சின்ன வயசுல ராத்திரி நேரத்துல வாசல்ல எல்லாரும் பாய் போட்டு மல்லாக்க படுத்துட்டு வானத்தை பாத்து நட்சத்திரத்தையெல்லாம் எண்ணுவோம். அப்போ எங்க பாட்டி ரொம்பவே அழகா கதை சொல்லிட்டு இருப்பாங்க. ஒருபக்கம் கதை இன்னொரு பக்கம் இருட்டு நிலா,நட்சத்திரம்...., வாழ்க்கை ல எவ்ளோ விஷயத்தை தொலச்சிட்டோம்ல. அந்த சின்ன வயசு ஞாபகம் நீங்க கதை சொல்லும் போது வந்து நெஞ்சை பிசையுது. உங்க குரல் நீங்க சொன்ன விதம் எல்லாமே அருமை 💯💯💯
அருமை. தினமும் நீங்கள் சொல்லும் கதைகளை கேட்டுவருகிழேன்.தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக சொல்லி சிறப்பான பணியை செய்துவருகிறீர்கள்.மனமார பாராட்டுகிறேன். கதைக்கு கால் இல்லை.ஆனால் அதற்கு இதயம் உண்டு என்று எழுத்தாளர் எஸ்.ரா.கூறுவார்.
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி தோழர். "என் உடலில் பாதி கதைகளால் ஆக்கப்பட்டது" அப்படின்னு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லி இருக்கிறார். பல கதைகளையும், பல எழுத்தாளர்களையும் எனக்காக அறிமுகப்படுத்தியது அவர்தான் தோழர்.
பாராட்டுகள் கதையைச் சொன்னவர்க்கு. கி ரா ஐயா மாதிரி இனி யார் எழுத முடியும்! இது போல இன்னும் எத்தனை முதியோர்கள் கை விடப் படுகிறார்களோ:( நன்றி எயா. வந்தனங்கள்
இந்த கதை கி ரா இடைசெவல்லில் தான் பார்த்த சம்பவத்தையே எழுதி இருப்பார் பெரியவர்கள் 80 ஏக்கர் நிலத்தில் தங்களுக்கு 4 ஏக்கர் வைத்துக் கொண்டு மற்றவற்றை பிரித்து கொடுத்திருக்கவேண்டும்
சிறப்பு தோழர்! சில நேரங்களில் கதையின் சாரத்தை போன்றே கதை யாரால் நமக்கு சொல்லப்பட்டது என்பதை பொருத்தும் அக்கதை முக்கியத்துவம் பெற்று விடுகிறது. அப்படி உங்களுக்கு இந்த கதை ஒரு முக்கியமான கதையாக விளங்குகிறது.
I am hearing the episodes from #1 onwards. My family is also listening. Wonderful rendition. Our best wishes for your Ernest effort. Please continue your good mission. Thanks and regards
பிறகு பிள்ளைகளைப் பார்த்துச் சொன்னார். “பாருங்கப்பா! இருக்கிறது எல்லாத்தையும் உங்களுக்குக் கொடுத்தாச்சு அம்மா போட்டிருக்கிற கம்மல். நான் போட்டிருக்கிற வெள்ளி அரணாக்கயிறு மட்டும்தான் மிச்சம். இனி எங்களுக்கென்ன? மூணு வேளைக்கஞ்சி. கட்டிக்கிடத்துணி. தலைக்கு எண்ணெய்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் நிம்மாண்டு நாயக்கர். நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் ஒவ்வொரு மாதமும் ஒரு மகன் வீட்டில் இருப்பது என்று முடிவானது. முதல் தடவை எந்தப் பிரச்சனையும் இல்லை. நாலு வீட்டிலும் நல்ல கவனிப்பு. நாளாக நாளாக நிலைமை மோசமானது. மூன்று வேளைச் சாப்பாடு இரண்டு வேளை ஆனது. இரண்டு வேளைக் காப்பி ஒரு வேளை ஆனது. பேரக்காள் பிரியமாய்ப் போடும் வெற்றிலையும் நிறுத்தப்பட்டது. அடுத்த அடுத்த மாதங்களில் தலைக்கு எண்ணெயும் போச்சு. உடு மாத்துத் துணி குறைஞ்சாச்சு. வயசாளிகள் இருவரும் மெலிந்து போனார்கள். - உலக முதியோர் தினம் இன்று
கதை சொல்லும் இளைஞருக்கு ஆயிரம் பாராட்டுதல்கள்!
நன்றி தோழர்!!!
சின்ன வயசுல ராத்திரி நேரத்துல வாசல்ல எல்லாரும் பாய் போட்டு மல்லாக்க படுத்துட்டு வானத்தை பாத்து நட்சத்திரத்தையெல்லாம் எண்ணுவோம். அப்போ எங்க பாட்டி ரொம்பவே அழகா கதை சொல்லிட்டு இருப்பாங்க.
ஒருபக்கம் கதை இன்னொரு பக்கம் இருட்டு நிலா,நட்சத்திரம்....,
வாழ்க்கை ல எவ்ளோ விஷயத்தை தொலச்சிட்டோம்ல.
அந்த சின்ன வயசு ஞாபகம் நீங்க கதை சொல்லும் போது வந்து நெஞ்சை பிசையுது.
உங்க குரல் நீங்க சொன்ன விதம் எல்லாமே அருமை 💯💯💯
அது எவ்வளவு அற்புதமான உணர்வு இல்ல தோழர்.. ஏக்கம் மேலிடுகிறது.
நன்றி தோழர்..
அருமை.
தினமும் நீங்கள் சொல்லும் கதைகளை கேட்டுவருகிழேன்.தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக சொல்லி சிறப்பான பணியை செய்துவருகிறீர்கள்.மனமார பாராட்டுகிறேன்.
கதைக்கு கால் இல்லை.ஆனால் அதற்கு இதயம் உண்டு என்று எழுத்தாளர் எஸ்.ரா.கூறுவார்.
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி தோழர். "என் உடலில் பாதி கதைகளால் ஆக்கப்பட்டது" அப்படின்னு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லி இருக்கிறார். பல கதைகளையும், பல எழுத்தாளர்களையும் எனக்காக அறிமுகப்படுத்தியது அவர்தான் தோழர்.
வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதரி
Lock down காலம் நேரம் போகாமல் கதை கேட்டேன் கதை மிகவும் அருமையாக இருந்தது கதையில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், வாழ்த்துக்கும் நன்றி
பாராட்டுகள் கதையைச் சொன்னவர்க்கு. கி ரா ஐயா மாதிரி இனி யார் எழுத முடியும்! இது போல இன்னும் எத்தனை முதியோர்கள் கை விடப் படுகிறார்களோ:( நன்றி எயா. வந்தனங்கள்
நன்றி சகோதரி
கதையும் கதையை கூறிய விதமும் அருமை. கண்களில் கண்ணீர் கசிந்தது
மிக்க நன்றி.
இந்த கதை கி ரா இடைசெவல்லில் தான் பார்த்த சம்பவத்தையே எழுதி இருப்பார் பெரியவர்கள் 80 ஏக்கர் நிலத்தில் தங்களுக்கு 4 ஏக்கர் வைத்துக் கொண்டு மற்றவற்றை பிரித்து கொடுத்திருக்கவேண்டும்
உண்மை தோழர் அவர் எழுத்துக்களும், கதாபாத்திரங்களும் அசலானவை.
நீங்கள் சொல்வது போல வைத்திருக்கலாம் இருந்தாலும் பெத்த பாசம் யாரை விட்டது.
அருமையான கதை. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் கீரா அவர்களின் கதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தம்பி 🙏🏼
நன்றி சகோதரி எனக்கும் கி ரா அவர்களின் எழுத்து மிகவும் பிடிக்கும்.
எளிமையும், தீர்க்கமான பார்வையும், கிராம வாழ்வியலையும் உள்ளடக்கியது
உங்களுடைய reply எல்லாம் super bro... கதை சொல்லும் விதம் அதை விட அருமை... நான் கேட்கும் உங்கள் முதல் கதை இது.... 👍🙏🙏💐
நன்றி தோழர் இந்த கதையாடலின் குடும்பத்தில் உங்களை புதிய உறுப்பினராய் வரவேற்பதில் மகிழ்வு கொள்கிறேன், உங்களுடைய தொடர் ஆதரவினையும் எதிர்பார்த்து.
Petra manam pithu pillai manam Kallu ethanai unmai.nantri
நன்றி
மிகவும் அருமையான கதை. கதை சொன்ன விதமும் மிக அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி!!!
அருமை தோழர்.
நன்றி தோழர்
நானும் கரிசல் காட்டை சார்ந்தவன், எங்கள் ஊர் சொல்லாடல்....
அன்பும் நன்றியும் தோழர்
வழக்கம் போல அருமை.. மனம் கனத்தது.. கதையைக் கூறிய விதம் அருமை
நன்றி சகோதரி!!!
ஐயா கி.ராவின் எழுத்து அப்படி அமைந்துள்ளது...
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி
வணக்கமும் நன்றிகளும் தோழர்
இந்த கதை என் பத்தாம் வகுப்பு துணைப்பாட பிரிவில் உள்ளது(2007)
என் தமிழாசிரியர் திரு பிச்சை அவர்கள் இக்கதையை நடத்தியது இன்று காதில் ஒலிக்கிறது
சிறப்பு தோழர்!
சில நேரங்களில் கதையின் சாரத்தை போன்றே கதை யாரால் நமக்கு சொல்லப்பட்டது என்பதை பொருத்தும் அக்கதை முக்கியத்துவம் பெற்று விடுகிறது. அப்படி உங்களுக்கு இந்த கதை ஒரு முக்கியமான கதையாக விளங்குகிறது.
சிறப்பு
நன்றி தோழர்
அருமையான கதை. கதையைச் சொன்ன விதமும் அருமை. கதையுடன் வாசகர்கள் பயணம் செய்யவைக்கும் ஜாலம்.
ஐயா கி.ராவின் 98-வது பிறந்த நாளில் அவரது கதை கேட்பது மகிழ்வு தருகிறது.
நன்றி சகோதரி!!!
நன்றி ...
நன்றி தோழர்!
Super 👍👍👍
Thank you
Very nice
நன்றி சகோதரி!!!
VERA LEVEL
நன்றி தோழர்
😭😭
நன்றி
I am hearing the episodes from #1 onwards. My family is also listening. Wonderful rendition. Our best wishes for your Ernest effort. Please continue your good mission. Thanks and regards
உங்களுக்கும், உங்களுடைய குடும்ப உறுப்பினர்களை என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து உங்களிடமிருந்து ஆதரவை எதிர்பார்த்து.
நன்றி
Super thambi ..... Keep on doing this..
Your story selection is awesome...
Congrats💐💐💐💐💐💐💐
நன்றி தோழர்.
Your voice & the way of story telling is excellent. My request Plz try 'ponniyin selvan'....
நன்றி சகோதரி எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்
இறுதியில் பேரக்காள் கூறும் வார்த்தைகள்- "எம்பிள்ளைங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?"
தங்களுடைய கையறு நிலையிலும் பெற்றவர்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நன்றி தோழர்!
கரிசல் நாடு என்றால் எந்த மாவட்டங்களை குறிக்கும்.. கொங்கு நாட்டையா!?
தென் மாவட்டங்கள்
நன்றி சகோதரி
@@KM-vy9iy தென்மாவட்டங்கள் அனைத்தும் அல்ல கோவில்பட்டியை சுற்றிய பகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகள் மட்டுமே
பிறகு பிள்ளைகளைப் பார்த்துச் சொன்னார். “பாருங்கப்பா! இருக்கிறது எல்லாத்தையும் உங்களுக்குக் கொடுத்தாச்சு அம்மா போட்டிருக்கிற கம்மல். நான் போட்டிருக்கிற வெள்ளி
அரணாக்கயிறு மட்டும்தான் மிச்சம். இனி எங்களுக்கென்ன? மூணு வேளைக்கஞ்சி. கட்டிக்கிடத்துணி. தலைக்கு எண்ணெய்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் நிம்மாண்டு நாயக்கர்.
நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் ஒவ்வொரு மாதமும் ஒரு மகன் வீட்டில் இருப்பது என்று முடிவானது.
முதல் தடவை எந்தப் பிரச்சனையும் இல்லை. நாலு வீட்டிலும் நல்ல கவனிப்பு. நாளாக நாளாக நிலைமை மோசமானது.
மூன்று வேளைச் சாப்பாடு இரண்டு வேளை ஆனது. இரண்டு வேளைக் காப்பி ஒரு வேளை ஆனது. பேரக்காள் பிரியமாய்ப் போடும் வெற்றிலையும் நிறுத்தப்பட்டது. அடுத்த அடுத்த மாதங்களில் தலைக்கு எண்ணெயும் போச்சு. உடு மாத்துத் துணி குறைஞ்சாச்சு.
வயசாளிகள் இருவரும் மெலிந்து போனார்கள்.
- உலக முதியோர் தினம் இன்று
கதையின் சாரத்தை விளக்குகிற முக்கியமான வரிகளை பதிவிட்டமைக்கு நன்றி தோழரே!
Pl pronounce zha karam, llagaram correctly
தொடர்ந்து சரி செய்ய முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.
All the best, viraivil vandhuvidum, vaazhthukkal
@@-storyteller9990 neengal sariyaga ucharithalum pirar kutrathai sutti kaatumbodhu adhai yerkum manadhu..migavum peridhu..ungalai parthu niraya therindhu kolgiren anna...