Orayiram Paarvaiyile T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் ஓராயிரம் பார்வையிலே

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Singer : T. M. Soundararajan
    Music : Vedha
    Lyrics : Kannadasan
    Starring : Ashokan, Manimala

Комментарии • 871

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 4 месяца назад +88

    பாடியவர்கள் நடித்தவர்கள் இசையமைத்தவர் இறந்து விட்டனர். வரிகள் என்றுமே சாகாவரம் பெற்றவை

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 3 месяца назад +71

    நூறுமுறை அல்ல
    நூறாயிரம் முறை கேட்டாலும்
    மீண்டும் கேட்டுக்கொண்டே
    இருக்கச் செய்யும் பாடல் இது.

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 15 дней назад +9

    இப்படி ஒரு பாடலை இக்கால இளைஞர்கள் ரசிக்கும் காலம் விரைவில் வரும்.

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 5 месяцев назад +60

    நூறு முறை கேட்டாலும்..நூறு வயதில் கேட்டாலும் சலிக்காத காதல் கீதம்...

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 месяцев назад +61

    டி எம் எஸ் சார் மிஸ் யூ.குரல் மட்டுமே எவ்வளவு இனிமையாக உள்ளது.காதை அடைக்கும் பின்னனி இசை இல்லை அமைதியான இசைபாடலோ அருமை.டி எம் எஸ் சார் என்றும் உங்க குரலுக்கு அடிமை

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Год назад +103

    இப்படி ஒரு பாடலை இனி எக்காலத்திலும் யாராலும் எழுதமுடியாது,பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியும்😭

  • @RamYoga-wb3ny
    @RamYoga-wb3ny 3 месяца назад +33

    எத்தனை தடவை கேட்டாலும் இந்த பாட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது எப்படி தான் என்று தெரியவில்லை

  • @leefialagarraj
    @leefialagarraj 6 месяцев назад +71

    நடிகர் அசோகன் அவர்களின் அற்புதமான நடிப்பு

  • @Aanandakumarr.c
    @Aanandakumarr.c Год назад +209

    எத்தனையோ பாடல்கள் வருகிறது ஒருசில மாதங்கள், வருடங்களுக்கு பின் மறைந்து/மறந்து விடுகிறது.கிட்டதட்ட 60 ஆண்டுகளாகியும் இன்றும் அழியாமல் அனைவரது மனதிலும் வாழ்கிறது என்றால் அது
    கடவுள் கண்ணதாசன்
    கவிதை/காவிய வரிகள் தான். இவனை மிஞ்சிய ஒரு கவிஞன் இனி அவதரிக்கப்போவதில்லை அவனியிலே.

    • @veerasuthaharansithravelau641
      @veerasuthaharansithravelau641 Год назад +1

      😢

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Год назад

      100

    • @sampathsam4104
      @sampathsam4104 Год назад +3

      அற்புதமான பாடல்வரிகளில் நவரசங்களில் கவிதைவரிகள் பொங்கி,ஊற்றெடுக்கும் பாடல்கள் படைத்த திரு.கண்ணதாசன் அவர்களுக்கு ஈடுஇணை யாருமில்லை..யுக கவிஞர் நினைவுகளுடன் நன்றி...😊

    • @muthukumar-rk1ql
      @muthukumar-rk1ql 10 месяцев назад

      Nanbara pls respect kavinagar

    • @user.brabhu
      @user.brabhu 10 месяцев назад +1

      இசையும் அமைதியான.அழகான.இசை

  • @ndsekar
    @ndsekar Год назад +232

    இந்த பாடலை குறைந்த பட்சம் ஆயிரம் முறை கேட்டு இருப்பேன். ஆனாலும் மிண்டும் கேட்க தோன்றுகிறது

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Год назад +6

      உண்மை சத்தியமாக சொல்கிறேன் எங்க வீட்ட ஏச்சியும் வாங்கி இருக்கன் இந்த பாடலால் அவ்வளவு அருமையான பாடல்

    • @ashamanoj3773
      @ashamanoj3773 7 месяцев назад +1

      Same here too

    • @janaki6837
      @janaki6837 5 месяцев назад +1

      Mee too

    • @janaki6837
      @janaki6837 5 месяцев назад +1

      Meendum meendum kehtka toondum paadal

    • @janaki6837
      @janaki6837 5 месяцев назад +2

      Inta kaatrinil naan kalanten un kangalai taluvugintren arumayaan varigal

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 Год назад +59

    உயிரை உருக்கி வாட்டியேடுக்கும் அற்புத கானம் எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @clearwatersammy8762
    @clearwatersammy8762 Год назад +140

    இந்த மானிடக் காதலெல்லாம்
    ஒரு மரணத்தில் மாறி விடும்
    அந்த மலர்களின் வாசமெல்லாம்
    ஒரு மாலைக்குள் வாடி விடும்
    நம் காதலின் தீபம் மட்டும்
    எந்த நாளிலும் கூட வரும்

    • @kalimuthu3383
      @kalimuthu3383 Год назад +7

      Kannadasan is great

    • @sureshpriya8368
      @sureshpriya8368 Год назад +3

      என்ன வரிகள் கண்ணதாசன் உலகத்தரம்

    • @prakashrao8077
      @prakashrao8077 Год назад

      Read my comments if possible

    • @vanajavl337
      @vanajavl337 Год назад +1

      Enna padam theriyuma

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Год назад

      ​@@vanajavl337படம் :வல்லவனுக்கு வல்லவன். கதாநாயகன் அசோகன், நாயகி மணிமாலா.

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Год назад +211

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் அழுகிறேன் அதுதான் அதிசயம்

  • @rajakavi5756
    @rajakavi5756 Год назад +167

    இருபது ஆண்டுகளுக்கு முன் இரவு. நேரம். வெள்ளியங்கிரி மலையேறும் பொழுது யா யாரோ ஒருவர் வானொலியில் இருந்து இந்த பாடல் என் செவியில் விழுந்தது இன்று வரை தொடர்ந்து கேட்கிறேன்

    • @sasir6533
      @sasir6533 Год назад +1

      Super

    • @ravid6329
      @ravid6329 11 месяцев назад +3

      அது ஒரு அற்புதம்.

    • @somasundharam4665
      @somasundharam4665 10 месяцев назад

      ARUMAIYNA.PATHYU.

    • @periyanayage6524
      @periyanayage6524 5 месяцев назад

      U8y

    • @gopalk3927
      @gopalk3927 3 месяца назад +1

      இரவு நேரம் எங்கிருந்தோ கேட்கும் கீதம் மனதை இதமாக்கும்... அந்த உணர்வை நானும் உணர்ந்திருக்கிறேன்...

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 2 месяца назад +8

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மயிலிறகால் வருடி விட்டது போல் இருக்கும் டிஎம்எஸ்ஸின் குரல்

  • @anthonyk9048
    @anthonyk9048 2 месяца назад +10

    கவியரசரைபோல் காதலைபற்றி இத்தனை அழகாக சொல்லவே முடியாது❤

  • @radhakrishnan-lh1px
    @radhakrishnan-lh1px Год назад +122

    இந்தப் பாடலை இப்பொழுது கேட்டாலும் என்னுடைய பழைய.. காதல் ஞாபகங்கள் நினைவலையில் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது...😭😭😭😭💔💔

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Год назад +6

      மகிழ்ச்சியுடன் தங்கள் உண்மையான காதலையும் புரிந்து கொள்ள முடிகிறது.

    • @manumathid2412
      @manumathid2412 Год назад +4

      ஒவ்வொருவர்வாழ்விலும்.நீங்காத.உள்ளமாஅஉருக்கும்பாடல்

    • @radhakrishnan-lh1px
      @radhakrishnan-lh1px 9 месяцев назад

      😢​@@manumathid2412

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 9 месяцев назад +2

      Well yes I am with you

  • @ramkikumar2820
    @ramkikumar2820 Год назад +122

    இந்தப்பாடலை கேட்கும் பொழுது இனம் புரியாத சோகம் நெஞ்சைக் கவ்வுகின்றது ...

    • @theepetti4066
      @theepetti4066 Год назад

      100க்கு 100சதவீதம் முற்றிலும் உண்மை குமாரு

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Год назад +42

    இன்பம் , துன்பம் , கவலை, நிம்மதி,தூக்கம்,மகிழ்ச்சி. எல்லாவற்றிக்கும் ஒரே மருத்துவர்,,,கண்ணதாசன்,!, எளிமையான பாட்டி வைத்தியம்,!

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 4 месяца назад +31

    காதல், ஆண்மை,பெண்மை, தத்துவம் ... இவற்றை இசையாக்கியதில் 60 களை அடிக்க எந்த கொம்பனாலும் (70s 80s 90s😂 2k) முடியாது.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 3 месяца назад

      Well yes I welcome your comments

    • @jacobsouza8002
      @jacobsouza8002 2 месяца назад

      இப்பவும் முடியாது. TMS , Kannadasan , Sivaji....great combination....❤❤❤❤❤

    • @paulbagastin8237
      @paulbagastin8237 2 месяца назад

      It's not Shivaji but Ashoka n

  • @venkatesankumarasamy3876
    @venkatesankumarasamy3876 Год назад +104

    இந்த தெவிட்டாத பாடல் இந்த உலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்!!!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +164

    உண்மைதான் .. இசை இனிமை மட்டும் அல்ல அதன் உணர்வு மனதை வருடி ஆத்மாவில் கலந்து விடும் அனுபவம் இந்த பாடல் .. தொகையரா முடிந்த பின் சிதார் சிலிர்த்து சிணுங்கி அடங்க .. தேய்ந்து அழுது ஓயும் வயலின்கள் ..
    "ஓராயிரம் பார்வையிலும் .... உன் காலடி ஓசையிலும் .. உன் காதலை நான் அறிவேன் .. ".. காலடி ஓசை கூட காதலைச்சொல்லுமா?.. கவிஞரே.. இந்தி இசை மெட்டு என்றாலும் கவிஞர் கண்ணதாசனின் காதலை சொல்லும் வரிகளை பாடிய
    சௌந்தர்ராஜனின்
    கண்களில் நிச்சயம் கண்ணீர் திரையிட்டிருக்கும் .. பாடல் காதலர்களின் பிரிவை சொன்னதா ?.
    காதலின் உயர்வை சொன்னதா ? . காதலின் உணர்வை சொன்னதா?. காதலர்களின் மனதை சொன்னதா? அவர்களின் மனத்தின் கனத்தை சொன்னதா?...
    ஆனால் நமக்கு கண்கள் பனித்து மனம் வெறுமையாகும் உணர்வு தந்தது தான் உண்மை ...

  • @smurugan7297
    @smurugan7297 Год назад +53

    இந்த பாடல் உண்மையான காதலர்களுக்கு சமர்ப்பணம்

  • @Velan-i7g
    @Velan-i7g Год назад +39

    எத்தன ஜென்மம் எடுத்தாலும்
    மறக்க இயலாது பாடலையும்
    எண் நினைவில் நிற்கும் முன்னாள். காதலிய யும்

  • @senthilkumar-pj6od
    @senthilkumar-pj6od Год назад +96

    நூறுமுறை பிறந்தாலும்
    நூறுமுறை இறந்தாலும்
    உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
    ஒருநாளும் போவதில்லை
    உலகத்தின் கண்களிலே
    உருவங்கள் மறைந்தாலும்
    ஒன்றான உள்ளங்கள்
    ஒருநாளும் மறைவதில்லை!
    ஓராயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்
    உன் காலடி ஓசையிலே
    உன் காதலை நான் அறிவேன்
    (ஓராயிரம் பார்வையிலே)
    இந்த மானிடக் காதலெல்லாம்
    ஒரு மரணத்தில் மாறி விடும்
    அந்த மலர்களின் வாசமெல்லாம்
    ஒரு மாலைக்குள் வாடி விடும்
    நம் காதலின் தீபம் மட்டும்
    எந்த நாளிலும் கூட வரும்
    (ஓராயிரம் பார்வையிலே)
    இந்த காற்றினில் நான் கலந்தேன்
    உன் கண்களை தழுவுகின்றேன்
    இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
    உன் ஆடையில் ஆடுகின்றேன்
    நான் போகின்ற பாதையெல்லாம்
    உன் பூமுகம் காணுகின்றேன்
    (ஓராயிரம் பார்வையிலே)

  • @MunawerBasha-s5w
    @MunawerBasha-s5w 24 дня назад +2

    VERY very. SUPER EXCELLENT SONG. 100 Years this. Song is. Live.

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 16 дней назад +2

    ❤❤❤... நினைவில்..மறையாத. பாடல். முத்தான. வரிகள்.

  • @venkatranganathan3296
    @venkatranganathan3296 2 месяца назад +2

    அருமையான பாடல்

  • @aruljothi1957
    @aruljothi1957 21 день назад +1

    சிறு வயதில் கேட்டபோதே மனதில் தங்கிய பாடல்.

  • @SanctusMaryGerart
    @SanctusMaryGerart Месяц назад +2

    பழைய பாடல்களை எந்த வயதினரும் கேட்டு ரசிக்க அருமையான கவிதைகளுடன் இன்னிசை மழையில் நித்தமும் நனைவதில் மனமகிழும் . அப்பப்பா நன்றி🙏🙏

  • @joshmuru64
    @joshmuru64 Год назад +25

    இப்பாடலைப் பாடும் வேளையில், டி.எம்.எஸ் ஐயாவின் குரல்...நடிகர் எஸ்.ஏ. அசோகனின் குரலாகவே மாறிப் போயிருக்கும்...அப்படி உருக்கமாகப் பாடியிருப்பார்...

  • @Visithirakirukkan
    @Visithirakirukkan Год назад +56

    இது போன்ற பாடல்களால் தான் தமிழ் மொழியின் அழகும் பெருமையும் என்றென்றும் நிலைத்து நிற்கும். இதில் ஈடுபட்ட அனைத்து கலைஞர்களும் என்றென்றும் வாழ்வார்கள்.

  • @balakrishnanv9961
    @balakrishnanv9961 4 месяца назад +2

    100 முறை பிறந்தாலும் 100 முறை இறந்தாலும் மீண்டும் பிறந்து இப்பாடலை கேட்க இறைவன் அனுக்ஹரகம் வேண்டும் இறைவா நன்றி தங்களுக்கு

  • @MoorthiKrishnan-u8n
    @MoorthiKrishnan-u8n Год назад +21

    இந்த பாடலைக் கேட்டு முகமது ரஃபி டி எம் எஸ் ன் தொண்டையில் முத்தமிட்டார். அத்தனை அருமையான பாடல் குரல் வளம்.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 9 месяцев назад +2

      ஆம். ஹிந்தியை விட இங்கு கலக்கி இருப்பார் TMS அவர்கள்.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 7 месяцев назад +2

      Pitch குறையாமல் பாடுவார்

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 3 месяца назад +2

      Well M Rafi is gentleman and Legend

  • @muthuksm1970
    @muthuksm1970 Месяц назад +3

    கடந்துபோன தலைமுறைகளின், நெஞ்சங்களின் பதிந்துவிட்டதால் கண்ணீர் வருகிறது!

  • @subbulakshmi-qu1kv
    @subbulakshmi-qu1kv 6 месяцев назад +29

    இந்த பாடலைகேட்கும்பொழுதுமனதெல்லாம்ரணமாகிப்போகிறதுஎன்அவரைமறக்கமுடியாமல்

    • @KumarAnand-j2o
      @KumarAnand-j2o 21 день назад

      Uierullavarai marakkamudiyathu uieranavangala

  • @sheikhajisheikhaji720
    @sheikhajisheikhaji720 2 месяца назад +3

    இன்னும் 100வருடங்கள் கடந்தாலும் இப்பாடல் ஒலித்து கொண்டே இருக்கும்

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Месяц назад +2

    நெஞ்சை உருக வைக்கும் பாடல், மற்றும் இசை

  • @dontfogetme
    @dontfogetme Год назад +355

    என்ன பாட்டு இது 😳 இத்தனை வருடமாகியும் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது !

  • @senthils4862
    @senthils4862 6 месяцев назад +32

    ஒக்கேனக்கல் அருவியை மிகவும் நம்பார்வைக்கு கொடுத்த கேமிராமேன்னுக்கு வாழ்த்துகள் ....

  • @jeyachandrans1700
    @jeyachandrans1700 Год назад +47

    என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்

  • @ksganesanksganesan6663
    @ksganesanksganesan6663 Год назад +69

    இன்னும் ஒரு நூற்றாண்டு
    கடந்தாலும் காலத்தால் மறையாத கானம்

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Год назад +38

    எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்கும் பாடல். மறக்க முடியாத பாடல் ❤

  • @senthilsir1747
    @senthilsir1747 Год назад +25

    உள்ளத்தை உருக்கும் பாடல். சௌந்தரராஜன் அவர்களுக்கு எத்தனை நடிகர்களின் குரல். உண்மையில் இந்த காலத்தில் யாருக்கும் இல்லை. அற்புதமான இக்சை. கம்பீரமான குரல்.

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Год назад +37

    நெஞ்சைப் பிளக்கும் வரிகள் என்று படித்து விட்டு போய் விடுவேன். ஆனால் இந்த பாட்டை கேட்டாலே உண்மையில் அந்த வலி முழுமையாக தெரியும்

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 6 месяцев назад +6

    ஏத்தனை முறை கேட்டாலும் . என் நெஞ்சை விட்டு விலகாத பாடல். நம் காதலின் தீபம் மட்டும். வாழ்வினில் கூட வரும்❤

  • @muthu6290
    @muthu6290 Год назад +45

    ஓர் ஆயிரம் முறை கேட்டாலும் ரசித்தாலும்
    தனிமையின் அமைதிதனில் என்றும் நீங்கா இனிய பாடல் .,
    எண்ணங்கள் பல சுமந்து(சென்ற)நின்ற சுக கீதம்

  • @PoospaMalar
    @PoospaMalar 6 месяцев назад +6

    இனி இந்த நாள் எப்போது வரும் ஐயா கண்ணதாசன் ஐயா ❤❤❤❤😢

  • @90kidstamil56
    @90kidstamil56 5 месяцев назад +214

    2024 ஏப்ரலுக்கு பிறகு யாரெல்லாம் கேக்குறீங்க?
    தேதிய கமெண்ட் பண்ணிட்டு போங்க

    • @rajatamilchannel
      @rajatamilchannel 5 месяцев назад +2

      மிகவும் அருமையான பாடல் 22.04.24

    • @manin9435
      @manin9435 5 месяцев назад +4

      Ip padal I maraka mudiyuma 29.4.2024

    • @mohanvk6323
      @mohanvk6323 5 месяцев назад +1

      நான்

    • @udyakumarkumar929
      @udyakumarkumar929 4 месяца назад +4

      Naan from Malaysia ❤❤😢😢😢

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 4 месяца назад +3

      17.5.24

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Год назад +16

    சிறு வயதில் சென்னை தொலைக்காட்சியில் இந்த பாடலை போடுவார்கள் அப்பொழுது இந்த பாடலை கேட்க மிக மிக அற்புதமாக இருக்கும். ஆனால் இந்த பாடலை ரேடியோவில் கேட்கும் போது சிவாஜி படம் அல்லது எம்ஜிஆர் படம் என்று நினைத்து இருந்தோம். பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும் போது தான் அசோகன் என்று தெரிந்து சிரித்து கொண்டு இருப்போம் ❤❤❤❤

  • @ctranjith3985
    @ctranjith3985 8 месяцев назад +9

    இந்த பாடலை கேட்கும் போது என் காதலியின் நியாபகம் வருகிறது I am 90 kids

  • @RajiHari-gn8ox
    @RajiHari-gn8ox 23 дня назад +2

    100 முறை பிறந்தாலும், 100 முறை இறந்தாலும். இப்பாடல் வரிகள் கிடைக்க வேண்டும் என்னவளின் காதல் நினைவலைகள் ரசிக்க!!!❤😂

  • @chandrankgf
    @chandrankgf 3 месяца назад +1

    வேதா அவர்களின் அனைத்து பாடல்களும் கேட்க கேட்க தெவிட்டாத இனிமை.

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 Год назад +30

    Unforgettable days..immortalizing my teenage..i am 65..

  • @Muruvell
    @Muruvell Год назад +44

    நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது இப்பாடல் மலையுச்சி, அருவி, பாறை மேடுகள் என...

  • @paintingdon
    @paintingdon Год назад +46

    உண்மையான காதலை உணர்த்தும் பாடல் I Love it

  • @shanmugamponnusamy5258
    @shanmugamponnusamy5258 Год назад +16

    எத்தனை காதல் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது.. இசையமைப்பாளர் வேதா என்றென்றும் நிலைத்து நிற்பார்.

    • @tianaslade71
      @tianaslade71 10 месяцев назад

      Original song is hindi. Music director is Ravi. 😊

  • @mkrishnan9511
    @mkrishnan9511 Год назад +16

    196o. இல் இந்த பாடல் மிகவும் பிடித்தமானது.... காலம் கடந்தது... இந்த பாடல் நினைவுக்கு வந்தது... முதல் வரி கிடைக்க பல முறை முயன்றேன்... ஹு... ஹும்... இப்ப flash aachu...பாட்டும் கிடைத்தது... ரசிக்கிறேன்... கண்ணீருடன்... நன்றி u tube க்கு... வணங்குகிறேன்...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +56

    வேதாவின் இசையில் நம் நெஞ்சில் எப்பயும் ஈருக்கும்பாடல்! டிஎம்எஸ் சூப்பர்! அசோகனும் மணீமாலாவும் அழகான 💑 நன்றீங்க 👸 🙏

    • @nagarajn.hashini2005
      @nagarajn.hashini2005 Год назад

      Supar pa t al

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 10 месяцев назад +1

      ஹெலன் நீங்கள் பழைய சினிமா பாடல் ஆராய்ச்சியாளரா?
      தொடரட்டும் உங்கள் பணி

  • @shaikalaudeen1483
    @shaikalaudeen1483 Месяц назад +1

    என் நினைவைவிட்டு நீங்கா பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை கேட்க என்ன புண்ணியம் செய்தோமோ

  • @NatarajanVenkatachalammk
    @NatarajanVenkatachalammk Год назад +25

    " காலத்தால் அழிக்க முடியாது
    காலம் கடந்தாலும் காற்றில் மிதந்து..... இதயத்தை நனைத்து விடும்.....வரிகள்
    அந்திசாயும் நேரம்
    அமைதி பூத்து அங்கம் எல்லாம்
    சங்கமத்து அலை அலையாய்
    ஓடிவரும் ஓசை.....
    மிதந்து வரும்.....

    • @user-qw8zh9nw8w
      @user-qw8zh9nw8w 11 месяцев назад +1

      என் பள்ளி பருவத்தில் காதலித்த ரமணியை நினைத்துக் கொள்வேன்..... அந்த அழகான என் உயிர் காதலி இப்போது எங்கே இருக்கிறாளோ... எங்கிருந்தாலும் அவள் நலமுடன் வாழ்க. இப்படிக்கு
      காதலுடன் கணேசமூர்த்தி... கடம்பூர்.❤❤

  • @maniganeshs2720
    @maniganeshs2720 7 месяцев назад +4

    டி.எம்.எஸ். ஐயாவின் ஈடு இணையற்ற பாடல்.

  • @kvijayakumarivkrishnasami9467
    @kvijayakumarivkrishnasami9467 Год назад +38

    Old is gold பழைய நினைவுகள் கண்முன் வருகிறது இந்த பாடலை கண் மூடி ரசித்தேன்

  • @mahendranraja8484
    @mahendranraja8484 Год назад +3

    என்னை ரெம்ப மனதை புண்படுத்தும் வகையில் உள்ள பாடல். தெய்வீகபாடலல

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 Год назад +27

    பாடல்...இசை...பாடகர்... காட்சி அமைப்பு எல்லாம் மெய் மறக்க செய்கிறது

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Год назад +24

    நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் இந்த பாடலை போல் இனி ஒரு பாடல் அமைவதில்லை.,இந்த ஒரே ஒரு பாடல்தான் மனதை ஏகாந்த நிலைக்கு நம்மை அழைத்து சென்று கண்களில் நீரை வரவழைத்து உயிருக்குள் ஊடுறுவி நிலைத்து விடும் .🙏😪😴🤔🥲🙏

    • @vtggaming5765
      @vtggaming5765 4 месяца назад

      அருமையன பாட்டு என்றும். old is Gold

  • @VenusBabuji-xl4ge
    @VenusBabuji-xl4ge Год назад +19

    எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன உண்மைக் காதல் காதல்தான்!வலி ஒன்றுதான்!

  • @k.p.ganesangobi4768
    @k.p.ganesangobi4768 4 месяца назад +2

    காந்த குரல் டி எம் எஸ் பாடல் தற்போது இது போல பாடுவதற்கு ஆள் இல்லை

  • @rengarajrajagopal1891
    @rengarajrajagopal1891 Год назад +50

    மனதை இதமாக வருடிவிடும் அற்புதமான பாடல்.

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 Год назад +12

    மனதை நெகிழ வைக்கும்
    வரிகள்.
    உண்மையான அன்பை
    வெளிப்படுத்தும் பாடல்.

    • @dasat9787
      @dasat9787 Год назад

      Kadaal* is bit different from Anbu* body and mind will mix in the thought of girl friend ,where as emotion will emerge in Anbu

  • @NatrayanN-o7g
    @NatrayanN-o7g 13 дней назад +1

    இந்தப் பாடல் வரிகளை கேட்டால் மனது வாடி விடும் மயக்கம் வந்துவிடும் துயரம் நீங்கிவிடும்

  • @allavudeenk6806
    @allavudeenk6806 4 месяца назад +1

    இறக்கும் வரை நினைவில் உள்ள பாடல். அஹா என்ன அற்புதம்

  • @gunasekar3760
    @gunasekar3760 Год назад +15

    இந்தப் பாட்டை எத்தனை தடவை கேட்டாலும் என் மனசு அப்படியே தண்ணி மேல மிதக்குற படகு மரியா இருக்கும்

    • @lingamthangam8648
      @lingamthangam8648 Год назад +1

      காதலின் ஆழத்தை அளந்து பார்க்க முடியாத காதல் கதை அசோகன் அவர்களின் நாயகன் நடிப்பு அருமை 👌

  • @r.gopinathgopinath9224
    @r.gopinathgopinath9224 Год назад +12

    பாடல் வரிகள் மிகவும் அழகாகவும் அருமையான வரிகள் நான் பிறந்தது என்ன ஓ 93 யில் இப்போதும் இந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது❤

  • @m.r.bashabasha4603
    @m.r.bashabasha4603 11 месяцев назад +8

    இந்த பாடலை கேட்க்கும் போது அவ்வளவு மனசு கஷ்டமா இருக்கும்

  • @leothaasaninpayanangal7953
    @leothaasaninpayanangal7953 2 месяца назад +1

    எத்தனை வருடங்கள் போனாலும் இந்த பாடலின் மயக்கம் தீரப்போவதில்லை❤

  • @yesaiahsampath8350
    @yesaiahsampath8350 Год назад +12

    இந்த பாடல் வரிகள் என் கடந்தகால நினைவுகளை கண்முன் கொண்டு வருகின்றது கடல்கடந்து காதலை வெளிப்படுத்தியது எங்கள் காதல் 5வருடம் முகம் பார்க்காமல் கடிதம் மூலமாகவே எங்கள் காதலை பரிமாறி கொள்வோம்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +22

    உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒரு போதும் மறையாது.
    உண்மைதான்.உருவங்களால் நாங்கள் மறைந்திருந்தாலும் உண்மை காதலால் உள்ளத்தால் மறையாது இருக்கிறோம்.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад +5

    காதலில் தோல்வி அடடைந்தவர்களின் வேதம்
    இப்பாடல். சீரங்கத்தார்.

    • @ravichandranc.t6598
      @ravichandranc.t6598 Год назад

      இதன் ஒரிஜினல் இந்தி பாடல்தான்.

  • @rameshdeivasigamani
    @rameshdeivasigamani Год назад +18

    இந்த பாடல் வந்த காலகட்டத்திற்க்கும் என் வயதிர்க்கும் ரொம்ப தூரம் இருந்தாலும் பாடலை கேக்கும் போது ஒரு இனம் புரியாத ஒரு வித மான என்ன சொல்லரது தெரியவில்லை.

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 Год назад +12

    இப்பாடல். இந்தியில் இருந்து
    தமிழுக்கு வந்தது. இந்தியில்
    இப்பாடலை பாடியவர்
    திரு. முகமது ரபி. அவர்கள்
    தமிழில் T M சவுந்திர ராஜன்
    அவர்கள் பாடிய பாடலை
    கேட்டுவிட்டு முகமதுரபி
    அவர்கள் சொன்னது
    # என்னைவிட மிக உருக்கமாக இப் பாடகர் பாடியுள்ளார் # . என்பது
    எவ்வளவு உண்மை

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 2 месяца назад +1

    இரவு நேரத்தில் கேட்கக்கூடிய அமைதியான இசையுடன் கூடிய பாடல்.கவியரசரின்பாடல்வரிகள் வேதாஅவர்களின் இசை.

  • @karthikeyang9269
    @karthikeyang9269 Год назад +8

    படக்காட்சி காதலை குறிக்கின்றது.
    நானோ சிறுவயது வாழ்க்கை, பெற்றோர், பால்ய நண்பர்கள், மனதுக்கு பிடித்த உறவுகள் ஆகியவற்றை உருவகப்படுத்தி ரசிக்கிறேன்

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Год назад +15

    உயர் திரு ' அசோகன் ஐயா அவர்கள் ' இந்த படத்தில் நடித்தாரா' வாழ்ந்தாரா?
    நான் அமைதியை தேடும் போதெல்லாம் ' இந்த பாடல் என் மனதை ஆற்றும் தேற்றும்.
    🙏🙏🙏

  • @vraj62
    @vraj62 11 месяцев назад +3

    கிராமத்துஊர்அடங்கியபிறகுதனிமையில்கேட்கவேண்டியபாடல்.வேதாவின்மெல்லிய இசைஅருமை.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 9 месяцев назад

      ஒரிஜினல் ஹிந்தி என்றாலும் இந்த அளவு அதில் எஃபெக்ட் கிடையாது. காப்பி அடித்தாலும் ஜீவன் கொடுத்து விடுவார் வேதா அவர்கள்.

  • @ragupathi2569
    @ragupathi2569 Год назад +14

    Tmsன் இனிமையான குரல் அழகான இசைமெய்மறக்க செய்கிறது

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Год назад +33

    எனக்கு தெரியும், இந்த பாட்டை நான் கேட்கும்போதெல்லாம் "அமுதா"
    நீயும் இந்த பாட்டை கேட்பாய்.
    எனக்குள் உண்டான அதே உயிரோட்டாமான உணர்வு நதி போல் உனக்குள்ளும் ஓடுமென்று நம்புகிறேன்.நம் காதலின் ஜீவன் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்.

  • @krishnasamy1825
    @krishnasamy1825 Месяц назад +1

    லேசான சோகம் இழைந்தோடும் உயிரோட்டமான இசையில் !.
    காலமெல்லாம் மயக்கும்!

  • @raviedwardchandran
    @raviedwardchandran 3 дня назад +2

    Lovely Beautiful Rendition...An Evergreen Masterpiece...Old Gold Is Always Glitters 🤍
    👍🔥🌹

  • @kousalyars3532
    @kousalyars3532 3 месяца назад +3

    செம்மொழி தமிழ் என்றும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க என் தாய் மொழி

  • @rangasamyvenkatachalam4452
    @rangasamyvenkatachalam4452 3 месяца назад +1

    ஓராயிரம் முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்

  • @Meenatchi-t7e
    @Meenatchi-t7e Год назад +21

    A haunting melody from Kaviyarasar Kannadasan +Vedha +TMS combo... Unforgettable evergreen song.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +9

    🌹இந்த மானிட காதல் எ ல்லாம் ?ஒரு மரணத்தில் மாறி விடும்.அந்த மலர்க ளின் வாசமெல்லாம் ?ஒரு மாலைக்குள் மாறி விடும் ! நம் காதலின் தீபமட்டும் ? எந்த நாளிலும் கூட வரும்.🎤🎸🍧🐬😝😘

  • @sekersekar2745
    @sekersekar2745 Год назад +6

    நெஞ்சம் உருகும் பாடல் வரிகள்

  • @narayanan72
    @narayanan72 3 месяца назад +1

    Evergreen song. Great salute to Late Shri. T.M.Soundararajan.

  • @kavirajbru489
    @kavirajbru489 Год назад +5

    What a song Till it's fresh .TMS voice his diction ,nobody can match. Moreover Kannadasan lyrics and the music is waw ..

  • @RajuM-jq1tx
    @RajuM-jq1tx Год назад +62

    என்றும் மறக்க முடியாத பாடல்.

  • @athirajathiraj8093
    @athirajathiraj8093 Год назад +12

    மனது கவலையாக இருக்கும் போது இந்த பாடலைக் கேட்பேன்

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Год назад +3

    இந்தப் பாடல் அதிசய பாடல்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад +9

    சிறந்த பாடல்.. எனக்கு பிடித்த பாடல்