தானெனை முன்படைத்தான் / சுந்தரர் தேவாரம் / திருத்தணி சுவாமிநாதன் ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • தானெனை முன்படைத்தான் / சுந்தரர் தேவாரம் / திருத்தணி சுவாமிநாதன் ஐயா
    திருநொடித்தான் மலை
    பண் :பஞ்சமம்
    பாடல் எண் : 1
    தானெனை முன்படைத்தான் அத
    றிந்துதன் பொன்னடிக்கே
    நானென பாடலந்தோ நாயி
    னேனைப் பொருட்படுத்து
    வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
    யானை அருள்புரிந்து
    ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 2
    ஆனை உரித்தபகை அடி
    யேனொடு மீளக்கொலோ
    ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
    யானை நினைந்திருந்தேன்
    வானை மதித்தமரர் வலஞ்
    செய்தெனை யேறவைக்க
    ஆனை அருள்புரிந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 3
    மந்திரம் ஒன்றறியேன் மனை
    வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
    சுந்தர வேடங்களால் துரி
    சேசெயுந் தொண்டன்எனை
    அந்தர மால்விசும்பில் அழ
    கானை யருள்புரிந்த
    துந்தர மோநெஞ்சமே நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 4
    வாழ்வை உகந்தநெஞ்சே மட
    வார் தங்கள் வல்வினைப்பட்
    டாழ முகந்தவென்னை அது
    மாற்றி அமரரெல்லாம்
    சூழ அருள்புரிந்து தொண்ட
    னேன் பரமல்லதொரு
    வேழம் அருள்புரிந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 5
    மண்ணுல கிற்பிறந்து நும்மை
    வாழ்த்தும் வழியடியார்
    பொன்னுல கம்பெறுதல் தொண்ட
    னேன்இன்று கண்டொழிந்தேன்
    விண்ணுல கத்தவர்கள் விரும்
    பவெள்ளை யானையின்மேல்
    என்னுடல் காட்டுவித்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 6
    அஞ்சினை ஒன்றிநின்று அலர்
    கொண்டடி சேர்வறியா
    வஞ்சனை யென்மனமே வைகி
    வானநன் னாடர்முன்னே
    துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட
    னேன்பர மல்லதொரு
    வெஞ்சின ஆனைதந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 7
    நிலைகெட விண்ணதிர நிலம்
    எங்கும் அதிர்ந்தசைய
    மலையிடை யானைஏறி வழி
    யேவரு வேனெதிரே
    அலைகட லால்அரையன் அலர்
    கொண்டுமுன் வந்திறைஞ்ச
    உலையணை யாதவண்ணம் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 8
    அரவொலி ஆகமங்கள் அறி
    வார்அறி தோத்திரங்கள்
    விரவிய வேதஒலி விண்ணெ
    லாம்வந் தெதிர்ந்திசைப்ப
    வரமலி வாணன்வந்து வழி
    தந்தெனக் கேறுவதோர்
    சிரமலி யானைதந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 9
    இந்திரன் மால்பிரமன் னெழி
    லார்மிகு தேவரெல்லாம்
    வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
    யானை யருள்புரிந்து
    மந்திர மாமுனிவர் இவன்
    ஆர்என எம்பெருமான்
    நந்தமர் ஊரனென்றான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 10
    ஊழிதொ றூழிமுற்றும் உயர்
    பொன்நொடித் தான்மலையைச்
    சூழிசை யின்கரும்பின் சுவை
    நாவல ஊரன்சொன்ன
    ஏழிசை இன்றமிழால் இசைந்
    தேத்திய பத்தினையும்
    ஆழி கடலரையா அஞ்சை
    யப்பர்க் கறிவிப்பதே

Комментарии • 62