பூர்விக சொத்தை விற்க யார் யாரின் சம்மதம் தேவை?
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- வாரிசுகளின் கையெழுத்து இல்லாவிடில் பூர்விக சொத்தை வாங்கக் கூடாதா?
எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
காணொளி எடிட்டிங் : A.B.பிரசாத்
குரல் : விஜய் கிருஷ்ணா
பதிப்பக முகவரி :
ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு,
கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
கோடம்பாக்கம், சென்னை 600 024
தொடர்பு எண்கள் : 044 2483 4643
99406 84644
#பூர்விக சொத்து #தாத்தா சொத்து #சம்மதப் பத்திரம்
அருமையானபதிவு
தெளிவான விளக்கங்கள். அருமையான பதிவு. நன்றி.
இதில் இருந்து விடுபட்டு போன ஒரு சந்தேகத்தை கேட்கிறேன்.
ஒருவருக்கு பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை மூலம்" ஏ ஷெடுல்" படி சில சொத்துக்கள் உரிமையாகிறது...
அதன் முதல் வரியிலேயே " சுந்தரம் என்பவரும் அவரது வாரிசுகளும்" அடைந்து கொள்ள வேண்டியது என்று சொத்துக்களை குறிப்பிட்டு பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில் சுந்தரம் என்பவர் தனக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் வாரிசுகள் இருக்கும் நிலையில் தனக்கு பாகப்பிரிவினை மூலம் பார்த்தியப்பட்ட அனைத்து சொத்துக்களையும் தனது மகனுக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் செய்துவிட்டார்.
மகளிர்களுக்கு எதுவும் சொத்து கொடுக்கவில்லை.
இது சட்டப்படி செல்லத்தக்கதுதானா என்பதை தெரிவிக்கவும்
பாகப்பிரிவினையில் நிபந்தனைகளை விதிக்க இயலாது..சுந்தரம் என்பவருக்கு மட்டும் தான் சொத்தை தர இயலுமே தவிர, அவரது வாரிசுகளுக்கு தர சட்டத்தில் இடமில்லை.. இது முதல் செய்தி..
பெண்களுக்கு தராமல் ஒரே வாரிசுக்கு மட்டும் தானசெட்டில்மெண்ட் தர சட்டத்தில் இடமுண்டு..இதில் மாறுபட்ட கருத்திருப்பின் வழக்கு தான் தொடுக்க வேண்டும்..
@@RajathiPathipagam m
@@RajathiPathipagam இச் சட்டம் அநீதியானது !
பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வாய்ப்புண்டு !
அருமையான பதிவு நன்றி சார்
Sir . ஒப்புதல் பத்திரம் பற்றி சொல்லுங்க. நான்கு பேரு ல - ஒருவர் வெளி நாடு ல இருக்குற,ரெண்டு - ஆண், மீதி ஒருவர் - பெண். இதுல அப்பா பெயரால் பட்டா இருக்கு. வேற ஒருவர் கு லேண்ட் யா விறுகா முடியும் மா. வேற ஒருவர் விற்க போக ஒருவர் மட்டும் register office வருவார். மட்டும் ரெண்டு பேர் register office வரமா ஒப்புதல் பத்திரம் தர முடியுமா மற்றும் ஒருவர் வெளி நாடு ல இருக்குற அவர் எப்பிடி ஒப்புதல் பத்திரம் தர முடியும் தெளிவா சொல்லுங்க. இவங்கஎல்லாம் வாரிசு ஆனால் லேண்ட் அப்பா பெயர்ல் இருக்கு.அவர் இறந்து விட்டார்.
வணக்கம் சார் ஒரு சர்வே எண்ணின் பட்டாவில் தற்போதைய உரிமையாளரின் பெயர் மட்டுமே உள்ளது அந்த சர்வே எண்ணின் இதற்க்கு முந்தைய உரிமையாளர்கள் யார் யார் என்று வரிசையாக பார்ப்பது எப்படி சார்
Sir en thatha purviga sothai enkuda பிறந்த என் brother and sister 10 kita erukanga epo en Perla na patta mathikollalama ela panamudiadha
en land ecyil asal avanam India muththirai sattam 47A/19B 4in keai nadavadikaiyil vulladhu endru varughiradhu idharkku enna arththam ayya
ஐயா 7வது தகவல் தான் எனக்கு பிரச்சினைகள் ஐயா
Urimaiyiyal neethi mandram or ilavasa satta uthavi maiyam ku apply panna selavu aagumaa sir
ஐயா, சட்ட ஆதாரத்தை கொடுங்கள்.
Ok Boss
Sir token enbathu enna athai telivaga sollunga sir
ஒரு குடும்பத்தில் பெற்றோர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார் கள் அவர்களில் இரண்டு, ஆண்கள், ஒரு பெண், பெண்ணுக்கு திருமணம் நடந்து விட்டது. அந்த இரு ஆண்களில் பெயவர் ஒருவர் இராணுவத்தில் பணி புரிந்து வரும் கால கட்டத்தில் அவருக்கு தெரியாமலேயே ஒட்டீ மொத்த சொத்தையும் ஒருவரது பெயரிலேயே தாய், மற்றும் தந்தை ஆனவர் இளைய மகன் மீது சொத்தை, தான செட்டில்மெட்டாக எழுதி வைக்கின்றார்கள். அதன் பிறகு, ஒட்டு மொத்த சொத்தை அஸனது பெயனில் தான செட்டில் மெட்டாக எழுதி கொடுத்த சொத்தில் இருந்து 3 ஏக்கர் தன்னிச்சையாக விற்று விடுகிறான். அதன் பிறகு இராணுவத்தில் பணி புரியும் அவருக்கு இந்த விஷயங்கள் அனைத்தும் 6, 7 ஆண்டுகள் கழித்து தான் விஷயமே தெரிய வருகிறது. இராதுவத்தில் பணி புரியும் அவருக்கு இந்த விஷயத்தை அறிந்த பிறகு பெற்றோரிடம் சென்று கேள்வி கேட்கிறான், பெற்றோர்க ளோ, இல்லை அப்படி எல்லாம் எதுவும் செய்யவில்லை என்று சொல்லி விட்டார்கள். அதன் பிறகு அந்த சொத்து சம்மந்தமாக இ சேவை மையத்தில் சென்று சொத்து சம்மந்தமாக அனைத்து விவரங்களையும் சேமித்து பார்க்கும் பொழுது தான் தெரிகிறது, சொத்தை தான செட்டில்மென்டாக எழுதி வைத்தது தெரிய வருகிறது. மீண்டு பெற்றோரிடம் சென்று கேட்க்கும் பொழுது அதற்க்கு சரியான பதில் அவர்களிடத்தில் ஒதுவும் வரவில்லை. ஆக இந்த சொத்தின் மீது வழக்கு தொடரலாம் என்று இருக்கின்றேன். அந்த சொத்தில் மூன்று விதமான சொத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதாவது இராணுவத்தில் பணி புரிந்த அவர் 1 ஏக்கர் சொத்தும், மற்றும் மூதாததையர்கள் சொத்துக்கள் என்றும் தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தும், கூட்டு குடும்பமாக இருக்கும் பொழுது சம்பாதித்த சொத்து என்று மூன்று, நான்கு விதமான சொத்துக்கள் விவரங்கள் அடங்கும். ஆகவே தற்ப்பொழுது நான் இந்த சொத்தின் மீது வழக்கு தொடர இருக்கின்றேன்.
இந்த சொத்தை ஒருவர் மீது மட்டும் தான செட்டில் மென்ட்டாக எழுதி வைக்க காரணம், இராணுவத்தில் பணி புரிந்து வந்த நான் எனது திருமணமானது, எனது தந்தையின் தங்கை (அத்தை) ஆகிய அவரது மகளைளே திருமணம் முடித்தேன். அந்த திருமணமானது முதலில எனது பெற்றோருக்கு உடன்பாடு இல்லை தான், பிறகு, அவர்களின் சம்மதத்தோடு தான் திருமணம் முடிந்தது. அவர்களது தலைமையிலேயே நான் எனது அத்தை மகளை திருமணம் செய்து கொண்டேன். இதை எதையும் வெளியில் சொல்லாமல் என் மீது இருக்கும் வெறுப்பு காரணத்தின் கானணமாகத்தான் ஒட்டு மொத்த மொத்த சொத்தையும் இளையவன் ஆகிய அவனது பெயரில் தான செட்டில்மென்டாக பெற்றோர்கள் எழுதி வைத்திருக்கின்றார்கள். மற்றபடி இதில் எந்த விதமான சண்டை சச்சருவகள் என்று எதுவும் கிடையாது. ஆகே நான் தற்ப்பொழுது இராணுவத்தில் இருந்து V R S பெற்று பென்ஷன் வந்து விட்டேன். தற்ப்பொழுது நான் வழக்கு தொடர இருக்கின்றேன்.
30 வருடங்களுக்கு முன் லே அவுட் செய்த இடத்தை 8 வருடங்கள் முன் வாங்கினேன் S.F.No 455/4, 455/5 .அதில் அணைவருக்குமே 455/5 ல் கூட்டு பட்டாவும்,பத்திரத்திலும் இருக்கின்றது .நான் தனி பட்டாவுக்கு விண்ணப்பித்தாள் வாங்கிய இடம் 455/4 ல் வருகிறது என்று சர்வேயர் கூறுகிறார்.பிழைதிருத்தம் செய்யலாம் என்று சார் பதிவாளரிடம் சென்றாள் 30 வருட பத்திரத்தையும்( 5 பத்திரம்) பிழைதிருத்தல் செய்ய வேண்டும் என்கிறார். இதற்கு தீர்வு என்ன ?
என் அம்மாவின் பெயரில் 40 வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாடு அரசு முத்திரை பதித்த ஒரிஜினல் பட்டா இருக்கிறது ஐயா?
அப்போ ஈசி வருவாய் ஆவணங்கள் செக் பன்னுங்க
ஐயா , தாத்தா பாட்டி க்கு இரண்டு ஆண் ஒரு பெண் பிள்ளைகள். முதல் மகனின் மகன்(பேரன்) தன் தாத்தா வின் பூர்வீக சொத்தில் தாத்தா, பாட்டி மற்றும் தன் அப்பா(முதல் மகன்) பங்கு தனக்கு வேண்டும் என வழக்கு போட்டுள்ளார். இது சாத்தியமா? Please reply sir.
முடியாது
தாத்தாவும் பாட்டியும் யாருக்கும் எதுவும் எழதி கொடுத்து இருக்கக்கூடாது
ஹாய் சார் என்னோட அப்பா வந்து என்னோட தம்பி பெயர்ல சொத்துவந்து எழுதி வச்சுட்டாரு தானமா எழுதி வச்சுட்டாரு ஆனா நாங்க பிறந்தது வந்து மூணு பேரு அந்த மூணு பேர்ல மூணாவது பையனுக்கு தான் எழுதி வச்சிருக்கார் இதுல அவரோட சுய சம்பாத்திய சொத்து இதுல அண்ணன் தம்பி நாங்க ரெண்டு பேரு இருக்கோம் இதுல வந்து எப்படி நாங்க கிளைம் பண்றது அதே மாதிரி அவருக்கு வந்து 18 வயசு ஆகல அப்படின்னு அதனால அவருடைய அம்மா பெயரை கார்டியனா போட்டு எழுதி வச்சிருக்கார் இந்த 18 வயசு வந்ததும் அவனுக்கு எல்லா உரிமையும் வந்துடும் அப்ப நாங்க இரண்டு பேரும் என்ன செய்வது நான்தான் குடும்பத்தை பார்த்துக்கிறேன் ஆனால் என் மேல இருக்க கோவத்துல என்னோட தம்பி பெயருக்கு எழுதி வைத்துவிட்டார் இன்னும் இரண்டு பேர் என்ன செய்வது பதில் சொல்லுங்க சார்
சட்டம் நியாயத்தின் பக்கம் இல்லையென்றால்
சட்டத்தை கையில் எடுக்க வேண்டியதுதான் !
Nothing do your brother full of right that property
Sir.
இது ஒரு சந்தேகத்திற்கான கேள்விகள்.
A என்கிற தாத்தா தனது சுய சம்பாத்யத்தில் உதாரணத்திற்கு 3 ஏக்கர் நிலங்களை வாங்கி பட்டாவும் பெற்று ஆண்டு அனுபவித்து விட்டு இறந்து போகிவிடுகிறார்.
B என்கிறவர் A என்கிறவருக்கு ஒரே வாரிசு.
A வின் மரணத்திற்கு பிறகு B வாரிசுரிமை அடிப்படையில் சொத்தை பட்டா பெயர் மாற்றம் செய்து ஆண்டனுபவித்து வருகிறார்.
B க்கு C D E ஆகியோர் வாரிசுகள்.
இந்நிலையில் B என்கிற தந்தை C மற்றும் D பெயருக்கு தானசெட்டில்மென்ட் ஆவணம் மூலம் 1.5 ஏக்கர் என இருவருக்கும் எழுதி வைத்து விடுகிறார்.
B என்கிற தந்தைக்கு E என்கிற வாரிசை விடுத்து C D க்கு தான செட்டில்மென்ட் ஆவணாம் எழுத சட்டப்படி உரிமையிருக்கிறதா.
B யின் சுயசம்பாத்ய சொத்தாக இல்லாத போது Bக்கு அந்த உரிமையிருக்கிறது.
2. ஒருவேளை B க்கு பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை ஆவணம் மூலம் சொத்து கிடைக்கப் பெறுகிறது.
அப்போதும் E விடுத்து சட்டப்படி CD க்கு தான செட்டில்மென்ட் ஆவணங்கள் எழுத உரிமையிருக்கிறதா
கொஞ்சம் பதில் கூறுங்கள்.
ஒரு சொத்து எந்த வழியில் வந்தால் என்ன? எனது பெயரில் பட்டாவும் பத்திரமும் இருந்தால், நான் விற்க இயலும்.. ஒரு வாரிசை மட்டும் விட்டு விட்டு தான்செட்டில்மெண்ட் தர இயலும்.. பதிவுத்துறை அலுவலகத்தில் ஒன்றும் பிரச்னை இல்லை..
இதில் வாரிசு யாருக்காவது மனம் ஒப்புமை இல்லையெனில் நீதிமன்றத்தை நாட வேண்டியது தான்..
பூர்விக சொத்தாகினும் எனது பெயரில் ஆவணங்கள் உள்ள போது, அது எனது சொத்து தான்! எனது தாத்தா சொத்து அல்ல!
சட்டப்படி, அது எனது சொத்தாக இருப்பதால் தான் உரிமை மாற்றம் செய்ய பதிவுத்துறை அனுமதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
@@RajathiPathipagam
Sir
எனது கேள்வி பதிவுத்துறை பற்றியது அல்ல நீதிமன்றத்தில் E வழக்கு தொடுத்தால் E வழக்கில் வெற்றி பெறுவாரா என்பது மட்டுமே
தங்களின் பதிலை பெற விரும்புகிறேன்.
@@anandadv5201 இவர் தான் வெற்றி பெறுவார் என சொல்லி விடக்கூடும் என இருந்தால் வழக்கு எதற்கு? நீதிமன்றம் எதற்கு? விசாரணை எதற்கு? வக்கீல் எதற்கு? செலவு எதற்கு?
ஒரு பிள்ளையை விட்டு விட்டு எழுத தகப்பன் உரிய காரணம் சொல்ல வேண்டும்..அப்படி எழுதக்கூடாது என மகனும் உரிய காரணம் சொல்ல வேண்டும்..
இதெல்லாம் நீதி விசாரணையில் தான் தெரிய வரும்..
ஐயா எஙக பெரியப்ப பெயர் சொத்து இருக்கு நாங்க அந்த நிலத்தில் 40வருங்களாக வாழ்ந்து வருகிறோம்...ஆனால் எங்க பெரியப்ப பையன் உங்களுக்கு சொத்து பதிவு செய்து தர முடியாது என்று சொல்கிறார்...அவர் பாகத்தை எங்களுக்கு தெரியாமல் விற்று விட்டார்....எங்கள் சொத்து பதிவு செய்து தரமுடியாது என்று சொல்கிறார் என்ன செய்வது ஐயா...