சுந்தரர் தில்லையில் || SUNDHARAR THILLAIYIL || DISCOURSE : SIVA BAKTHAVACHALAM || ANUSH AUDIO

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சொற்பொழிவு : சிவ ஆ பக்தவச்சலம் || சுந்தரர் தில்லையில் || SUNDHARAR THILLAIYIL || DISCOURSE : SIVA BAKTHAVACHALAM || ANUSH AUDIO
    திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய அணுக்கத் தொண்டினை மேற்கொண்டவர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார். அங்கு உமையம்மையாரின் சேடியர்களில் அநிந்திதை கமலினி என்ற மதிமுக நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டு காதல் கொண்டார். அந்நங்கையர் இருவரும் ஆலாலசுந்தரர்தம் அழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டனர். மகளிர்பாற் சென்ற மனத்தை மீட்டுச் சுந்தரர் இறைவனுக்குரிய நல்மலர்களைக் கொய்துகொண்டு பெருமான் திருமுன் சென்றார். அம்மகளிரும் அவ்வாறே மலர் கொய்து சென்றனர்.
    எல்லா உயிர்களுக்கும் உள்நின்று அருள்சுரக்கும் பெருமான், ஆலாலசுந்தரரின் எண்ணத்தை அறிந்தார். சுந்தரரை விளித்து `நீ மாதர்மேல் மனம்வைத்தாய். ஆதலால் தென்னாட்டில் பிறந்து அம்மகளிருடன் காதல் இன்பத்தில் கலந்து மகிழ்ந்து பின்னர் இங்கு வருக` என்று பணித்தார். சுந்தரர் அதனைக்கேட்டு மனம் கலங்கிக் கைகளைத் தலைமேல் குவித்து `எம்பெருமானே! தேவரீருடைய திருவடித்தொண்டிலிருந்து நீங்கி மானுடப்பிறப்பை அடைந்து மயங்கும்போது அடியேனைத் தடுத்தாட்கொண்டருள வேண்டும்` என வேண்டிக்கொண்டார். பெருமானும் சுந்தரருடைய வேண்டுகோளுக்கு இசைந்தருளினார்.
    பிறப்பும் வளர்ப்பும்:
    ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் தென்தமிழ் நாட்டில் திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவலூரில் மாதொருபாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவ வேதியருள் சிறந்தவராகிய சடையனார்க்கு அவர்தம் அருமைத் திருமனைவியார் இசைஞானியார்பால் தீதகன்றுலகம் உய்யத் திருவவதாரம் செய்தருளினார். சிவபிரான் அருளால் தோன்றிய தம் குழந்தைக்கு நம்பியாரூரர் என்று திருப்பெயரிட்டனர் பெற்றோர்.
    நம்பியாரூரர் நடைபயிலத் தொடங்கித் தெருவீதியில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்து அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையரையர் அக் குழந்தையின் அறிவொளி திகழும் திருமுகப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்து பெற்றோர்களிடம் சென்று நட்புரிமையால் நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுத் தம் அரச பதவிக்குரிய தம் அரசிளங்குமரராகக் கருதி அன்போடு வளர்த்து வருவாராயினார்.
    அரசரின் அபிமானப் புதல்வராய் வளர்ந்த நம்பியாரூரர் அந்தணர்மரபுக்கேற்ப முந்நூல் அணிந்து அளவற்ற கலைகளில் வல்லவராய் விளங்கினார். இவ்வாறு இளம் பருவத்திலேயே திருவும் கல்வியும் வாய்க்கப்பெற்ற நம்பியாரூரர் இளவரசராயிருந்து பழகித் திருமணப்பருவத்தை அடைந்தார்.
    சடையனார் தம் மைந்தர்க்குத் திருமணம் செய்ய எண்ணி னார். திருநாவலூரை அடுத்த புத்தூரில் சைவ அந்தணர் மரபில் வந்த சடங்கவி சிவாசாரியார் என்னும் பெரியாரின் திருமகளை மணம் பேசி வரப் பெரியோர்களை அனுப்பினார். சடங்கவி சிவாசாரியாரும் பெரி யோரை வரவேற்றுபசரித்தார். தம்முடைய திருமகளை மணம் செய்து தர இசைந்தார். முதியோரும் சென்று இம்மகிழ்ச்சியைச் சடைய னாருக்குத் தெரிவித்தனர்.
    அதனைக்கேட்டு மகிழ்ந்த சடையனார் திருமண நன்னாளை உறுதிசெய்து நம்பியாரூரரது அரச பதவிக்கு ஏற்பச் சுற்றத்தார் நண்பர் முதலானோர்க்குத் திருமணத் திருமுகம் அனுப்பினார். புத்தூரில் சடங்கவி சிவாசாரியாரும் திருமணம் நிகழ்த்தற்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவறச் செய்தார்.
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies

Комментарии • 18

  • @thandavangsivam6389
    @thandavangsivam6389 Год назад +1

    சிவ சிவ திருவடி

  • @sathyasivam5124
    @sathyasivam5124 7 месяцев назад +1

    சிவாயநம

  • @DevotionalPP
    @DevotionalPP 2 года назад +2

    🙏 Namaskarangals for the Absolute Arumayana Devine Villakkangals and Villakkangals 🙏. 🙏 Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 месяца назад

    Omnamasivaya

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 2 месяца назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤❤❤

  • @s.k.kutralaselvamselvam2147
    @s.k.kutralaselvamselvam2147 4 года назад +1

    சைவத்தில் ஊறி திளைத்த பேச்சு. தங்கள் பேச்சுக்கு சைவ விளக்கத்திற்கு நன்றி!ஓம் நமசிவாய

    • @AnushAudio
      @AnushAudio  4 года назад

      மிகவும் நன்றி

  • @sankaralingamguru8809
    @sankaralingamguru8809 4 года назад +1

    மனம் உருகிறது அய்யா உரையில்.

  • @saralasinisaralasini3777
    @saralasinisaralasini3777 3 года назад +3

    சிவாயநம🙏🙏🙏🙏🙏வார்த்தை வரவில்லை கண்களில் நீர் திருச்சிற்றம்பலம்

  • @sivantempletour
    @sivantempletour 2 года назад

    திருச்சிற்றம்பலம்#sivantempletour

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 2 месяца назад

    இவர் பேச்சில் செயலில் ஆணவமே மேலோங்கி இருந்தது

  • @somasundarammuthusiva9307
    @somasundarammuthusiva9307 3 года назад +1

    Sivayanama iyia

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 5 лет назад

    ஏழை அடியார் யாவை செல்லினூம் மகிழும் ஈசன் நன்றி திருச்சிற்றம்பலம்

  • @lordshivastalks9161
    @lordshivastalks9161 5 лет назад

    solla vaarthai illai, beautiful discourse , the speaker has swallowed saivam and saivism ..... 100% unstinted belief on Lord shiva...... om nama sivaya

  • @gopit.k8402
    @gopit.k8402 Год назад +1

    Sivayaga nanaga iya