Rajnikanth is Zero ,Roja fires on Rajnikanth//நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஜீரோ ஆந்திரா அமைச்சரும் ரோஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #Roja#Rajnikanth#Andhra#
    நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஜீரோ
    புதுச்சேரியில் ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா பரபரப்பு பேட்டி
    சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பவன் கல்யாண் ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும்.
    ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றுமே செய்ய முடியாது எனவும் விமர்சனம்
    புதுச்சேரியில் காசிக்கு வீசம் அதிகம் பெற்று அகத்திய முனிவரால் வழிபட்டதாக கூறப்படும் திருக்காஞ்சி ஸ்ரீ காமாட்சி மீனாட்சி உடனுரை கெங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் கடந்த 22 ஆம் தேதி ஆதி புஷ்கரணி விழா தொடங்கியது.
    விழாவை தொடர்ந்து ஒவ்வொரு கிழமையும் அந்த சம்பந்தப்பட்ட ராசிக்காரர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி வருகின்றனர்.
    இதன் தொடர்ச்சியாக 9-ம் நாள் விழாவான இன்று கங்கா மகா ஆரத்தி நடைபெற்றது.
    ஆதீனங்கள் வேத மந்திரங்கள் ஓத சிவவாத்தியங்கள் முழங்க நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியில் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோஜா..
    சந்திரபாபு நாயுடுவை என்.டி.ஆர் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று ரஜினிகாந்த் பேசியது தவறு
    ரஜினி ஏதோ தெரியாமல் தவறாக பேசுகிறார் என்று எண்ணினேன் ஆனால் அது அவர் தெரிந்தே பேசி உள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
    ரஜினிகாந்த் பேசியதை பார்த்து தெலுங்கானாவில் உள்ள என். டி. ஆர். அபிமானிகள் அனைவரும் கோபத்தில் உள்ளனர்
    என். டி .ஆர் ஐ கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்து பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார்.
    அரசியலுக்கு வர வேண்டும் என்று விருப்பம் இல்லாத அவர்
    சந்திரபாபு நாயுடு அழைத்தால் ரஜினிகாந்த்தை சாப்பிட்டுட்டு கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை படித்தோம் என்று இல்லாமல் மற்ற மாநில அரசியல் பற்றி பேசும்போது அங்கு என்ன பிரச்சனை உள்ளது என்பதை தெரிந்து பேச வேண்டும் இல்லையென்றால் அமைதியாக இருந்து விட வேண்டும் என்றார்.
    ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு கூப்பிட்டார் என்பதற்காக எதையாவது பேச வேண்டும் என்று பேசிப் பேசியே ஜீரோவாகிவிட்டார் என்றார்.
    ரஜினிகாந்த் ஒரு அரசியல்வாதியாக இருந்தால் மன்னிப்பு கேட்க சொல்லலாம் ஆனால் அவர் நடிகர் எனவே அவர் பேசியது குறித்து ஒரு தெளிவான அறிக்கையை அவர் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ரோஜா
    ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதலமைச்சரை எங்குமே பார்க்க முடியாது ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகளை செய்துள்ளார்.
    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன் கல்யாண் ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும்...
    ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றுமே செய்ய முடியாது என்று ஆந்திர அமைச்சரும் நடிகை மன ரோஜா காட்டமாக பதில் அளித்தார்
    சங்கராபரணி ஆற்றங்கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, உள்ளிட்ட புதுச்சேரியில் நகரம் மற்றும் கிராமங்களில் இருந்தும் புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழக பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கா ஆரத்தியில் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.Subscribe us for more videos on entertainment and News....
    / @aptnnews24x7

Комментарии • 5