தேவனே நான் உமதண்டையில் l Devane Naan Umathandaiyil l Christian Keerthanai l CSI Ponnappanagar Choir

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Devane Naan Umathandaiyil l Christian Keerthanai Song l Sung by CSI Ponnappanagar Choir l E-mail : choircsipnr@gmail.com l
    Lyrics by Rev.V. Santhiyagu, Batlagundu, Madurai.
    தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
    சேர்வதே என் ஆவல் பூமியில்.
    மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
    கோவே, தொங்க நேரிடினும்
    ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
    1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
    இராவில் இருள் வந்து மூடிட
    தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
    நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
    2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
    பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
    கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
    அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
    3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
    கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
    இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
    என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
    4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
    ஆகாயத்தில் ஏறிப் போயினும்
    வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
    மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே

Комментарии • 16