கூற்றாயினவாறு | தேவாரம் -2 | Kootrayinavaru | Thevaram | Thirunavukkarasar | திருநாவுக்கரசர்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- பதிகம் 4.1 - திருவதிகை வீரட்டானம் (பண் : கொல்லி)
Background:சிறுவயதில் பெற்றோரை இழந்து தமக்கையார் திலகவதியார் அரவணைப்பில் வளர்ந்த மருள்நீக்கியார், இளமையில் சமண சமயத்தைச் சேர்ந்து தருமசேனர் என்ற தலைவராகத் திகழ்ந்தார். திலகவதியாரின் நெடுநாள் வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் அருளால் தம்பியாருக்குத் தீராச் சூலைநோய் உண்டாகித், திருவதிகையில் தொண்டுசெய்து வாழ்ந்த திலகவதியார் மடத்திற்கு அவர் வந்துசேர்ந்தார். திலகவதியார் திருவைந்தெழுத்து ஓதி அளித்த திருநீற்றைப் பூசிக்கொண்டு திருவதிகை வீரட்டானம் கோயிலுட் புகுந்து ஈசனைக் 'கூற்றாயினவாறு' என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடி வணங்கினார். சிவன் அருளால் சூலைநோய் தீர்ந்தது. வானில் எழுந்த சிவன் வாக்கால் 'திருநாவுக்கரசர்' என்ற பெயர் பெற்றார்.
A Humble Offering by Keerthana Vengatesan.
Let us get soaked by Eternal Music..
Like || Share || Comment || Love
If you like the song, please Remember to SUBSCRIBE to the channel.
Like and Share with your Family and Friends.
Make sure you Subscribe and Never miss a Video.
RUclips Link: www.youtube.co...
Join whatsapp Community of Keerthana Music World
chat.whatsapp....
Follow us on Instagram:
/ __keerthana_vengatesan
Follow us on Facebook Page:
/ keerthanavengatesan1
தேவாரம் - 2 | Thevaram songs | Kootrayinavaaru| கூற்றாயினவாறு | Lordshiva | Appar Song
======================
பாடல் எண் : 1
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 2
நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 3
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 4
முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 5
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 6
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 7
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 8
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 9
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பாடல் எண் : 10
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
#thevaram,
#kootrayinavaaru,
#omnamashivaya,
#keerthana,
#lordshiva,
#omnamahshivaye,
#thiruvannamalaitemple,
#thiruvasagam,
அருமை கீர்த்தனா மா ......தேவாரம் பாடல் தெளிவான குரலில் .......இனிமையான குரலில் பாடல் அற்புதம் ......
செவிகளுக்கு விருந்தாக இருந்தது தேன் குரலில் ........ஓம் நமசிவாய 🙏🙏🙏.....மென் மேலே வளர எனது வாழ்த்துக்கள் செல்லம் 👌👌👌🌹🌹🌹💯💯💯👍👍👍
மிக்க நன்றி ஆச்சி....ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஆச்சி....உங்களின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கு ஆச்சி....🙏🙏🙏🙏🙏🙏 மிக மிக நன்றி ஆச்சி...🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
Q
L0
😢.😮😮😮😮
@@KEERTHANAMUSICWORLD தங்கையே தமிழ் எழுத்துகளில் எழுதவும் plz....
தேவார வரிகளை தமிழில் எழுதுவதே சிறப்பு. ஆங்கில எழுத்துக்களில் இனிய தமிழை எழுதி இந்த இனிய குரல் கறைபட்டுவிட வேண்டாம்.
rommba suupper appada
அருமை அருமை தேன் போன்ற குரல் மனதை மயக்குகிறது. ஈசன் அருள் உள்ள குழந்தை. சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகு
Thankyou 🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
சிவாய நமஹ அம்மையப்பா அடியேன் வயிறு வழி சரியாக வேண்டும் அப்பா திருவடியை வணங்கிறேன் அப்பா அப்பா எங்க கூடவே இருக்க வேண்டும் பரிபூரணமாக ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் அப்பா எல்லோரும் நலமாக வாழ வேண்டும் அப்பா திருச்சிற்றம்பலம திருச்சிற்றம்பலம
படல் வரிகளை இனிய தமிழில் மாற்றினாள் நன்று
மாற்றினால்
இது தான் தமிழ்!.. எங்கேயிருந்து வருகின்றீர்கள் நீங்கள்?...
ஆங்கிலத்தில் இருக்கும் பாடல் வரிகளை இனிய தமிழில் மாற்றினால் நன்றாக இருக்கும்.
அய்யா இது தான் உண்மையான தமிழ்.
என் மனம் நிலைதடுமாரி நின்ற போது ஓருநிலை படுத்திய தேவாரம் பாடியது வெகு சிறப்பு....
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
11:28
உன் குரலுக்கு நான் என்றுமே அடிமை...நெஞ்சம் நிறைந்து.....இருக்கிறது ...கீர்த்தனா நன்றுமிகவும் சிறப்பு.
...
.
ஐயா 🙏🙏☺️
Om namasivayanamah 👏👏👏👏👏👏👏👌❤️
சிவாய நம.... வாழ்வில் திருப்பம் தருவது திருமுறைகள் தான்.
உண்மை 🙏
Om namasivaya om sakthi parasakthi om nandhikeshwaraya namo namaha
Thirusittampalam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏porpadham🌹🌹👌👌🙏potry🙏ஓ. நமசிவாயம். 🙏🙏🙏🙏🙏🙏arumi🌹🌹🌹இன்னும். 🙏🙏பலப்பதிகம். 🌹🙏🙏🙏pada🙏திருவருள். 🙏🙏kootta🌹🙏🙏vendum🙏🙏thirusitrampalam🙏
ஓம் நமசிவாய..... திருச்சிற்றம்பலம்.....சிவ...சிவ....
Super Good Thevaram🎉🎉🎉
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றியே
திகட்டா...தேவாரம் உன் குரல்வளத்தால் அமுது படை..
...
ஓம் நமசிவாய 🙏🙏🙏🪔🪔
விலக்ககிலீர்...❤
மிகமிக அருமை.
உள்ளத்தை நெகிழவைக்கும் பாடல்...அப்பர் திரூவடிகள் போற்றி போற்ற
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
AMMAANE ,,,azhaitha azhaku pini theernthathu thaaye !
எல்லாம் அவன் செயல் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😢enna oru arputhamana voice. Om namah shivaya ❤
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️😂😂😂❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏
Mikavum Nantru
Superb
my family blast into happy tears by this thevaram
woderful Keerthana Arumi the varam
வணக்கம்!
அருமைக் குரலில் அருமைத் தேவாரம்!
கடவுள் கருணை!!!
இந்த பாடலை உங்களின் குரலுக்காகவே நான் கேட்கின்றேன் கீர்த்தன?☺️
Love it
Thankyou 🙏🏻
Amazing😍😍🤩🤩🤩🤩 super, best if luck for your future 😊😊🥰🥰🥰🥰🥰🥰
Thank you soooo much Riya....you are really supportive to me🙏🙏🙏🙏👍👍
Very nice Keerthana. I always love to listen to your songs
Thankyou so much Ayappa!!!!
எத்தனை முறை கேட்பது என்று நினைத்தாலும் , இப்பொழுது ஒரு முறை மட்டும் என்று தூண்டுகிறது ..
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
ஓம்❤நமசிவாய 🌹🙏🌹
மிகவும் அருமையான குரல் மற்றும் அருமையான பாடல் வரிகள் இவற்றில் உள்ள பாடல் வரிகளை தமிழில் இருந்தால் சிறப்பாக இருக்கும்
I'm addicted to your voice ❤ . .
Awesome Keerthana..
Thank you Uncle 🙂
Wow... really superb keerthana.i always admire and enjoy your sweet voice..and too proud of u being my friend's daughter
Thanks a lot Uncle...Feeling blissful by your words...!!!
அருமை அருமை சிவன் அருள்கிடைக்கும்
Mikka Nanri Thatha!!! Ungal aasirvatham!!!
சிவசிவபச்சையம்மன்போற்றி
Great voice. Superb. Excellent.
Touching and mesmerizing.
Thank you very much.
Namachivaya Vaazhga,
Namachivaya Vaazhga,
Namachivaya Vaazhga.
Thiruchitrambalam
❤❤❤🙏🙏🙏🇲🇾
atumyiyana paaraynam crystal clear atumyi appar swamihalin thruvadigali vanangi vaalvoom until last breath thruchitrambalm
அருமை! 🙏.....🙏 திருச்சிற்றம்பலம் 🙏...... 🙏
சிவசிவதமிழ்த்தாயே
Super valga valamudan 100 வயதுவரை வாழ்வாயாக
Manamarntha nanrigal ayya🙏🙏🙏🙏🙏
நன்றி ❤❤
❤ திருச்சிற்றம்பலம்
siva siva siva thiruchitrambalam
சிவ சிவ
Siva siva
Thanku 🙏
I am hearing the great song and doing meditation I feel
My soul is touching the God
Thanku dear🙏🙏
🎉arputham
Nanri ayya🙏🏻
Awesome 👏👏👏👏
Thank you Navnit!!
🎉❤
Beautiful 😅
Thanks 😅
@@KEERTHANAMUSICWORLD I used to listen to my mother sing to us on Tamil 🙏 school day and it reminded me of her
wonderful rendition.....superb....sivayanama
Clear voice and pronounciation... awesome work...
Keep rocking Keerthana...👌👌
Thank you so much Uncle 🙂
Thirugnanasampanthare pennai piranthar amma un vadivil🙏
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
நன்றி ❤வாழ்த்துகள்
மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
சிவாயநம 🙏🙏🙏
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏
மிகவும் 🙏அருமை
Semma voice dear... Very super singing.. I am very proud of you.. Each and every second singing words very very super.. Music legend uuuuu
Thank you sooooo much Athai!! You are really really supportive to me....Thank you soooo much again Athai!!😍🙏🙏🙏🙏🙏🙏🙏
Omnamasivayapotri
திருவடிவணக்கம்.தாயே.பொன்னார்.மாதர்பிறை.கூற்றாயின.கேட்டேன்.அப்பர்சாமிகள்அருகிலிருந்தநிலைஎய்தினேன்.நின்னிருதிருவடியைவணங்கிக்கொள்கிறேன்.பாடல்.சிவாயநம.
மிக்க நன்றி ஐயா🙏
Super👌👌👌
Thank you so much!!
Kural inimaiyaga irukkiradhu amma 🙏🏻🙏🏻🙏🏻
Thankyou ☺️🙏
ruclips.net/video/pieMBzj1THQ/видео.html
i am addicted to your voice sister
Thanku so much😊😊👍👍👍👍
இருதயம் கேட்டது இவ் ஒலியை ..
இல்லை இல்லை. தங்கத்தமிழின் தேவார இசை.
திரு அதிகையில் பாடபெற்ற திருப்பாடல்....
ஈசனை தரிசிக்க
பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை என்ற ஊருக்கு வரவும்..
Ellam avan seyal... 🙏🏻🙏🏻🙏🏻varugirom🙏🏻
Akka pls send thunchalum jalum
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
சிவக்குழந்தை நீ
வாழ்க வளமுடன் அருமை 🙏🥭🕉
Nanri ayya / amma🙏🙏🙏😍
om namasivaya
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
திருச்சிற்றம்பலம் 🙏
நன்றி.
தமிழ் தெரிந்த அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று நினைத்து விடாதீர்.
அழகு தமிழில் சொல்லி தமிழுக்கும் தேவாரத்திற்கும்
பெருமை சேருங்கள்.
ஓம் நமசிவாய வாழ்க
Very good and great thanks to keerthana
🙏 Namaathe
வணக்கம் அம்மா கீர்த்தனா. தயவுசெய்து உங்களிடம் எனது வேண்டுகோள்.
தயவு செய்து தமிழ் வரிகளுடன் பாடலை செய்யுங்கள். நம் தாய்மொழியில் படிக்க விரும்புகிறேன். தமிழின் இனிமை தெய்வீகக் கவிதையின் அழகை மேம்படுத்துகிறது. வருங்கால சந்ததியினரால் நம் மொழியை இழக்க விரும்பாததால், இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இனிமையான தீந்தமிழ், தேன் போன்ற இனிமையான குரல். ❤❤❤❤❤❤❤
கூற்றாயினவாறு விலக்ககலீர்
இத்தலம் நடு நாட்டிலுள்ளது.
சுவாமி : வீரட்டானேஸ்வரர்; அம்பாள் : திரிபுரசுந்தரி.
இப்பதிகம் சூலை நோய் தீர ஓதியருளியது.
திருச்சிற்றம்பலம்
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 1
நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 2
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 3
முன்னம்மடி யேன்அறி யாமையினான்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 4
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 5
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 6
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவலி லாமையினால்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே
பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னாத்துறை அம்மானே. 7
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்
சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தேயென் வயிற்றி னகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 8
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார்
அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்மதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 9
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 10
திருச்சிற்றம்பலம்
Superb. Om namashivya.
அருமை வாழ்த்துக்கள் செல்வமே🙏
Nanri ayya🙏🙏🙏
மிகவும் அருமை 💐💐💐
அருமை
Excellent 🎉
Super ma sivan Arul kidaikatum
Thanku so much🙏🙏😊
Super mam. Very diviniful
Thank you very much
அருமையான குறல் வாழ்த்துக்கள்
குரல்
வரிகள் தமிழில் இருந்தால் நன்று, சிவ சிவ
Very nice
Thank you very very much for beautiful English lyrics....emperuman's thirukarunnai upon you.
Please change ponnar meniyaen in english too. It's so difficult to get the right n easy English lyrics😊
தமிங்கிலீஷில் போடாமல்தமிழில் போட்டிருந்தால் அருமையாக இருக்கும்.வயிற்று வலியுள்ளவர்கள் 48நாள் பாட நலம் ஏற்படும்
So nice and pleasing voice. Excellent job Keerthana. I am sure you are a blessed child.
Small request....
Please change English text to Tamil.
தமிழ் எழுத்துக்கள் ஆக மாற்ற வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
Miha sirappu
Sir,
Sweet voice.
Lyrics may be displayed in Tamil , please.
spr sister
Thank you very much
God bless you always da ❤️🩶
பாடல் வரிகளை தமிழில் பதிவிடவும் நன்றி
இனிய குரல்.
பாடல் அருமை.
பாடியவர் பெயர் குறிப்பிட்டால் நன்கு.
Thankyou 🙏🏻Keerthana Vengatesan Singer 🙏🏻
👍👍👍👌👌👌
ஏன் ஆங்கில பதிவு ?