வள்ளலார் அருளிய திருவருட்பா - கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வள்ளலார் அருளிய திருவருட்பா
    சுத்த சிவநிலை
    முழு பாடல் வரிகளுக்கு
    www.thiruarutp...
    பாடல் :
    1. கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
    எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
    கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
    கலந்தான் கருணை கலந்து.
    2. எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
    எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
    நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
    ஒன்றாகி நின்றான் உவந்து.
    3. எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
    பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
    தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
    வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
    4. சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
    நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
    தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
    சந்தோட மாய்இருமின் சார்ந்து.
    5. அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
    எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
    அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
    செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
    6. அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
    அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
    சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
    உடையான் உளத்தே உவந்து.
    7. தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
    தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
    ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
    மேகத்திற் குண்டோ விளம்பு.
    8. பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்
    கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும்
    தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
    நிலையும் கொடுத்தான் நிறைந்து.
    9. வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
    செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
    ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
    தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
    10. வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
    அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
    இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
    துன்பமெலாம் போன தொலைந்து.
    11. அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி
    அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே
    மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்
    சாமா றிலைஎனக்குத் தான்.
    12. நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
    தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே
    புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
    புகுந்தான் கருணை புரிந்து.
    13. ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
    நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
    சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
    பத்திஎலாம் பெற்ற பலன்.
    14. தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
    ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்
    தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
    வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.
    15. வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான
    நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம்
    ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப்
    பாடுகநீ என்றான் பரன்.
    16. தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
    ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
    செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
    எய்தற் கரியசுகம் ஏய்ந்து.
    17. சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
    நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
    ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
    தானவிளை யாட்டியற்றத் தான்.
    18. நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
    நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
    நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
    ஊன்நாடி நில்லா உழி.
    19. ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற
    காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில்
    கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்
    துண்டேன் அமுதம் உவந்து.
    20. துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
    சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
    நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
    மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.
    21. பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
    சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
    தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
    கொல்லா நெறிஅருளைக் கொண்டு.
    22. சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
    நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
    பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
    வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
    23. சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
    வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
    நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
    தாயே அனையான் தனித்து.
    24. கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம்
    சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன்
    ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்
    மாகா தலனா மகிழ்ந்து.
    25. நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
    ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
    பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
    நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
    26. சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
    சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்
    றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
    நண்ணுமின்பத் தேன்என்று நான்.
    27. நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
    நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
    அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
    இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.
    28. எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
    இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
    சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
    என்மார்க்கம் காண்பேன் இனி.
    29. சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
    நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
    சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
    உற்றிங் கறிந்தேன் உவந்து.
    30. வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இவை.
    31. சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
    வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
    தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
    நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.
    பாடியவர் :
    வடலூர் திரு கார்த்திக் அவர்கள்

Комментарии • 85