SRI MAHALAKSHMI ASHTAKAM sarvamangala
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- கடந்த பதிவில் தடைகள் விலக மந்திரம் பார்த்தோம் தடைகள் நீங்கினாலும் அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருக்கும் மஹாலக்ஷ்மி கடாட்சம் வேண்டும் மஹாலக்ஷ்மி கடாட்சம் என்பது நாம் நினைப்பது போல வெறும் காசு பணம் மட்டுமல்ல
நோய் நொடி இல்லா வாழ்க்கை நம் குழந்தைகளுக்கு உரிய காலத்தில் கிடைக்கும் கல்வி, நமக்கு உரிய காலத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள்,போன்றவைகளும் மஹாலக்ஷ்மியின் அருள் தான் சிறு உதாரணம்-நம் முன்னோர்கள் அஷ்டலக்ஷ்மியில் ஒரு லக்ஷ்மி என்று கூறுகின்றனர் ஆம் வீரமும் லக்ஷ்மி தான் ஒரு குறிப்பிட்ட தொகை (பணம்) கையில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம் அதை ஒருவர் நம்மிடமிருந்து பறிக்கும் வகையில் அதை திரும்ப வாங்குவதற்கு வீரம் (தைரியம்) வேண்டும் அல்லவா ஆகவே நமக்கு மஹாலக்ஷ்மி கடாட்சம் நேர்மையான வழியில் கிடைக்க வேண்டும் என்றும் கிடைத்த பிறகும் புத்தி மாறாது அற நெறியில் இருந்து பிறழாமல் வாழவும் வேண்டி ஸ்ரீ மஹா லக்ஷ்மி தேவியை ப்ரார்த்தித்து வணங்குவோம் (அவன் அருளாலே அவன் தாள் வணங்கி)
🙏🙏🙏🙏
Tq so much
🙏🙏🙏
Superb na
ஓம் மஹா லக்ஷ்மி தேவி நமோஸ்துதே சரணம்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
மகாலட்சுமி நமோஸ்துதே