மறைந்த பாடகர் எஸ் பி பி யின், 4ம் ஆண்டு நினைவு நாள். ஓசூரில் இசை அஞ்சலி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • மறைந்த பாடகர் எஸ் பி பி யின் நினைவு நாளை ஒட்டி, ஓசூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, இசை அஞ்சலி.
    2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிரபல திரைப்பட பின்னணி பாடகர், எஸ்பிபி என்று அழைக்கப்படும், எஸ் பி பாலசுப்ரமணியம் மறைந்தார்.
    அவருக்கு நினைவு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக நான்காவது ஆண்டாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜெயப்பிரியா இசை குழுவினரின் சார்பில்bதனியார் பள்ளி அரங்கில், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட பாடகர்கள் டாக்டர் நாராயணன், பாடகி தன்யா ஸ்ரீ மற்றும் பரந்தாமன் உள்ளிட்ட இசை கலைஞர்கள் எஸ்பிபி யின் பாடல்களை பாடி இசை அஞ்சலி செலுத்தினார்கள்.
    இளம் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன், சர்க்கஸ் ஊழியரின் வாழ்க்கையை சித்தரிக்கும் மௌன மொழி நாடகம் அரங்கேற்றம் செய்து மறைந்த பாடகருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள், உடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
    பேட்டி : பரந்தாமன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

Комментарии • 4