Engirundu varuguvadho|| Mahakavi Barathiyar|| Ragamalika

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
    யாவர் செய்குவ தோ?-அடி தோழி!
    குன்றி னின்றும் வருகுவதோ?-மரக்
    கொம்பி னின்றும் வருகுவதோ?-வெளி
    மன்றி னின்று வருகுவதோ?-என்தன்
    மதி மருண்டிடச் செய்குதடி-இஃது, (எங்கிருந்து)
    அலையொ லித்திடும் தெய்வ-யமுனை
    யாறி னின்றும் ஒலுப்பதுவோ?-அன்றி
    இலையொ லிகும் பொழிலிடை நின்றும்
    எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து)
    காட்டி னின்றும் வருகுவதோ?-நிலாக்
    காற்றிக் கொண்டு தருகுவதோ?-வெளி
    நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
    நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)
    கண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீ!
    காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
    பண்ணன் றாமடி பாவையர் வாடப்
    பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)
    மகாகவி பாரதி

Комментарии • 9