சாகுற நிலைமைக்கு கூட முருகன் கொண்டு போவாரு | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    சாகுற நிலைமைக்கு கூட முருகன் கொண்டு போவாரு | J.S.K. கோபி சினிமா தயாரிப்பாளர் #vadapalanimurugantemple
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

Комментарии • 2 тыс.

  • @valasaivarun111
    @valasaivarun111 Год назад +1458

    முருக பக்தர்கள் முருகனை காணும்போது எல்லாம் தானாகவே கண்ணீர் வரும் (வருத்ததால் அல்ல, அது வேறு வகை உணர்வு) முருக பக்தர்களுக்கே புரியும்

  • @vijik3235
    @vijik3235 Год назад +589

    எங்கள் மகனுக்கு வயது 26. திருமணம் முடிந்து ஒரு வருடம் தான் ஆகிறது. ஆபீஸ் சென்றவனுக்கு வழியில் ஹார்ட் அட்டாக். யாரோ நான்கு பேர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினார்கள்.
    வயலூர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தேன். முருகா என் குழந்தைக்கு ஏன் இந்த நிலைமை என்று கண்ணீருடன் கதறினேன்.
    கோயிலை விட்டு வெளியே வந்ததும் முருகனடியார் போன்ற தோற்றத்துடன் ஒரு இளைஞர் என்னை நோக்கி வந்தார். நான் விலகி நடந்தேன். ஆனால் என்னை மறித்து நிறுத்தி நான் உள்ளே முருகனிடம் வேண்டியதை அவரே கூறினார் . நீ காசு பணம் வேண்டும். பொன்னும் பொருளும் வேண்டும் என்று வேண்டவில்லை.
    உன் பிள்ளையின் ஆரோக்கியம் வேண்டி வந்தாய். தைரியமாய் இரு. உன் மகன் பூரண குணமடைவான் என்று கூறினார். சொல்ல வார்த்தைகளே இல்லை.
    அந்த கலியுகத் தெய்வம் கண் முன்னே காட்சியளித்தாகவே நம்புகிறேன்.
    முருகா சரணம்.

  • @sivaranjanirajadurai7114
    @sivaranjanirajadurai7114 Год назад +77

    அவர் சொல்வது உண்மை தான் நான் முருகன் கோவிலுக்கு போகுவதற்கு முன்பு gas அடுப்பில் வெண்ணீர் சிறிதளவு போட்டு விட்டு மறந்து கோவிலுக்கு சென்று விட்டேன் நான் வீட்டிற்கு வருவதற்கு 2 மணி நேரம் ஆகி விட்டது ஆனால் நான் ஊற்றிய தண்ணீர் சிறிதும் குறையாமல் கொதித்து கொண்டிருந்தது❤❤❤❤ ஆச்சரியமாக இருந்தது என் கண்ணில் தாரையாக கண்ணீர் வந்தது ❤❤அதிலிருந்து முருகனை வழிபட தொடங்கினேன்❤❤❤முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @DivyaMadheshwari
    @DivyaMadheshwari 3 месяца назад +15

    நான் முருகனுக்கு 48 நாள்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் இன்னோயட 32 நாள்கள் ஆகுது நான் நான் தீர வேண்டும் என்று நினைக்கும் பிரச்சனை இப்பொழுது இன்னும் என்னை ரொம்ப அலுக வைக்குது... என்னடா எவ்ளோ கஷ்ட பட்டு விரதம் இருகோம் ஆனா இன்னும் தானே கஸ்டத்தே குடுகிரார் இனி இந்த விரதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து என் தோழியிடம் சொல்லி அழுதேன் அவள் தான் சொன்னால் முருகன் உண்ண சோதிக்கிறாரு என்னோட அனுபவதுல சொல்றேன் நீ 48 விரத்தத்தே தொடர்து பண்ணு கண்டிப்பா நல்லது நடக்கும் சொன்னா நம்பிக்கையோடு தொடர்கிறேன் 🥺 ஓம் சரவணனபவ ஓம் 🙏

  • @27baskar27
    @27baskar27 10 месяцев назад +40

    ஏதேனும் ஒரு வடிவில் முருகன் துணை இருப்பதை உணர்த்துவார் என்பது உண்மைதான்

  • @மாலினிவான்மதிதமிழ்உலகம்

    என் கணவருக்கு மன நிலையில் ஒரு சிறிய பாதிப்பு வந்தபோது என் அம்மா வீட்டிற்கு தேவகோட்டைக்கு சென்றேன். முருகனை நினைத்து அழுது புழம்பி அப்பா நீயன்றி எனக்கு யாரும் இல்லை என்றேன். விடியல் காலை 3 மணிக்கு வீட்டின் கதவை பால் காரர் ஒருவர் தட்டினார் அவரது வண்டியை எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டு திருச்செந்தூர்க்கு பாதயாத்திரை சென்றாராம் இந்தா அம்மா திருநீறு என்று பன்னீர் இலை திருநீற்றை என் கையில் கொடுத்தார் அழுது கலங்கி விட்டேன் அப்போது மயில் விடாமல் அகவியது நான் சிலிர்த்து போனேன் 🙏🙏🙏என் அப்பனின் கருணையை நினைத்து. இப்போது என் கணவர் ஓரளவு குணமாகி உள்ளார் 🙏🙏🙏

    • @abarnaaabi4789
      @abarnaaabi4789 Год назад

      முருகன் துணை நிற்பார் ❤

    • @karthika24619
      @karthika24619 Год назад

      Akka nenga devakottai ah.. nanum devakottai than... seekiram unga kanavar mulumaiyaga kunamakiruvar🙏🙏🙏🙏

    • @SreeAnbu-q9d
      @SreeAnbu-q9d 2 месяца назад

      திருச்செந்தூர் முருகன் துணை 🦚🐓🙏

  • @traji1990
    @traji1990 Год назад +39

    எனக்கும் இதே அனுபவம் உள்ளது. இந்த வருடம் பொங்கல் விடுமுறையில் பாத யாத்திரையாக பழனிக்கு என் கணவருடன் சென்றேன்.முதல் பாத யாத்திரை பயணம். வழியில் கால் வலி. என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடிய வில்லை. அப்பொழுது ஒரு பாத யாத்திரை சாமி எங்கோ இருந்து வந்து கால் வலி தைலம் தந்தார்.முருகனே வந்து உதவி செய்தது போல் இருந்தது. எங்கு இருந்து வந்தார் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. எங்கள் முன் சென்றவர் மாயமாகி விட்டார். அந்த தைலம் கொடுதற்கு பணம் வாங்கவில்லை. மீதி தைலம் கொடுக்க தேடினோம் கிடைக்கவில்லை. எங்கு இருந்தோ வந்து உதவி சென்றார். அவர் என் அப்பன் முருகன் தான். பழனி அடைவது பெரும் சவாலாக இருந்தது எனக்கு. என் கணவர் பஸ் ல போகலாம்னு கூட சொன்னார். நான் என் முருகன் என்னை அழைத்து செல்வார் என்று கூறி மன தைரியமாக நடக்க என் அப்பன் உதவினர். நான் எப்படி நடந்தேன் எப்படி மலை ஏறினேன் என்பது இப்ப நினைத்தாலும் ஆட்சரியமாக உள்ளது. அடுத்த பயணத்தை எதிர் நோக்கி உள்ளேன். நன்றி

  • @thambirattikarthick3068
    @thambirattikarthick3068 Год назад +538

    உண்மை....நா கவலை பட்டு அழுதா போதும் அவர் சேவலாகவோ மயிலகவோ முருகன் பாடல் ஏதோ ஒன்று முலமா எனக்கு காட்சி குடுதுட்ட டு தான் இருக்காரு....ஓம் சரவணபவ....நம்பியவரைக் கை விட மாட்டார் என் முருகர்🌺🙏

    • @AmuluRuthusanvika
      @AmuluRuthusanvika Год назад +3

      Unmai

    • @sangeethas282
      @sangeethas282 Год назад +4

      Unmai 🙏

    • @Manivel-k6s
      @Manivel-k6s Год назад +10

      உண்மை நானும் எனக்கு ஏதாவது துன்பம் ஏற்படும் நாட்களில் செந்தூர் மற்றும் செந்தில் ஆண்டவர் என்ற வாசகங்களை எப்படியாவது என் கண்களுக்கு தெரிந்து விடும் இது பல வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் நான் தினசரி வழிபாடும் திருச்செந்தூர் முருகனை நினைத்து என்னை அறியாமல் கண்ணீர் வந்து விடும். அந்த நேரத்தில் நான் நினைத்த காரியங்கள் எனக்கு சாதகமாகவே நடந்து உள்ளது.

    • @sakunthalap7867
      @sakunthalap7867 Год назад +3

      ஓம் சரவண பவ என் வாழ்க்கையில் நீதானே ஜயா துணை முருகா அப்பனே

    • @pazhaneraajaag9404
      @pazhaneraajaag9404 Год назад +1

      True

  • @kbytes9600
    @kbytes9600 Год назад +55

    அவன் கொடுக்கவே இல்லை என்றாலும் பரவாயில்லை என் உடல் உயிர் பொருள் எல்லாம் என் முருகனே❤

    • @SreeAnbu-q9d
      @SreeAnbu-q9d 2 месяца назад

      திருச்செந்தூர் முருகன் துணை 🦚🐓🙏

  • @dineshkumar-rq2em
    @dineshkumar-rq2em Год назад +63

    முருகா என்று மனதில் நினைத்த நொடியில் ஏதேனும் ஒரு வகையில் என் கண் முன்னே வந்து விடுவார் என அப்பன் முருகன் .......🙏🏽😢

    • @sridevi-wm4uo
      @sridevi-wm4uo Год назад

      ẞßsss

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @Polinji731
    @Polinji731 Год назад +284

    💯💯💯 உண்மை அண்ணா.... இப்ப கூட நமக்கு வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றுகிறது.. ஆனலும் முருகன் வழி காட்டுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்... நான் அதை அனுபவித்து உணர்ந்து இருக்கிறேன்.... ஓம் முருகா

    • @devikas2780
      @devikas2780 Год назад +1

      Nampikaioda erukunga kandipa namma nichatha tha murugan nadathitharuvaru nanum rommpa kasatapatta saptukea rommpa kastam corona timela eppa ea murugan eanku nalla Valli Kati erukaru om muruga 🙏🙏🙏

    • @nithyamani8755
      @nithyamani8755 Год назад +1

      100% unmai

    • @glavanya9552
      @glavanya9552 Год назад

      Enaku appaditha iruku, muruga

    • @AnandhiSaravanan-uw4xf
      @AnandhiSaravanan-uw4xf Год назад +1

      Ethu unmai than bro

    • @muthumurugank6332
      @muthumurugank6332 Год назад +1

      நம்பியே அழைக்கவும் வருவான் வடிவேலன்

  • @rohithc9792
    @rohithc9792 Год назад +136

    கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் முருகன் ஓம் சரவண பவ

    • @doraipandiyan6145
      @doraipandiyan6145 Год назад

      🥀👍yes

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @vkstudio5065
    @vkstudio5065 Год назад +80

    அய்யா தாங்கள் சொல்வது 1000% உண்மை..என் அப்பன் முருகன் என்னுடைய வாழ்க்கையில் நிறைய அற்புதங்களை நடத்தியிருக்கிறார்..நான் வாழ்க்கையில் இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் திருசெந்தூர் சென்றிருந்தேன். அப்பாவை தரிசித்து விட்டு..கோவிலில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதேன்.அப்பா நான் இதற்கு மேல் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை..இனி நீங்கள் தான் எனக்கு எல்லாமே என்று சரணாகதி அடைந்து விட்டேன்..நான் வீட்டிற்கு வருவதற்குள் நிறைய அற்புதங்களை நிகழ்த்தி விட்டார்.இன்றும் எனக்கு நிறைய சோதனைகளை கொடுத்து முடிவில் நிறைய அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.. முருகன் தன் பக்தர்களை சோதிப்பார் அது அவர்கள் கர்மாவை கழிப்பதற்கு..ஆனால் சோதனையின் முடிவில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத பல அற்புதங்களை நம் வாழ்வில் நிகழ்த்துவார்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருசெந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா 🙏பழனி பால தண்டாயுதபாணிக்கு அரோகரா🙏 திருத்தணி சுப்ரமணியர் உனக்கு அரோகரா🙏ஓம் சரவண பவ 🙏

    • @JeniVj
      @JeniVj Год назад

      🙏🙏🙏🙏

  • @LogaNathan-i1s
    @LogaNathan-i1s 2 месяца назад +6

    34 வயதாகிவிட்டது, முருகனைக் கும்பிட்டேன் அவரும் எனக்கு படாத பாடுகளையும் கொடுத்தார், அதையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன், இனிமேலும் எனக்கு என்ன கொடுத்து விடப் போறார் என்று பார்க்கிறேன், வாழ்க்கைத் துணை இல்லை, அப்பா அம்மா இருந்தும் பலன் இல்லை, சொந்த வீடு இருந்தும் அதை அனுபவிக்க நான் இல்லை, வாடகை வீட்டில் பேச்சுலர் ஆக இருக்க, தனிமையோடு போராடிக் கொண்டு இருக்கிரேன்..... இருந்தாலும் முருகனை மட்டுமே எனக்கு பிடிக்கும்.....

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi Год назад +14

    உண்மைதான் என் வாழ்க்கையில் நானும் பொதுவாக எல்லா கடவுளையும் வழிபட்டுள்ளேன் . ஆனால் என்னால் முருகரை மட்டுமே மனதால் உணரமுடிந்தது .என் வாழ்க்கையிலும் நிறைய அற்புதங்களை செய்தார் . ஓம் சரவணபவ.

  • @dr.gowripadmanathan9426
    @dr.gowripadmanathan9426 Год назад +108

    உண்மை முருகன் நம்முடன் பேசும் தெய்வம் அவர் நான் மனம் கஷ்ட படும் நேரத்திலும் உடையும் பொழுதும் எதோ ஒரு ரூபத்தில் காட்சி கொடுப்பார் அது அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் ஓம் முருகா உன்னையன்றி வேறு தெய்வம் இல்லை முருகா

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @vishnustr5737
    @vishnustr5737 Год назад +45

    சத்தியமாக சொல்கிறேன் 100%உண்மை நானும் உணர்ந்தேன் பழனி முருகனுக்கு அரோகர பாலதண்டாயுதபணிக்கு அரோகர🙏🙏🙏💙❤

  • @karuppan3906
    @karuppan3906 Год назад +24

    அண்ணா நான் ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறையாவது முருகா முருகா என்று என் மணம் அலை பாய்கின்றது முருகா என்று மனதார சொல்லும்போது என்னை அறியாமலேயே எண்ணற்ற மகிழ்ச்சி வருகின்றது என் வாழ்வில் என்றுமே முருகனே துணை 🙏🙏 கந்தன் காதலன் ❤

  • @samratkarthik9858
    @samratkarthik9858 Год назад +12

    எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து அருள் செய்பவன்... என்று எல்லா முருக பக்தனும் மார்தட்டி சொல்வார்கள்......

  • @deebaperiyasamy5240
    @deebaperiyasamy5240 Год назад +14

    உண்மை தான், என்ன செய்வதென்று அறியாமல் நிற்கும் போது "வேலும்,மயிலும்" மற்றும் "யாமிருக்க பயமேன் " போன்ற அற்புதம் காண்பித்து என்னை வழி நடத்துபவர் எம்பெருமான் முருகன் 🙏🙏

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @YUVARAJ.R16
    @YUVARAJ.R16 Год назад +38

    💯 unmai...... முருகப்பெருமான் நினைத்தாலே அவர் உருவமோ அல்லது மயிலும்,வேலும் கண்டிப்பாக கண்முன் காட்ச்சிதரும்...❤🦚முருகன்❤போல் மற்றொரு தெய்வம் இல்லையே❤ இவ்வுலகில்

  • @sujitharaja4029
    @sujitharaja4029 Год назад +61

    அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் வீட்டை விட்டு வெளியே சென்றாலே திருசெந்தூர் முருகன் துணை என்ற வாசகம் காண்பேன்😭 எங்கும் எதிலும் முருகனை கண்டுள்ளேன்...என் அப்பா என்னோடு எல்லா நேரங்களிலும் இருப்பார்... ஓம் சரவண பவ

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

    • @ManimekalaiMani-j7n
      @ManimekalaiMani-j7n 8 месяцев назад

      Neenga sonnathupol anna annthanimitam unarthukonto irunthen anna

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Год назад +19

    அண்ணா முருகன்மேல் ஒரு வெறித்தனம்னா கொஞ்சம் நஞ்சமல்ல அளவுக்கு அதிகமான பக்தியும் பற்றுதலும் எனக்கு உண்டு உண்மையில் நீங்கள் சொன்னதுபோல் சாவும் தருவாய் வரை சென்றுவிட்டேன் என்ன உயிர் போகாத நிலை மட்டும் தான் வாழவுமுடியாமல் சாகவுமுடியாமல் இருக்கேன் சஷ்டி விரதம் கடுமையாக 8வருடங்களாக இருந்தும் எனக்கு எவ்வளவு சோதனைகள் அவமானங்கள் இருந்தாலும் முருகன் கைவிடமாட்டார் என்று உயிருடன் இருக்கிறேன் அண்ணா.

    • @krishnasamy4828
      @krishnasamy4828 Год назад +2

      கவலை வேண்டாம் நண்பரே நானும் 25 வருடமாக சஷ்டிக்கு போய்க்கொண்டிருக்கிறேன் 17 வருடமாக தைப்பூசத்துக்கு மாலை அனைத்து பாதயாத்திரையாக சென்று உள்ளேன் இன்னமும் கஷ்டமான சூழ்நிலை தான் அனுபவித்துக் கொள்கிறேன் உங்கள் வாழ்க்கை போல தான் எனக்கும் விடாமுயற்சியால் முருகனைப் பற்றி நமது கர்மாவை கழித்து நமது கரை சேர்ப்ப முருகா போற்றி திருச்செந்தூர் வேலவா போற்றி

    • @kavithakavitha3960
      @kavithakavitha3960 5 месяцев назад

      அசைவம் சாப்பிட்டிவதே நிப்பாட்டுங்கள் தானாகவே சரி ஆகிடும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @vigneshwaranms3283
    @vigneshwaranms3283 10 месяцев назад +7

    ஓம் சரவணபவ
    அவர் கூறியது போல் என் வாழ்க்கையிலும் இது போல் நடந்திருக்கிறது. எனக்கு துன்பம் வரும் வேளையில் நான் என் அப்பன் முருகனை நினைத்து எண்ணிய போதெல்லாம் அவர் கூறியது போல் மயிலாகவும், சேவலாகவும், வெலாகவும், சில வாசகமாகவும் என் கண் முன் தோன்றி காட்சி அளித்திருக்கிறார். அவரைப் பார்த்த திருப்தியில் என்னை அறியாமல் பல முறை அவரைப் பார்த்து நான் கண்ணீர் மல்க அப்பனே முருகா முருகா என்று புலம்பி இருக்கிறேன். அவர் என்னை பல முறை கை பிடித்து என்னை தூக்கி நிறுத்தியுள்ளார்.இன்னும் என் வாழ்நாள் முழுவதும் அவர் கால் பாதம் சரணம் என்று நானும்,எனது மனைவியும்,எனது இரண்டு பிள்ளைகளும் அவரே சரணம் என்று நாங்கள் இருப்போம்....
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @divyapriyadivi3875
    @divyapriyadivi3875 Год назад +17

    அன்னா நீங்கள் பேசும்போது என் கண்களில் நீர் வருகிறது முருகனை நினைக்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது என்றும் நானும் முருகன் அடிமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @ashmee1960
    @ashmee1960 Год назад +82

    ஏன் என்று தெரியவில்லை இந்த காணொளியைப் பார்த்ததும் கண்ணீர் வந்து விட்டது

  • @kumart5168
    @kumart5168 Год назад +117

    ஓம் அருணகிரி நாதரே! போற்றி!போற்றி!போற்றி!...முயன்று தோற்றவர்கள் உண்டு முருகன் பெயரை முனங்கி தோற்றவர்கள் இல்லை....ஓம் முருகா போற்றி!...

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @MuruganMurugan-bm6dq
    @MuruganMurugan-bm6dq Год назад +14

    வெற்றி வேல் முருகா நானும் ஏதாவது வண்டில முருகன் படம் அல்லது யாமிருக்க பயமேன் என்று பார்த்தவுடன் எனக்குள் சந்தோசமாக இருக்கும் என் கூடவே அவர் இருக்கருனு நான் சந்தோசமா இருப்பேன்❤❤❤முருகா❤❤❤❤❤

  • @omsairam4785
    @omsairam4785 5 месяцев назад +3

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @janarthanank7612
    @janarthanank7612 Год назад +8

    உண்மை என் அப்பனை நினைத்தாலே என் கண் முன் காட்சி அளிப்பான் அவனை மனம் உருகி நின்ரால் ஆனந்த கண்நீர் வழியும் எந்த உணர்வுதான் எனக்கு மிகப்பெரிய போதை❤❤❤❤❤ ஓம் சரவனபவ🦚⚜️

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Год назад +50

    நானும் உணற்ந்து உள்ளேன் ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏

  • @padmasridhar1482
    @padmasridhar1482 Год назад +9

    மிகவும் உண்மை. என் கணவரை இழந்து நான்பட்ட அபரிமிதமான துன்பங்களிலிருந்து என்னையும் என் மகனையும் காப்பாற்றி இன்று நல்ல நிலையில் வாழ வைப்பவர் எல்லாம் வல்ல முருகப்பெருமானே🙏 சார் சொல்லும் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. தன்னந்தனியாக சவால்களை சந்திக்கும் போதெல்லாம் முருகன் ஏதோ ஒரு வடிவில் காட்சி கொடுத்து தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவார்.
    வெற்றியடையவும் செய்வார். முருகனை வணங்குபவர்களுக்கு முகம் எப்பவும் பொலிவாக இருக்கும்.

  • @gowrimurugan849
    @gowrimurugan849 Год назад +19

    உண்மை உண்மை உண்மை தற்போது இந்த நிலையில் தான் உள்ளேன் எவ்வளவு சோதனை வந்தாலும் மனம் தளராமல் முருகையா உன்னையே நினைவில் நிறுத்தி வணங்கி கொண்டு இருப்பேன்.

  • @Ds-cb7wv
    @Ds-cb7wv Год назад +15

    ஓம் முருகா கடம்பா இடும்பா கதிர்வேலா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி❤

  • @Simplelunch12
    @Simplelunch12 Год назад +16

    உம்மை வணங்கி பின் மறந்த மனமும் உண்டு மறந்தவரையும் மகிழ்விக்க துணை நின்ற அழகா முருகா ! !
    இந்த பாடலை கேட்டால் ஏனோ முருகன் நேரில் பேசுவது போல் இருக்கும்...

  • @vinothinivinothini5182
    @vinothinivinothini5182 Год назад +25

    100%உண்மை தான் நான் என் அனுபவத்தில் சொல்கிறேன் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @Idhuengaveetusamayal
    @Idhuengaveetusamayal Год назад +177

    நான் எல்லாம் இழந்த பின்னும் ஜீவன் இருப்பது முருகா உன் அருளால் அன்றோ...
    இந்த வரிகள் எனக்கு மிகவும் பொருந்தும்
    இன்னும் எத்தனை வலி வேதனை அனுபவித்தாலும் என் முருகனை நான் விட்டு விலகமாட்டேன் 🙏🏽

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @karthikaselvan3535
    @karthikaselvan3535 Год назад +45

    உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே

  • @balaharismart1998
    @balaharismart1998 2 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚🙏

  • @sugithasaravanan6849
    @sugithasaravanan6849 Год назад +7

    முருக பக்தர்களுக்கு ஐயா சொன்ன வார்த்தைகள் அனைத்து ம் நடந்திருக்கும். நான் அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன். ஓம் சரவணபவ.

  • @WisdomChants369
    @WisdomChants369 Год назад +45

    முருகன் ஓர் அதிசய அழகன்.... பேரருளாளன்...எனக்கு நிறைய அதிசயம் நடந்துள்ளது.

  • @sivagamiharidoss2982
    @sivagamiharidoss2982 Год назад +121

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை.ஓம் சரவணபவ

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

    • @indhraindhra7133
      @indhraindhra7133 3 месяца назад

      Hi frd ungluku gopi annavoda mobile Number odane venu konjam enuku anupuringla pls
      frd

    • @indhraindhra7133
      @indhraindhra7133 3 месяца назад

      Hi frd ungluku gopi annavoda mobile Number odane venu konjam enuku anupuringla pls
      frd

  • @saivimal3461
    @saivimal3461 Год назад +20

    அவர் சொன்னது அனைத்தும் உண்மை அவர்தான் உண்மையான முருகன் பக்தன் அவர் சொன்னது அனைத்தும் நடனக்கும் நடந்து கொண்டிருக்கிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா எங்கள் குலதெய்வம் திருப்போரூர் கந்தசாமி ஆண்டவருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏💐🙏🙏

  • @prakashprk878
    @prakashprk878 Год назад +9

    உங்கள் பேட்டியை காணும்போது கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது நானும் முருகனிடம் கோபித்துக் கொண்டு அவரை வணங்காமல் இருந்தேன் உங்கள் பேட்டியை பார்த்த பிறகு தினம் தினம் அவரை வணங்குகிறேன் ஆனால் ஒரு விஷயம் நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை எம் முருகனை என் ஆண்டவனை உங்கள் ரூபத்தில் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

  • @KalaiVanan-rt3zp
    @KalaiVanan-rt3zp Год назад +5

    அம்மாம் ஐயா இது என் வாழ்வில் இன்று நடந்தது என்றும் என் அப்பன் முருகன் 🙏🙏🙏🙏🙏

  • @karpagavallik9725
    @karpagavallik9725 Год назад +6

    இந்த வருடம் தைபூசம் பாதயாத்திரை செல்லும் போது கால்ல கொப்பளம் நடக்கவே முடியல அப்ப ஒருஇடத்தல உக்காதிருந்தேன் எப்படி பழனி போய் சேர்வேன் என்று மனதில் நினைத்து கொண்டு திரும்பி பார்த்தா நான்இருக்க பயம்ஏன் அப்படினு முருகன் வேல்வடிவில் நின்று இருந்தார் அப்படியே உற்சாகம் கண்களில் ஆனந்த கண்ணீர் பழனிக்கு முருகனே அழச்சிட்டு போய்ட்டார் அந்த உணர்வுகளை அனுபத்தால் மட்டும்தான் புரியம் வெற்றி வேல் வீரவேல் அரோகரா🙏🙏🙏🦚🐓🦚

  • @kishore1394
    @kishore1394 Год назад +6

    அண்ணா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 🙏உங்கள் பதிவை பார்த்த பின் என் மனதில் நம்பிக்கை வந்துவிட்டது நிச்சயம் என் ஐயன் முருகன் துணை இருப்பார் நீங்கள் நீடுடி வாழ வேண்டும்
    மிக்க நன்றி அண்ணா

  • @prakashsv7615
    @prakashsv7615 Год назад +14

    முற்றிலும் உண்மை..
    என்னை இயக்கும் என் உயிர்⚜️ முருகர் மட்டுமே... எங்கே நினைப்பினும் அங்கே என் எதிர் வந்து நிற்பனே.
    என்பதை நான் பல இடங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. எனக்கும் யாரோ ஒருவர் முலம் காட்சி தருகிறார்..
    கந்தா சரணம்🙏சண்முகா வேலா சரணம்🙏

  • @anusms8598
    @anusms8598 Год назад +21

    ஐயா சொல்லியது சத்தியம் . நானும் உணர்ந்துள்ளேன். மனதில் அதிக வேதனை, மனக்கவலை, குழப்பம் ஏற்படும் போது எல்லாம் வாகனங்களின் பின் முருகர் வந்து போவார்🙏🦚 ஓம் சரவணபவ ஓம் 🙏

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @suruuppili1460
    @suruuppili1460 11 месяцев назад

    Yesterday my banking application hanged I was about to sent one urgent reply which was very very important. I closed few secs started to cry. Closed my eyes Lord muruga pictures came to my mind. I opened my eyes. Banking application started to work. I replied to that urgent email on time. Murugan saved me. Thank you so much Muruga.

  • @BalajiNaveenasripayanimurugant
    @BalajiNaveenasripayanimurugant Год назад +4

    என்னுடைய வாழ்க்கையில் இந்த சம்பவம் நடந்திருக்கு தாங்க முடியாத கஷ்டங்கள் கொடுப்போம் ஆனால் கைவிட மாட்டோம் இது சத்தியம் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் உன் கூடவே தான் இருப்பான் ஏதோ ஒரு உருவத்தில் இருப்பான் வேல்முருகன் பழனி முருகன் துணை

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 Год назад +34

    ஆறுபடை ஆண்டவரே போற்றி போற்றி
    அழகின் முழு உருவமே என் அப்பனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarasdestiny3722
    @sarasdestiny3722 Год назад +71

    What he said was really true. I suffered alot for not having baby after 3 years of my marriage life. I have started praying Murugan at 2021. Now 2023.. it's my 7th month of my pregnancy. I felt his mercy through my each and every second of life.. life la kulanthai illatha kastam mathri vera entha kastam um ila. 2022 kandha shasti viratham 7 days irunthen. Romba bakthi oda aluthu kanneer vitten. Ipo baby carrying. Enalae namba mudiala. Kandhan karunai.. Avan vel nammai epo um kaapaatrum. Onne onnu .. Muruga nu ullam uruga kupidanum. Antha sir sona Elam na feel paniruken. Uyir iruka varaikum Murugan pugal paadanum.. avar pathi elarkitaum solanum. Elaarum murugan arul peranum! Kandha potri ! Kadamba potri !! Vela potri !!!..

    • @kalaiselvi-rr1im
      @kalaiselvi-rr1im Год назад +1

      I prayed for my son he has to undergo operation in 6 years na viradham irundhu muruga nalla agidanum vendunen ipo veraikum endha prachanaiyum ila.

  • @SelvaRaj-c1o
    @SelvaRaj-c1o 6 месяцев назад +2

    கண் டிப்பாக உண் மைதான் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஒரு முருகர் பக்தர்களால் தான் உணர முடியும் நீங்க சொன்னது உண்மைதான் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா மனசுக்கு சந்தோஷமா இருக்கு சார்

  • @getasiv9540
    @getasiv9540 Год назад

    it's veŕy very true!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ravikumart3569
    @ravikumart3569 Год назад +4

    உண்மை முருகன் மனசார நனைச்சா போத்து கண்டீபா நம்பல தேடீ வருவாரு நா நெறைய வாட்டீ என்னோட முருகன எங்குடவே இருக்குர மாதிரி உணர்ந்து இருக்க இப்பயும் என்னோட தா இருக்காரு எப்பயுமே எங்குடதா இருப்பாரு என்னோட முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 Год назад +50

    சத்தியமாக முருகன் பேசும் தெய்வம் என் மகனுக்கு சரியான பேசும் திறன் இல்லாமல் இருந்தான் உறவினர்கள் கின்டல் செய்தனர் என்னால் தாங்க முடியாமல் திருச்செந்தூர் முருகனிடம் சென்று அழுதேன் அடுத்த ஒரு மாதத்தில் என் மகன் பேசினான் ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻 வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா ❤ 8:04

    • @manjupriya1128
      @manjupriya1128 Год назад +2

      En paiyanukkum sariyaaga pechu illai .nereya health issues..intha chevvai kizhamai Yoda 6 vaara venduthal mudinji irukku...murugar arul venum.. avan nalla pesanum

    • @karaikudimanpanairecipe8690
      @karaikudimanpanairecipe8690 Год назад +2

      @@manjupriya1128 நிச்சயமாக உங்கள் மகன் பேசுவார் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை மகனுக்கு கொடுத்து வாருங்கள் ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்

  • @ramyam9046
    @ramyam9046 Год назад +7

    ஆம்....நான் முருகனின் தீவிர பக்தை...எனக்கு..உயிர் வாழவே விருப்பம் இல்லை அந்த அளவுக்கு அதிகமாக சோதனைகளை கொடுத்து கொண்டிருக்கிறார்....ஆனால் பல நேரங்களில்...என்னை கைவிடாமல் காப்பாற்றி இருக்கிறார்...நானும் முருகன் மீது நிறைய கோபப்பட்டிருக்கிறேன்...ஆனால் last minute la miracle nadakum.....

    • @sujisuji2090
      @sujisuji2090 Год назад

      True niga solurathu ennakum nadathu eruku

  • @dhanasekarmanidhanasekarma1783
    @dhanasekarmanidhanasekarma1783 Месяц назад

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @sundarrajanavp9670
    @sundarrajanavp9670 Год назад +1

    ஓம் சரவணபவன் என் உயிரின் கலந்த உறவே முருகா வெற்றிவேல்

  • @madhusasi6754
    @madhusasi6754 Год назад +9

    என்னப்பன் பெரிய இன்னல்களில் இருந்து சமீபத்தில் என்னை காத்தருளினார்.என்னுள் உயிராய் உறைபவன் முருக பெருமான்.என்றும் துணை நிற்கும் தமிழ் கடவுள்.

  • @pkalaiselvi9830
    @pkalaiselvi9830 Год назад +16

    உண்மையே , கோவிலுக்கு உள்ளேயே வராத என் கணவர் குழந்தை வரம் கிடைத்த பிறகு தற்போது சஷ்டி விரதத்தை மறப்பதில்லை முருகா சரணம்

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Год назад +18

    ஓம் திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @KalpanaDevi-f4u
    @KalpanaDevi-f4u 4 месяца назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஆனா நீ சொல்றது எல்லாமே உண்மைதான் அண்ணா நீங்க சொல்றது உண்மை வண்டியிலையோ இல்லை யாமிருக்க பயமேன்னு இல்ல ஒரு மயிலோ வேலோ எப்பவுமே எனக்கு நான் ரொம்ப கஷ்டமா இருக்கும்போதெல்லாம் எனக்கு முருகர் ஏதோ ஒரு உருவத்தில் வந்து நான் இருக்கேன் நீ பயப்படாதன்னு நிறைய வாட்டி எனக்கு அது உணர்த்தி இருக்காரு முருகர் இருக்கிறார் ரொம்ப ரொம்ப நம்பிக்கையா சோதனை கொடுத்தாலும் நம்மளுக்கு நம்பிக்கை கொடுத்துக்கிட்டே இருப்பாரு முருக 🙏🙏🙏🙏

  • @geethadiva9760
    @geethadiva9760 Год назад

    அனைத்து அனுபவங்களும் எனக்கு நடந்து விட்டது. இன்று என் அப்பன் கந்தன் அருளால் நிம்மதி யோடு வாழ்கிறேன் .என்னோடு அனுதினமும் முருக பெருமான் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.கருணைக்கு அளவு இல்லை.என்னை ஆலும் ஈசன் மகனே கோடி கோடி கோடி....நன்றிகள் சொன்னாலும் போதாது அப்பா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @vijayar8508
    @vijayar8508 Год назад +56

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ முருகர் வாழ்த்துகிறவர்களை மட்டும் இல்ல வைதவர்களையும் வாழவைக்கும் தெய்வம் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Год назад +6

    கந்தனை நம்பினோர் கைவிடபடார் 🙏ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏ஓம் திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா 🙏ஓம் ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா 🙏ஓம் வள்ளி தெய்வானைக்கு அரோகரா 🙏மயில்வாகனனுக்கு அரோகரா 🙏சேவற்கொடியானுக்கு அரோகரா அரோகரா 🙏ஓம் சரவணபவ 🦚🐓🙏

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Год назад +10

    💐🛐 உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதையாய் மிதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் புகழே

  • @vigneshs6396
    @vigneshs6396 6 месяцев назад

    உண்மை அண்ணா எனக்கு இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போது குழந்தை கருவில் கலையும் என்ற சூழ்நிலை வரும் போது மருத்துவர் எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்று சொன்னாங்க நான் முருகனைக் மட்டுமே நம்பினேன் .....en Phone எடுத்து ஓபன் செய்ததும் யாம் இருக்க பயமேன் ஏன் என்ற வாசகம், சோதிபன் ஆனால் கைவிட மாட்டேன் என்ற வாசகம் திரும்ப திரும்ப வைத்துக்கொண்டு இருந்ததது இரண்டு நாள்களில் எனக்கும் en வயிற்றில் உள்ள குழந்தை கும் ஒன்றும் பயம் இல்லை என்று கூறியுள்ளார்கள் ஓம் முருகா ❤

  • @gunasekaran3904
    @gunasekaran3904 Год назад +5

    ஓம் முருகா போற்றி

  • @ShanthiShanthi-y6u
    @ShanthiShanthi-y6u Год назад +72

    ஓம் சரவணபவ
    நான் எங்க போனாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் முருகன் தரிசனம் தருகிறார் அந்த நேரம் எனக்கு ஒரு பரவசம் சந்தோசம் வார்த்தையால் செல்ல முடியாது. ஓம் முருகா போற்றி.

  • @sivalakshmi1869
    @sivalakshmi1869 Год назад +23

    முற்றிலும் உண்மை. முருகா.
    அடிமையாவதும் அடிபணிவதும் அடங்கி போவதும் முருகன் ஒருவனுக்கே.

  • @elanchezhiyane6169
    @elanchezhiyane6169 Год назад +6

    💯 percentage true..murugar protecting me each and every second...🙏🙏🙏❤️

  • @sathishkumare3577
    @sathishkumare3577 3 месяца назад

    🙏 அப்பனே முருகா போற்றி🙏

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Год назад +1

    சரவண பவ சரவண பவ சரவண பவ...முருகா...உன்னை நம்பி இருக்கன் அப்பா...முருகா...நல்லா உடல் ஆரோக்கியத்தோடு நீம்மதியாகவும் சந்தோஷமாகவும் என் குடும்பமும் நானும் இருக்க வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பா முருகா..🙏🔥🙏💕💕என் பிரச்சனை எல்லாம் நீங்க தான் தீர்த்து வைக்க வேண்டும்...என் கர்ம வினையின் தீர்த்து வைக்க வேண்டும்.அப்பா முருகா...சரவண பவ சரவண பவ🙏🙏🙏❤️❤️❤️💕🔥🔥🔥

  • @vedahichinnaiah8349
    @vedahichinnaiah8349 Год назад +7

    கருணை கடலே கந்தா போற்றி. எதிரியையும் மன்னித்து தன் அருகில் வைத்தவர் என் அய்யன் முருகன். கேட்டு கொடுக்கும் தெய்வம் அல்ல கேட்காமலே கொடுப்பவர்.இப்பிறவியில் செய்த புண்ணியம் அவரை வழிபட வாய்ப்பு கிடைத்தது. ஓம் முருகா போற்றி
    ஓம் கந்தா போற்றி

  • @catwalkparlour7043
    @catwalkparlour7043 Год назад +14

    முருகன் தான் தன் பக்தர்களை தேர்ந்தெடுக்கிறான்... எப்பவும் நம்ம கூடவே இருப்பதை முருக பக்தர்கள் உணர்வார்கள்... 100% உண்மை அவர் வார்த்தைகள்...

  • @palanivelm1122
    @palanivelm1122 Год назад +36

    கந்தன் உண்டு கவலையில்லை மனமே மனமே.பாடல் அடிக்கடி என் சோதனை காலத்தில் ஒலிக்கும்.உண்மை.உண்மை.உண்மை.

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @senthilaandava612
    @senthilaandava612 Год назад

    உண்மை முருகா அந்த முருகன் எனக்கு துணை இருக்கிறத நான் உணர்ந்திருக்கேன் அவர பற்றி நினைக்கும்போது காட்சி தருவார் 🥲 ஓம் சரவண பவ 🦚🙏

  • @padmavalli5480
    @padmavalli5480 9 месяцев назад

    என்னுடைய கடினமான சூழ்நிலைகளில் பல முறை கண்டுள்ளேன் என் முருகனின் திரு உருவத்தை. முருகன் அருள் முன் நிற்கும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @masamasa7064
    @masamasa7064 Год назад +14

    உண்மை தான் நானும் சாகனும்ங்கிற எண்ணத்தில் தான் இருக்கேன் ஆனா என் மனதில் ஒரு இடத்தில் என் அப்பன் முருகன் இருக்கான் னு நம்பிக்கை இருக்கு.உண்மை தான் நான் வீட்டை விட்டு வெளியே போனாலும் முருகா என் கூடவே இருக்கேன் னு காட்டு னு சொன்னாலே மயிலாக காட்சி குடுப்பார் இதை இரணடு முறை அனுபவித்தேன்

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 Год назад +50

    மயில் வடிவில் கந்தன் நினைக்கும் போது தோன்றுவார். ஓம் சரவண பவ

    • @aravindravichandran1941
      @aravindravichandran1941 10 месяцев назад +1

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !
      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?
      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?
      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!
      😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂

  • @F2P372
    @F2P372 Год назад +9

    💯% உண்மை நான் தினமும் மயில் பார்க்கிறேன்.இன்று மட்டும் ஓம் முருகா
    சரவணா
    குமரன்
    பாலன்
    இந்த வார்த்தை நிறைய பார்த்தேன்

  • @haasini3626
    @haasini3626 7 месяцев назад

    Yes 200% true murugar ninaitha udaney varuvaar etho oru vadivathil varuvaar I agree thank you

  • @prabakaran2777
    @prabakaran2777 Год назад +8

    என் வாழ்க்கை மாற்றியவர் என் அப்பன் முருகன் மட்டுமே.... ஓம் சரவணபவ ஓம் 🙏🙏

  • @dhamudhanam7076
    @dhamudhanam7076 Год назад +4

    ஓம் சரவணபவ நீங்கள் சொல்வது உண்மை அண்ணா நான் கஷ்டத்தில் இருக்கும்போது எழுத்து மூலமாக எனக்கு பதில்கொடுப்பார் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Год назад +8

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம 🙏🙏🙏🙏🙏🙏 வலி நிறைந்த வாழ்க்கையில் வழித்துணை நீயே முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @thennarasikanimozhithevan3851
    @thennarasikanimozhithevan3851 Год назад +12

    உண்மை அய்யா ஓம் முருகா போற்றி

  • @dhanushramcreations9240
    @dhanushramcreations9240 Год назад +1

    இது என்னுடைய முதல் comment,நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை.நானும் இதை உணர்ந்திருக்கிறேன்.நான் மன உளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து உட்காரும் பொழுது ஏதாவது ஒரு ரூபத்தில் பாடல் மூலமாகவே இல்லை புத்தக வரிகள் மூலமாகவே ,அல்லது இது போன்ற வீடியோ மூலமாகவே எனக்கு தோன்றிவிடுகிறார். என் அப்பா ஒரு முருக பக்தர். அவருக்கு மூன்று தினங்களுக்கு முன்பு பித்தப்பை எடுக்க வேண்டிய சூழ்நிலை. இன்று விளக்கு போடும்போது சற்று விரக்தியான மனநிலையில் தான் இருந்தேன்.அதே மனநிலையோடு இந்த வீடியோவை கண்டேன். இப்பொழுது புரிகிறது, நடக்க இருந்த பெரிய ஆபத்தில் இருந்து முருகர் தான் காப்பாற்றியள்ளார். நன்றி

  • @ravananraju1436
    @ravananraju1436 7 месяцев назад

    ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

  • @karthikaselvan3535
    @karthikaselvan3535 Год назад +6

    அஞ்சுமுகம் தோன்றின்
    ஆறு முகம் தோன்றும்
    வெஞ்சமரில் அஞ்சேலேனா வேல்
    தோன்றும் நெஞ்சில் ஒரு
    கால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
    முருகா என்று
    ஒதுவார் முன்
    ஆறு முகம் தோன்றும்

  • @sayepremraj4827
    @sayepremraj4827 Год назад +37

    உண்மை முருகனை பார்த்தால் தானாகவே கண்களின் கண்ணீர் கொட்டும்

  • @ramyameenam3221
    @ramyameenam3221 Год назад +9

    முற்றிலும் உண்மை 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyappanv254
    @mariyappanv254 Год назад

    எங்கும் நிறைந்தவர் முருகன் அகமென்றும் புறமென்றும் அவர் இல்லாத இடமே இல்லை என்று சொல்லி வணங்கி வருகின்றனர் முருகன் பக்தர்கள் முருகா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏 ட

  • @arunaaruna5696
    @arunaaruna5696 Год назад +6

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஓம் முருகா போற்றி.

  • @ksharajendran4653
    @ksharajendran4653 Год назад +7

    Hi im Kesavan from Malaysia what he said is very very true it happens in my life when i was suffering i was crying and thinking why my life is so miserable while driving in remote area all the sudden a temple sign board appear in fracture of second stated Kandaswamy Alayam and that second i cried with so much of relief knowing that Murugan is there for me..Murugane tunai

  • @thamotharan2946
    @thamotharan2946 Год назад +17

    Yes very true. I got an experience that when I went to indian restaurant to eat.then I thought in my mind later after my meal I will read Kandha Guru Kawasam.After my meal when I came to the cashier to pay money I really shock there was beautiful Murugan photo at the calendar.Its totally Goosebumps.Muruga Saranam.

  • @syamkrishnan5433
    @syamkrishnan5433 6 месяцев назад

    True ayyappan and murugan tht feeling of presence ...100 percentage

  • @vellorecity9063
    @vellorecity9063 9 месяцев назад +1

    உண்மை சார் நான் எங்க போனாலும் முருகா வழிதுனையா வானு சொல்லிட்டு தான் போவேன் அதே போல நான் செல்லும் வழியில் எனக்கு முன் முருகன் படம் அல்லது வேலும் மயிலும் அல்லது யாமிருக்க பயமேன் என்ற வாசகம் கொண்ட வண்டி செல்லும் அந்த நொடியில் முருகன் நான் இருக்கேன் என்று உணர்த்துவார்😊 எனக்கு குலதெய்வம் திருத்தணிகை மலை ஆண்டவன் முருகன் தான் 😊 ஓம் சரவண பவா தங்க தமிழ் அரசே போற்றி

  • @brindhac8050
    @brindhac8050 Год назад +7

    எனக்கு இரண்டாவது பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பிரசவத்திற்காக வீட்டை விட்டு கிளம்பும் போது சேவலும் மயிலும் கண்டேன். அப்போதே நினைத்துக்கொண்டேன் ஆண் குழந்தைதான் முருகன் அருளால் கிடைக்கப் போகிறது என்று. அதே போல் ஆண் குழந்தை பிறந்தது.