How to attain Liberation | திருமூலர் | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil
HTML-код
- Опубликовано: 30 июл 2023
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RUclips - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
திருமந்திரம் - முதல் தந்திரம் பாடல் 113 - 122
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 1
களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. 2
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே. 3
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே. 4
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 5
மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 6
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே. 7
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. 8
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே. 9
சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராதவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே. 10
Read more at: shaivam.org/thirumurai/tenth-...
#nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal
"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை. தன்னையறியாமல் தானே கெடுகின்றான். தன்னை அறியும் அறிவை அறிந்த பின் தன்னையே அர்ச்சிக்க தானிருந்தானே" - திருமூலர். நன்றி நித்திலன் 👏💐🥰🙏
Asanji
❤❤❤
*தன்னை உணர்தலே ஞானம்...!*
*சரியை என்பது பக்தி. கிரியை என்பது தொண்டு. யோகம் என்பது வாசி...!*
"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும்
தானமும் தவமும் பெறுதல் அரிது
தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே".
-ஔவை
தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும்.
தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள்.
இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும்.
திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள்.
இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது.
தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்பது அல்லது கேட்பது.
மந்திரங்கள் ஓதுவது. பக்தர்களுடன் கூடி பஜனைகள் பாடுவது. அன்றாடம் பூஜை புனஸ்காரங்கள் செய்வது. நாம ஜெபம் செய்வது. உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது.
மொத்தத்தில் பக்தி, ஒழுக்கம், நன்னடத்தை, நற்குணம், நற்பண்பு, நல்லெண்ணம், சத்சங்கம், இவையெல்லாம் சரியையாகும். இதுவே இச்சா சக்தி. இதில் இறைவனே தாயும், தந்தையுமாவார். சாதகன் புத்திரனாவார்.
கிரியை - கடவுளுக்கு மாலைகள் தொடுப்பதில் தொடங்கி கும்பாபிஷேகம் செய்வதுவரை கிரியை நெறி எனக் கொள்ளலாம்.
அலய உழவாரப் பணிகள், அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள், அடியார்களுக்குத் தொண்டு செய்வது, எல்லா உயிர்களையும் சமமாகபாவித்து அவர்களுக்கு உதவி செய்வது, அன்னதானங்கள் செய்வது, யாகங்கள் செய்வது, தர்மம், நீதிநெறி தவறாமல் நடப்பது, பணிவு, தியாகம் இவை யாவும் கிரியைகளாகும்.
இதுவே கிரியா சக்தி. இதில் இறைவன் ஆண்டான் சாதகன் அடிமை.
யோகம் - தன்னை உணர்ந்து தன்னுள் உறையும் தலைவனையும் உணர்ந்து ஒலியால் கனலையும் அனலையும் கூட்டி ஒளியேற்றுவதே யோகம்.
குருவைத் தேடுவது, உடல் இயக்கம் உயிர் இயக்கம் பற்றி உணர்தல், தத்துவங்களை புரிந்து கொள்தல், உண்மையாக இருத்தல், தனித்து பசித்து விழித்திருத்தல், காற்றைப் பிடித்தல், ஆன்மாவை இறையோடு சேர்த்தல் இவையெல்லாம் யோகமே.
ஆசனங்கள், வாசி யோகம், ராஜயோகம், குண்டலினி யோகம், பரியங்க யோகம், ஹடயோகம், அஷ்டாங்க யோகம், எனறு யோகத்தில் பல வகைகள் இருக்கின்றன.
யோகத்திற்கு விடாமுயற்சி, வைராக்யம், கடுமையான பயிற்சி அவசியம். இதனால் மனம் வசப்படும். திறமையும் ஆற்றலும் பெருகும். பிணிகளும், வினைகளும் அகலும்.
இதுவே யோக சக்தியாகும். இதில் இறைவனும் சாதகனும் நண்பர்கள்.
ஞானம் - தன்னிலை அறிந்து, தன்னை மறந்து, சும்மா இருந்து, மெய்யறிவு பெறுவதே ஞானம் தியானம், மெய்ப்பொருள், மௌனம், அமைதி, ஆனந்தம், அற்புதங்கள் யாவும் ஞானக் கலைகளே.
தான் என்ற தற்பரத்தை உணர்ந்து எல்லாம் ஒன்றென்றுணர்ந்து தவநிலை நாட்டுவது, பற்றறுத்து துறவு பூணுவது, மனதை வசப்படுத்தி அதிலேயே அடங்குவது, சாந்தம், தயவு, கருணை, பேரருள், நிதானம் யாவும் ஞானமே.
இதுவே ஞான சக்தி. இதில் இறைவன் சற்குரு சாதகன் சீடன்.
பொதுவாக சரியை என்பது பக்தி. கிரியை என்பது தொண்டு. யோகம் என்பது வாசி.
ஞானம் என்பது தியானம். இதனையே சித்தர்கள் சரியையில் பக்தி, சரியையில் தொண்டு, சரியையில் யோகம், சரியையில் ஞானம், கிரியையில் பக்தி, கிரியையில் தொண்டு, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம், யோகத்தில் பக்தி, யோகத்தில் தொண்டு, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் பக்தி, ஞானத்தில் தொண்டு, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம், மும்மலங்கள் நீங்கப் பெறுவது, சரணாகதி என்று பதிணெட்டு நிலைகளாக உணர்ந்து பயின்று இறை அனுபூதி பெற்று அஷ்டமா சித்திகளும் அடைந்தார்கள்.
தன்னை உணர்ந்தவர்கள்தான் பரம்பொருளை உணரமுடியும். இதையே திருமூலர்...
தன்னை அறிய தனக்கோர் கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே. என்கிறார்.
*ஆக தன்னை உணர்தலே ஞானம்..!*
அருமையான விளக்கம் ஓம் நம சிவாய
திருமந்திரத்தை தொடரவும்🙏🏻
திரு மந்திரம் கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ உங்களுக்கு கோடி நன்றிகள் 🎉😊
Good
Nice
🙏
பலகோடி புன்னியம் செய்தால் மட்டுமே
அடியேன் இதுவரைப் பார்த்ததில், நான் வாழ்ம் (இக்கனத்தில் ) இந்த காலத்தில் இமாதிரியன நூல்களுக்கு விளக்கம் காணக்கிடைப்பது மனித பிறவிகளுக்கு வரம் தான்... நன்றி திரு.நித்திலன் ஐயா
திருமந்திரம் 🧐 ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் வேற லெவல் -ல இருக்கு🔥👌
திருமந்திரம் பதிவுக்கு நன்றிகள் சகோ.
தொடர்ந்து திருமந்திர விளக்கங்களை கூறுங்கள் 🙏🏼
அருமை நித்திலன்.... எல்லாம் அவன் செயல்... Requesting to continue Thirumandhiram🙏
நன்றி நிதிலன் தம்பி.திருமந்திரம் படிக்க வேண்டுமென்ற ஆவல் பூர்த்தியாகாமல் இருந்தது.உங்கள் விளக்கங்களுடன் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறேன்.பாடலையும் ஒருமுறை சொன்னால் நன்றாயிருக்குமென்று தோன்றுகிறது.மற்றவர்கள் என்ன அபிப்ராயப் படுவார்களோ தெரியவில்லை.
Yes I also wanted to hear thirumanthiram songs by nithilan bro😊
Dear Brother,
Kindly continue the Thirumandiram. Like "Laws of the Spirit World", kindly put minimum 3 Videos in a week so that we can have continuous learnings.
God Bless for your work.
Thank you God
Exactly
Yes thambi pls continue with our favourite thirumanthiram
Continue this thirumanthiram videos sir 🤍💙
Today video is awesome ❤
Please go ahead with the series sir.
Dear brother, kindly continue this series❤
Totally excited to hear Thirumanthiram from you Thambi!🙏💞
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
அருமை, நன்றி 🙏🏿
Super Anna ippatha theliva sollireenga
Beautiful! Good speech Thanks 🙏
மிகவும் அருமையான விளக்கம்🙏
nalla irukku அண்ணா .....❤
வாழ்த்துகள். நன்றி.
Superb bro... waited for this series only.. pls proceed...
Fortunate enough to hear this. Thank you Nithilan 🙏
Super explanation thank you 🙏👏👏
அருமையான விளக்கம்
Awesome நண்பா ❤
நன்றி
Arumai, nandri nithilan thambi 🙏🙏🙏
Thankyou . Please continue.
Thank you, please continue thirumanthiram nithilan thambi
Arumai arpudham mana vilakkam nandri vazhga valamudan
Thank you Nithilan. May your service continue🙏
Awesome Bro waiting fr more videos ....we are blessed to be a part of this .... I'm from Bangalore...Tq soooo much 🙏
அன்பு என்று சொல்ல நான் நீர் தேவை உமதமிழ் என்றும் நீர் வாழ்க ஓம்..
Great bro. Simply great. Continue please for our enligthment.🙏
எளிய தெளிவான விளக்கம் நன்றி
Wow, most awaited series, thank you 😊
Beautiful explanation continue please ❤
@NithilanDhandapani Sir! such a fantastic video. Please continue with this series 🙏🙏🙏
மிக மிக அருமையான விளக்கம் சகோ🎉
தொடருங்கள் நன்றி🎉
please dont stop, go as same as like this anna 🔥
தெளிவான விளக்கம் அருமையான கதை
It's very useful, please continue
அருமை .. பாராட்டு புரிதல் நல்லா இருக்கு
Super ayya.. we continue. Ayya
Beautifully explained. Thank you so much
மிக எளிமையான விளக்கம் அன்பா,
நன்றி
Amazing brother 🙌🙌❤️
Super anna romba nandri
Rombanaal wait pannina indha conceptukaaga. Bro. Thank u so much
இதே போல் தொடரவும் ஐயா. நன்றி 🙏
சிறப்பாக உள்ளது தொடர்ந்து பயணிக்கவும்
மிகவும் நன்றி 🙏🙏🙏
விளக்கம் அருமை நண்பரே
நன்றிங்க ஜயா🙏மிகசிறப்பு
Thanks very much. Very good explained. I think I got it.
உண்மையாகவே நன்றாக உள்ளது. மேடம் தொடர்ந்து வீடியோ அப்டேட். பண்ணுங்க.ஜி ❤
அருமை தொடருங்கள்
ஐயா வாழ்க வளமுடன் விளக்கம் எளிதாக இருக்கிறது நன்றி
எளிமையாக புரிகிறது .. go ahead
உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பானவை. 👏👌👍
சிறப்பு❤
Super ayya Thiruchitrambalam 🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்
நண்பா மிகவும் அருமை .....தொடருங்கள் உங்கள் திருப்பணியை ❤
Super.. Nithilan bro... 👍thq
Thirumanthiram puriyama iruntusu.. 🙏🏻
Superuu👌please continue 😊
Thirumanthira pathivukku nandrikal🙏🙏🙏 please continue with the series
Ur intro and pattai in nethi.. taking me into divine fields also knowing this is going to be higher energy levells
Thank you for your short and sharp explanation.please continue brother.
Well explained brother 🙏🏼💕
ரொம்பநன்றியா மிகமிக பாமரத்தமான தெளிவானவிளக்கம் இங்கிருந்தே ஆன்மபயணத்தின்தெளிவானவிளக்கம் நமக்குமட்டுமல்ல நம்மைசார்ந்தவருக்கும் நாமேவிளக்கிகூறி தேவையில்லா நிலைக்குள்சிக்காமல் பெரும்வீட்டுநிலைக்கு பயணத்திற்கு இப்போதே மிக மிக எளிமையாக இங்கிருப்பவர்கள்கையில்சிக்காமல் நாம்பயணபடமுடியும் என்றநம்பிக்கையான விளக்கம்பா ரொம்பநாள்தேடியவிளக்கம் இறந்தால் நாமலேநம்மைபார்த்துஅழுகாமல் பெராந்தமாக நம்உலகத்திற்குசென்றுவிடவேண்டும் அதற்குமனவிளக்கம் எனக்குகிடைத்ததுயா உன்மூலம் நன்றியா
Ipdiye explain pannunga,. Pls continue,. Excellent
Thank you Brother for your service educating us on திருமந்திரம். 🙏
Thankyou very much for starting Thirumandiram.
Very fortunate to hear Dis God blessed me with ur explanation..kindly continue Dis 🙏🏻🙏🏻
அருமை உம் பாதை..தலைவணங்குகிறேன்
நன்றி தம்பி. தொடரவும்
✨Nice information Anna😇🙏Om namaha Shivaya😇🙏
Love it. Please proceed bro
Super brother much awaited content and very essential for life
Waiting for this for a longggg time, Thanks a lot..
அருமை சகோதரரே👍
Thank God... super explanation.. your Anma getting purifier more & more, with help of you we are all also ... Entha adiyen ungalai santhika nerthal perum pogiyam adiven...
Thank you so much , very clear bro 🤝❤️🙏.
அருமை அண்ணா 🕉️🙏🏻🕉️🙏🏻🔥🕉️🙏🏻🔥🔥🔥
3:36 reminds of the Santhanam dialogue: "dei edhukku vandhurkom ne marandhuttu nejam samayal kaaranave maaritaan"
ivalavuthanga.i like this enthusiastic and motivational word
from u in every vidio ❤❤❤
Thank u thank u thank u nithilaa laws of the spirit world Pola thirumanthiramum azhaga videos podunga bro thanks a lot nithilaa 👍🙏👍
Thambi super. Ur videos r soul satisfying messages. Nandri🌟🌟🙏🙌
அருமை. சரியான விதத்தில் வழக்கம். நன்றி தம்பி.
தொடர்ந்து வரும் அனைத்தையும் கேட்டுக் வருகிறோம்.
23 வருடங்கள் சரியான living குரு மூலம் தியானம் செய்கிறோம்.
இது வரை இந்த அளவு புரிதலோடு கேட்டதில்லை.
உங்கள் விளக்கம் எனக்குள் சரியான தெளிவைத் கொடுத்து.
நீங்கள் சொல்வது அனைத்தும் எங்கள் குரு எழுதிய புத்தகங்கள் மூலம் அரிந்து ள்ளேன்.
இருந்தாலும் எனக்குள் புரிதல் இல்லை.
தற்போது 5 வருடங்களாக பயிச்சியாளர்ராக உள்ளேன்.
நன்றி
Super please continue this
Good, proceed with same method.
Om Namah Shivaya Thambi 🙏. Romba nalla eruku. Neenga thiruneer pattai ellam potu thaiveegama eruku. Neenga god s child. Nandri Thambi 🙏🙏
Very much helpful 🙏🥰
திருமந்திரம் தொடர் துவங்கியது! மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா...!
🙏🙏🙏🙏please continue thirumandhiram
மிக நன்று
This is ok, keep continue brother
Anna please neraya video potunka
Please continue this...