Atheist Philosophy of Carvaka and others ll கடவுளை ஏன் மறுத்தது இந்திய நாத்திகம் ll பேரா. இரா.முரளி
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- #Carvaka,#Indianatheism
இந்திய தத்துவப் பள்ளிகள் எவ்வாறு கடவுள் மறுப்பை முன்வைத்தன என்பது பற்றியும், குறிப்பாக சாருவாகம், பெளத்தம் ஆகிய பள்ளிகள் கடவுள் மறுப்பாக கூறியவை யாது என்பது பற்றியுமான விளக்கக் காணொலி.
நான் பல நாட்களாக தேடிக்கொண்டிருக்கும் தத்துவம் சாருவாகம் கிடைத்ததில் அளப்பரிய மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றி பேராசிரியர் முரளி.
பல மாதங்களாகத் தங்களைத் தொடர்கிறேன்.
இந்திய,உலகத் தத்துவங்கள் மீதான தங்களது பரந்த ஆழமான அறிவு,தமிழ்கூறு நல்லுலகிற்குக் கிடைத்துள்ள அருங்கொடை.
தமிழ்மொழி மீதான தங்களது ஆளுமை எம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.
வணக்கம்,வாழ்த்துகள்.
முற்றிலும் உண்மை, யாருக்கும் சுமையைத் தூக்க விருப்பம் இல்லை சுமைதாங்கியைத் தேடுகிறார்கள். வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே
It
)) oppo l) LPLLPPLLPLLLPi llpppplpppp
👍
Yes including myself.
I have seen videos on Indian philosophy, but your style of explaining complex aspects is easily digestible with good examples. Thanks. Pls continue this good social work to tamil society
சொல்லும் விதம் அருமை.
இது போன்ற உரைகளில் நடுநிலைமையில் பேசுபவர்கள் யாரும் இல்லை.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
இப்படியொரு கருத்துரைகளுக்காக காத்திருந்த காலங்கள் எண்ணிலடங்கா....
என்னால் நம்பவேஇயலவில்லை.
இப்படியொரு காணொளி எனக்கு காணகிடைக்குமென்று.
மிக்க நன்றி .
நான் ஒரு கல்லூரி வகுப்பில் இருந்தது போல் உணர்ந்தேன் நல்ல முறையில் விளக்கினீர் நன்றி.
மிகவும் அற்புதமான விளக்கம். எங்களை போன்ற நாத்திகர் கள் வரவேற்று வணங்குகிறோம்
அன்பு அண்ணன் அவர்களே, நீங்கள் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பு நமக்கு க்கிடைத்த சுதந்திரம் பெரும்பாலும் பல நல்ல நாட்டுப் பற்றுள்ள, அறிவார்ந்த, மூட நம்பிக்கைகளற்ற, நல்ல ஆத்திகர்களின் பெரு முயற்சியால்தான் வந்தது. இல்லாவிடில் இப்போது நாம் இப்படியெல்லாம் பேச க்கூட முடியாது.(நாத்திகர்கள் பொதுவாக வணங்க மாட்டார்கள்) உங்கள் அன்புத்தம்பி. V.கிரிபிரசாத் (68)
@@vgiriprasad7212
s
@@vgiriprasad7212 நல்லது
சீக்கிரம் இளைஞர்களை தெளிவுபடுத்த வேண்டும்
மிகவும் நன்றி
Yes. On Ecological ' Conservation' for our good, rather than this. V. Giriprasad (68)
ஆசீவகம் குறித்து ஒரு பதிவை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறேன்.
உங்களின் விளக்கம் அபூர்வமானது
பெருமைக்குரிய தங்களை வாழ்த்தி வணங்குவதை
பெருமை கொள்கிறேன்
Very good and you can understand it bit by bit. Thank you🙏
அனைத்து நூல்களையும் அலசி மிக மென்மையாக ரத்தம் வராமல் சாட்டையில் அடித்துள்ளீர்கள் மிக்க நன்றி..
இது எல்லாமே நமக்கு தெரிந்தும் ஒரு கட்டமைக்குள்ளேயே பயனிக்கிறோம் என்பது தான் வேடிக்கையானது..
மிகவும் பயனுள்ள தகவல்கள்...
சிந்தனை அறிவு உண்மை தேடல் தாகம் கொண்ட என் போன்றவர்களுக்கு (OSHO Following) மிகவும் பயனுள்ளவை.
இன்றுதான் இப்படி ஒரு RUclips channel இருப்பதை அறிகிறேன்.
மிக்க நன்றி பேராசிரியரே🙏
மிக அருமை சார், தத்துவம் தொடர்பாக ஒரு தமிழ் யூடியூப் சேனல் இருப்பது மகிழ்ச்சி...
தமிழர்களின் உண்மையான வாழ்வியலே நாத்திகம் தான் ஆனால் அதனை பின்னாளில் வந்து மாற்றியமைத்த வந்தேரிகள் பிராமணர்களே, அய்யா உங்களின் இந்த பதிவு உண்மை, அருமை,
அருமை பேராசிரியர் வாழ்த்துக்கள் தொடர்ந்து தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தாங்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🌹
The juice of philosophy is squeezed and given in a silver spoon...Thank you for your noble work sir
இதுவொரு மிகச் சிறப்பான பதிவுகளில் ஒன்று. இங்கு பேசப்படும் தர்க்கமும் விளக்கங்களும் ஒரு பொதுச் சிந்தனையை திறக்கின்றது. நாஸ்திகர்களும் ஆஸ்திகர்களும் பயணம் செய்யவேண்டிய பாதை இது. இந்த வழி அனைவரையும் முடிவற்ற சிந்தனை எல்லைக்கு கொண்டு செல்லும் என நம்புகின்றேன்.. பேரா. முரளி அவர்களின் தர்க்கமும் ஒழுங்கமைப்பும் மிகச் சிறப்பானது. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
அருமையான உரை; தமிழில் அருமையான தருக்க நூல் நீலகேசி உள்ளதே அய்யா , பலதரப்பட்ட தத்துவங்களை அது ஆய்கிற்தே
பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான சிந்தனை விளக்கம். தத்துவங்களை மிகவும் எளிமைப்படுத்தி எல்லோரும் விளங்கிக்கொள்ளும் படி கூறினீர்கள் நன்றி. இறப்புக்குப் பின்பான உலகம் இந்த மக்களிடம் ஆழமாக பதிக்கப்படடு விட்டது. மூடநம்பிக்கைகள் வேரூன்றி விருட்சமாக வளர்ந்து விட்டது. இதை மாற்றுவது மிக கடினம். நிறைய பகுத்தறிவு சிந்தனைகளை வெளியிடுங்கள். பண்டைய தமிழகத்தை மீண்டும் படைக்கவேண்டும் "எறும்பு ஊர கல்தேயும் "என்பது பழமொழி. வஞ்சகர்களால் கல்லாக மாற்றப்பட்ட நம்தமிழ்யினம் தங்களைப்போன்ற தத்துப்பேராசிரியர்களால் சிந்தனையாளர்களாக மாற்றப்படவேண்டும் தொடரட்டும் தங்கள் பணி... தொடர்கிறோம் தங்கள் பின்னால்.
சுட்டசட்டி யறியுமோ கறிகாய் சுவை
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்
----சிவவாக்கியர்.
@@bkbk8348 நட்டகல்லை நடுவில் வைத்து நாலு புஷ்பம் சாற்றியே..
சுற்றி வந்து மொன மொன வென்று சொல்லும் மந்திரம் ஏனடா?. நட்டகல்லும் பேசுமோ நாதன் உன்னுள் இருக்கையில்,,
சுட்ட சட்டி சட்டுவம் கரிச்சுவையரியுமோ?
Prof Murali, you deserve our appreciation and gratitude for presenting the Historical perspective of Indian Atheism!!
Excellent delivery, impeccable presentation. I am sure that your analysis and offerings will open up many people's inquisition!
Thank you
Inquisition ? - maybe we are already suffering from the Union to describe them as Inquisitors!
Professor!
you have done a great job. Not that this discussion is meant for pedestrians. Most learnt persons also have understood better about atheism. Continue the great job you are doing.
In a sense, what you are telling about understanding Atheism by well-read ones is correct ! That understanding about the shortcomings in Atheism may even help to turn their direction and switch over to Theism by making proper comparison. After all, one cannot prove Non-existence too, as some people demand the same for Existence, which is beyond anybody's comprehension in both aspects.(But sometimes pedestrians may understand in a better manner than some people called by a few as intellectuals. That is a different thing.) Regards. V. GIRIPRASAD(68)
Great Murali sir. I am your follower .
வேதாத்திரி மகரிசி அவர்கள் இந்த கடவுள் கோட்பாடுகள் அனைத்திற்கும் ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் அவரது தத்துவங்கள் தேடலுக்கான விடையாக அமையும் என்று உணர்கிறேன். அவரது தத்துவம் பற்றி உங்களை போன்ற தத்துவ ஆசிரியர்கள் விளக்கினாள் மிகவும் உதவியாக இருக்கும் ஐயா..வாழ்க வளமுடன்😇
O lord you are interested in the world
மிகவும் அருமையான உண்மையான பதிவு.பொருள்முதல் வாதம் தான் மக்கள் கடைப் பிடிக்க வேண்டியது. வேதாந்திகளின் மூடநம்பிக்கைகள் அல்ல.
நாம் தமிழர் கனடா
Excellent speech in simple and systematic style on basic explanation of materialism and idealism in indian philosophy,Prof Sri Murali is the Best scholar from MCC at Tambaram where i took MA in philosophy which created turning point in my life and apart from this, Studied as his student in Madura College it is great pleasure for me,
உங்களுடைய விளக்கம் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக உள்ளது நன்றி அறிஞரே
Dear Professor Murali, I come to know your Student of MCC, I am proud to say, iam also did my PG at MCC, Socrates is doing yomen service, your topics are very mind blowing and intellectual, since the lectures are in tamil everyone can understand with immense pleasure. Please keep it up. I am thankful to you for your great interest and beautiful simple language. 👌
ஐயா தங்களின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
Fine
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... ஆனாலும் இந்த சமூகத்தை சிந்திக்க விடாமல் தடுத்து விட்டனர்... இதனால் தான் இன்றும் பகுத்தறிவில் பின் தங்கி இருக்கிறார்கள் இன்றைய மக்கள்
நீங்கள் ரொம்பவும் முன்னேறிவிட்டீர்கள்
U
Yyyýý
Yj
U
Yyyýý
Yj
பகுத்தறிவு என்ற சொல் ஆத்திகத்திலும் உள்ளது. அகத்தை சரியான முறையில் ஆராய்வது. அதுதான் நாத்திகத்தை விட அதை பெரிதும் வலியுறுத்துகிறது. V.கிரிபிரசாத் (68)
Parallel thought to share:
physics starts from energy,
Chemistry from little mass to large no of compounds,
Biology from one cell to animal kingdom's physical evolutionary history,
Psychology about mind,
Philosophy thought processing,
Anthropology individual and social impacts on human race progress,
Religious believes each division take anyone of the above department as their intense focal point .
From that point they try to move to reach the full form but its struck for some people somewhere because of their perceptional limitations or mode of knowledge sharing is limited in those days .thank you for stimulating communication style
அருமையான தெளிவான விளக்கம் ஆங்கில செற்களை தவிர்திருந்தால் மிக எளிமையான இருந்திருக்கும். இந்திய நாத்திகம் புத்தகத்தின் ஆசிரியர் யார் அய்யா. நன்றிகள் பற்பல.
தனிப்பட்ட தேடலைத் தவிர வேறுவழியே இல்லை என்பதே அப்பட்டமான உண்மை.என் நன்றி கள் ஐயா.
Good job Murali. This brings plenty of pleasant memories of our India philosophy classes at Heber Hall (MCC) Dr Rao, BVR & Vidya. Wow strangest place to catch up with a classmate! Small world.
Gopal... It's unbelievable. So glad to catch you here. Please send your email address
@@SocratesStudio thanks for responding. Let's not exchange contact details in here. I will ask Ravikumar to send you my phone # or you can ask him to forward your # to me. Hope you will not mind. Ok?
Ok. Fine
Prof. Murali , I just recently discovered this channel. Strongly I like to , Thank you for your contribution to the society! 🙏
Very good information. Glad to know we had various philosophies like Greeks.
Unfortunately handful of people due to their vested self interests through their proximity to rulers blackened out other schools of thought except vedas.
அதுதான் சிக்கல்.
இது சிகரம் தொட்ட கானொளி. தங்கள் படைப்புகள் மேலும் செழிப்பாக தோன்றி வளர எதிர் பார்க்கிறேன்.
Dr N chitra Tharamangalam
Salem.
ஐயா தங்களது கருத்துரைகள் மிகவும் தெளிவாகவும் பாமரனும் தத்துவங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. உங்களது குரலில் அமைதியான வசீகரம் உள்ளது. உலக பல்வேறு தத்துவங்களை எளிமையாக தெளிவாக சொல்லும் திறன் பாராட்டுக்குரியது. தங்களின் பணி தொடரவேண்டும்.
நான் முன்னர் வாசித்து அறிந்து வைத்திருந்த விசயங்களை அப்படியே நினைவூட்டும் விதமாக சிறப்பான தொகுப்பாகவும், புதிய பல விசயங்களையும் தெரிந்துகொள்ள அருமையான ஆய்வு உரியாய் இருந்தது. நன்றி அய்யா
வாசிப்பு..
வாசி
ஐயா ராகுல் ஜி சங்கிர்தியாயன் லோகாதய தத்துவம் பற்றிய காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இந்திய நாத்திகம் பற்றிய காணொளி மிகவும் அருமை அருமை நன்றி 🙏🙏
உங்கள் நேரமும், வாசிப்பும், அனுபவமும் உங்கள் சொற்களில் மிகுந்து காணப்படுகிறது.... நன்றி... தொடர்ந்து கேட்கிறேன்
மிக எளியமுறையில் கனமான விடயங்களை
தத்துவங்களை விளக்குகிறீர்கள்.
வாழ்த்துகள் பேராசிரியர் 🌹🌷
Wonderful explanation. Orthodox families tell their children how Hinduism is exceptional in co existing with aethism (God deniers) but never explain the philosophical outlook, world view in correct light. Now I know! Thank you for the book reccomendations too.
Carvaca philosophy seems vindicated by modern medicine, neuroscience and all scientific research in a way. Anything that makes physical life easy, increases creature comfort plus questions everything. May be it's taken root in the west in a better way? Countries like Norway / Finland rank top in: aethism, low crime, honesty, wealth and happiness! Land of Carvacas, haha! I'm also tempted to consider Periyar in this light - aethiest in Carvaca sense rather than a God-denier for the sake of it.
Simply amazing. I've listened to this lecture already twice. I shall repeat it many more times until I absorb it thoroughly.
Every one of lectures is a gem!
May your yeomen service continue.
மிகவும் சிறப்பான ஆய்வு
நீண்ட நாட்களின் பின் அறிவியலை என்னை திருப்தி படுத்தியது.உங்களை சில மாதங்களாக பின் தொடர்கிறேன்.அனைத்தும் மிக மிக அருமையான பதிவுகள்.நன்றி ஐயா
நாம் தமிழர் கனடா.
Beloved Prof. Murali, i hv watched your lecture completely, with total attention, your views r unbiased. Its incredible to be balanced on materialism because of the continues propaganda of the vedic institutions. One thing i wanted to share, the original philosophers of Sankhya, vaishesika, and nyaya wr materialists & the later traditions did gone astray, and treacherous... This point sd be mentioned as to honor the original philosophers. I wish your great service to the tamil diaspora wd be successful. My humble blessings.
Thank you
@@SocratesStudio pls say about Russian and French schools of thought
I found it to be unbiased too but I'm looking for lectures on theism by professor and unable to find them. Maybe I'm not looking well enough. Adding to my comment at ruclips.net/video/l_fBmANC3iA/видео.html&lc=UgwIId1l8CCq27_IqrJ4AaABAg I'm looking for a more balanced view of all schools and not just one.
மிக மிக அருமையான பதிவு. பேரா. இரா. முரளி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிரேன். உம்முடைய பதிவுகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்து மீண்டும் நேரம் கிடைக்கும் போது நிதானமாக பார்க்க விரும்புகிறேன். இன்றய இளைய சமுதாயம் இப்படிப்பட்ட அறிவார்ந்த பதிவுகள் பார்க்க ஊக்குவிக்க வேண்டுமென்று, இதை LIKE செய்த அனைவரிடமும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
Such an eye opening and informative module...thank you so much professor..
This is an excellent video. Thanks to Prof. Murali for his deep and extensive description of yester years philosophical thoughts which were prevalent in the society.
இறப்புக்கு பின் கொண்டாட்டம் என்பது உண்மைதான் ஐயா,
எனது சிறு வயதில் எங்கள் கிராமத்தில் பார்த்தது(40 வருடத்துக்கு முன்பு ),
எங்கள் கிராமத்தில் மற்றும் எங்கள் சொந்தத்தில் யாராவது இருந்துவிட்டால் அந்த உடலை எடுப்பதற்கு இரண்டு மூன்று நாள் ஆகிவிடும்,
அப்போது அவர்களின் சொந்தங்கள் மற்ற ஊர்களில் இருந்து வரும்போது கூடவே பறை மொலத்தையும் கூடவே கொண்டு வருவார்கள், அதில் சின்ன மோளம் பெரிய மோளம் வகைகள் உண்டு, அந்த மொலங்கள் இப்போது காண முடிவதில்லை அந்த கலைஞர்களும் அந்த வழி வந்தவர்களும் இப்போது இல்லை, அந்த இறந்த உடலை எடுக்கும் வரை ஒரே பாடல் தான் ஒரே பறை இசைத்தான் கொண்டாட்டமா இருக்கும்,
இப்பொது எல்லாம் சாவை ஒரு தூக்கமாக நினைக்கின்றார்கள்,
ஆனால் இந்த கொண்டாட்டங்கள் சேரிகள் என்று சொல்ல படுகின்ற இடங்களில் இன்னும் இருந்து கொண்டு இருக்கின்றது,
ஐயா அருமை உங்களை போன்ற அறிஞர்கள் இன்றய காலகட்டத்திற்கு மிக அவசியம். நன்றி. வாழ்த்துக்கள் ஐயா
அருமை பேராசிரியர் அவர்களே... நன்றி 🙏
ஆதிநிலை அறிவியலின் அழிவுக்கு அத்வைத ஆதிக்கம்தான் காரணமோ என்று யோசிக்க வைப்பதாக இந்தக் காணொளி அமைந்திருக்கிறது. பாராட்டுகள்.
அத்வைதத்தின் ஆன்ம சிந்தனையை அங்கீகரிக்கும் விதமான அறிவியல் போக்கு இன்று ஆங்காங்கே தென்படுகிறது. இது குறித்து விளக்கும் காணொளியொன்றை ஏற்பாடு செய்ய இயலுமா?
சிந்திக்கவைக்கும் அரும் கருத்துக்கள்.நன்றி Dr.முரளி அவர்களே.
ஐயா ஐயா தங்களின் கருத்து மிகவும் சிந்தி சிந்திக்கக் கூடியதாகவும் புதிய சிந்தனை கூறுகளை திறந்துள்ளது நன்றி...தங்களின் கூறுவதில் இருந்து பரம்பொருள் கடவுள் மறுப்பு என்பது இன்று குலதெய்வ வழிபாடு உருவ வழிபாடு யாவும் அதன் பிந்தோன்றல் என்றே தோன்றுகிறது.
A great intellectual contribution. greatly appreciate. புதிய விஷயங்கள் பல தெரிந்து கொண்டேன். நன்றி
முரளி சார் ,
தங்களின் விளக்கம் மிக அருமை.
எந்த அளவிற்குத் தாங்கள் படிக்கின்றீர்கள், சிந்திக்கின்றீர்கள்
என்பதும் அவற்றைத்தொகுத்து வழங்கும் திறமை மகத்தானது.
முத்துராமன்.
எடின்பரோவிலிருந்து.
அருமை ஐயா... தமிழில் எளிமையாக தத்துவத்தை பற்றி விளக்க அளித்த முதல் நபர் என்ற பெருமை உங்களை
மட்டும் சாரும் அய்யா..🎉
Thank you Professor, I really enjoyed your presentation and appreciate your initiative.
வணக்கம். உங்கள் காணொளிகளைத் தொடர்ந்து பார்க்கிறேன். மிகவும் அருமை.
அருமையான கருத்துகள், விளக்கங்கள். மிக்க நன்றி.
ஆரம்பம் என்பதும் முடிவு என்பதும் அணுக்கள் முதல் அண்டவெளி வரை இல்லை, ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் இணைந்து வேறு பொருள் உருவாகும் இந்நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை, இது நாம் அறிந்த அறிவியல் உண்மயும்கூட,,எனவே தன்னால் உருவாக்கும் ஆற்றலை இயற்கை பெற்றுள்ளதால், கடவுள் உருவாக்கினார் என்பது கற்பனையானதுதான்.சிந்தனையை வளர்க்கும் இதுபோன்ற காணொளிகள் இன்றைய முக்கிய தேவையாக இருக்கிறது தோழருக்கு நன்றி
A real teacher. It is long time since I listened to such a dispassionate discussion. May God, if there is one, bless you!
தெளிவான கருத்து
அருமை அறிவின்
பெருமை
மிக தெளிவான கருத்துக்கள் ,சிந்திக்க வேண்டியவை ,செயல்படுத்த வேண்டியவை! இத்தனை நாள் இந்த சேனல் ஐ தவற விட்டு விட்டேன்!
எல்லா காலங்கலிலும் வேதம் வேதாந்தம் ஆன்மிகம் என்று சொல்லி மக்களை மடையர்கள் ஆக்கினால் தான் சிலரால் வாழ முடியும்.. பகுத்தறிவு பரவட்டும் மேலும் மேலும் உங்கள் வழியாக பரவட்டும் நன்றி ஐயா… 🙏
நாத்திகரகளுக்கு மறு பிறப்பு நம்பிக்கை கிடையாது ஆன்மீகத்தில் மறுபிறப்பு உண்டு அந்த மறுபிறப்புடன் தொடர்புடைய ஆன்மா தொடர்புடைய படைப்புகளே ஆன்மீகம் இது மூளை வளர்ச்சி உள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.. மீதி உள்ளவர்கள் நாத்திகர்கள்
Very useful and needful it's more valuable.. our timil people have the responsibility to lead it
மிக மிக அற்புதமான பதிவு. நன்றி!தொடர்ந்து பதிவிடுங்கள் அய்யா !
"சுழன்றும்"ஏர்பின்னது உலகம்.
-----திருவள்ளுவர்.
தங்களுடைய அறிவு விளக்கப் பணி பரவலாகச் சென்று பெரும்பான்மை மக்களை அடைய வேண்டும். நன்றி.
மிகச் சிறப்பான பதிவு, தத்துவாசிரியர்களின் பெயர்களை குறிப்பிடும் போது . அவர்களை பற்றிய ஒருவரி குறிப்புகள் தரவுகளாக தந்தால், அவர்களின் தத்துவ கோட்பாடுகளை தேடி படிப்பதற்கு பெரிதாக உதவும் . நன்றி
First time iam listening to other philosophical thoughts....Thanks very much sir....
மிகவும் அருமையான விரிவாக்கம் இவரை பல கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்
He has served as a Head of the department of Philosophy and then Principal of Madura College ,Madurai.
Excellent and broad explanation. Interesting. I appreciate your knowledge by Baskaranips iGP Rtd
Excellent presentation. Thank you Sir. Unfortunately today's politics totally bans us from original thinking
Professor it will be very much helpful if you add reference books for each school of philosophy at the end of the video. You are doing a great job. Thanks
Sir, I am raju from Bangalore.
I really enjoyed your video. I like your way of touching philosophy only on surface.
Thanks
ஐயா வணக்கம்!
ஒரு சில கருத்துக்கள்....
1. புத்தர் "தம்மபதம்" என்ற நூலை படைத்திருக்கிறார். அதனை முழுமையாக முறையாகப்படித்தால் புத்தரின் தத்துவங்களை அறிந்துகொண்டு சரியான முடிவுக்கு வரலாம். மேலும் புத்தர் எந்தமதத்தையும் உருவாக்கவில்லை. உருவாக்கச் சொல்லவுமில்லை.
ஆனால் பின்னர் வந்தவர்கள் புத்தமதம் என்ற பெயரில் முற்றிலும் தவறான கோட்பாடுகளைக் கொண்ட பல புத்தமதங்களை உருவாக்கி இருப்பதைக் காணலாம். உ-ம்: புலால் உண்ணும் புத்தமதத்தவரும் இருக்கத்தான் செய்கிறார்கள். புத்தருக்கும் இன்றைய புத்தமதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லாமைதான் உண்மை நிலை.
2. தங்களுடைய ஆதிசங்கரரின் வேதாந்த விளக்கங்கள் சரியான திசையில் சர்ச்சிக்கப் படவில்லை என்றே சொல்லவேண்டும்.
உதாரணமாக கயிறு - பாம்பு விளக்கம் ஆதிசங்கரர் எடுத்துக்கொண்ட விதத்தில் பார்த்தால்தான் அதன் சிறப்பை பாராட்ட முடியும். எளிமைப்படுத்தும்(trivialisation) நோக்கத்தில் மெய்யான பொருளை தவற விடலாகாது என்பது எனது கருத்து. விளக்க வேண்டுமானால் இங்கே சாத்தியமில்லை. email id கொடுத்தால் விளங்கச் செய்யமுடியும்.
3. பகவத்கீதையில் 'குணகர்ம' என்று தாங்கள் குறிப்பிட்டது முன்வினைப்பயனை குறிக்கும் சொல் அல்ல. செயல் என்ற பொருளில்தான் கர்ம என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
மேலும் பல கருத்துக்கள் இருப்பினும் இடம் கருதி முடிக்கிறேன்.
4. தங்களுடைய கருத்தை மையமாகவைத்துப் படித்தால், இந்திய வேதாந்த நூல்களால் அதற்கு பதில் தரவே முடியாது. தங்களுடைய கருத்துக்களை முற்றிலுமாக ஒருபுறம் வைத்துவிட்டுத் திறந்த மனதுடன்- தெளிவடையும் வரை(சிரத்தை என்று சொல்லப்படுகிறது) பயின்றால் வேதாந்தம் மிகமிக எளிது. இங்கே இப்போதே அடைய வேண்டியதை மட்டும்தான் வேதாந்தம் சொல்லியருக்கிறது என்பது விளங்கும். எங்கோ எப்போதோ அடைய வேண்டிய விஷயத்தை இந்திய வேதாந்தம் சொல்லவேயில்லை. திறந்த மனமும் தெளிவடையும் வரை பொறுமையும் மட்டும் தேவை என்பதை சொல்ல விரும்புகிறேன்.
5. தத்துவம் சார்ந்த சமயங்களையும் நம்பிக்கை சார்ந்த மதங்களையும் மற்றும் பலபல சிறிய சித்தாந்தங்களையும் ஒரே தளத்தில் வைத்தப் பார்க்கவே இயலாது. அவரவர் பாதையில் அவரவர் சென்றால் தான் உயிர் இந்த கூட்டைவிட்டுச்செல்லும் முன் அமைதியாக வாழ்ந்துவிட்டுப்போக வாய்ப்பு உள்ளது.
அவரவர் பாதையே அதனதன் இடத்தில் மிகவும் சிறந்த பாதையாகும்.
ஒன்றை மற்றொன்றுக்கு பொறுத்துதல் தத்துவப்படி இயலாதது.
எந்த சமய /மத கோட்பாடுகளும் மனித நேயத்தையும் உயிர்களிடத்து அன்புகாட்டுவதையும் அடிப்படையில் வலியுறுத்தாமலில்லை.
ஆயினும் மனித இனம் அவைகளை பொருட்படுத்தாமல் பொருளை நாடியே பெரும்பாலும் பொழுதைக் கழிக்கிறான்.
மனிதனுக்காக மதமே தவிர மதத்திற்காக மனிதனில்லை.
ஒருவர் மற்றவர் பாதையில் வருவதால் திசை தெரியா பயணமாகவே சென்று கொண்டிருக்கிறது.
Thank you so much for your wonderful explanation. Helps us to think further.
@@SocratesStudio You are great for having not mistaken me for my comments. I felt scholars like you can easily bridge the gaps that exists, in the name of all sorts of spiritual diversities which are purely a psychological / notional entity and they don't have any substratum of any sort(but still they are useful for inner transformation in one's psychological plane). Philosophy in spirituality is meant for individuals and not to be used for "group dynamics", but unfortunately it is wrongly used for groupism upto an extent of 90%(approx) by people all over the world.
If these gaps are bridged then we can see the riches of Africa is shared / enjoyed by everyone by treating them as richest people on this planet. Now we see Africans as people of poverty, inspite of they being richest on this earth.
The real revolution would be on the day when we gracefully treat everyone/everything on this globe with their due respects in tact.
Thank you!
மிகவும் சிறப்பு மிக்க மிகச் சிறந்த பதிவு.
மனிதகுலம் உங்கள் கருத்துக்களை ஏற்று நல் வழியில் செல்ல உபயோகமாக இருக்கும்.
தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா.
இந்த காலகட்டத்தில் இந்த பதிவு உலக மக்கள் எல்லோருக்கும் சேரவேண்டிய பதிவு.
Such arguments have been defeated. Even science is proving existence of consciousness as the ground of all beings.
இந்திய தத்துவ இயல் தமிழில் அறிய தங்கள் வலை ஒலிகள் அருமையான பதிவுகள்! தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்!
வைசேஷிக்க பற்றி ஒரு விளக்கம் அளிக்க வேண்டும். இது நமது சித்த மருத்துவத்தோடு தொடர்புடையது! ஆகையால் தமிழர் அறிவியலை திருடி விட்டார்கள் என தோன்றுகிறது! அன்பு கூர்ந்து விளக்கவும்!
This is the first video of yours I happen to watch. Immediately Subscribed.
சூப்பர். Well organised and articulated. While we have so many illiterate Samiyars, why we don't have Philoscientists Team against it. It is time to project the good work of people like you. We are all with you.
மிக அருமையான அறிவு சார்ந்த பதிவு. மிக்க நன்றி.
Beautiful presentation, thank you, I like to view more presentation from you.
Happy to see such videos in Tamil.
ஆஹா! பெரிய தத்துவ வரலாறு- மிக எளிதாக விளக்கியுள்ளீர்கள் !
நல்ல பதிவுகள் தருகிறீர்கள் நன்றி.
Nastika- Atheism: Charvaka, Buddhism, Jainism are treated as Nastika.
Indian tradition doesn't suggest they are Atheists, merely that they rejected the authority of the Vedas 🙏
ரொம்ப அருமை சார். தமிழக, இந்தியத் தத்துவத்தை எளிய முறையில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். இவற்றுள் தமிழகத்தின் பங்கை விளக்க இயலுமா? தங்கள பணி தொடர வேண்டும்..
பல நாட்கள் கழித்து சிந்தனைப்பள்ளிகள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது
Kindly start a channel in podcast and just upload the audio files of these videos. These contents will work well in podcast Spotify
நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி
மிகவும் அருமையான விரிவுரை. சமூகத்தை திருத்தக்கூடியது . நன்றி தோழர்
நாம் தமிழர் கனடா
Without insisting your views, you are intelligently speaking.
Wonderful account Prof Murali in your typical clear language. So informative. But in a world where only a few that have the ability to think we have a long way to go.
Best summed up one. Great video.
ஐயா முரளி அவர்களே, உங்களின் பேச்சு என் மூச்சையே அடக்கப்பார்க்கிறது.நீங்கள் பல தரப்பட்ட மேதைகளின் கோட்பாடுகளையும் படித்திருக்கிறீர்கள்.நான் படிக்காதவன்.கொஞ்சம் தமிழில் மட்டுமே பேச,எழுத,படிக்கத் தெரிந்தவன்.நான் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக மாயையின் கையில் மனிதனின் குரல்வளை, மாயினியின் கையில் மனிதனின் உயிர்நிலை என்ற தலைப்பில் என் ஆறாம் அறிவிற்கு எட்டியவரை சிறிது, சிறிதாக எழுதி கையெழுத்து பிரதியாக வைத்திருக்கிறேன்.இன்றுதான் நான் எழுதி வைத்திருப்பது சாருவாக எழுத்துக்கள் என்பதை உணர்கிறேன்.இருந்தாலும்,அதையும் தாண்டி என் ஆறாம் அறிவின் எழுத்துக்கள் பெண்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.தமிழின், தமிழனின் உண்மையும் வெளிக்கொணரும் வகையில் இருக்கிறது.உலக ஒற்றுமையின் திறவுகோல் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்கிற முடிவுகள் தான் என் எழுத்து தருகின்றன.இதை ஆண்கள் ஏற்றுக்கொண்டால் இந்த உலகமே வியக்கும் வண்ணம் ஒற்றுமையும்,உலக சந்தோசமும் என் கண் முன்னேயும், ஆறாம் அறிவின் உள்ளேயும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.இந்த உண்மையை என் எழுத்துக்களின் தலைப்பே இப்போது தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.என்னால் என் எழுத்துக்களை வெளிக்கொணரும் சக்தி இன்னும் எனக்கு கிடைக்கவில்லை என்பதுதான் என் துரதிஷ்டம்.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மையானால் ஓர்நாள் இவ்வுலகம் நேர்வழியில், ஒற்றுமையுடன்,சந்தோசமாக பயணப்படும் என்பதுவும் உண்மையாகக் தானே இருக்க முடியும்.நாளை நல்லுலகமே போற்றக் கூடிய தமிழை இன்றே எனக்குத் தந்த தரணியின் தாயாம் தமிழ்த்தாய்க்கு உலக ஆறாம் அறிவின் சார்பில் என் வணக்கங்கள், நன்றிகள்.நான் சாருவாகன் என்று உணர்த்திய நண்பர்,மேதகு முரளி அவர்களுக்கு இந்தப்பூனையிடமிருந்து,யானையளவு நன்றிகள்.வெல்க ஆறாம் அறிவு.
ஐயா. நல்ல பதிவு. என் சிற்றறிவிற்கு எட்டியது - மொழி கண்டுபிடிப்பதற்கு முன் இருந்த ஆதி குடி மக்கள் சிந்திக்க தொடங்கியபோது சுற்றுபுற நிகழ்வுகளை கண்டு வியந்து தன்னை மீறிய ஒருசக்தியால் அனைத்தும் இயற்கையாக இயங்குவதை உணர்ந்து அதன்மூலம் இயற்கையை வணங்க ஆரம்பித்தான். பின்னாளில் மொழி தோன்றியபின் . பல்வேறு நிலைமாற்றங்கள் ஏற்பட்டு ஒருவர் கூற்றை மறுதலிப்பது தோண்றியது அதன் தொடர்ச்சியாக கடவுள் என்ற பெயரும் அதை மறுப்பதும் ஏற்பட்டு தொடர்கிறது . பண்டமாற்று முறையும் பணமும் இல்லாவிட்டால் உலகம் அனைவருக்கும் பொதுவாக ஏற்றத்தாழ்வின்றி நிம்மதியாக தூங்கி வாழ்க்கையை நிறைவு செய்திருப்பார்கள். பொருள் பற்று இருந்திருக்காது . பிறிவினை இருந்திருக்காது. அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலக அழிவுகாலம் நிர்ணயிக்க பட்டதை விட மிகமுன்னதாக அழியும் என்பதே உண்மை மேலும் ஆன்மா, என் தாய் இறப்பிற்க்கு பின் நடந்த உண்மைகள் விருப்பம் தெரிவித்தால் பதிவிட கடமைபட்டுள்ளேன். வாழ்த்துக்ககள். நன்றி.
What an explanation sir super and salute for the details and made it available in youtube atleast infuture this may help the intrested to explore further more or take it forward.
Yes you are doing great 👍 job we learning some we keep supporting, you Thanks.
Great! nice to hear this kind of speech, thoughtful sharing.
14:10 6 types of Pramanas (Shadpramana/ அறுவகைச் சான்றுகள்):
1) Pratyaksha- ப்ரத்யக்ஷம் (perception) = புலனுணர்வு
2) Anumana- அனுமானம் (Inference) = உய்த்துணர்வு
3) Upamana- உபமானம் (Anology) = ஒப்புநோக்கு
4) Arthapatti- அர்த்தாபத்தி (Assumption) = சூழ்நிலைச்சாருய்த்துணர்வு
5) Anupalabdhi- அனுபலப்தி (Apprehension) = எதிர்மறைச்சான்று
6) Shabda- சப்தம் (Verbal Testimony) = உரைச்சான்று
மிக அருமை , எளிமை, வாழ்த்துக்கள்....
அறம் பொருள் இன்பம் இது மூன்றும் சேர்ந்ததே வீடு ..
அறம் செய்ய தனியாக யாரும் விரும்புவதில்லை தன் துணையோடு தான் அறம் செய்வார்கள்..
இறைவனை அடைய ஐந்து பஞ்ச பூதங்களையும் அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை உன் உள்ளே நீ காணலாம்..
மெய் வாய் கண் காது மூக்கு இவை ஐந்தும் கட்டுபடுத்தி இறைவனை உன் உள்ளே பார்கலாம்
@MURUGAN S போய் சித்தர் திருமூலர் எழுதி வைத்து உள்ள திருமந்திரம் படி.....திருமூலர் வேதங்கள் பற்றி புகழ்ந்து சொல்லி உள்ளார்.... சாம வேதம் காயத்திரி மந்திரம் தத்துவமசி மஹா வாக்கியம் எல்லாம் பற்றி சொல்லி உள்ளார்....