Sivagami pathu - சிவகாமி பத்து
HTML-код
- Опубликовано: 23 окт 2023
- பாடல் வரிகள்
சிவகாமி பத்து
உலகத்தின் மூலம் நீ வேதத்தின் முடிவும் நீ பரமனின் பாதி நீயே
ஆணை முகம் ஒரு பிள்ளை ஆறு முகம் ஒரு பிள்ளை உலகிற்கு தந்த தாயே
மாறனின் வேடிக்கை காலனின் வாடிக்கை இனி என்னை சேரா வண்ணம்
ஈரெட்டு அட்சரம் சீவனின் ரகசியம் என்னெஞ்சில் விதைக்கும் குருவே
ஆனந்த நாதனின் ஆனந்த நடனத்தை நானிங்கு காண வேண்டி
நீர் கொண்ட ஞாலத்தில் உயிர் கொண்டு என்னை நீ உண்டாக்கி விட்ட படியால்
தாயாகி என்னையே காக்கவே வந்து விடு தாமதம் உனக்கில்லையே
கூத்தாடும் ஈசனின் மனமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
ஈரெட்டு எண்கோடி யோகினிகள் ஆட பரியேறும் கண்ணி ஆட
கரியேறும் குமரியும் மாதங்கி உடனாட குரு மண்டல முமாட
வாலையும் வாராஹி சாமுண்டி திதி தேவி உடனாடி வாழ்த்து பாட
காளனும் காளி தன்னோடு உடனாட அறுமுகன் வீணை மீட்ட
கரி முகன் தாளத்தில் மாலாட நூலாட மனை மங்கையர் சேர்ந்துமாட
நாலந்த வேதமும் எண்ணிரு கலைகளும் விண்மீன்கள் வீதியாட
முனியாட கணமாட கவிபாடி நானாட இறையோடு ஆடி வருவாய்
கூத்தாடும் ஈசனின் மனமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
மிடியென்ற ஒரு வலையில் தனியாக தவித்திங்கு ஓலங்கள் பலவுமிட்டு
கடையிலும் கடையான உயிரினைக் காக்கவே நீ இங்கு ஓடி வருவாய்
நாலாறு இருபத்து கோணங்கள் கொண்டிங்கு அரசாட்சி செய்யும் மயிலே
வளையங்கள் ஒன்பதோ டென்னை சேர்த்திங்கு உன் மடி ஏந்தி கொள்வாய்
கண் கண்ட காட்சிகள் மனம் கொண்ட பிம்பங்கள் உடல் செய்த பாவமெல்லாம்
உன்னடி விடுகின்றேன் என்னை நான் தருகின்றேன் இரங்கி நீ ஏற்க வருவாய்
பாரெலாம் ஓடி நின் பாதத்தை தேடி பின் அகத்தினில் கண்டு கொண்டேன்
கூத்தாடும் ஈசனின் மனமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
நவகோடி மந்திரம் எட்டெட்டு தந்திரம் அதற்கென்று பிம்ப பேதம்
குதிரை முகன் கும்ப முனி கோப முனி துரோணர் மகன் பரசேந்தும் ராமனவனும்
கூறுகின்ற வழி வகையோ பண்ணிய பத்ததியோ மூச்சடக்கும் யோக முறையோ
ஆசாரம் நான்கிலும் பூசனை வேண்டுமோ கணியூறும் ரசம் வேண்டுமோ
அட்சரக் கோவையோ அணி மணி மாலையோ ஏது உன் உள்ளக் கிடப்போ
சக்கிர யாகமோ பாவனக் கிரமமோ சமயத்தின் யோக முறையோ
என் செய்யின் என் மனம் நின் பதம் கிடந்தந்த மோன நிலை என்றெய்துமோ
கூத்தாடும் ஈசனின் மனமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
ஆழ்கின்ற ஆழியில் பிள்ளையை மூழ்கடிக்கும் அன்னையும் பாரிலுண்டோ
அறுமுகனின் அன்னையே கரிமுகனின் ஆதியே இதுவுனக் கழகாகுமோ
மாயையும் மயக்கமும் கையிலே வைத்து நீ ஆள்கின்ற பாவையானேன்
எண்ணிலா பிறவிகள் உன்னடி நாடியே துயரங்கள் வருவதேனோ
ஆழமாய் இருகண்கள் அடியனைப் பாராமல் இருப்பதும் அழகாகுமோ
மாமதுரை ஆழ்கின்ற அன்னை நீ என்னையும் வஞ்சிப்ப தெதற்காகவோ
காசியில் ஈசனின் குறை தீர்த்த உனக்கிங்கு என்குறை பெரிதாகுமோ
கூத்தாடும் ஈசனின் மனமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
தாமஸீ ரூபிணி மது கைடப சூதினீ என் குறை தீர்த்தல் பெரிதோ
மஹிஷாசுர நாசினீ காம சஞ்சீவினி பிறவிப்பிணி தீர்த்திடம்மா
கண்களே இருளான அசூரனை எரித்திட்டாய் இரு வினை களைதலரிதோ
சண்டி சாமுண்டிநீ நரமால தாரிணீ ரக்தபீஜ ஹர ராஜேஸ்வரி
நவசக்தி வேடத்தில் நிசும்பனை சாய்த்த நீ என்னிடர் மட்டும் பெரிதாகுமோ
சும்பனை மல்யுத்தம் செய்து நீ கொன்றனை குஹனவன் பெற்றதாயே
ப்ராமரி சாம்பவி சாஹம்பரி சக்தி நீ மறை தந்த வாணிநீயே
கூத்தாடும் ஈசனின் மனமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
வந்ததற்க் கழுவனோ போவதர்க் கழுவனோ திரும்பி வந்திங்கழுவனோ
அயன் கையும் நோகவே மாலவன் மயங்கவே இங்கென்னை அனுப்பினாயோ
ஈராறு கட்டத்தில் என்னை அடக்கி நீ விண் மீன்களோடு ஆடி
நவகோளும் ஆடவே நான் சேர்ந்து பாடவே உன் உள்ளம் குளிர்வதேனோ
கண்ணசைவில் புவனத்தை படைத்து பின் அழிக்கும் நீ இது உனக்கழகாகுமோ
உன்னடி பணிந்துமே துன்பங்கள் தொடருதே என் மனம் பிழையானதோ
மந்திரம் எந்திரம் ஆன ஒரு தந்திரம் அதில் நீயும் என்னைச் சேர்க்க
கூத்தாடும் ஈசனின் மனமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
காற்றிலே அலைகின்ற பஞ்சு போல் என் மனம் லேசாக ஆக்கக் கடவாய்
இருவினை நீர்த்தென்னை ஒருவனைச் சாரவே வழி வகை புகல வருவாய்
ஆதியில் உடலேது உள்ளத்திர்க் குருவேது இது நின் செயக்கையன்றோ
தீயிலே நடமாடும் நாதனின் நாயகி சிம்மத்தில் விரைந்து வாராய்
மன்னுயிர் செழிக்கவே வின்மாரி பொழியுமே உன் மனம் குளிர்வதென்றோ
வாராஹி மாதங்கி நரமான சிம்மம் நீ வனம் கொண்ட தேவதேவீ
கங்கையாய் மண்ணிலே பாவத்தைத் தீர்க்கும் அன்னை காமாட்சி நீயே
கூத்தாடும் ஈசனின் மனமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
பர தேவ ரூபிணி ஸ்ரீபுர ராணி நீ சிறு பிள்ளை ஆசை தீராய்
இம்மையும் மறுமையும் இனி எமக்கு இல்லையே உன் கண்ணில் விழுந்த படியால்
உண்மையை வென்றவன் உள்ளத்தில் நிறைபவன் பிறையணிந் தாடும் வேளை
ஆன்மாவின் ஆழத்தில் ஆனந்த நாதத்தை நீ வந்து காட்ட வேண்டும்
நானேது நீயேது என்றான நிலையேது உன்னடி உறைந்த படியால்
வெளிச்சத்தின் அப்பாலே பரமேசன் தன்னிடம் என்னை நீ இட்டு செல்வாய்
முப்புரம் எரித்தவன் முனி வேடம் இட்டவன் உயிரினில் கரைத்து விடுவாய்
கூத்தாடும் ஈசனின் மனமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
உடலென்ற சிறையிலே என்னையும் வைத்து நீ ஆனந்தம் காண்பதேனோ
மனமென்ற வலை கொண்டு அறிவென்ற பள்ளத்தில் இறக்கி நீ களிக்கலாமோ
மாயமும் மயக்கமும் அன்னையின் செய்கையோ இது உனக் கடுக்காகுமோ
தஞ்சமே யென்ற பின் வஞ்சனை செய்திடின் வீண்பழி யுனக்கல்லவோ
எமனோலை வருமுன்னர் உன்னெழில் காணவே ஒரோலை கொடுத்திடம்மா
அன்னையும் தந்தையும் என்னுயிர் தோழியும் மண்ணிலே மகளுமாக
தென்னகம் போற்றிடும் இறைவனின் ஆதியே பரமனுன் மீதியே
கூத்தாடும் ஈசனின் மணமாடும் மங்கையே தில்லை சிவகாமி உமையே
Photo and Video Credits
Sri Sabanayagar (Nataraja) Temple Dikshithars
pickup studio chidambaram
iswaraa studios chidambaram
Elephant studio chidambaram
Images - Kalai
Production and lyrics - Arun R
Music : Kamalakannan
Singer : Sapthagiri
Editing : Divya
மிக மிக அருமை..... அற்புதம்...... மிக்க மகிழ்ச்சி..... உமையவள்... பாடல்.......
முதல் முறை கேட்க மனம் அடிமையானது.அருமை மிக மிக அருமை.🙏🙏🙏
அம்மா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
Om sakthy porri porri ❤
அருமை கம்பீரக்குரல் அழகான சொற்கள் பொருள் முதல் முறை கேட்டேன் இன்று இறைவன் தந்த வாய்ப்பு நன்றி🎉🎉
💐💐💐💐💐ஓம்சக்தி தாயே துணை 🌸🌺🌹🤍❤️🌼🤍❤️💗💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
thank you @@radhakavi6724
😊
ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சக்தி போற்றி
அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் தாயே உங்கள் அருளால் நல்லது நடக்கட்டும் நன்மை கிடைக்கட்டும் என்று வேண்டுகிறேன் தாயே .
சிவகாமி தாயாரின் பாடல்கள் இனிமையாக இருந்தது.
thank you
🕉️🌙ஓம் உண்ணாமலை அம்மையார் போற்றி 🌙🕉️❤️❤️❤️🙏🙏🙏.. ஓம் அண்ணாமலையர் போற்றி 🙏🙏🙏🙏🙏🕉️🙏🕉️🙏 எல்லா உயிர் இன்புற்று வாழ்க அப்பா நீங்கதான் காப்பாத்த வேண்டும் அப்பா
Om sivakami Amma podri podri.
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
இதுவரை கேட்டிராத பாடல்.மிகவும்இனிமையான பாடலும் வரிகளும்..
மிகவும் அருமை.
நன்றி நன்றி 🙏💐 💐💐💐💐.
Thank you
ஓம் ஸ்ரீ உண்ணாமுலைத்தாயார் சமேத அண்ணாமலையார் போற்றி 🪷🥭🐀🦬🦚🐓🦁🦅🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
அன்னையே❤சரணம்❤
சிவாய நம❤❤🎉
அற்புதம் அற்புதம் 🙏🏿🙏🏿🙏🏿
thank you
Migavum inimayana sivagami ammai padal ❤❤❤🎉🎉🎉🎉😊
Om sakthi
OmNamasivaya.
தீயவர்கள் அழியட்டும்
நல்லவர்கள் நலம் வளம் பெறட்டும்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்சமே நமக
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே சிவ சிவா சிவாய நம சிந்தனை செய் மனமே மனமே மனமே மனமே திரு ச்சிற்றம்பலம் மகாதேவா ஓம் சக்தி பராசக்தி தாயே துணை ❤🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா மலையாரே உண்ணாமுலை அம்மா🙏🙏🙏🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕
Rudhra thandavayanamah om sivayanamah 👏👏👏👏👏
En nithya Thai om shri sivagamasundari
Nandri
There is a completeness in terms of lyrics composition, singing and background score. Excellently done. Soothing to hear, excelent one. Please give us more such compositions.
Fantastic lyrics🎊🎊
Marvellous composition 🎊🎊🎆🎆
Vanthaluminthapadal
SATHYAKUMAR🎉
Ammanalagahaaadivarukiral
Siva siva
ஓம் நமசிவாய ஓம்🌏 அருட்பெருஞ்ஜோதி🔥🌏.
Ennaimikavumkavarthathu
🙏🙏🙏🙏🙏👌🌹
Ethanaiammanpadalkal
ST
🌷🌷🌹🌹🙏🙏
Om. Sivagami. Thayaa. Namaga
Attention Need - கவனம் தேவை: பாடல் நீள அளவு 11:26 = 3ம் வரி 1ம் சொல் : மெதுவாக.
Intha patu yaru eluthuna pls reply
This song was written by Arun Radhakrishnan
@@Divyam-ArunR thanku