456 வது நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு கூட்டம் |23.07.2024 || sky media

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 23.07.2024 செவ்வாய்கிழமை, நமது வனாலயத்தில் நடைபெற்ற 456 வது வனம் வாராந்திர கலந்தாய்வுக்கூட்டத்தில், கனரா வங்கி மேலாளர் (ஓய்வு) திரு.ராமசாமி, மருதமலை பவித்ரா யோகா மருத்துவமனை திரு.மு.முத்துகுமார், திருப்பூரை சார்ந்த புதுமண தம்பதிகள் திரு.அருண்குமார் - திருமதி.ஜெயஸ்ரீ மற்றும் அவர்களது பெற்றோர்கள் திரு.கோபால்சாமி - திருமதி.சரோஜா, திரு.சண்முகசுந்தரம் - திருமதி.காமாட்சி மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு வனப்பிள்ளையார் வழிபாடு மேற்கொண்டும், மூவர் முற்றத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தி, டாக்டர் APJ அப்துல்கலாம் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தும், மூலிகை வனத்தில் செம்பருத்தி மூலிகை செடி நடவு செய்தும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் உலக நலம் வேண்டியும், மணமக்களை வாழ்த்தியும் வாழ்த்து தவம் இயற்றினார். பெரியோர்களின் ஆசீர்வாதத்துடன் மணமக்கள் மரக்கன்றுகளை வணங்கி நடவு செய்தனர். மேலும், சிறப்பு விருந்தினர்களும், வனம் இயக்குநர்கள், அறங்காவலர் மற்றும் தன்னார்வலர்கள் பசுமை சார்ந்த கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இன்றைய அன்னபாலிப்பு வழங்கிய வனம் ஊடகத்துறை இயக்குநர் திரு.TMS பழனிசாமி அவர்களை வாழ்த்தி கூட்டம் நிறைவடைந்தது.
    நன்றி
    TMS, வனம் ஊடகத்துறை

Комментарии •