Sulamangalam Sisters _Kandhar Anuboothi- Semi Classical

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • -Video Upload powered by www.TunesToTub...

Комментарии • 20

  • @geethashanmugam6462
    @geethashanmugam6462 10 месяцев назад +2

    எனக்கு பிடித்த பாடல் 🙏🏻இந்த கந்தர் அனுபூதி 🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻சக்திவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @thirushaa
    @thirushaa 6 лет назад +9

    நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
    தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
    செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
    பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
    நூல்
    (1) ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
    பாடும் பணியே பணியா அருள்வாய்
    தேடும் கயமா முகனைச் செருவில்
    சாடும் தனி யானைச் சகோதரனே.
    (2) உல்லாச, நிராகுல, யோக இதச்
    சல்லாப, விநோதனும் நீ அலையோ?
    எல்லாம் அற, என்னை இழந்த நலம்
    சொல்லாய், முருகா சுரபூ பதியே.
    (3) வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
    ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
    யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
    தானோ? பொருளாவது சண்முகனே.
    (4) வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
    தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
    கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
    தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.
    (5) மக மாயை களைந்திட வல்ல பிரான்
    முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
    அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
    சகமாயையுள் நின்று தயங்குவதே.
    (6) திணியான மனோ சிலை மீது, உனதாள்
    அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
    .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
    தணியா அதிமோக தயா பரனே.
    (7) கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
    இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
    சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
    விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.
    (8) அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
    பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
    குமரன் கிரிராச குமாரி மகன்
    சமரம் பெரு தானவ நாசகனே.
    (9) மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
    பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
    தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
    நிட்டூர நிராகுல, நிர்பயனே.

  • @bimasu
    @bimasu Месяц назад

    In the eighties, in Chennai Jawahar Nagar Murugan temple, every Tuesday and Friday, evening from 6.30 pm, all three- kandar shashti kavasam, shanmuga kavasam and kandar anubhuti used to be played and devotees used to sing along. At the end, naivedyam, mangalarathi and then Prasadam distribution.

  • @Shrisaravana
    @Shrisaravana Год назад +1

    Ommuruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @thirushaa
    @thirushaa 6 лет назад +5

    (30) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
    ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
    அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
    எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.
    (31) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
    வீழ்வாய் என என்னை விதித்தனையே
    தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
    வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.
    (32) கலையே பதறிக், கதறித் தலையூடு
    அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
    கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
    மலையே, மலை கூறிடு வாகையனே.
    (33) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
    விந்தாடவி என்று விடப் பெறுவேன்
    மந்தாகினி தந்த வரோதயனே
    கந்தா, முருகா, கருணாகரனே.
    (34) சிங்கார மடந்தையர் தீநெறி போய்
    மங்காமல் எனக்கு வரம் தருவாய்
    சங்க்ராம சிகாவல, சண்முகனே
    கங்காநதி பால, க்ருபாகரனே.
    (35) விதிகாணும் உடம்பை விடா வினையேன்
    கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
    மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
    துதியா விரதா, சுர பூபதியே.
    (36) நாதா, குமரா நம என்று அரனார்
    ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
    வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
    பாதா குறமின் பத சேகரனே.
    (37) கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
    பரிவாரம் எனும் பதம் மேவலையே
    புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
    அரிவாய் அடியோடும் அகந்தையையே.
    (38) ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
    தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
    கூதாள கிராத குலிக்கு இறைவா
    வேதாள கணம் புகழ் வேலவனே.
    (39) மாஏழ் சனனம் கெட மாயைவிடா
    மூஏடணை என்று முடிந்திடுமோ
    கோவே, குறமின் கொடிதோள் புணரும்
    தேவே சிவ சங்கர தேசிகனே.
    (40) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
    மனையோடு தியங்கி மயங்கிடவோ?
    சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
    தினையோடு, இதணோடு திரிந்தவனே.
    (41) சாகாது, எனையே சரணங் களிலே
    கா கா, நமனார் கலகம் செயும் நாள்
    வாகா, முருகா, மயில் வாகனனே
    யோகா, சிவ ஞான உபதேசிகனே.
    (42) குறியைக் குறியாது குறித்து அறியும்
    நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
    செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
    அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.
    (43) தூசா மணியும் துகிலும் புனைவாள்
    நேசா முருகா நினது அன்பு அருளால்
    ஆசா நிகளம் துகளாயின பின்
    பேசா அநுபூதி பிறந்ததுவே.
    (44) சாடும் தனிவேல் முருகன் சரணம்
    சூடும் படி தந்தது சொல்லு மதோ?
    வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
    காடும், புனமும் கமழும் கழலே.
    (45) கரவாகிய கல்வி உளார் கடை சென்று
    இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
    குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
    சரவா, சிவயோக தயாபரனே.
    (46) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
    சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
    கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
    மைந்தா, குமரா, மறை நாயகனே.
    (47) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
    பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
    சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
    கூறா உலகம் குளிர்வித்தவனே.
    (48) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
    பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
    செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
    வெறி வென்றவரோடு உறும் வேலவனே.
    (49) தன்னந் தனி நின்றது, தான் அறிய
    இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
    மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
    கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.
    (50) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
    கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
    நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
    திதி புத்திரர் வீறு அடு சேவகனே.
    (51) உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

  • @saradhathangam4045
    @saradhathangam4045 6 месяцев назад

    பிடித்த பாடல் ஒரு விண்ணப்பமும் பாடல் வரிகளுடன் எதில் சென்று பார்க்க வேண்டும்

  • @puma3984
    @puma3984 2 года назад

    Murakami, sarawanbava,Kanda 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthivenkataraman8392
    @shanthivenkataraman8392 Год назад +1

    Can anyone tell the ragas of these 51 verses

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 5 лет назад +2

    Kanda Saranam kadamba Saranam pazhani andava Saranam

  • @pponramachandran927
    @pponramachandran927 6 лет назад +3

    Om nama sivaya

  • @mathisri5865
    @mathisri5865 3 года назад +1

    Please Need download

  • @mgarumugam3299
    @mgarumugam3299 6 лет назад +2

    Can someone give the meaning of this song pl?

  • @mgarumugam3299
    @mgarumugam3299 6 лет назад +1

    Can someone give the meaning of this song pl?