உடலில் உயிர் எங்குள்ளது? | Mr.GK
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- அறிவியலின் அடிப்படையில் உண்மையில் மனித உடலில் உயிர் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
Where is our body energy after death? Ghost or Soul?
www.youtube.co...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge. Наука
ஆரவாரமிக்க உலகில் அமைதிக்காக ஊட்டி,கொடைக்கானல்,,ஏற்காடு செல்வது போல் நடிகன்,நடிகை,மதம்,அரசியல் சேனல்களுக்கு மத்தியில் ஒரு உபயோகமான கானொளி.
நாம் கேள்விப்பட்டிருப்போம் நம் முன்னோர்கள் நம்மை விட அதிக புத்திசாலி என்று இவர் இப்ப சொன்னது 2021 முன்னோர்கள் கூறியிருப்பது 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அதை படித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்
உயிர்…பெயர்ச்செல் அல்ல.வினைச்சொல்…..எவ்வளவு பெரிய கேள்விக்கு,எவ்வளவு எளிமையான விடை…தரமான சம்பவம்👏👏👏
GOOD
Vinai sol na ena
@@manda368 ஒரு செயலைக் குறிக்கும் சொல்.
@@asiandelights2766 apo athu seyal sol nu thana varnum😖
@@manda368 sollitu thiri..yar venam nu sonna?
என் பள்ளிப்பருவத்தில் என் ஆசிரியர் இக்கேள்வியை கேட்டார். உயிர் எங்குள்ளது? பலவித நாவில் பலவித பதில்கள். இருதயம் , மூளை, மனசு என பற்பல தொடர் விடைகள். என் பதில் sir, என்னைப் பொறுத்த வரை உயிர் என்பது இருதயமோ,மூளையோ அல்ல.உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்குமே உயிருள்ளது என்றால், உடல் முழுவதும் உயிர் தான் உள்ளது என்றேன். உடனே class முழுதும் ஒரே சிரிப்பு. ஆனால் என் ஆசிரியர் இது தான் சரியான விடை எனக் கூறி பாராட்டினார். என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு இது. மேலும் அவர் சொன்னார் உன் கண் இமையில் ஒரு முடி எடுத்து அதனை லட்சம் துண்டாக்கி அதிலொரு துண்டு எடுத்து அதை நூறு துண்டாக்கினால் அதில் ஒரு துண்டு தான் உயிர். எவ்வாறாகினும் அவன் விடை சரி தான் என்றார்.
உங்கள் ஆசிரியரை தான் பாராட்ட வேண்டும் !😊
Wow
Hair is only made up of dead cells (keratin protein)
Ethana years ku munnadi
8 வருடத்திற்கு முன்பு
சார் வணக்கம்! அறிவியல் ரீதியாக எல்லாவற்றையும் ஆராய்ந்தால் வாழ்க்கையில் வெறுமையே மிஞ்சும்.அளவான புத்திசாலிதனமே மகிழ்ச்சியை தரும்.அளவுக்கு மிஞ்சினால் வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்து விடும்.சாதரண பாமர மக்கள் பயப்படும் படி கருத்துகளை தயவுசெய்து சொல்லாதீர்கள். அதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் சார்!. இது எனது தாழ்மையான கருத்து!
உண்மை சார்! Super
Welcome back Mr.GK . We are missing u a lot
I'm also
வணக்கம் ஜி. தெளிவான உச்சரிப்பு, அருமையான படைப்பு (Presentation). சீரான இடைவெளி அருமையான தமிழ் வார்த்தைகளை புரியும் படியாக தேவையான இடத்தில மட்டும் ஆங்கிலம் கலந்து தருவது அருமை பாராட்டுக்கள். ஒட்டு மொத்த வாசகர்களின் உள்ளதை கொள்ளை கொண்டுவிட்டு உயிர் எங்கு உள்ளது என்று எங்களை கேட்கிறீர்கள் ... 375000 + பின் தொடர்பவர்கள் ...வெகுவிரைவில் 1 C+ வாழ்க உங்கள் பணி.
nandri
என் உயிர் என் மனைவியின் அன்பில் உள்ளது, என் குழந்தையின் சிரிப்பில் உள்ளது.
Super
Wow❤️❤️❤️
கல்யாணம் பன்னி கொஞ்ச நாள் தான் ஆகுது போல
Nice :)
Amma Appa ennachi
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது.
உயிர் - பெயர் சொல் அல்ல, வினைச்சொல். அருமை.
எப்படி என்று கூற முடியுமா?
இந்த பிரபஞ்சம் ஐம்பெரும் ஆற்றல்களை கொண்டே இயங்குகின்றது. மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் விண். அதேபோல நம்ம சித்தர்கள் அறிவுக்கு ஒப்ப இந்த ஐந்து ஆற்றல்களையும் கொண்டே நமது உடலும் இயங்குகிறது. விண் அல்லது ஆகாயம் என்பது ஆன்மீகத்தைக் குறிக்கும்.
@@nehruarun5122ok
Vethathiri maharshi researched about this question in his early childhood... And then gave us Manavalakalai Yoga... A treasure to mankind.. Thanks Gk bro..
உயிர் என்பது கடவுளைப் போல விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் இயலாது. ஆனால் வித்தியாசமான தலைப்பில் எளிமையான சரளமான நடையில் முயன்றிருக்கிறீர்கள். சிறப்பு. பாராட்டுக்கள்.
Ellarum eduthadum vanakkam nu solli aarambipanga. Neenga matum dan semaya start panitu vanakkam nu solringa sir. Romba eerkindradhu ungal thodakkam. Fantastic :) 👌👌👌
இந்த மனித உடலுக்குள் இரண்டு பேர் உள்ளார்கள், ஒன்று உயிராகிய இறைவன், மற்றொன்று ஆன்மாவாகிய நாம்.
உயிரின் துணையோடு தான் நாம் இந்த உடம்பிற்குள் வந்தோம்.
இந்த மனிதப்பிறவி என்பது, ஆன்மாவாகிய நமக்கு பல பிறவிகளின் மூலம் நம் ஆன்மாவின் மீது படிந்துள்ள கர்மவினையை போக்க, நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் ஆகும்.
நாம் உயிரின் துணையோடு, என்று நம் தாயின் கருவுக்குள் பிரவேசித்தோமோ, அன்றே நம் பிறப்பு மற்றும் இறப்பின் தேதி உறுதிசெய்யப்பட்டுவிட்டது.
செல்போனில் பல பாகங்கள் இருந்தாலும், பேட்டரியில் மட்டும் தான் ஜார்ஜ் தங்கும், அது மூலம் தான் செல்போன் இயங்கும்.
அது போல் தான், மனிதஉடலில் பல உறுப்புகள் இருந்தாலும், உயிர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் உள்ளது.
அது அணுவிலும் அணுவாக, மிக சிறியதாக நம்முள் இயங்குகிறது.
இதையே தான் நாம் கடவுள் என்றும், பரம்பொருள் என்றும், ஜீவன் என்றும், ஜீவாத்மா என்றும் கூறுகிறோம்.
அந்த ஜீவனே நாம் வணங்கும் சிவனாகும்!
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
நூல்: திருமந்திரம், பாடியவர்: திருமூலர்
நீங்கள் குறிப்பிட்ட ஆன்மீக குறியீடு முற்றிலும் உண்மை.
"என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்"
இதையெல்லாம் நம் ஆன்மீக முன்னோர்கள், என்றோ எல்லாவற்றையும் அறிந்துவிட்டார்கள்.
அறிவியல் எத்தனை வளர்ந்தாலும், அது நம் ஆன்மீகத்திற்கு ஈடாகாது.
அப்படியே அவர்கள் கண்டுபிடித்தாலும், அதுவும் இறைவனின் செயலே ஆகும்.
ஏனென்றால், இறைவன் ஒருவனே நம்முள் உயிராகவும் ஆறாவது அறிவாகவும் இருந்து நம்மை வாழ வைக்கின்றான்.
இதை உணர்வதே ஆன்மீகம், தன்னை அறிதல்!
மாதா பிதா குரு தெய்வம்.
குரு என்பவன் இறைவனின் ஒரு கருவி.
குருவைப் பெற்று, அவனை சரணடைந்து, அவனை பின்தொடர்ந்தால், நாம் இறைவனை அடையலாம்!
நாம் மனிதப்பிறவி எடுத்த நோக்கமே அதற்காக தான்.
இல்லையென்றால், நாம் பல முறை மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடும்.
Humans like a machine
Heart-pump
Brain- ECU
Veins- sensor
Lungs,kidney -filter
Stomuck- engine
Intestines- energy absorption
@Iyyappan P neenga automobile engineer huh
@@80prabhuraja mechanical
@@iyyappanp8498 athana pathan ... Nee kalaku bro
we are the most advanced machines,
and they claim we are created by accidents>>>
Don't compare non living with living beings
அதெல்லாம் சரிதான் அனு கூட்டுத்தொகைதான் உயிர் நீங்க உங்க தந்தையின் உடலில் ஒரு செல்தான் உயிராக இருந்தது அப்போது உங்க உடல் கிடையாது உடல் என்பது உங்க தாயிடம் இருந்தது உடலுக்கும் உயிருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு மிஸ்டர் Gk நாங்க இதுல பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளோம் உயிர் என்பது ஒன்றுதான் அதுவே இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ளது ஆத்மாவே பரமாத்மா
Mr. Gk sir.. unga videos ketkum bodhu sila neram bhrammipa irukum.. keep doing... All the best sir..
உயிர் உடலில் எங்கே உள்ளது என்பது பற்றி மிக சிறப்பான விளக்கம் மனவளகலை ( SKY yoga ) மன்றத்தில் சொல்லியிருந்த கருத்து ரொம்பவே convincing aaha இருந்தது .. kindly go through it
ரொம்ப நாளாக நானும் என் "உயிரை" தான் தேடிட்டு இருக்கேன் 😎
Saji baskar 90’s kids dhane bro neenga 🤔
@@vigneshn5472 same blood
Uyir... Uyirukku naan enga Da Poven😂😂
Namaste ji
(ராஜயோகம்)பிரம்மாகுமாரிஸ் வகுப்பிற்கு போங்க உயிர் பற்றிய சத்திய உண்மை தெரியும்....
அருமையான பதிவு.ஒரே ஒரு சின்ன திருத்தம். குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியுடன் தான் பிறக்கிறது.
பிறந்த குழந்தை அழுவதற்கு காரணம்,அதன் தொப்புள் கொடியை மருத்துவர்கள்
வெட்டுவதால்தான்.தொப்புள்கொடி வழியாக உணவும், காற்றும் தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைக்கிறது.தொப்புள் கொடியை வெட்டும்போது,அது தடைபடுவதால்தான் குழந்தை அழுகிறது.தொப்புள் கொடி வெட்டாமல் பிறந்த குழந்தை அழுவதில்லை.இன்றும் கேரளா வில் சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட மாட்டார்கள்.நம் தமிழகத்திலும் நம் முன்னோர்கள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட மாட்டார்கள்.குழந்தை பிறந்து ஒரு வாரம் கழித்து தானாகவே அது உதிர்ந்துவிடும்.இதுதான் ஆரோக்கியம்.தொப்புள் கொடியை வெட்டுவது தவறு.ஆங்கில மருத்துவம் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.
Mr. G.K is expert in giving fantastic intro but this video has got a classic conclusion too along with detailed explanations. 👏 Hats off 👍💖
@sharath chandan He is Charlie Chaplin 💖
Life is in blood
Uirr in blood
@@sanjaivictor3720 Blood is composed of living cells like RBC, WBC n platelets. Without these, blood doesn't exist. So as Mr.G.K said each n every living cells are responsible for life existence.
மதிப்பிற்குரிய திரு gk அவர்களே,
இந்த பதிவில் சிறு குறையுள்ளது. மேனாட்டார் ஆராய்ச்சியை கூறியுள்ளீர். வரவேற்கத்தக்கதே. இருப்பினும் நம் நாட்டில் வழங்கிவந்த சில மேலோட்டமான புறக்கதைகளை மட்டும் சொல்லிவிட்டு நம் சாஸ்திர நூலில் என்னத்தான் கூறினார்கள் என்பதை கூறாமல் விட்டுவிட்டீர்.
இதோ,
"அன்பின் வழியது 'உயிர்நிலை' அஃதில்லார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு"- தேவர் குறள்.
என்பு தோல் போர்த்த உடம்பு= பிணம்.
அன்பு= அம்பு=அப்பு=நீர் என்பன ஒன்றே.
அதன் வழியே உயிரின் இடம் அல்லது நிலை.
இதை சாந்தோக்கிய உபநிடதம் நன்கு விளக்கியுள்ளது.
உண்ணும் உணவால் மனமும் (எண்ணத்தொகுப்புகள்).
குடிக்கும் நீரால் உயிரும் விருத்தியடையும்.
அதாவது,
உணவின் காரியம் மனம்.
நீரின் காரியம் உயிர் அல்லது பிராணன். (இங்கு பிராணன் என்பது உயிர். வாயுவான oxygen அல்ல. அபானனே oxygen. அபானன் என்பது கழிவை நீக்குவதும், வெளியிலிருந்து கிடைப்பதுமாக வாசிட்ட நூல் கூறும். எனவே அபானனே oxygen.)
"நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு உடம்பு உயிரும் படைத்திசினோரே.." - புறநானூறு.
"நீரின்றி அமையாது உலகு(உடம்பு)..."- குறள்.
"நீராய் உருக்கு என் ஆருயிராய் நின்றானே..."- திருவாசகம்.
............
இன்னும் எவ்வளவோ பிரமாணம் உண்டு. பண்டைய காலத்தில் உயிருக்கு உவமையாக நீரை ஏன் ஒப்புமை செய்ய வேண்டும். அப்படி நீருக்கும் உயிருக்கும் என்ன தொடர்புள்ளது? இவையெல்லாம் கவிதை நயத்துங்காக எழுதப்பட்டதா?
சாந்தோக்கிய உபநிடதம்:
உத்தாலகர் தன் மகன் சுவேதகேதுவிடம் கூறியதாவது
".......சுவேத கேது! இன்று முதல் நீ பதினைந்து நாள் உணவை உட்கொள்ளாதே. விரதமிரு. உன் மனம் பலமிழப்பதை நீ அறிவாய். இருப்பினும் இந்த பதினைந்து நாளில் நீர் அருந்துதலை விடாதே. உன் விருப்பம் போல் இந்த பதினைந்து நாளும் அளவில்லாமல் நீரை பருகலாம். ஏனெனில் உணவின்றி 15 நாளில் மனம் தளர்ச்சியடையுமே தவிற உயிர் தளராது. ஆனால் நீர் இல்லாமல் இந்த உடலில் ஒரு கணம் கூட உயிர் நிலை பெறாது. எனவே உண் இச்சைபடி இந்த பதினைந்து நாளும் நீரை அருந்துவாயாக ஆனால் உணவை மட்டும் உண்ணாதே."
பின் விரதத்தை முடித்து எலும்பும் தோலுமாக சுவேதகேது தன் தந்தையிடம் வந்தார்.
அதை பார்த்து உத்தாலகர் கூறியதாவது.
"சுவேதகேது! நீ முன் படித்த வேத பாடத்தை என்னிடம் கூறுவாயாக" என்றார்.
சுவேதகேது சிந்தித்தார். படித்தது நினைவுக்கு வரவில்லை.
அதை அறிந்த உத்தாலகர் கூறியதாவது.
"இதோ இந்த உணவை உன். இளைப்பாறு. பிறகு பார்க்கலாம்." என்றார்.
சுவேதகேது உணவை உண்டு நித்திரை செய்து பின் தந்தையிடம் வந்தார்.
பின் உத்தாலகர் கூறியதாவது.
"உணவை உண்டதால் உன் மனம் பலமடைந்துள்ளது. எனவே நீ இப்போது வேதபாடத்தை சொல்வாயாக" என்றார்.
சுவேதகேது தன் தந்தையிடம் அனைத்து வேத பாடத்தையும் நினைவுகூர்ந்து செப்பினார்.
உத்தாலகர் கூறியதாவது.
"ஹே! சுவேதகேது இந்த 15 நாளில் உன் உயிரை காப்பாற்றியது நீர். அதைப்போல் உன் மனதை சிதைத்ததும் அதே மனதை வலுப்படுத்தியதும் உணவாகும். எனவே உணவையும் நீரையும் அளவறிந்து பயன்படுத்தி உன் உயிரையும் மனதையும் பலப்படுத்தி கொள்வாயாக."
ஒரு பொருளை அதன் தொடர்புள்ள இன்னொரு பொருளை வைத்துத்தான் கணிக்க முடியும். இதுவே சார்பியல் எனும் relativityயும் ஆகும். நீருடன் தொடர்புள்ளது உயிர். இத்தகைய தொடர்பை ஏற்படுத்தியது எது? தொடர்புள்ள இந்த நீரை வைத்து உயிரை அறியமுயாதா?
நிற்க.
உயிருக்கு வடிவம் உண்டா?
நம் உடம்பில் எத்தனை உயிர் உள்ளது?
ஓருயிர் என்பர் சாமானிய மக்கள். பல கோடி உயிர் என்பர் விஞ்ஞானிகள். இவை இரண்டு விடையும் தவிர்த்து வேறு விடை உள்ளதா?
அப்படி மூன்றாவதாக விடை இருந்தால்!!!!
செல்கள் அனைத்தும் கண நேரத்தில் பிறக்கிறது கண நேரத்தில் இறக்கிறது. இந்த கணநேரத்தில் அனைவரும் இறந்து பிறக்கிறாரா? அப்படி எனில் அதை நாம் உணராமல் இருப்பதன் காரணம்? மரணம் என்றால் என்ன?
"Most of my ideas and theories are heavily influenced by Vedanta or upanishads"- Erwin Schrödinger.
"Access to Vedas is the greatest privilege this century may claim over all previous century"- robert Oppenheimer.
"I go into the upanishads to ask questions" - Niels Bohr.
எனவே கேள்வியை உபநிடதத்திடம் கேட்டால் விடை கிடைக்காமல் இருக்குமா? கண்டிப்பாக கிடைக்கும்.
Mr.gk is back information pakka sammya erku. Plz edha continue pannu ga
Thanks for explaining clearly about life Mr. GK (@Mr. GK). As You have mentioned that if any of the organs failed to exist, we might lose the life, then how come few people in the world are surviving with 1 kidney, function less pancreas and non-working live. For some people, even the gall bladder are removed. How are they living ? can You please explain.
பல ஆண்டுகளாக மனதில் தோன்றிய கேள்விக்கு இன்று தங்கள் மூலம் விடை கிடைத்தது நன்றி
இது சரியான விடை அல்ல
Wow thats wonderful explanation. Your question and answers are amazing
எப்படி உங்களால் எந்த ஒரு விஷயத்தை மும் தடங்கள் இல்லாமல் முழுமையாக உங்களுக்கு தெரிந்த அறிவியல் உண்மையை மற்றவர்களுக்கு புரியும் படி சொல்ல முடிகிறது
Please please it was beautifully, please translate in Hindi and put in channel and share to North side also.
You translate this video transcript to Hindi. 👍🏻
Long awaiting concept Ji, thank you; better remove the background music while you explain, Just a suggestion
Nice topic... But better explanation needed...
Cell ku epdy vur vanthathu.?
Really I'm ur fan Sir... Each n every video n it's content really next level Sir.. I was talking about you only with my friend. Love you a lot Sir.. Waiting for every new videos of urs. Really ur a great sir🙏🙏🙏
thanks
@@MrGKTamil Ur always Heartly welcome Sir 🙏🙏🙏
நன்றி திரு GK, நான் சிறுவயதில் பாக்கியராஜ் நடத்திய பாக்கிய இதழில், படித்தது, ஞாபகம் வந்தது, அதில், உயிரை/ஆன்மா பற்றிய தொகுப்பை (மருத்துவர் ஆய்வு என்று நினைக்கிறேன்) எழுதியிருந்தார். இறந்து போகுகிற நிலையில் ஒருத்தரை மிக கனமான கண்ணாடி பெட்டியில் வைத்து விட்டு சுற்றி கேமராகளை நிறுவியிருந்தார். ஆத்மா/உயிர் போகும்போது நடந்ததை படம் பிடித்தார். உயிர் போகும்போது கனமான கண்ணாடி சிறிய அளவில் விரிசல் விழுந்தது என்று முடித்திருப்பார். இன்னொரு தொகுப்பில், சிறுவன் தன்னை கொன்றது இந்த பாலத்தில் அடியில் தான் என்று பாலத்தை கடக்கும்போது சொல்லுவானம், அதன் பிறகு அவன் சொன்ன வீட்டிற்கு சென்று அங்கு இருந்த ஒரு பெண்ணை பார்த்து இவங்கத்தான் ஏன் மனைவி மற்றும் அவரது குழந்தையை பார்த்து இவங்கத்தான் ஏன் பிள்ளைகள் என்று கூறினான் என்றும், பிறகு அவன் சொன்ன மாதிரி பாலத்தில் அடியில் கொலை நடந்தது காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சிறுவன் மூலமாகவே கொலையாளியை கண்டு பிடித்ததாகவும் சொல்லி இருப்பார் அந்த இதழில்.
அதிகமான குழப்பம், இன்றும் தீர்ந்தபாடில்லை...
நன்றி உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக அழகாக, புரியும் வகையில் இருந்தது...
Super Mr gk sir🤗😍 very nice video🤗
Smarty looking Speaking and presentation.
Each cell is living . Every cell has life. We are just multi cellular organism!
Awesome explanation sir 👍👌 thank you so much 🙏👍
ஆரம்பத்தில் வரும் உங்களின் சிரிப்பு தான் உங்களின் வீடியோவை முழுவதும் பார்க்க வைக்கிறது....😀
அருமை அண்ணா ....😉
Stay connecting GK brother....🤝
Thanks.....🙏
நீங்கள் சொல்லுவது ஒரு அனுமானம் சில விஷயங்கள் மட்டுமல்லாது பல விஷயங்கள் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாது இறைவன் சக்தி என்பது அதுதான்
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது...the Bible verse , Leviticus 17:11.
Super information Anna , very interesting, I watched full video without skip 👍
Literally felt "Teja VU"
I felt this 11 minutes like I was already there earlier. Don't know whether Mr.GK or someone. But I heard the exact same definition in the same modulation.
Creepy!
I too have felt it
புருவ மத்திக்கு நேர் நடுப்பகுதி மனித மூளையின் மையப் பகுதி மனோன்மணியம் உங்க அறிவியல் முறைப்படி சொன்னால் பீனியல் கிளாண்ட் மனித உயிர் இருக்கும் இடம் ஆதாரம் உள்ளதா என்றால்? வெளி நாட்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை கூறினீர்கள் நல்லதே அதேபோல் நமது உள்நாட்டு விஞ்ஞானிகள்( தமிழ் சித்தர்கள் ) கண்டுபிடித்த பல விடயங்களை பாடல்களின் மூலம் விளக்கியுள்ளார்கள் முடிந்தால் அதை ஆராய்ந்து கூறுங்கள் மனித உடலில் உயிர் எங்கே உள்ளது என்று, நன்றி.
The explanation was way too good...the master returns in style👏👏👏...bro pls talk about quantum realm
Dear brother,
While meditation something happening.. I'm sure that's not a sleep.. can u explain about meditation.
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்.. உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்.. நினைத்தால் நினைத்தால் அதிசயமே.. அதிசயம் அற்புதம் நிகழத்தான் செய்யும்..
அருமை அண்ணா
இந்த பிறப்பில் உங்களது கருத்துக்கள் கிடைத்ததற்கு நன்றிகள் பற்பல ணா
11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது
லேவியராகமம் 17
அப்போது நம்முடைய இரத்தத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறோம்.
கேன்சர் வரும் போது நம் உடலின் மொத்த இரத்தத்தையும் வெளியேற்றி புதிய இரத்தம் செலுத்தபடுகிறது.அப்போது மனிதன் எப்படி உயிர் வாழ்கிறான்.
செல்கள் உயிரோட இருக்க வேண்டுமென்றால் ஆக்ஸிஜன் அவசியம் ஆக்ஸிஜன் தன்னுடைய வேலை செய்யவதற்கு ரத்தம்தான் பாலாமாக அமைகிறது அதனால் தான் மாம்சத்தின் உயிர் ரத்தத்தில் இருக்கிறது என்று Bible கூறுகிறது.
@@balamurugan8776 உங்கள் கேள்வி லே யே பதில் உள்ளது நண்பா
@@balamurugan8776 விபத்தில் அடிபட்ட ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், மருத்துவர் சொல்லும் முக்கிய வார்த்தை என்ன வென்றால் இவருக்கு நீங்க கொண்டு வந்த நபருக்கு இரத்தம் அதிகமா இழந்துவிட்டார் அதனால் இவரை காப்பாற்றுவது கஷ்டம் என்று...... புரிகிறதா நம் உயிர் இரத்தத்தில் உள்ளது என்று...
மாமிசமே இரத்தத்தில் தான் உருவானது
இரத்தம் நாம் உண்ணும் உணவில் தான் உருவாகிறது
மண்ணை உண்ணுகிறோம் என்று சொல்வதே அதனால் தான்
மண்ணுக்கு அதிபதி படைப்பாளன் மட்டுமே
பைபிள் - உபாகமம் 12:23
இரத்தத்தை மாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.
நமது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "sub-atomic" levels, four basic forces that rule the Cosmos" இவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது இந்த ஆழுறக்க நிலையில் உண்மையை உணராத வரையில் மனமாக, தனி மனித உணர்ச்சிகளாக, எண்ணங்களாக நாம் இங்கு பல உடல் உயிர்களை எடுத்துக் கொண்டே இருப்போம். மனத்தில் பதிந்துள்ள வாசனைகளே எண்ணிலாப் பிறவிகளுக்கு காரணம்.
அறிவியல் மனித உயிருக்கு "உயிர்ப்பு சக்தி - உயிர்க்கும் திறன்" எங்கிருந்து வருகின்றது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை. ஒருகாலும் கண்டுபிடிக்கவும் முடியாது. ஏனென்றால் உயிரைத் தேடிக் கண்டுபிடிக்க நினைக்கும் ஒரு மருத்துவ விஞ்ஞானியின் புத்தி உணர்ச்சியோ, எண்ணங்களோ அவனுக்கே புறமாகப் பாய்ச்சப் பட்டுக்கொண்டிருக்கின்றது. அப்பார்வை அவனுக்குள்ளே திரும்பி அவன் தன்னையே பார்க்க வேண்டும்.
ஒருவனுடைய ஆழுறக்கத்தில் அவன் தன்னுடைய "உயிர் உணர்வையே" அறிவதில்லையே. அப்போது அவனுக்கு அவனே இல்லையே - அதற்கு அப்புறம்தானே பிரபஞ்ச்சமே!! ஆனாலும் உறக்கத்தில் நாம் இறந்து விடுவதில்லையே. ஆகவே ஒருவன் அவனுடைய புத்தி, மன, புலன் இயக்கங்களால்தான் தன்னை இன்னாரென்றும், உலகத்தை "நாம+ரூப" மாகவும் உணர்கின்றான். எங்கு அறிவியலின் எல்லை முட்டி, மோதி இந்த விழிப்பு நிலை போலி உடல் உயிராக முடிகின்றதோ அங்கு "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "உண்மை உயிரைப்" பற்றிய ஆன்ம விஞ்ஞானம் ஆரம்பிக்கின்றது. மேலும் விளக்கங்களுக்கு: "Just be" RUclips Channel மூலமாக வெளிவந்து கொண்டிருக்கும் "The Inner Science University" என்ற "ஆன்ம விஞ்ஞானத்தைப்" பாருங்கள். ந்ண்பர் திரு.Mr.GK அவர்களும் மொபைல் எண் +91 73580 13415 தொடர்பு கொள்ளலாம். நன்றி. கா.மாரியப்பன்
Sema brother 👌👌 vera level explanation
This topic is more Metaphysical
You dealt it more Physically...
The word Human being is coined as Human (physical) and being (metaphysical)
So the answer you delivered is inthe Physical sense
But metaphysically misleading..
If you couls analyse these parameters
(dreams... Feelings ...Habits)
You could did much better..
Ok anyways nice attempt
மிக அற்புதமான விழிப்புணர்வுப் பதிவு. தங்கள் பணி தொடரட்டும்.
Do we have a technology to set ageless to 'Telomeres' in the cells? If we have we can avoid the Physical illness and organs failure in Old age....
Does 'Telomeres' playing a vital role in Stem Technology?
இதனை சங்க இலக்கியத்தில் படித்தது போல் இருக்கிறது ஆனால் எளிமையாக புரிய வைத்தற்கு நன்றி....... எல்லா வகையான விசையத்தையும் யாராலும் சொல்ல முடியாது...... ஆனால் நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்பு படுத்தி அதில் ஆராய்ந்து அதில் உள்ள உண்மையை புரியும் படி சொல்லு கிறீகள் 1000 நன்றிகள்........... Mr. Gk.............
சிறப்பு அண்ணா
பெயர்ச்சொல் அல்ல
வினைச்சொல்
Very good clarification sir👏👏👍
உயிரே இறைவன் சித்தர்களும் மகாண்ங்களும் சொல்லி வைத்தனர்
7:02 Key kodukkara bommai, pamparam idhukelam uyir illadhan. But, nammaloda visaiyinala dhaan adhu run aguthu. Onnu run aagarathuku energy kandipa thevai. Key toys, clocks, pambaram, idhuku andha time la energy kodukka namma irukom. But, namakku energy engirundhu kidaikidhu ? . Adhaan kelviye. Namma onum toyz kidayadhu
Wow superb explanation. I'm active & I'm soulful.
Again I visited 2 parts of E=Mc2 video. Really worth content to refresh my knowledge.
அற்புதம்! தெளிவான விளக்கம், நன்றி சார்
I have one serious question. A mass bends the space-time continuum according to "Theory of General Relativity" My question is why it bends. I hope to see videos about this. And about quantum entanglement and quantum physics. Keep up the good work. 😇
Sir, Soul particle is a noun not a verb. As you mentioned, when you broke the cell, the finite and the final element you get it as soul. Then the soul is a thing. (Name of person or thing is called noun). We called the soul particle in tamil (விண் அல்லது உயிர் ). When you say five elements , you will say earth, water, fire, air and akash). This Akash is nothing but விண் அல்லது உயிர். You may call the Soul Particles or God Particles or Higgs particle which are the first evolution. These particles are joined to together and becomes an atom. That is Hydrogen, oxygen. etc. When you break Hydrogen or oxygen , finally you may get this God Particles or Soul particles. Since this is a particle, we should describe it as a Noun Sir..Sorry for dislike. This is the trick for making you to read. I really liked your video sir.
Hi Mr. GK.
Our Life Is Science And It Is With You😎
Like Cells Are Refreshing Your Videos Are Keeping Us Refreshed
உயிரைப்பற்றி திருமூலர் அய்யா அவர்கள் விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். அதன் அளவும், அது நம் உடலில் எங்கு உள்ளது எனவும் தெளிவாக கூறியிருக்கிறார். தேவைப்பட்டவர்கள் திருமந்திரம் படித்து தெரிந்து கொள்ளவும்.
"உயிரை கொடுப்பது அல்ல அன்பு...
உயிரோடு இருந்து....
தான் நேசிக்கும்
உயிருக்கு துணை நிற்பது தான் அன்பு"
செமை பஞ்ச் நண்பா...!
ஒரு தலைக் காதல் இளைஞர்களுக்கு.....!
Super
🙏🙏🙏🙏👌👌👌
👌super. What is Vinoichol ?
அன்பு சகோதரருக்கு இனிய வணக்கங்கள்💗
சூப்பர் சார் தெளிவாக எளிமையாக விளக்கமாக உங்கள் பதில் பதிவு... வாழ்த்துகள்
தலைக்குள் ஜோதியாக உயிர் உள்ளது... அது தியானத்தில் தெரியும்...அந்த ஆன்மா உடலுக்குள் இருக்கும் வரைதான்... உயிர் இருக்கும்...
This videos amazing 💯%👍
நமது முன்னோர்கள் இதை 1000 வருடங்களுக்கு முன்பு ஆன்மிகத்தில் கூறியுள்ளனர்
😍😍😍😍😍 I love dis video... And Ur clear explanation
I feel like a genius when you explain about cockroach ,living .if you are also a neet aspirant you can feel the same😂🤣
Youturnல் உங்கள் விளக்கம் பார்த்தேன் . விளக்கமான விவாதம் சிறப்பு!
இருப்பினும் 1) மக்கள் தடுப்பூசிகளுக்கு பணம் கொடுக்கிரார்கள், மக்கள் பணத்தில் தான் அரசுகளே வாழ்கின்றன.
2) சுகப்பிரசம் என்பது குழந்தைய் இயற்கையாய் பிறப்பது மட்டுமே. வெட்டி எடுப்பதால் தாய்க்கும் , சேய்க்கும் பல மோசன விளைவுகள் .
3) கொரானா, சில வகை புற்றுநோய், சக்கரை நோய்க்கு மருந்தை குயுபா பாவித்தும் அது ஏன் WHO வால் பயண்பாட்டிற்கு வரவில்லை ?
யார் சரி என அடித்துக்கொள்ளம் கூட்டத்தில் நான் இல்லை .
Hello Mr.GK, if our body omits the dead cells and creates new cells, brain also will do the same right? When a cell in our brain dies, how we are keeping our memories to a new cell?
critical thinking 👍
Maybe before they transfer memory to another cell or new cell or some other parts in brain before cell die
Hey Mr. GK,❤.. Awesome topic and excellent clarification 😍.. Thanks a lot 🌹🌹
U starting is Vera level. Like a thriller movie
உண்மையான நல்ல விசயம் சார்ந்த பதிவு.
மனமார்ந்த நன்றிகள்.
You're a genius..
You are an excellent teacher..
Instagram meeting super Tamil Pokkisam;Lmes; fantastic🤘😝🤘
Idha naan sonna pathiyamunu sollraanga...aathma nu onnu kedaiyaadhu uyir enbadhu cells ah poruthu thaan iruku udambula iruka edha oru cell respiration ah stop pannidichina padi padi ya organ failure ..... insufficient blood and then clinical death.....
How do you get the topics that never bored us 💪💪💪💪💪💪💪
Perfect channel to follow appreciate your efforts
காதல் எப்படி உருவாகிறது சொல்லுங்க தலைவரே, சும்மாதான் கேட்டேன் கண்டுக்காதீங்க, உங்களைப் போன்ற சில மனிதர்களால் மட்டுமே பல நடுக்கமான விஷயங்களுக்கு பதில்களை ஆராய முடியும் அந்த முயற்சிக்கு நன்றி! ❤️
STR Kamaal
நல்ல கேள்வி
சிலருக்கு கவட்டில்(கால்களுக்கு இடையில்🖕 )இருந்து தான் உருவாகிறது..
@@Dora-Makees எனக்கு என்ன வருத்தம் என்றால் உனது அறிவு இன்னும் வளரவே இல்லை என்பதில் மிகவும் வருத்தமடைகிறேன்🤣
@@perfectaudiencetamil6022
இதை அறிவுள்ளவன் சொல்லியிருந்தால் 👏 நன்று. குடிகாரப்பயல் 🐕நீயெல்லாம் அறிவுரை சொல்ல 👋
@@Dora-Makees காலம் உனக்கு உணர்த்தும் கவலைப்படாதே அறிவுகெட்ட சகோதரரே 🤣
சிறப்பான ஆக்கம்,
தமிழ் புத்தாண்டு தொடர்பான அறிவியல் சார்ந்த விளக்கத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
Go to check tamil sinthaniyalar peravai RUclips channel
1:20 antha siripu 🔥🔥🔥
❤️
@@d_k4rthik yow militry nee enga ya inga
@@vishwa.....8149 hehe 😅❤️
Anna..uyir pona piraku athaavathu irantha piragu udalil nadakkum maadrangal enna?...ovvoru parts ah detail ah video podunga... Pls...
*I love your videos....*
*I am new Subscriber brooo....*
Anna..appadina namma aayul nammudaya cell poruthathaa? Apdina drinks, pondra bad habits, disease ivaikal nammudaya maranathaukku mulumaiyaana kaaranam illaiyaa? Expiry date athaavathu aayul kaalam munkoottiye fix seyyapattatha? Pls am very eager..reply anna
Some times heart beat is happening in other parts like legs, hands and backside shoulders of our body.why?
Super explains. 👏🏻🤝🏻👍🏻😍
இரத்தத்தில் தான் உயிர் உள்ளது...
இரத்தத்தில் தான் உயிர் உள்ளது..
23 இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு, இரத்தமே உயிர், மாம்சத்தோடே உயிரையும் புசிக்க வேண்டாம்.
உபாகமம் 12
11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்,; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
லேவியராகமம் 17:11
14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்குச் சமானம், ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம், சகல மாம்சத்ததின் உயிரும் அதின் இரத்தந்தானே, அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
லேவியராகமம் 17:14
@@rajavasanthi87 Rightly pointed 👍
சற்று நேரம் முன்பே எனக்கும் இது தோன்றியது. உங்கள் பதிலை பார்த்து வியந்தேன்.
மிக அருமையான பதிவு.. நன்றி
What is life?
If a group of molecules which are arranged in a specific configuration able to regenerate the same group of molecules with the same configuration then it has life.
Mukup case
@@mathanmalamm9396 🤣🤣🤣🤣🤣
@@mathanmalamm9396 Yeah man i am mugging up but with some understanding.
@@drsuriyavm955 bro that is called pattern ..... if we can regenerate that pattern then we can assume that as life in our human context . Whatever u said only few people can understand.. gud job bro
Where does that life go during our deep-sleep state?
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்,; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
லேவியராகமம் 17:11
இரத்தமே உயிர்,
உபாகமம் 12:23
இதை சொன்னால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் அறிவாளிகள் என்றும் நாங்கள் சிந்திக்க தெரியாதவர்கள் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள்.ஒரு நாள் காலம் பதில் சொல்லும் யார் சரியானவர்கள் என்று.
இதை எழுதி கிட்டத்தட்ட 3500 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் தான் இயேசு கிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்தி மரித்தார். அவரை விசுவாசித்தால் பாவ மன்னிப்பும் நித்திய ஜீவனும் உண்டு.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
நமது(ஆத்மா) உயிர்,உச்சிக்கும் கீழே உள்நாக்கிற்கும் மேலே இருபுருவ மத்திக்கும் உள்ளே உள்ள பீனியல் சுரபியில் உள்ளது.
Ohhhhhh
He is talking about the science of life. You are stating your belief. Belief is simply acceptance without proof, while science is based on verifiable facts.
17:85 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا
17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
அல் குர்ஆன் , பனூ இஸ்ராயீல் :85
சகோ செல் தான் நம்மை இயக்கிறது என்றால் செல்லை இயக்குவது எது
Battery 🤷
Sooru
Iraivan
@@samsudheen4378 😂😂🤣
கடவுள்
எவ்வளவு தெளிவான பதிவு அருமை அண்ணா 👌👍🤗👌😍
Classic topic bro 💪
your videos very useful to me