திருமண திருப்புகழ் 48 நாட்கள் சொன்னால் திருமணம் நடக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2020
  • Gowri Shop
    gowrishop.com
    Gowri Shop
    whatsapp
    +91 78456 36886
    POOJA THINGS
    gowrishop.com/products/pooja-...
    Gowri Shop Products are available in Bharathi Super Market Salem 8825088250
    To see the video about my experience about this song
    • அதிசயம் ஆனால் உண்மை இந...
    ஒவ்வொருமுறை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிறைவடைந்த பின்னர், திருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களின் தாயார் தங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்ய பல தடைகள் வருகிறது சாமி இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று கேட்பார்கள். வாரியார் சுவாமிகள் சத்திய வாக்காக அனைவருக்கும் சொல்லும் அற்புத மந்திரம் தான் அருணகிரி நாதர் சுவாமிகள் இயற்றிய இந்த திருமணத்திருப்புகழ்.
    1 முறை விளக்கேற்றினால் போதும். 6 தடவை மந்திரத்தை சொல்ல வேண்டும்.
    இம்மந்திரத்தை விளக்கேற்றி வைத்து தினமும் 6 தடவை தொடர்ந்து 48 நாட்கள் சொல்ல வேண்டும். திருமண வயதில் இருக்கும் பெண்கள் அல்லது பெண்ணின் தாயார் அல்லது மணமகன் அல்லது மணமகனின் தாயர் இம்மந்திரத்தை தொடர்ந்து கூறினால் உடனடியாக பலன் உண்டு. திருமணமானவர்கள் தொர்ந்து இம்மந்திரத்தை கூறினால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
    ஓம் விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
    மிகவானி லிந்து வெயில்காய
    மிதவாடை வந்து தழல்போல வொன்ற
    வினைமாதர் தந்தம் வசைகூற
    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
    கொடிதான துன்ப மயல்தீர
    குளிர்மாலை யின் கண் அணைமாலை தந்து
    குறைதீர வந்து குறுகாயோ
    மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து
    வழிபாடு தந்த மதியாளா
    மலைமாவு சிந்த அலைவேலை யஞ்சல்
    வடிவேலெ றிந்த அதிதீரா
    அறிவால றிந்து உன் இருதாள் இறைஞ்சும்
    ம(அ)டியாரி (இ)டைஞ்சல் களைவோனே
    அழகான செம்பொன் மயில்மேல (அ)மர்ந்து
    அலைவாயு கந்த பெருமாளே.
    எங்கள் குறை தீர வந்து குறுகாயோ
    அலைவாயுகந்த பெருமாளே !
    See the meening of the song and song in English down
    ......... சொல் விளக்கம் .........
    விறல்மாரன் ... வீரனாம் மன்மதன்
    ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,*
    வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக
    வெயில் போலக் காய,
    மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து
    தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த,
    வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம்
    வசை மொழிகளைக் கூற,
    குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும்
    பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
    நான் அடைந்த
    கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர,
    குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே
    அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து
    குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து
    அணுகமாட்டாயா?
    மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும்
    இறைவன் சிவபிரான்
    மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று)
    மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,
    மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்)
    வீழ்ந்து படவும்,
    அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,
    வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே,
    அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து,
    உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும்
    அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே,
    அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன்
    மயில்மீது அமர்ந்து
    அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
    பெருமாளே.
    Song 101 - viRalmAran aindhu (thiruchchendhUr)
    viRalmAran aindhu malarvALi sindha
    migavAnil indhu ...... veyilkAya
    midhavAdai vandhu thazhalpOla ondRa
    vinaimAdhar thamtham ...... vasai kURa
    kuRavANar kundRil uRaipEdhai koNda
    kodidhAna thunba ...... mayaltheera
    kuLirmAlai yinkaN aNimAlai thandhu
    kuRaitheera vandhu ...... kuRugAyO
    maRimAn ugandha iRaiyOn magizhndhu
    vazhipAdu thandha ...... madhiyALA
    malai mAvu sindha alaivElai anja
    vadivEl eRindha ...... athidheerA
    aRivAl aRindhun iru thAL iRainjum
    adiyAr idainjal ...... kaLaivOnE
    azhagAna sempon mayil mEl amarndhu
    alaivAy ugandha ...... perumALE.
    Light Sting by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com

Комментарии • 315

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 Год назад +32

    இந்த முருகன் ஸ்லோகம் 48 நாட்கள் என் பையனுக்காக படித்தேன்.முருகன் அருளால் என் பையனுக்கு கல்யாணம் நடந்தது விட்டது.கல்யாணம் நடந்து 9 மாதம் ஆகிவிட்டது.முருகன் அருளால் நலமாக இருக்கிறார்கள்.கடவுள்துணை இல்லையேல் வேறென்றும் இல்லையே.ஓம் சரவணபவு. நன்றி மேடம்.🙏🙏

  • @missblue-yv9ft
    @missblue-yv9ft 3 года назад +32

    அம்மா இன்றுதான் நான் இந்த ஸ்லோகத்தை சொல்ல ஆரம்பித்துள்ளேன்.நான் எதிர்பார்க்கும் மாறு நல்ல தைரியமான ஆண் எனக்கு வேண்டும். அவருடன் நான் பல்லாண்டு காலம் வாழ வேண்டிகொள்ளுங்கள்.

  • @hemalatha2577
    @hemalatha2577 Год назад +20

    அம்மா தாயில்லா என் தங்கைக்கு நான் இந்த ஸ்லோகத்தை பாடிநேன் அவள் திருமணம் நடந்தது

  • @banurekha1142
    @banurekha1142 3 года назад +15

    Mam Nan intha thirupugal padinan 48da. En son marriage fixed aiduchu.March encajment romba happy romba nandri.

  • @vijinatraj902

    உண்மை 🙏 நம்பி பாடுங்கள் நல்லதே நடக்கும்....

  • @GomathiM-rb1lw

    என் இரு மகன்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @nagalakshmimudaliyar1726
    @nagalakshmimudaliyar1726 3 года назад +8

    அருமை சகோதரி எனக்கு மிகவும் நல்ல விஷயமாக பட்டது என் மகனுக்கும் நான் பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் எனக்கும் இதே கவலைதான் சீக்கிரம் அமையவில்லை இதை நானும் பின்பற்றுகிறேன் மிகவும் நன்றி பயனுள்ள தகவலாக இருந்தது நான் வணங்கும் என் துர்கை அம்மனை சொன்னது போல் இருந்தது எனக்கு

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 Год назад +2

    உங்கள் வீடியோ பார்த்து நானும் என் மகனுக்காக இந்த பாடலை பாடி ஒரு மண்டலம் பூஜை செய்தேன்.என் மகனுக்கு திருமணம் நடைபெற்றது.மிகவும் நன்றி.. பழமுதிர் சோலை கோயில் போன் நம்பர் கிடைக்குமா.பாலாபிசேகம் தொடர்பான தகவல் விசாரிக்க வேண்டும்.மிகவும் நன்றி.

  • @subukuttysubukutty1833
    @subukuttysubukutty1833 2 года назад +3

    இன்று தான் ஆரம்பித்துள்ளேன் என் மகளுக்கு நல்ல வரன் அமைய வாழ்த்துங்கள்

  • @nagalakshmimudaliyar1726
    @nagalakshmimudaliyar1726 3 года назад +16

    அதுவும் தீபத் திருநாளான இன்று உங்கள் வீடியோவை பார்க்க நேர்ந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது

  • @thangamounica3649

    Its very very true thirupugal has power.. I too sang 48days in Pooja room before ending 48 days I saw my man in murugan kovil and 48th day I got engagement.

  • @rams5474

    இந்த பாடல் பிரார்த்தனையை நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக உள்ளது. மக்கள் அதை உங்களுடன் பாராயணம் செய்ய உதவுகிறது.

  • @manimegalaia6185
    @manimegalaia6185 3 года назад +7

    அருமை. சிறந்த சேவை. வாழ்த்துக்கள்.

  • @thangarajm3199
    @thangarajm3199 3 года назад +31

    It is true. I prayed for my brother . He got married . Who see this video please pray for your family members who is unmarried. Power full mantra. Thanks gowri

  • @vijayabharathi8334
    @vijayabharathi8334 Год назад +15

    100% powerful mantram. My brother got engaged within 28days with God bless Lord Murugar.

  • @user-eo1id9um5n

    அம்மா நான் என் மகளுக்காக படிக்க ஆரம்பித்துள்ளேன் நல்ல வரன் அமைய வாழ்த்துக்கள். வாழ்த்துங்கள்

  • @chandraa8818
    @chandraa8818 3 года назад +2

    This is very important and helpful message for all of us, Thanks 🙏🙏

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917 3 года назад +1

    Vaazhga Valamudan neengal ...very sweet voice. ... thanks for helping us ..

  • @flutenggr.creationsvallisu1037
    @flutenggr.creationsvallisu1037 3 года назад +8

    Thanks for sharing. I've started to sing 6 times from today for the success of my daughter's marriage. Nalla Kalliyanam koodi varanum, mam. Today vaigasi vishagam.

  • @ranisivakumar6512
    @ranisivakumar6512 2 года назад +6

    Yes its true my daughter got engaged with in 48 days of pooja everyone should try this pooja its every powerful