Devane Naan Umathandaiyil | தேவனே, நான் உமதண்டையில் | கீர்த்தனை 169 | Keerthanai 169
HTML-код
- Опубликовано: 7 окт 2024
- Devane Naan Umathandaiyil Tamil Christian Song
Lyrical Version
Lyrics :
தேவனே, நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை
மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய்
உம்மண்டை சேர்வேன். - தேவனே
1 யாக்கோபைப்போல், போகும்
பாதையில் பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன்,
வாக்கடங்கா நல்ல
நாதா! - தேவனே
2 பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைக்கும்
அன்பின் தூதனாசச்
செய்யும். - தேவனே
3 நித்திரையினின்று விழித்துக்
காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய்
என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும்
உம்மைக் கிட்டிச்
சேர்வேன். - தேவனே
4 ஆனந்தமாம் செட்டை விரித்துப்
பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
வான மண்டலங் கடந்து பறந்து
மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிச்
சேர்வேன் - தேவனே
Like, Comment, Share and Subscribe