga oruvar othukka matrar eppadi thani patta peruvathu?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      தனிப்பட்டா வேண்டி விண்ணப்பிக்கும் போது வருவாய்த்துறையிலிருந்து அவர்களுக்கு அழைப்பு அனுப்பி விசாரனை செய்வார்கள். அதற்கு அவர்கள் வரவில்லை என்றால் எக்ஸ் பார்ட்டியாக முடிவு செய்து தனிப்பட்டா வழங்குவார்கள்.

  • @mrrider1726
    @mrrider1726 3 месяца назад

    ஐயா வணக்கம், என் தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்து உயிரோடு இருக்கும் போதே ஏனது தந்தைகு தானமாக ஏழூதி கொடுதார்.
    தற்போதும் உயிருடன் தான் உள்ளார்.
    ஏனது தந்தை விவாகரத்து வாங்கவில்லை ஆனால் 2வது திருமணம் செய்து கொண்டார்
    முதல் மனைவிக்கு 1 குழந்தை நான்
    இரண்டாவது மனைவிக்கு 1 குழந்தை உள்ளது
    ஏனது தந்தை இரண்டாவது மனைவி குழந்தைகு மட்டும் சொத்தை தானமாக ஏழூதிவிட்டார்
    எனது தந்தயைும் தாத்தாவும் உயிருடன் தான் உள்ளார்கள்
    முதல் மனைவி குழந்தை நான் சொத்தில் உரிமை வாங்க முடியுமா

  • @anbud8612
    @anbud8612 Год назад

    1993 ல் நீதிமன்றம் மூலம் பாகப்பிரிவினை செய்யப்பட்டது , அதை வைத்து என் பெரியப்பா மட்டும் கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக மாற்றிக்கொண்டார்
    இப்போது original partition deed தொலைந்து விட்டது Xerox மட்டும் தான் இருக்கிறது
    Original partition deed பெறுவது எப்படி
    எவ்வளவு நாட்கள் ஆகும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      காணவில்லை என்று நாளிதழில் விளம்பரம் செய்து மற்றும் காணவில்லை என்று காவல்துறையில் புகார் செய்து அவர்களிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சார்பதிவாளரிடத்தில் கொடுத்து புதிய அசல் பெறவேண்டும்.

  • @tamilarasia8407
    @tamilarasia8407 2 года назад +1

    எங்களுடைய சொத்து கேஸ் கடந்த 2012 முதல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. கேஸ் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது ஆனால் பாகம் பிரிக்கவில்லை. வக்கீல் ஜட்ஜிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார். கமிஷனர் பேப்பர் தொலைந்து விட்டதாகவும் அதற்கு ஜட்ஜிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார். விரைவில் கேஸ் முடிக்க என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      உங்கள் வழக்கறிஞரை கேளுங்கள்.

  • @ezhilraj1231
    @ezhilraj1231 6 месяцев назад

    அண்ணன் தம்பி இரண்டு பேர் இருக்கும்போது பாகத்தின் முதல் பாகத்தை யார் எடுக்க வேண்டும்....... அதிகபட்சமாக எவ்வளவு அடி வரை எடுத்துக்கொள்ள இயலும்.....?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  6 месяцев назад

      முதல் பாகம் தம்பிக்கு

  • @ilangor5902
    @ilangor5902 Год назад +1

    தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தை குடும்பத்திற்குல் பாகப்பிரிவினை செய்யலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад +1

      அவர் சம்மதித்தால் அல்லது அவர் உயிரோடு இல்லையென்றால் செய்யலாம்.

  • @rithickroshen4241
    @rithickroshen4241 2 года назад +1

    ஐயா வணக்கம் அண்ணா தம்பி இருவர் தம்பிக்கு தேரியமல் அம்மா அண்ணக்கு தான செட்டில்மெண்ட் அவருடைய பங்கை எழுதி வைத்தார் தம்பிக்கு எழுதி தர முடியாது என்று கூறுகிறார் இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      ஒன்றும் செய்ய முடியாது

  • @kangayan6554
    @kangayan6554 11 месяцев назад +1

    ஐயா வணக்கம் , லேக் அடல்த்தில் முடிக்கப்பட்ட பாகப் பரிவினையை சார்பதிவாளர் அலுவலத்தில் பத்திரம் பதிய வேண்டுமா???

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 месяцев назад

      பதிவு செய்தால்தான் நல்லது.

  • @gopisaravanakumar1159
    @gopisaravanakumar1159 Год назад

    என்னுடைய அப்பா முதல் மனைவி இறந்துவிட்டர்.பிறகு இரண்டாம் திருமணம்‌செய்து கொண்டார்.முதல்‌ மனைவி பிள்ளைகள் இரண்டு பேர்கள் 1 ஆண் 1‌பெண் இரண்டாம் மனைவி பிள்ளைகள்‌ 2 ஆண் இதை பாகபிரிவு பிரிப்பது எப்படி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      ஆளுக்கு (நான்கில்) ஒரு பங்கு

  • @rohe8413
    @rohe8413 2 года назад +1

    Sir pls reply. Still soththu pathiram 50 cent nilam Grandpaa name la irukku but patta illa. Grandpaa passed. 4 legal heirs all r Gents. All r partitioned the land and built house when Grandpaa was alive without Baagapirivinai.After Grandpaa death ivanga serndhu ivanga 4 members name la koottu patta pottaachu. Ippo indha 4 members melayum paththiram register pannalaam nu solraanga. Ippo idha Baagaprivinai paththiram panna mudiumaa bcz Grandpaa passed or Dhana settlement paththiram panna mudiumaa

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      தமிழில் கேளுங்கள்

  • @RajaaliRajaali-em1wx
    @RajaaliRajaali-em1wx 4 месяца назад

    ஐயா எங்கள் பூர்வீக சொத்து இதில் இரண்டு நபர்கள் வாரிசுகள் உள்ளோம் அதில் பாகப்பிரிவினை செய்யும் முன்பே ஒரு நபர் இறந்து விட்டார் இப்போது நான் அதில் எனது பாகத்தை மட்டும் எப்படி

  • @smileloveammuselva4466
    @smileloveammuselva4466 Год назад

    ஐயா வணக்கம் நாங்கள் நான்கு பேர் அதில் இரண்டு பேர் பெண் பிள்ளைகள் இரண்டு பேர் ஆண் பிள்ளைகள் எங்கள் பூர்விக சொத்து மற்றும் அப்பாவுடைய சொத்து இரண்டையும் எங்கள் கூட பிறந்தவர் மூன்று பேர் சரிபாதியாக பிரித்துக் கொண்டனர் அதில் ஒருவர் அதாவது அந்த குடும்பத்தில் மூத்த மகனாக எனக்கு எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள் இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து உங்களுடைய அறிவுரை எனக்கு தேவை ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      சொத்தை அவர்கள் பிரித்துக் கொண்டு பதிவு செய்த பாகப்பிரிவினை பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்.

    • @rameshs9175
      @rameshs9175 Год назад

      Kuttu pattavil totally 12 person, but 1 person cannot sign for pagapirivinai. Then what can the next step for another 11 person?

  • @balasudha1282
    @balasudha1282 7 месяцев назад

    என்னுடைய அப்பா கூட பிறந்தவங்க 7 பேர் அப்பாவை சேர்த்து 8 பேர் .... ஒரு பெரிய இடம் இருக்கு தாத்தா சொத்து ....அதை 6 பேர் மொத்தமா விற்கணும் சொல்றாங்க.. 2 பேர் இடத்தை பிரிக்கணும் சொல்றாங்க .... இதுக்கு என்ன தீர்வு ஐயா....

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 2 года назад +3

    விதவை பெண்க்கு வாரிசு இல்லா நிலையில், அவரது தந்தையின் செத்தை அந்த கவிதையின் உடன் பிறந்தவர்கள் எப்படி பங்கு செய்ய வேண்டும்.

  • @nagaraja1766
    @nagaraja1766 2 года назад +1

    Uil whoit peparil elurhalama athu sattapati selluma

  • @muruganvasuki8600
    @muruganvasuki8600 Год назад +1

    பத்திரம் இருவர் பெயரில் பட்டா இருவரின் பெயரில் தனி பட்டாவாக பிரிப்பது எப்படி மூத்தவர் இதற்கு சம்மதிக்கவில்லை நீங்கள் ஒரு வழி

    • @NaalaiNamNaadu
      @NaalaiNamNaadu 3 месяца назад

      பாகப்பிரிவினை இரண்டு பத்திரமாக பதிவு செய்ய முடியுமா?

  • @kandasamy-8890
    @kandasamy-8890 3 месяца назад

    ஐயா, ஆறு பேர் வாரிசு கொண்ட ஒரு நிலத்தை மூன்றாவது நபர் மட்டும் வேறு ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார் அதும் அவருடைய தந்தை பெயரில் உள்ள நிலத்தை சட்டப்படி இந்த பதிவு செல்லுமா?

  • @harittf6694
    @harittf6694 7 месяцев назад

    ஐயா குடும்ப உறுப்பினர் அல்லாத ஐந்து சென்டு இடம் நான்கு பெயரில்கூட்டுபட்டாவாக உள்ளது அதில் பாக பிரிவினை செய்யாமல் உள்ளது அதில் ஒருவர் மட்டும் அவருடைய பங்கிளை விற்க முடியுமா அவருடைய பங்கை வாங்கினால் ஏதேனும் பிரச்சனை வருமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  5 месяцев назад

      அவருக்கு எந்த பக்கமுள்ள பங்கு வரும் என்று இப்போது கூற முடியாது. வருகின்ற பங்கை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் வாங்கலாம்.

  • @ayyamperumalmass5521
    @ayyamperumalmass5521 11 месяцев назад

    ஐயா வணக்கம் எஙக அப்பா உடன் சகோதரர் 2 பேர் அக்கா 1 நபர் . 3நபரும் 2009 பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள். அதற்கு பிறகு 2022 ஆண்டு தானசெட்டில் நானும் என் அண்ணணும் எழுதினோம். இப்போது எங்க அப்பாவின் சகோதரி கேஷ் போட்டு உள்ளார். 2009 எழுதிய பாகப்பிரிவினை பத்திரத்தில் கை எழுத்து போடவில்லை. இதனால் ஏதேனும் வில்லங்கம் உண்டா ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 месяцев назад

      உண்டு

    • @ayyamperumalmass5521
      @ayyamperumalmass5521 11 месяцев назад

      ஐயா வணக்கம்
      1975 திருமணம் முடிச்சது. அதற்கு பிறகு பெரியப்பா பேரில் தான் சொத்து வாங்கியது. அனைத்தும் அவர் பெயர்களில் இருந்து தான் மூன்று பேர்களும் பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள்

    • @ayyamperumalmass5521
      @ayyamperumalmass5521 11 месяцев назад

      வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 месяцев назад

      @@ayyamperumalmass5521 இதை முதலில் நீங்கள் கூறவில்லையே. அந்த சொத்தில் அப்பாவின் சகோதரி (அத்தை) க்கு உரிமை இல்லை.

  • @chelladuraimarvanchelladur8789
    @chelladuraimarvanchelladur8789 9 месяцев назад

    அய்யா வணக்கம் பத்திரத்தில் உள்ள படி அளப்பார்களா அல்லது பத்திரத்தில் வழி வாய்க்கால் எழுதிய இருக்கு ஆனால் கிணறு மற்றும் இரண்டாக பிரித்து விட்டு வழி வாய்க்கால் பிரித்து கொடுக்க முடியாது என்று கூறுகிறார் நிள அளவு அதிகாரிகள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 месяцев назад

      அவர்கள் கூறுவது சரிதான். கிணற்றை இரண்டாக பிரித்துவிட்டு வாய்க்காலை எப்படி பிரிப்பது? வாய்க்க்காலை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

  • @rameshneshan3810
    @rameshneshan3810 Год назад +1

    ஐயா எங்கள் பாகப்பிரிவினை இயர் லிஸ்ட் மட்டும் தான் உள்ளது நாங்கள் என்ன செய்வது அது பூர்வீக சொத்து. எங்கள் பங்காளி அவருடைய சொத்து என்று உயிர் எழுதி வைத்துள்ளார் அதை வைத்து அவர்கள் விட்டுக் கொண்டு வருகிறார் என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      அந்த சொத்து குறித்த பழைய ஆவணங்களை திரட்டுங்கள். புகார் அளியுங்கள். மீட்கலாம்!

  • @ModernHouse24
    @ModernHouse24 Год назад +1

    Sir, என் அண்ணன் ஹோம் லோன் எடுத்து வீடு வாங்கினான். அதில் என் அப்பாவும் பணம் கொடுத்து இருக்கார். இதில் நான் பங்கு கேட்க முடியுமா? நாங்க கூட்டு குடும்பம். நான் பங்கு கேக்க முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      உங்கள் தந்தை உயிருடன் இருக்கிறாரா?. இல்லை என்றால், உங்கள் தந்தை பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருக்கிறதா? உங்கள் அண்ணன் பெயரில் அந்த வீடு இருக்கின்ற நிலையில் நீங்கள் பங்கு கேட்க வாய்ப்பில்லை.

  • @SanthoshKumar-io4yf
    @SanthoshKumar-io4yf Год назад +1

    ஜயா வணக்கம், எங்கள் தந்தையின் (இறந்து விட்டார்) புறம்போக்கு நிலச்சொத்தை வாரிசுகளான நாங்கள் எப்படி பாகப்பிரிவினை செய்து கொள்வது. இந்த புறம்போக்கு நிலச்சொத்தை பதிவு அலுவலகத்தில் பாகப்பிரிவினை செய்ய முடியாது என்று கூறிகிறார்கள். எனவே தாங்கள் விளக்கம் கூறவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Год назад

      புறம்போக்கு நிலத்தை நீங்கள் தொடர்ந்து 30 வருடங்கள் அனுபவித்து வந்திருந்தால், அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால் அரசிடம் முறையிட்டு அதனை முதலில் உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு பாகப்பிரிவினை செய்யலாம்

  • @selvaraj-fp1yi
    @selvaraj-fp1yi 2 года назад +1

    பாகப்பிரிவினை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது பொதுவாக மூத்தவர் மெத்த நிலத்தில் அவருக்கு உண்டான செத்தை வடக்கு பகுதியில் அனுபவித்து வருகிறார் சிறியவர் தென்மேற்கு பகுதியில் அனுபவித்து வருகிறார் சொத்தின் நடுவில் பஞ்சாயத்து சாலை அமைந்துள்ளதால் 5சம பாகங்களாக பிரிக்கப்பட்டால் வடக்கு தெற்கு மட்டுமே பிரிக்க இயலும். நாங்கள் 5பேர் நீதிமன்றதீர்ப்பு எப்படி இருக்கும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      இது போன்ற நிலைகளில் நீதிமன்றம் ஒரு அலுவலரை நியமிக்கும். அவர் உங்களது சொத்துக்களை அளந்து அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைப்பார். அதன் அடிப்படையில் பங்குகள் பிரிக்கப்படும். அதனை ஏற்றுக் கொண்டால் வழக்கு அத்துடன் முடிக்கப்படும். இல்லையென்றால் அந்த சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அந்தப்பணம் பங்கு பிரிக்கப்படும்.

  • @user-hr3uk8io9b
    @user-hr3uk8io9b Месяц назад

    அண்ணன் தம்பி இருவர் இருக்கும் போது தம்பிக்கு எல்லா இடங்களிலும் முதலில் பங்கு கொடுப்பது சட்டத்தில் இருக்கிறதா அல்லது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Месяц назад

      அப்படி ஒன்றும் இல்லை

  • @kumarn6590
    @kumarn6590 2 года назад +1

    Sir nanga pagapirivinai muduchitom yengakitta nagal pirathi tha irruku yengaluku asal pirathi yentha idathil thevai clear sollunga please

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      பொதுவா பாகப்பிரிவினை செய்றவங்க எல்லாருக்குமே இந்த சிக்கல் இருக்கும். அந்த பாகப்பிரிவினை பத்திரத்திலேயே ஒரிஜினல் பத்திரம் யார்கிட்ட இருக்குங்கிறதயும் எழுதி இருப்பாங்க. நீங்க எப்படி எழுதி இருக்கீங்கன்னு எனக்கு தெரியல. தேவைன்னா அவங்ககிட்ட இருந்து வாங்கிட்டு திரும்ப அவங்ககிட்டயே கொடுக்கணும். உங்க வசதிய பாத்துக்கோங்க. எல்லாருக்கும் ஒரிஜினல் பத்திரம் கொடுக்க முடியாது!

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 17 дней назад

    அய்யா 🙏வாரிசுகள் ஐவர் அதில் ஒருவர் மூலம் பத்திரம் ஒரிஜினல் வைத்து கொண்டு தரமாலும் பாகப் பிரிவினை க்கு ஒத்துழைக்க மறுத்தாலும் மீதி நால்வர் எப்படி பாகப் பிரிவினை பத்திரம் பதிவு செய்வது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

    • @selvampalanisamy
      @selvampalanisamy  12 дней назад

      நீதிமன்றம் மூலமாக

  • @jaibabumuthu7250
    @jaibabumuthu7250 2 года назад

    சார் முதல் மனைவிக்கு ஒரு பெண் .அந்த மனைவின் இறந்து விடுகிறார்.பிறகு முதல் மனைவியின் தங்கையை திருமணம் செய்கிறார் அவருக்கு ஆ-2 பெ-3 குழந்தை இருக்க மூன்றாவது ஒரு பெண்ணை வைத்துக் கொள்கிறார் அவருக்கு ஆ-3 பெ- 3 குழந்தை இருக்கு. இதில் முதல் மனைவிக்கு ஒரே ஒரு 1 பெண் குழந்தை அந்த பெண் இறந்து விட்டார் அதற்கும் ஒரு பெண் மட்டும் தான் இதில் எப்படி பிரிப்பது சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      பத்திர எழுத்தரை அணுகுங்கள்

  • @iyappan..s8179
    @iyappan..s8179 2 года назад +1

    Sir, எங்களுடைய பட்டா நகள் இருக்கு, பாக பிரிவினை செய்தார்களா இல்லையா என்று எங்களுக்கு தெரியவில்லை, ஒரு வேளை செய்திருந்தால் அதை எப்படி தெரிந்துகொள்வது. அதனுடைய நகலை எப்படி online la எடுப்பது. பாக பிரிவினை செய்தார்களா? அல்லது செய்யவில்லையா என்பதை ஆன்லைனில் பார்ப்பது எப்படி.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      வில்லங்கம் பாருங்கள். தெரிந்துவிடும்

  • @kandhasamyp5613
    @kandhasamyp5613 4 месяца назад

    சார் என் மாமனாருக்கு என் மனைவி மட்டும் ஒரே வாரிசு.ஆனால் பேச்சுவார்த்தை இல்லை.எங்களுடனேயே என் மாமியாரும் உள்ளார்.மாமனார் என் மாமியாரை தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு வேறொரு பெண்ணிடம் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.என் மாமனாருக்கு அவரது அப்பா சுயமாக சம்பாதித்து தந்த 6 ஏக்கர் நிலத்தில் சுபபோகமாக தன்னுடைய இணையுடன் வாழ்கிறார்.என் மாமியார் மற்றும் என் மனைவிக்கு என் மாமனாரது சொத்தில் ஏதாவது பங்கு கிடைக்குமா? அல்லது என் மாமனார் அவர் விருப்பம் போல் வேறு எந்த நபருக்காவது தாத்தா சொத்தை எழுதி வைத்து விடுவாரோ? என் சந்தேகமாக உள்ளது.எனது மனைவி/மாமியாருக்கும் தெரியாமல் சொத்தை விற்றுவிட வாய்ப்புள்ளதா என்பதை தயவு செய்து விளக்குங்களேன். நன்றியுடன்.கந்தசாமி.

  • @senthilsubramanian2802
    @senthilsubramanian2802 Год назад

    Sir enoda family la 3 children's. Father drinker na la family partition 2childrens porantha apaye divide panitanga. But partition panni 4 years apram porantha child ku property la rights iruka?

  • @vigneshkannanpitchai2324
    @vigneshkannanpitchai2324 2 года назад +2

    ஒரு உதாரணம் சொல்லுங்களேன்
    A செட்டியூல் மதிப்பு (6 சர்வே நம்பர்), ஒரு சர்வே எண் இடம் இருவருக்கும் (A&B செட்டியூள்) மதிப்பு:- 2 லட்சம்
    B செட்டியூல் மதிப்பு (4 சர்வே நம்பர்). = 2 லட்சம்
    பத்திர செலவு, பதிவு செலவு எவ்வாறு கணக்கிடுவது. ஒரு காணொளியில் சொல்லுங்கள் எல்லோருக்கும் பயன்படும். இல்லையேல் எனக்கு பதில் தாருங்களேன்.
    நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад

      மொத்த மதிப்பு நான்கு லட்சம் வருகிறது. 4000 ரூபாய்க்கு பத்திரம் வாங்க வேண்டும்.

  • @940suresh4
    @940suresh4 Год назад

    pagapirivanai seitha pothu Petra maganaiym manaiviyaum paga pirivinail maraithu piritha pagam selu padi aguma

  • @cajayachander
    @cajayachander 2 года назад +1

    ஐயா,மாமுல் பொது வழித்தட பாத்தியம் என்று ஆவணங்களில் இருந்தாள் அந்த மாமுல் போது வழித்தடத்தை எப்படி கண்டறிவது? பிற்காலத்தில் எந்த ஒரு பிரச்சினையும் வராமல் இருக்க அந்த தடத்தை மட்டும் கண்டறிந்து ஒரு ஆவணத்தை உருவாக்க முடியுமா? அந்த தடத்திற்கு அனைத்து பங்குதாரர்கள் ஒப்புகை வேண்டுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 года назад +1

      நில அளவைத்துறை அலுவலத்தில் உள்ள பழைய ஆவணங்களில் இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள்.