Devane Naan Umathandaiyil | தேவனே, நான் உமதண்டையில் | கீர்த்தனை 169 | Keerthanai 169

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Devane Naan Umathandaiyil Tamil Christian Song
    Lyrical Version
    Lyrics :
    தேவனே, நான் உமதண்டையில்
    இன்னும் நெருங்கிச்
    சேர்வதே என் ஆவல் பூமியில்.
    மாவலிய கோரமாக வன் சிலுவை
    மீதினில் நான்
    கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய்
    உம்மண்டை சேர்வேன். - தேவனே
    1 யாக்கோபைப்போல், போகும்
    பாதையில் பொழுது பட்டு
    இராவில் இருள் வந்து மூடிட,
    தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
    தூங்கினாலும் என் கனாவில்
    நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன்,
    வாக்கடங்கா நல்ல
    நாதா! - தேவனே
    2 பரத்துக்கேறும் படிகள் போலவே
    என் பாதை தோன்றப்
    பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
    கிருபையாக நீர் எனக்குத்
    தருவதெல்லாம் உமதண்டை
    அருமையாய் என்னையழைக்கும்
    அன்பின் தூதனாசச்
    செய்யும். - தேவனே
    3 நித்திரையினின்று விழித்துக்
    காலை எழுந்து
    கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
    இத்தரையில் உந்தன் வீடாய்
    என்துயர்க் கல் நாட்டுவேனே,
    என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும்
    உம்மைக் கிட்டிச்
    சேர்வேன். - தேவனே
    4 ஆனந்தமாம் செட்டை விரித்துப்
    பரவசமாய்
    ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
    வான மண்டலங் கடந்து பறந்து
    மேலே சென்றிடினும்
    மகிழ்வுறு காலத்திலும் நான்
    மருவியும்மைக் கிட்டிச்
    சேர்வேன் - தேவனே
    Like, Comment, Share and Subscribe

Комментарии • 6