கதறிய மக்கள்! காப்பாற்றிய முசுலீம்கள்! உண்மையை மறைச்சிட்டீங்களே மாரி செல்வராஜ் ! JEEVA CINEMA |
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- #jeevacinema #vazhai #maariselvaraj
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....
Jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
🎉
ஆனா ஒன்னு மட்டும் நல்ல தெரியுது .. நேரடியாக ஒருத்தன் எதிர்க்கிறான் படம் நல்லவே இல்லைனு படமே பார்க்காமல் கூட சொல்றான் .. ஆனால் ஆதரிக்கிற மாதரி ஆதரிச்சி வஞ்சகமா பேசுர உங்களை போல உள்ள நபர்களை பார்த்தால் தான் கோபம் வருது
Thayavu seithu oorla chumma irukuravanalam kupitu eaththu vitham pananumnu panathinga bro...
Mani Nadar congras sathankulam thoguthi MLA
Jeeva sir , vanman kottum bothu amaithiya iruthingana uungalayum santhega pada thonuthu.. Mari point of view thaan movie.!!
இந்த படத்தில் மாரி அவர்கள் உண்மையில் சிலவற்றை காட்டவில்லை, மறைத்து விட்டார் என்று யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எந்த நிகழ்வு நடந்தாலும், அங்கு அருகில் உள்ளவர்கள் தான் எல்லா நிலையில் இருந்தும் எல்லாவகையிலும் உதவி செய்ய முடியும்.
இது மனித நேயம்.
மாரி சொல்ல வருவது, ஏழ்மையில் உள்ள மக்களின் கடினமான வாழ்வியல் .
Po da dai
@@dineshkumarv6659நீ போடா . படம் விபத்து
அதோட கதை முடிகிறது.அவ்வளவு தான்.அடுத்தபடத்தில்
காப்பாற்றும் கதையை எடுப்பார்.
Enna valviyal konjam sollen
அதாவது... தன் இனம், தன் மக்கள்! ஏன்! சமூக ஒற்றுமை என்று அனைத்து மக்களும் காப்பாற்றினார்கள் என்று எடுத்துயிருக்களாமே!?
எல்லாத்தையும் விசூவலாக கொண்டுவர முடியாது என்று நினைத்திருந்திருக்கலாம். படத்தின் நீளம் அதிகமாக இருக்குமே என்று கருதியிருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயரத்தை எளிதில் கடந்துசென்ற நம்மை மறுபடியும் நினைகூற வைத்திருக்கிறார் மாரி. அது பாராட்டக்கூடியது தானே? இதேபோல் எத்தனை சம்பவங்களை நாம் கடநது மறந்திருப்போம்.
ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து சொல்லப்பட்ட கதை அது.. நீங்கள் சொல்லும் பகுதி எல்லாம் அந்த கதைக்கு அவசியமற்றது இது என் கருத்து. வழக்கம்போல் ஜீவா தன் விஷம வன்மத்தை கொட்ட வாய்ப்பு கிடைத்ததை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.. வாழ்த்துக்கள்..
ஏம்பா ஜீவா... நீதான் படத்தை அப்படீ இப்படீன்னு செதுக்கிட்டாரூ... அசத்திட்டாரூன்னு பையன் டீச்சர்கூட மாவரைக்கற சீனையெல்லாம் சிலாகிச்சி கூவுன?!😂 இப்ப உப்பு பத்தலை.. மொளகா போடலைன்னு ! 😂😂😂
எல்லாம் வியூஸ் பிச்சைக்காரர்கள்😂
மிகவும் ஆரோக்கியமான நாகரீகமான பதிவு நிச்சயம் இயக்குனர் மாரிசெல்வராஜ் இதற்கான தகுந்தபதிலை தருவார் என நம்புகிறோம்.
எங்கள் ஊர் அருகிலுள்ள பேட்மாநகரம் சார்ந்த தகவல் பாராட்டுக்குரியது.
செய்யதுமீரான்.
காயல்பட்டினம்
ஜீவா, உங்கள் மேல் இருக்கும் மதிப்பை குறைதுகொல்லாதீர்கள்😢😢😢
ஜீவா,இந்தபடம் ஓடவில்லை எனில் இந்த விவாதமே செய்து இருக்கமாட்டீர்கள் சில நாட்களாக மாரிசெல்வராஜை புகழ்ந்தீர்கள் இந்த தற்குறியை பேட்டி எடுத்து உங்க தரத்தைகுறைத்துக்
கொண்டீர்கள்
படத்தில் யாரும் காப்பற்ற வில்லை என்று கூறவில்லை இது போன்ற நிகழ்வில் இறந்து விட்டார் என்று தான் கூறுகிறார்
Suffer ungaluku mattum iella puliyakudi people pavaum iella ya
உண்மை.கதையில்
இறப்போட முடிந்தது.
Exactly
Jeeva மாரியின் வலி இதுல நீங்க ஏன் ஜாதி மதம் நு நுழைக்கிறீங்க
சாதி மதத்தை யாரும் நுழைக்க முடியாது அவருக்கு நடந்ததை சொல்லும் போது அவரை சுற்றி நடந்ததையும் சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் உண்மை தானாக வெளியே வந்து விடும்.அது சம்பந்தப்பட்டவரை சங்கடத்தில் தள்ளிவிடும்.
யாரின் வலியோ தியேட்டரில் பணமாக்கப்படுகிறது.பின் தங்கியவர்களின் முகமூடி இவர்களின் வசதியை செல்வத்தை பெருக்குகிறது.டீ குடிப்பது டம்ளரில் தான் என்றால் குடிப்பவனே அதை கழுவவேண்டும். இதுதான் உண்மையான சமுதாய நீதி. கடைக்காரன் டீ கிளாசை கழுவுகிறானே அதை எந்த தீண்டாமையின் சேர்ப்பது? எல்லா சமுதாய மக்களும் தியேட்டரில் பார்ப்பதால் தான் நீ காசு பார்க்கிறாய்.
மறைக்கணும்னு நினைத்திருக்கமாட்டார். டைம் ஒதுக்கீடுனால படம் நீளமா போயிருமோனு யோசித்திருக்கலாம்.சொன்னா பல விஷயங்களை சொல்லியாகணுமே. ஒன்ன சொல்லி ஒன்ன சொல்லாம விட்டா குறையா போயிருமோனு நினைத்திருக்கலாம். எல்லாத்தையும் சொல்ல 2.45 மணிநேரம் வேணும்னு கூட நினைத்திருக்கலாம்.
Unaku sathagama visayatha matum kata koodathula. Nethan plan pananum. Matha sathi help panalainu katrathu thapu thana
விபத்து நடந்து சிலர் இறந்து, சிலர் தப்பிய நிலையில்தான் படம் முடிகிறது, ஊரில் உள்ள எந்த ஜாதி ஜனங்கள் வந்து காப்பாற்றுவது போல் படத்தில் இல்லை, அறிவலிகள்
@@rajasekaran5540படத்தின் கடைசியில் இஸ்லாமியர்கள் இருப்பார்கள்
சாதிபாக்காம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக காப்பாற்றினார்கள் என சொல்லி இருந்தால் மக்களிடையே ஒற்றுமை ஓங்கி ஒலிக்கும் தீயது நடந்தால் பல தடவை சொல்லும் நல்லத பாரட்ட மனம் வரவில்லையோ.
வண்டியில், தவறாக பயணம் செய்ய வச்சி, உயிர் பலி வாங்கிட்டு.. வண்டியில் இப்படி போவது "சகஜம்" என்று நியாய படுத்துகிறீர்கள்.. அதை தவறு என்று ஒரு வார்த்தை கூட நீங்கள் ஏன் சொல்ல மாட்டிக்கிறீங்க 🤔
வாழையை பார்த்தவர்கள் வாயார வாழ்த்துகிறார்கள் ... மாறாக பார்க்காதவர்கள் தான் ... வார்த்தையில் வாள் எடுத்து வீசுகிறார்கள் ...
படத்தின் வெற்றியை தடுக்க நினைக்கும் சில வயிறெரிசல் கொண்ட நபர்களில் இவரும் ஒருவர்.
வாழை படத்தின் மூலம் மாரிசெல்வராஜுக்கு கிடைத்த லாபத்திலிருந்து விபத்தில் இறந்த மற்றும் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யவேண்டும்
ஒரு விபத்து நடந்தால் உதவுவது மனித நேயம். அதை சொல்லிக்காட்டுவது உங்களுடைய சிறுபிள்ளைத்தனம். வாழைபடம் மக்களின் கடின வாழ்க்கையைக் காட்டுகிறது. அதற்கு பின்னால் நடந்ததை காட்டவில்லை .
இதே போல் தான் ஜெய் பீம் உண்மை கதை என கூறி அப்பாவி மக்கள் மீது பழி சுமத்தினார்கள்....
சாதி வெறியர்கள்
அந்த சிறுவனின் பார்வையில் கதை.... அடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்சும் சொல்வாங்க... நாங்கதான் ஊசி போட்டோம் எங்களை விட்டுட்டாங்கன்னு...😂😂😂
ஒரு சின்ன பையன் கண்ணுக்கு என்ன தெரியுதோ அதை வைத்து தான் படமா எடுத்து இருக்காங்க இவரைப் பார்த்து நான் மூத்த பிசாசு தெரிகிறது அவர் வயசுக்கு என்ன தெரியுதோ அதுதான் அவர் சொல்ல முடியும் மாரி செல்வராஜ் சொல்ல வேண்டிய விளக்கத்தை நான் சொல்லிவிட்டேன்
எல்லாத்தையும் காட்ட இது ஒன்றும் tv சீரியல் அல்ல,2 மணி நேரத்தில் எதை காட்ட முடிய மோ, அவருக்கு தோன்றியதை செய்துள்ளார்,
Intha kathaiyil makkalukku enna sollavareenga
@@jollycliptamilchannel4313உன்னை போன்ற தற்குறிகள் சீக்கிரமாக செத்துடனும்னு சொல்லி இருக்காங்க
இந்த படத்தில் எந்த சாதி மதம் அரசாங்கத்தையும் குறை கூறவில்லை இவர்கள் தான் காரணம் என்று சொல்லவும் இல்லை அப்புறம் ஏன் வீன் விவாதம்
விபத்து ஏற்பட்டது அதோட கதை முடிகிறது.
மாரி மேல எல்லோருக்கும் வெறுப்பு வரணும்னு தான் இந்த படத்த எப்படி எப்படி எல்லாம் குறை சொல்லலாம்னு பெரிய குழுவே செயல்படுது போல
Confirm appadithan Nadakkuthu @@senthilkumar-ev3hp
K@@senthilkumar-ev3hp
செத்தத கமிச்சா உனக்கு கபத்துணவுங்கள சொல்ல தெரியஆதா ?
போகுமிடம் வெகு தூரமில்லை!
அருமையான திரைப்படம்!
Yes good movie
இயக்குநர் அவரது அனுபவத்தை படமாக்கியுள்ளார். நீங்கள் உண்மை வரலாற்றை சினிமாவாக எடுத்து உண்மையை உலகிற்கு காட்டுங்கள். அதை விடுத்து அடுத்தவன் சமையலை குறை சொல்வது ஏன்?
ஒரு அவதூறு பறப்ப வேண்டும் என்று நோக்கமே வெளிப்படுகிறது எத்தனை மற்ற சாதி படங்களில் எங்களை காட்டிறிக்கிங்க
முஸ்லிம்கள் யாரும் இதை குறை சொல்ல மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் எதுவும் தன்னுடைய இறைவன் திருப்தி வேண்டியே செய்வார்கள் ....தவிர இது ஒரு மக்களின் வாழ்வின் வலிகள் குறித்த படம், உங்கள் விமர்சனம் தேவையில்லாதது.
ஜீவா அண்ணா உங்க மேல பெரிய மரியாதை இருக்கு வாழைபடம் மிகப்பெரிய வெற்றி அடைந்து இன்னமும் தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்கு நீங்க தேவை இல்லாத பேட்டி எடுக்குறீங்க ஒரு படத்துல எல்லாத்தையும் காட்ட முடியாதுங்க அவங்களோட வாழ்க்கையே காட்டி இருக்காரு மாரி செல்வராஜ் நீங்க சும்மா உங்க வேலைய மட்டும் பாருங்க அண்ணே
@@arivur4859 மிக ச் சரியாக சொன்னீர்கள்.
முதலாளி ஒரு ரூபாய் கணக்கு பார்த்தால் தனியாக வாகன உதவி செய்திருந்தால் விபத்து நடந்து இருக்காது அதை பேசுங்க
Padam pathiya illaiya driverthanda villain 😂
@@jollycliptamilchannel4313 வயிறு எரியுதா 🔥🔥😂😂
இது திரைப்படம், உண்மை சம்பவம் சார்ந்த திரைக்கதை மட்டுமே.
Documentary அல்ல.
காப்பாற்றியவர்கள் , இரத்த தானம், மருத்துவர், ஊசி போடுபவர்கள் எல்லாரையும் காண்பிக்க முடியாது... திரைக்கு தேவையானதை மட்டுமே காட்சிப்படுத்த முடியும்...
சார் இது மாதிரி தேவை இல்லாத பேட்டியை உங்கள் சேனலில் பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
வாழை மரம் பார்க்காதவன் சொல்லலாம் வாழை மரத்தில் ஒன்று இரண்டு பழம் பழுத்து தான் இருக்கும்
என்ன கொடும சரவணா இது. ஒரு வலியான சம்பவத்தை படமா எடுத்து வெற்றி பெற்றா இப்படியாடா கெளம்புவிங்க 😢😢😢 போங்கடா போக்கத்தவனுங்களா😂😂
அட டா என்ன ஒரு கரிசனம்
தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற பயணம் சகஜமாம்
அந்த தொழிலாளர்களை பாதுகாப்பற்ற முறையில பயணிக வைத்த முதலாளி ஓடி ஒளிந்தது பாவமாம்
இந்த திரைப்படம் சரியான பாதுகாப்பு இல்லாமல் சுமைகளின் மேல் அமர்ந்து விபத்தில் சிக்கி இறந்த தொழிலாளர்கள் பற்றியது.🤦🏻♂️
குறை கூறும் கூட்டம் இருக்கும் வரை இப்படிதான் இருக்கும்
இந்த சமூகம் எதையுமே சாதியாத்தான் பாக்குது
ஒரு நல்ல கலைஞன் வாழ்த்துங்க... அப்பத்தான் சிறந்த படைப்பாளிகள் நிறைய வருவாங்க...!
காப்பாற்றியவர்களை கண்டிப்பாக அடையாளப்படுத்தியிருக்க வேண்டும். மேலும் இந்தக் கதை சிறுவனை நோக்கி நகர்வதால், அந்த சிறுவன் அடுத்து எங்கு செல்வானோ அதைத்தான் காட்டியிருக்கிறார்கள். சம்பவத்தை மட்டும் மைய்யமாக வைத்து கதை பண்ணியிநீங்கள் சொன்னதுபோல் அனைத்தையும் காட்டியிருக்கலாம். இன்னொரு விசயம். லாரியில் மணல்,ஜல்லி,செங்கள் எடுத்துச் செல்லும்போது மினிமம் 5 பேர்கள் லோடை இறக்குவதற்கு செல்வார்கள்.ஆனால், இதில் அதிகபட்ச நபர்களை லோடு வண்டியில் ஏற்றி சென்றது யாருடைய தவரு.. அதை ஆதம்பாவா நியாப்படுத்தக் கூடாது.
மாரியின் மீதான ஒவ்வாமையின் வெளிப்பாடுதான் இது.
விபத்து நடந்தது படம் முடிந்தது, அந்த நிஜமான சம்பவத்தில் ஆயிரம் நடந்திருக்கலாம், அத்தனையும் படத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஒரு கதை தனக்கு தேவையானதை மட்டுமே எடுக்கும், வாழை ஒரு அற்புதமான திரைப்படம், அவ்வளவுதான்
மிக அருமையான உண்மையான விளக்கம் யாருக்குமே ஒரு ஆதங்கம் ஏற்படும் அதுதான் இங்கு வெளிப்பட்டு இருக்கிறது மாரி செல்வராஜ் குறை கூறுவதோ எடுத்துக்கொள்ளக் கூடாது இதனை ஒரு ஆதங்கமாக எடுத்து கொள்ளுங்கள்
You too jeeva!. எதிரே இருப்பவர் வன்மம் நிறைந்தவர் என்பது அவர் தெரியப்படுத்த நினைக்கிற சாதி பேரிலே வெளிப்படுகிறது . நாங்க எப்பவும் மாரி செல்வராஜ் பக்கம் தான்
Jeva ethirel erupavar seeman thambi
ஏப்பா ஜீவா உன் சேனல்ல வேலை பார்க்கிற கேமரா மேன், எடிட்டர் எல்லாரையும் காட்டி அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடேன். இதுக்கு ஒரு பதில் கொடு என்று ஒரு அண்ணனாய் உரிமையாகக் கேட்கிறேன் தம்பி.
சகோ சேனல்ல வேலை செய்கிறவர்கள் சம்பளம் வாங்குகிறவர்கள் மீட்புபணியில் ஈடுபட்டவர்கள் சம்பளம் வாங்கியவர்கள் அல்ல .. ஆக நீங்கள் கேட்டது தவறு..
@@sarabdeen3669 உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதையில், மீட்பு பணி காட்சிகளையே வைக்காத நிலையில் அதை விவாதப் பொருளாக்குவது, அவர் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவது வீண் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்திலேயே இந்த பதில் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டது சகோ. அப்போது வெளி வந்த அதைப் பற்றிய செய்திகளின் செய்திப் பக்கங்களைக் காட்டியிருக்கலாம் என்பது தான் என் கருத்தும்.
@@sarabdeen3669பின்புலத்தில் இருந்து கஷ்டப்பட்டு ஒருவர் வளர்ச்சிக்கு உதவியவர்கள் பணம் பெற்றுக்கொண்டு இருந்தாலும் அவர்களுக்கும் வளர்ச்சி முக்கியம் என்பதை உள்வாங்கி வெளிக்கொணர செய்வது என்பது நன்றி கடன் தான்...
இத சொன்னா அந்த சமூகம் தவறாக நினைக்குமோ இவர்கள் தவறாக நினைப்பார்களோ என்று இல்லாமல் சரியான கருத்தை கூறிய ஜீவா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
தோழர் ஜீவா உங்க மேல ரொம்ப மரியாதை இருந்தது இந்த வீடியோவை பார்க்கும் வரை. பேட்டி கொடுப்பவர் எத கேட்டாலும் அவரு சொன்னாரு, அவரு சொன்னாருன்னு சொல்றாரு. அவர் என்னமோ பக்கத்துல இருந்த மாதிரி அவர் கிட்ட கேள்வி வேற. வாழை தாருல ஒன்னு ரெண்டு பழம் பழுக்காதக்கும்.. விசயம் தெரிஞ்சு பேச சொல்லுங்க. சினிமாத்தனம் இல்லாமல் உலகமே பாராட்ட ஒருத்தர் படம் எடுத்தா முடிஞ்சா பாராட்டுங்க மனசு வரலன்ன சும்மா இருங்க.இவரு தயாரிப்பாளர் வேற. சினிமா உருப்படும். இதுக்கு நீங்க ஜால்ரா வேற. இரண்டு பேரும் முழுசா படத்தை ஒன்னுக்கு மூனு தடவை பாருங்கள் இயக்குநர் என்ன சொல்ல வர்றார் என் எடுத்து இருக்காதுன்னு தெரியும். இது என்ன கல்யாண பத்திரிக்கையா என்ன சொல்லல உன்னை காட்டலைனு. அடுத்தவங்களை பாராட்டுங்க உங்க உடம்புக்கு நல்லது ஜீவா. Very worst interview in jeeva cinema.
மிக வன்மமான தலைப்பு? ஒரு பெரியாரிஸ்ட்டா இப்படி? ஜீவா, உண்மையானபெரியாரிஸ்டா நீங்கள்?
மாரி ஒருவரை காட்டினால் அதில் என் சமுகத்தை காட்டவில்லை என்று ஒருவர் பின் ஒருவர் வருவார்கள்
Aduttha samoogatthai thaaltthi kaatta mattum neram irukko padatthula
ஒடுக்குமுறையை கேள்விகள் கேட்பது மற்ற சமுகத்தை சிறுமை படுத்துவது இல்லை
இவர் எல்லாத்தையும் சகயம் , சகயம் என்று எல்லாத்தையும் சிறுமைப்படுத்துகிறார்
Matching with my mind
சார் வணக்கம் உங்களுடைய பேட்டியை முழுமையாக நான் கேட்டேன் அதாவது வாழை திரைப்படத்தை எடுத்த மதிப்பு கூறிய அண்ணன் மாரி செல்வராஜ் அண்ணனுக்கு என்னுடைய படத்துக்கு வாழ்த்துக்கள்
அதாவது நீங்கள் இருவரும் பேசியதற்கு நான் பதில் சொல்லுகிறேன் வாழை திரைப்படத்தில் எந்த கதாபாத்திரமெல்லாம் வைக்கவில்லை என்று நீங்கள் விவாதம் பண்றீர்களோ அதெல்லாம் மாரி செல்வராஜ் அவர்கள் வைத்திருந்தால் எல்லா சினிமா மாதிரி இந்த சினிமாவும் பேசும் பொருளை ஆயிருக்கும் எல்லா படத்தில் வரக்கூடிய கதாபாத்திரம் மாறி மக்கள் சொல்லி இருப்பார்கள் இப்போ நீங்கள் இதெல்லாம் சொல்வதனால் இந்த படத்துக்கு வாழை திரைப்படத்துக்கு இனியும் போக வரும் காலங்களிலும் போகப் போக வலுவு அதிகமாகும்..
குற்றம் காண்பதே ஒரு சிலரின் இயல்பு
தனது படத்தால் யாரும் மதம்மாறிவிடக்கூடாது,
என்ற பயத்தில் சில உண்மைகளை படமாக்காமல் விட்டது தப்பல்ல, பொய்யை சேர்ப்பதே தப்பு!
முஸ்லீம் ஊர் பக்கத்தில் லாரி விழுந்தால் அவர்கள் காப்பாற தான் செய்வாங்க. ஏன் அதுபக்கத்துல எங்க ஊரும் எங்க வயலும் இருக்கு எங்க ஊர்காரங்க தேவந்திரகுல வேளாளர் சமுகம்.. வெறும் 2கி.மீ பக்கத்தில் இருந்த நாங்க போயிருக்க மாட்டோமா.. அப்போ ஏன் எங்க ஊர காட்டலுனு சொல்லமுடியுமா. ஏன் தடுக்கி விழும் தூரத்தில் சில தேவர் குடும்பம் கூட இருக்கு. அவங்க வரமா இருந்திருப்பாங்கலா?? அங்க கழுத்தில் தேவர்னு போர்ட் போட்டு காப்பாற்ற வந்திருக்காங்கனு காட்டனுமா??
எல்லோரையும் காட்ட அடுத்த படம் தான் எடுக்கனும்.. இது மிகச் சிறிய படம். அந்த விபத்தை அதிகமா காட்டினால் அது சினிமாக்கு சரியா வராது..
பேட்மாநகருக்கும் புளியங்குளத்திற்கும் 15கி.மீ இருக்கும்..பக்கத்து கிராமம் இல்லை ..
வண்டி மேல ஏறி வருவது சகஜம் சொல்லுறான்..அந்த சகஜத்தால் தான்டா பல சாவு நடக்கு.
சினிமாவில் எல்லாத்தையும் காட்டமுடியாது. ராமராஜன் பெயர் படத்தில் ஒரு காட்சி வரும்..
19 பேர் இறந்ததை கருப்பு வெள்ளையில் காட்டியிருக்கிறார் காரணம் அதோட வலி அந்த ஊர்காரங்களுக்கு தான் தெரியும். அதனால தான் மிகச் குறைந்த நிமிடமே காட்டியிருக்கிறார் .. இதுவே கதைக்கு சம்பந்தம் இல்லாத யாரோ அழுதுட்டு படம் பார்த்துட்டு வாரங்க..இதுக்கு மேல அதை காட்சிகடுத்துனா பாதிக்கபட்டவர்கள் மனது எப்படி இருக்கும்..
இது தான் உங்களுக்கான பதில்.
அந்த அக்காவிடம் போயி இவங்க பேட்டி குடுக்காதனு சொல்லிருக்கலாம் அதை மிரட்டல்னு சொல்லுறா பாரு.. இதான் வன்மம்.
ஐயா வாகன விபத்து நடந்த இடம் பேரூர் என்ற கிராமம் சம்பவம் நடக்கும்பொழுது எனக்கும் தெரியும் பேட்ம நகரத்திற்கும் பேருர்க்கும் இரண்டு கிலோமிட்டர் வித்தியாசம் இருக்கும்
@@MydeenAbdul-pe5eo அது பேருர் இல்லை முத்துசாமிபுரத்திற்க்கும் பேட்மாநகரிக்கும் இடையில் சம்பவம் நடந்தது.
ஜீவாவும் மாறிட்டாருப்பா....
என்ன கொடுமை...இவர் நல்லபத்திரிகையாளர்ன்னு நெனச்சேன்பா...
I went to groundnut harvesting during 1972 while I was 11 years old.
We woke up 4 am and walk around 8 kms from venkatapuram village to karikeri village crossing PALAAR, sevur village & railway station and reach the field by 5 30 am .along with family members,village relatives.
During lunch carry ragi kuzh with green groundnuts ,pickles etc.
Evening around 5 pm the owner will allot kooli as groundnuts one padi or more according to the kuppal of nuts.
We carry in Bags and reach our village by 8 pm.
Those days are unforgettable
சரிடா அடுத்த படத்தில பதிவு பண்ணீருவோம்
இங்க தலித் இல்லடா தேவேந்திர குல வேளாளர் டா
வயித்தெரிச்சல் வாந்தியாளர்கள் 😂😂😂
மீட்பு நடவடிக்கைகள் காட்டப்பட வேண்டியதில்லை. படம் மாரி செல்வராஜின் பார்வையைப் பற்றியது. மீட்புப் பணிகளைக் காட்ட விரும்புவோர் தனிப் படம் எடுத்து வெளியிடட்டும். நாங்கள் காத்திருக்கிறோம்
இஸ்லாமியர்களின் வரலாற்று செயல்களை நிச்சயமாக பதிவு செய்வது மிகவும் அவசியம்
உண்மை சம்பவம் என்று சொல்லிவிட்டு உண்மையா நடந்ததை பதிவிட்டு இருக்க வேண்டும் அப்படி என்றால் உண்மை சம்பவம் என்று போட்டிருக்க கூடாது இது ஒரு கற்பனையான கதை என்றே பதிவேற்றிக் கொள்ள வேண்டும் இது உண்மையாக களத்தில் நின்று போராடியவர்களுக்கு செய்யும் அநீதி
ஜீவா சினிமா மூலம் நான் அதன் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் ( திருப்புளியங்குடி ) என்ற முறையில் சொல்கிறேன்.. நீங்கள் சொல்வது போல் பேட் துரைசாமிபுரத்தில் தான் சம்பவம் நடந்தது.. அருகில் பேட் மாநகரம், சாமியாத்து, போன்ற கிராமங்களில் உள்ள மற்ற சமூக மக்கள் தான் இந்த தகவலை வெளியே தெரிவித்து மீட்பு பணிகளில் அவர்கள் தான் முன்னாள் நின்றார்கள்.. நாங்கள் அதன் பிறகு கேள்விப்பட்டு ஓடிப்போனோம்..அதே போல் ராமராஜன் அவர்கள், மணி நாடார் ( சாத்தான்குளம் ) MLA , கலெக்டர் போன்றோர் வந்தனர்..கமிஷன் உரிமையாளர் மூப்பனார், அவருடைய லாரிகளில் பாதிக்கப்பட்ட மக்களை , திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், மற்றும் பாளையங்கோட்டை மருத்துவமனைகளில் சேர்க்க உதவி செய்தார்.. கலெக்டர் அவர்கள் லாரியில் பலரை கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.. ஊரே அழுது புலம்பியது.. திருவைகுண்டம் செல்லும் அனைத்து சாலைகளிலும் மக்கள் அங்கும் இங்கும் வேதனையில் ஓடிக் கொண்டிருந்தார்கள்..அது மிகப் பெரிய துன்பமான சம்பவம்...
Neenga antha area va bro
Manasatchi yoda thagavl sonnenga, unga lines kooda oru movie mathuri oduthunga. Mariyatha valithanga antha thuyara sambavam
குறை சொல்வது தவறு
அவர் வலியை அவர் சொல்கிறார்
நீங்கள் சொல்லும் இந்த கதை இரண்டாம் பாகத்தில் எடுக்கப்படலாம்.
ஒரு காட்சிகள் மக்கள் நாயகன் ராமராஜன் ஒரு சுவர் விளம்பரம் வருகிறது
வாழை படத்தின் நல்ல வரவேற்பை இது திசை திரும்பும் வேலை இது தேவையற்ற விவாதம்
ஜீவா சார் அவர் வழியே தான் அவர் வேதனையை பதிவு பண்றாரு
உண்மை சம்பவம் தான்.. ஆனால் அனைத்தையும் காட்டவேண்டும் என்றால் படம் நான்கு மணி நேரம் ஓடும்.
பொன்னியின் செல்வன் கதை மாதிரியா எடுத்தாங்க ,ஒருவன் வெற்றி பெற்றால் ,அதை விமர்சிக்க ஏதாவது ஒரு காரணத்தை தேடி பேசுவார்கள்
Jeeva hats off ur doing great job 👏 congratulations @jeevaCinema
வாழை படமும்...
லாரி கவிழ்ந்த வயலும்...
அந்த மீட்பு பணியில் எந்த தனிநபர் ம் ஹீரோ இல்ல
தோழர்களே,
காவல் அதிகாரி Si அவர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டார். பேட்மாநகர மக்கள் உதவி செய்தார்கள்
(அதற்குரிய நன்மை இறைவனிடத்தில் உண்டு) அவர்களை பற்றி குறிப்பிடலனு சிலர் பதிவிடுகிறார்கள்,
அருகில் உள்ள கிராம மக்கள் உதவி செய்தார்கள் என்றும் அவர்களை பற்றி குறிப்பிடல என்றும் சிலர் வாட்ஸ் அப், மற்றும் முகநூல் வழியாக பதிவிடுகிறார்கள்.
இவ்வளவு நாள் கழித்து உதவி செய்ததை சொல்லிக் காட்டுதல் நன்றாக இருக்கிறதா நமக்கே !
எல்லோரையும் பற்றி மாரி செல்வராஜ் குறிப்பிடல என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது அது அவரின் படம் அவர் கூற வந்தது வாழை சுமக்கும் கூலி தொழிலாளிகளின் கதை அதில் ஒரு பெரும் விபத்து நடந்து பலர் பலியாகினர் என்பது முடிவு.
அந்த லாரி விபத்தை மட்டும் குறித்து படம் எடுத்தால் விபத்தில் உதவியவர்கள் பற்றி மறைத்ததாக கூறலாமே தவிர,
படத்தில் என்னை காட்டவில்லை
அவரை காட்டவில்லை என்று நாமாக படத்தை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் நம்மை நாமே செய்த உதவியை சொல்லிக்காட்டி நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்றே பொருள்.
லாரி கவிழ்ந்த வயல் என் மாமா சிந்தாகனி வயல்தான் என்று மாரி செல்வராஜ் என் மாமா பெயரை குறிப்பிடவில்லை என்றும்,அந்த மீட்பு பணியில் அப்துல் ஜப்பார் ஆகிய நானும் இருந்தேன் என் பெயரை வேண்டுமென்றே மாரிசெல்வராஜ் இருட்டடிப்பு செய்துவிட்டார் என்று நானும் கூறினால் அது நகைச்சுவையாகத் தான் முடியும்..
கடந்து செல்லுங்கள்
படத்தை படமாக பாருங்கள்...
எல்லாப் புகழும் இறைவனுக்கே
அன்புடன்
அப்துல் ஜப்பார் வழக்கறிஞர்
நெல்லை
9842479556
நாட்டமை சின்னா கவுண்டர் எஜாமான் காலடிமண்நெடுத்து இதைஏலலாம் விட்விட்டு தேவர்மகன் படத்தை மட்டும் குற்றம் பார்பாது கமலை பிடிக்காமள் கோவம் வானமம் இதை காரனம்காட்டி சில குள்ள நாரி கூட்டாம் கமல் இப்பொது புகழ் அடை வாது பொருத்துக்கொள்ள முடியாமல் சதி செய்கிறர்கள் மெண்டால் குரூப்புக்கு மாரி செல்வராஜ் திரம சாளி ஊண்தான் ஆனால் அரிவு கெட்டா மூட்டால் என் பது உண்மை
அருமையானா பதிவு
வாழையை பார்த்து பல கோழைகளுக்கு? ???எரியுது
கண் மூடிதனமாக ஆதரிப்பதில் ஜீவா வை அடிக்க ஆளில்லை
வாழ்க ஜீவா ,வளர்க ஜீவா பணி
வன்மம்..மத வெறியர் போலும்
மக்கள் நாயகன் ராமராஜனுக்கே, என்று சுவரில் எழுதி இருப்பது, படத்தில் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா???
நீங்கள் கூறுவது போன்று காட்சிகள் அமைத்தால் படம் நீண்டு கொண்டே போய் crisp ஆக மனதில் இப்போது ஏற்பட்டுள்ள வலி உணர்வு நிலைத்திருக்காது. படம் நன்றாக இருக்கிறது இன்னும் ஒரு முறை பார்க்கலாம் என்று கூறுகிற அளவுதான் இருக்கும். மனதில் நிரந்தரமான ஒரு வலியைத் தந்திருக்காது
Mari Selvaraj taken his story and if you want to tell the remaining means you can take the remaining story as a movie sir.
Let the discussion starts and people let talk about it.
எதற்கெடுத்தாலும் மதகலப்பு ஆதம் அண்ணா தவிர்க்கவும்
இரண்டு காலும் விழுந்த பெண்மணி பேட்டி கொடுக்கும் பொழுது வியாபாரி வண்டி அனுப்புவதாகவும் இல்லை எங்களுக்கு நேரம் ஆகிவிடும் இந்த வண்டியிலே நாங்கள் சென்று விடுகிறோம் இன்று கூலித் தொழிலாளிகள் சொன்னதாகவும் அந்தப் பெண்மணி பேட்டி அளித்துள்ளார் சினிமாவுக்காக சில செய்திகள் கூட்டவும் சில செய்திகளை குறைக்கவும் இயக்குனருக்கு உரிமை உண்டு
இவன் ஒரு இயக்குனர் இவனே 2 மணி நேரம் படத்தில் வரும் சீனில் நடப்பதை விமர்சனம் செய்வது வயிற்று எரிச்சல் என்பதே உண்மை...
கவனக்குறைவாக சில நிகழ்வுகள் நடப்பதுண்டு ஆனாலும் பலதரப்பட்ட மக்களின் அவசர கால உதவியில் சாதி மதம் புறந்தள்ளபட்டது மணித மாண்புக்கு பெருமை சேர்க்கும் சம்பவம் இந்த செய்தியை நேர்மையான முறையில் வெளிப்படுத்திய ஜீவா மற்றும் பாவா அவர்களுக்கு நன்றி
டாய் நீ ஆப்கானிஸ்தான் ல தலிபான்கள் மீண்டும் ஆட்சி பிடித்தை ஆதரித்து வீடியோ போட்டேன் தான நீ😢😢
இத்தனை உயிர்கள் பலியாகிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் உரிமையாளரிடம் உதவி கேட்டிருக்கலாம்.ஆனால் அவர்மீது உள்ள கரிசனம் இந்த இறந்த மக்கள் மீது இல்லையே என்பதிலிருந்தே தெரிகிறது பேட்டிகொடுப்வரின் மனநிலை.ஒரு விபத்து நடக்கும்போது அருகில் உள்ள மக்கள்தான் உதவிசெய்வார்கள் என்பது உலகம்அறிந்தவிடயம்.ஒரு வேளை மாரி அவர்கள் நீங்கள் நினைப்பது போன்று மூஸ்லீம்களையோ,தேவரையோ,நாடாரையோ.காட்டிய இருந்தால் அவர்காட்டாத ஏதாவது ஒரு சமூக நபர் உதவி செய்திருந்தால் என்னுடைய சமூதாயத்தை வேன்டுமென்றே காட்டவில்லை என்று என்னிடம் சொன்னார் என்று அதையும் ஒருவிவாதமாக்குவீர்கள்.மாரி அவர்கள் சோல்லவருவது என்ன என்னுடைய சின்ன வயதில் தான் பட்ட வலியை படத்தின்மூலமாக கடத்துகிறார்.குறை கன்டுபிடிக்க வேன்டும்என்றால் ஆயிரம் குறைகன்டுபிடிக்கலாம்.அவர் ஒருவேளை அருகில் இருந்த மக்கள் யாருமே காப்பாற்றவில்லை என்பதுபோன்ற காட்சிகளை வைத்திருந்தால் நீங்கள் ஆதங்கபடுவதில் அர்த்தம் உள்ளது.அடுத்து அந்த நாட்டார்குளத்தை சேர்ந்த அந்த கால்களை இழந்த பென்மணியை பேட்டி கொடுக்ககூடாது ஏன்றுமிரட்டியதாக கூறுகிறீர்கள் அது எந்த அளவுக்கு உண்மை என்றுதெரியவில்லை.ஒரு வேளை உண்மையாகவே மிரட்டியிருந்தால் அது மாரியின் கவனத்திற்க்கு வரும் பட்சத்தில் அவர் அண்ணன் என்கிறீர்கள் யாராக இருந்தாலும் கன்டிப்பாக அதை அவர்கண்டிப்பார் என்பதில் மாற்றுகருத்துஇல்லை.அவர் நினைத்திருந்தால் அவருக்கு இருக்கும் திறமைக்கும் புகழுக்கும் சென்னையில் உள்ள பிரபல நடிகர்களை வைத்து படம் எடுத்து காசு பணம் சம்பாரிக்க முடியாமல் இல்லை.ஆனால் அவர் தான் சார்ந்த ஊர்மக்கள் மீது எவ்வளவு அன்புவைத்திருந்தால் அவர்களையும் நடிக்கவைத்து அந்த கிராம மக்கள் வெளிஉலகிற்க்கு வரவேன்டும் என்பதற்க்காக அவர்செயல்படும் விதம் நம்மை வியக்கவைக்கிறது.அந்த இரண்டுகால்களையும் இழந்த பெண்மனி உள்ளார்கள் என்பதை இந்த படம் வருவதற்க்கு முன் எத்தனை ஊடகங்கள் போய் பேட்டிஎடுத்தது.இன்றைக்கு அவர்களும் வெளிஉலகத்திற்க்கு தெரி கிறார்கள் என்றால் மாரிக்குகிடைத்தவெற்றியே.நாம் நூறுபேருக்கு உதவி செய்தால் 90பேர் வாழ்த்துவார்கள் மீதி10பேர் இவனுக்கு பணகொழுப்பு,அப்பண்சொத்து என்பார்கள் இந்த 10பேருக்காக 90பேரின் பசியைபோக்காமல்இருப்பதுதான் தவறு.நன்றி ஜீவா அண்ணா தொடர்ந்து உங்களது பேட்டிகளை பார்த்து வருகிறேன் மிக சிறப்பான கருத்துகளை பதிவுசேய்து வரூகிறீர்கள்.நன்றி
This film is not about that accident....this is about the post trauma experienced by that kid and that mom
Very good
படத்தை உண்மைக் கதை என கதைவிடுகிறார் மாரி.
2.5 km from petma nagar.i don't want to mention that place. But one thing I want to disclose. Human rights, social justice kilo enna price? Purely criminals area.
முதலாளி...மேல போக சொல்லல...தனியா வண்டியும் தரல...
காப்பாற்றும் போது இவர் தேவர் இவர் வன்னியர் இவர் முஸ்லீம் இவர் இன்னார் என்று எல்லாம் போடா முடியாது யார்ரா இவனுங்க
ஆனா குறை சொல்லும் போது பிரிச்சு சொல்ல தெரியுது இல்ல
Mr.Jeeva...உங்கள் மேல் இருக்கும் மரியாதை இதுபோல் தற்குரி பேச்சால் குறைந்து விட்டது
ஜீவா சார் படத்தின் வெற்றிக்கு சில சில பிரச்சனைகளை சுட்டிக்காட்டுகிருர்கள் ஆதிக்க ஜாதி
வாழை part 2 வில் எல்லாம் சொல்வார்
இவர்கள் மட்டும் தான் காப்பாத்தினாங்க அப்படின்னு எதையும் சொல்லல... யார் யார் காப்பாற்றினார்கள் என்று கூற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை
Super informative interview❤
தெளிவாக சொல்கிறார். மாரி செல்வராஜில் குற்றம் இருக்கிறது. வேண்டும் என்று நடந்தவற்றை மறைப்பதும் குற்றம்தான். தன் சமூகத்துக்கு ஆதரவு கிடைக்கவெண்டுமென்று செய்திருக்கிறார்
ஜாதி படமாக எடுக்க வில்லை.எந்த ஜாதியை அவர் வெளி காட்ட வில்லை.
ஐயா! இரண்டாம் பாகத்தில் எல்லாம் வரும். அதற்குள் அவசரப் பட்டால் எப்படி?
எல்லா சம்பவங்களையும் 2:30 மணிக்கூர்க்குள் காட்டி விட முடியாது. குற்றம் சொல்பவர்கள் சொல்லி கொண்டேதான் இருப்பார்கள்...
வாழை அருமையான திரைப்படம்
இவர் பெரிய நீதிபதி படத்தை ஆராய்ந்து நீதி சொல்றாரு. இவர் ஒரு படத்தை எந்த ஒரு விமர்சனம் இல்லாம எடுத்துருவாரு
Eppa epdiyellam..... Oru samugatha elunthirikka vidama.... Kana katchithama... Seyal paduringalappa.... Valthukkal... Tamil uravugale
மாரி அண்ணா அவருடைய காயத்தை மட்டும் காட்டி இருக்கிறார். இதற்கு எதற்கு விமர்சனம்
மீட்பு பணியில் கலெக்டரே லாரி ஓட்டினார் என்று இவர் கூறுகிறார் ஆனால் காவல்துறை அதிகாரி தான் ஓட்டிய தாக ஒரு செய்தி சேனலில் சொன்னார்கள் எது உண்மை
தவறான பார்வை இந்த படத்தில் சாதி மதம் இனம் மொழி எதைப்பற்றியும் யாரை பற்றியும் குறைசொல்ல வில்லை வாழை தூக்கும் தொழிலாளிகளின் வலியை தான் சொன்னார்
அதேபோல் வாழையில் இடைப்பழம் சில கனியாகும்.. ஒன்றிரண்டு பழுத்தால் விலை போகாது என்பதால்ல... பழம் சேரும் இடத்தில் கனிந்து கருப்பு ஆகிவிடக் கூடாது.. இடைப்பழம் உள்ள தார்கள் நிறைய ஏற்றப்பட்டிருக்கிறது..இது நீங்கள் சொல்லும் தவறான கருத்து..