இறந்தோர் திருப்பலி பாடல்கள் | Holy Mass Songs # death anniversary | Dhanam Sebastian | Inbaraj
HTML-код
- Опубликовано: 8 окт 2024
- இறந்தோர் ( நினைவு ) திருப்பலி பாடல்கள்
வருகைப் பாடல்
இறைவா! இதோ வருகின்றோம்.
இறந்தவர்க்காக இறைஞ்சுகின்றோம்.
இறைவனுன் இரக்கம் கேட்கின்றோம்.
இரக்கத்தின் பலியினில் இணைகின்றோம்.
உம்மிலே நம்பிக்கைக் கொண்டார் இவர்
உம் வார்த்தை வாழ்ந்திட முனைந்தார் இவர்
உணவென உம் உடல் குருதி பெற்றார் - இவர்
நிலைவாழ்வடைய வேண்டுகின்றோம்.
திருமுழுக்கினிலே தெரிந்து கொண்டீர்- இவர்
பிழைகளை ஒப்புரவில் மன்னித்தீர்.
திருவுடல் திரு ரத்த உணவு தந்தீர் - உம்
திரு முகம் காண இரங்கிடுவீர்.
தியானப் பாடல்
( திருப்பாடல்கள் 103, 25, 27,116 சார்ந்து )
இரக்கமும் அருளும் நிறைந்த
மீட்பர் இயேசுவே!
இறந்தோர்க்கு இளைப்பாறுதல்
தாரும் தெய்வமே!
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர் - நம்
பாவங்களுக்கு ஏற்ப நம்மை - அவர் நடத்துவது இல்லை - நம்
குற்றங்களுக்கேற்ப நம்மை - அவர் தண்டிப்பதும் இல்லை.
தந்தை தமது பிள்ளை மீது
இரங்குவது போல்
உமக்கஞ்சிய இவர் மீது
இரங்கிடுமே.
ஆண்டவர் உம் இல்லம் நாடியே - வரும்
இவரின் மீது இரக்கம் காட்டுமே - இவர்
பாவங்களை மன்னித்திடுமே - பரத்தில்
நிலை வாழ்வை நல்கிடுமே.
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு
அவரது பார்வையில்
மிக மதிப்புக்குரியது.
உண்மையாக உமது ஊழியன் - இவர்
கட்டுகளை அவிழ்த்து விடுக .
உண்மையாக உமது பணியாள் - விண்
கரை சேர வரம் அருள்க.
காணிக்கைப் பாடல்
நித்திய சாந்தி அளித்தருளும்- இறைவா
நீர் இவர் பரிசாய் இருந்தருளும்.
உம் மகன் இவர்க்கென உயிர் துறந்தார் - தன்
உதிரமும் உடலும் பலி ஈந்தார்.
இறப்பில் அவருடன் ஒன்றித்த இவர்
உயிர்ப்பிலும் இணைந்து மாட்சியுற
ஜெபங்களும் புகழ்ச்சி பலிகளுமே - யாம்
செய்தோம் இறந்தோர் சாந்தியுற
எம் பலிப் பொருள் இதை ஏற்றருளும் - நீர்
எளியர் எம் ஜெபங்கள் கேட்டருளும்.
திருவிருந்து பாடல்
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே !
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார். இளைப்பாற்றி கொடுக்கின்றார்.
1. வரும் வழி பார்த்தவராய்
வரம் மழை பொழிந்தவராய்
வந்தவர் இருக்கின்றார்
விரைந்திட தாமதம் ஏன்?
2. துயரினில் ஆறுதலாய்
நோயினில் மருத்துவராய்
அடிமையின் விடுதலையாய்
ஆண்டவர் இருக்கின்றார்....
தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோர்க்கு - ஓயா
தஞ்சமும் ஆதரவும் நீயே!
தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
திருத்தயை கேட்க நீயோ அறிந்து -( தம )
திரித்துவ தேவன் முகம் கண்டு - என்றும்
துதித்திட அருள் செய்வாய் புரிந்து.
தான தர்மங்கள் மண்ணில் புரிந்தார் - பிறர்
தவறு பொறுத்து மன்னிப்பளித்தார்.
தாசர் யாம் இன்று செய்யும் ஜெபங்கள்
இயேசு திருப்பாதம் சேரும் நேசத் தாயே.
தாய்விட்டுப் பிள்ளை நிற்கலாமோ - உந்தன்
தயை விட்டால் துயர் விட்டுப் போமோ ?
தூய கருணை நிறை தாயே - இவர்
துயர் போக்க பரிந்துரைப்பாயே. - Видеоклипы
அற்புதம்❤
நன்றி. இயேசுவுக்கு புகழ்.
சிலுவைப்பாதையின் நாட்களுக்கு சிறந்த பாடல்கள், மிக நல்ல பாடல்கள், 👌🏿🙏🙏🙏
நன்றி அண்ணா.
அர்த்தமுள்ள பாடல்கள். ஏற்கனவே கேட்டுப் பழகிய பாடல்களில் சில வார்த்தை மாற்றங்களோடு புதிதாக இசைத்திருப்பது நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. நல் முயற்சி.
நன்றி நண்பரே தங்களது மனந்திறந்த பாராட்டிற்கு.
மிகவும் பயனுள்ள பாடல் தொகுப்பு.
நன்றாக இருக்கிறது.
மகிழ்வும் நன்றியும் கவிஞரே.
எல்லாப் பாடல்களும் சிறப்பு.முதல் பாடலிலும் கடைசிப் பாடல்களிலும் செய்த திருத்தங்கள் அர்த்தமுள்ளதாகவும்,உள்ளத்தை தொடுவதாகவும் உள்ளது.பாடியவர்களனைவரும் சிறப்பாக பாடியிருக்கிறார்கள். நித்திய சாந்தி..... ரசித்து கேட்டேன்.உள்ளூர் கோடாங்கிகளையும் நம் மக்கள் ரசித்து ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.
இயேசுவுக்கே புகழ். மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரரே. நெஞ்சார்ந்த நன்றி தகுந்த விமர்சன பதிவிற்கு.
Last song thaniya poda mudiuma sir
Okay sir. I will do it.