TAMIL COMPLETE SONG--Ponnenna poovenna kanney (vMv)--ALAIKAL 1973
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- Vembar Manivannan facebook Page ...
இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
FOLLOW US ON FACEBOOK ...
www.facebook.c...
பூவின் தேனாய் துளிர்க்கும்
ஒரு இனிய பாடல்...
களியாடும் தென்றலின் ஊடே...
மின்னிச்சிரிக்கும் ஒளிக்கீற்றுகளின்
தொட்டணைக்கும் பாதைகள் வழியே...
விழி தூங்கும்,
செவி விழிக்கும்...
இரவுதரும் போதையில்...
கேட்டு சிலிர்த்த இப்படிப்பட்ட பாடல்கள்...
இதயத்தின் நரம்புசிதறல்களில்
சித்திரமாய் படிந்து
காலமெல்லாம் ரசிக்கச் செய்யும்...
"பொன்னென்ன பூவென்ன கண்ணே"...
(முழுமையான பாடல்)
அலைகள் (1973)
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : ஜெயச்சந்திரன்
பாடலுக்கான நடிப்பு : விஷ்ணுவர்தன், சந்திரகலா
ஏற்கனவே பதிவு செய்த பாடல்:
• TAMIL OLD--Ponnenna po...
அலைகள் (1973) திரைப்படத்தின்
நடிக நடிகையர் :
விஷ்ணுவர்தன், சந்திரகலா, சோ, மனோரமா,
தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன்,
சுந்தரிபாய், குமுதினி, தூலிபாலா
மற்றும் பலர்...
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல்கள் : கண்ணதாசன்
இயக்கம் : ஸ்ரீதர்
இந்தப்படத்தில்தான் இயக்குனர் ஸ்ரீதரால்
விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்...
************************************************
~Research of very rare old tamil songs
--பழமை காப்போம்
e mail : vembarmanivannan37@gmail.com
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
Yes. Correct
ஆஹா என் உள்ளம் கவர்ந்த பாடல் பாடல் என்று சொல்வதை விட அது ஒரு தேவ காணம் 1973 களிலே காற்றினிலே வரும் கீதம் போல் உலா வந்த காலகட்டம் அது எங்கு கேட்டாலும் எப்போது கேட்டாலும் நின்று நிதானித்து பாடலைக் கேட்ட பிறகே செல்வேன் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் இந்த பாடலை கேட்க முடிந்தது அது ஒரு கனாக்காலம் இளமையின் தொட்டிலிலே ஆடிவந்த பொற்காலம் என்னுடைய இதய வானிலே லேசாக காதல் அரும்பிய காலம் அது வானத்துக்கும் பூமிக்குமாக நடந்து ஓடி விளையாடி குதூகலித்த நேரம் அது அந்த பாடலைக் கேட்டவுடன் என் இளமைக்கால நினைவுகள் அலைமோதியது நெஞ்சத்திலே அதன் பயனாக கண்களிலே கண்ணீர் வேதனையில் துடித்தேன் திரு வேம்பார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்
En expression neenga vilavariya sollitteenga...tq
எவ்வளவு புது, புது பாடல்கள் வந்தாலும் MSV ஐயாவின் இசையில் ஜெய சந்திரன் ஐயா குரல்வளத்தில் எத்தனை காலம் சென்றாலும் அழியாத பாடல்.
மீண்டும் அந்த காலங்கள்
வராதா என ஏங்கும் இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போதுமனம் ஏங்குது அந்த காலங்களில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்
இலங்கை வானொலி ராஜாங்கம் நடத்திய காலத்தில் அதிகம் கேட்டு ரசித்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடலை கேட்கும் போது அந்த கால என்னுடைய பள்ளி நாட்கள் பசுமையாய் என் மனதில் விரிகின்றது. நன்றி
🌹ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ?பொலி யோடு நடைபோடும் நீரோ டையும் ?சுகமானது ?சுவை யானது ?இந்நாளும் அது போல உயர்வானது ?🎤🎸🍧😝😘
*சாகா வரம் பெற்ற பாடல்...*
*இசை:MSV*
*பாடல்: கண்ணதாசன்*
*பாடகர்:P.ஜெயச்சந்திரன்*
*கேட்போரின் மனதை மயக்கும் பாடல்..*
Super cute
அந்த காலத்தை இழந்து விட்டோமே என்ற சோகம்...இந்த பாடல் கேட்பதற்கு இருக்கிறதே என்ற இன்பம்...இரண்டு உணர்ச்சிகள் கேட்கும் போது...அமுதம்....
உண்மையான வார்த்தை சார்
நினைத்தாலே இனிக்கும் அந்த இளம் வயது நாட்கள் 🎉🎉🎉1964-2024❤❤❤
❤
இலங்கை வானொலி இன்று அனைவராலும் மறக்கப்பட்டது.....ஒரு காலத்தில் எப்பொழுது காலை ஏழு மணி ஆகும் என காத்திருந்த காலம் பொன்னானது...நினைவுகளில் இனிமையானது...
தேடி தேடி அலைந்தாலும். கிடைக்காத பொக்கிஷம் இப்பாடலை கேட்டு எத்தனை ஆண்டுகள் வாழ்த்துக்கள்
Is
அது ஒரு காலம்
அது ஒரு பொன்னான காலம், பொங்கும் பூம்புனல். நிகழ்ச்சியில் வரும் அந்த இசை இன்னும் நம் மனதில்.... 😪😪😪😪😪😔😔😔😔
@@VenkateshVenkatesh-vk3pd இன்று இலங்கையை நினைத்தாலே
கண்களில் நீர் வருகிறது.
இந்த பாடல்களை பதிவு செய்வதற்கும் ஒரு ரசனை வேண்டும்...அந்த உயர்ந்த ரசனைக்கு என் மனமார்ந்த நன்றிகள்
இதயத்தை வருருடும் ஜெயச்சந்திரன் குரல் என் உயிரே எப்படி இருக்கிறாய்
Mind refreshing song. So good.
Exactly. 100 percentage true.
ரசனைக்குரிய பாடல்.
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
நான் குழந்தையாக இருக்கும்போது வந்த பாடல் ஆனால் கல்லூரி காலத்தில் கேட்ட பின்பு செல்போனில் பார்த்த பின்பு என் உயிர் உடல் ஆன்மா அனைத்தும் இவர்களுக்கு நன்றி இன்றும் 24 முறை தினமும் பார்த்தும் கேட்டும் பிறவிப் பயனை அடைகிறேன். Thirunavu Delta tuitions CBE TN
மிக அருமையான பாடல்...
same feeling
திகட்டாத, தெவிட்டாத, மகத்தான, சிறப்பான, தரமான, உயர்வான இணையற்ற மதுர கீதம்.
எம்எஸ்வி, கண்ணதாசன், ஜெயச்சந்திரன் புகழ் வாழ்க.
ஜெயசந்திரன் அவர்களின் தேன் குரலும் M.S.V ஐயா அவர்களின் இனிய இசையும் கண்ணதாசன் ஐயா அவர்களின் வைர வரிகளும் எங்கோ என்னை அழைத்து செல்கின்றது.
Yes absolutely.
Sweet jayachandran very very sweet tone always you lived in the world
நன்றி திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களே இனிமையான இந்த பாடலை மழு மையாக தந்தமைக்கு கோடான கோடி நன்றி சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா உங்களுக்கு
yesss
70களில் கருப்பு வெள்ளை படப் பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையானது.
எந்த பாடலை பாராட்டுவது என்று தெரியவில்லை.
AM I rigjht
இந்த பாடலை கேட்கும்போது இனம் புரியாத ஏக்கம் தான் வருகிறது.இழந்த காலம் மதிப்பிட முடியாதது😭
En . Janakigaga . Epatal . Anban . K.. M.. R . Madurai
அலைகள் படம் failure என்றாலும் இப்படத்தை தூக்கி நிறுத்தியது இந்த பாடல்.சாகும் வரை நினைவில் நிற்கும் இந்த பாடல் .
அப்பாடா..........!!!அலைகள் என்று படத்தின் பெயரை சொன்ன முதல் ஆள் நீங்கள்தான். நன்றி சார்.
Yes . Thank you so much I wanted to know the movie name . 🙏
1970 லிருந்து
1980 வரை
வரும் ஜனத்தொகை
அனைவரும்
வாழ வேண்டும் என கட்டளை பிறப்பித்தால் நன்றாக இருக்கும்
S
S
👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻
Manasu. Vallikuthu
என் பள்ளி பருவம் முதல் காலங்கள் கடந்தாலும் என் உள்ளம் என்றும் கேட்கத் விரும்பும் பாடல் இது.
மன அழுத்தம் நிறைந்த இக்காலத்தில்
இந்த பாடல் அருமையான மருந்தாக உள்ளது
எனக்கு பிடித்த பாடல்.காலங்கள் பின்னோக்கி போகுமா,உண்மையில்
அந்த காலத்தில் பிறந்த நம்மைப் போன்றவர்கள்
கடவுளால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
காலங்கள் மாறினாலும் நம் எண்ணம் பழமை நோக்கியே
பயணப்படுகிறது.
அப்படியே பயணப்பட்டு நம்
காலம் போகட்டும். நன்றி
நம்மை போலவே ஓர் இசை பிரியர் உள்ளார் என்பதை நினைகும்பொது தங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேந தோழா
உங்களின் தேர்வுப்பாடள்கள்,எங்களின் மகிழ்ச்சி100%தருகின்றது,,,good,songs❤u
மார்கழி மாதம் அந்த அதிகாலை வேலை கோலம் போடும் தேவதைகலை கடந்து போகும் போது இந்த பாடல் அந்த காலம் என் உதடுகள் பாடும் அந்த காலம் யப்பா இன்று நினைத்தால் மேனி சிலிர்க்குது
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 👌
முனுமுனுப்பாகவா?
சந்திர க லா நடிகை super
நான் சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்டு மிகவும் ரசித்த பாடல் இந்தப் பாடலைக் கேட்கும்போது மனத்திற்குள் சோகம் கலந்த இன்பம் அதை விளக்க முடியாது. நன்றி நண்பரே.
Yes in Pongum poongunal aired at 7 am every morning radio ceylon used to bring out these lovely songs which even our radios failed to bring out in 70,s..
Another popular song was Gangai nadhi oram raaman nadanthaan..kanni magal seethai thaanum nadanthaal...
Aam dear@@mohansubramaniam682 kaalaiyil pongumpoombunal kettu yellorum surusuruppagividuvargal, UNMAI!
🎉
😂❤
எத்தனை காலம் தவமிருந்தேன்.இந்த பாடலை காட்சியுடன் காண.மிக்க நன்றி.
அட...டா!
எப்ப கேட்டாலும்
நல்லா இருக்குய்யா!
M S V என்ற மஹா கலைஞனுக்கு வந்தனம்!
ஜெயசந்திரன் என்னமா பாடிட்டார்!! விஷணுவர்த்தன் முகத்தில் காட்டும் காதலின் கனிவும் ஏக்கமும் பரவசமும்....
ஆஹா!!
Sweet voice jeyachandran
பாடல் வரிகள் அருமை. பாடியவர் குரல் இளமை
இசை தந்தவர் திறமை
காட்சி படுத்திய இயக்குனர் அபார உழைப்பு.. நடிகை சந்திர கலா துளிர்த்த இளமை.
அவர் நடித்து அதே ஆண்டு 1973 வெளி வந்த இன்னொரு படம் உலகம் சுற்றும்.
வாலிபன். வண்ணப் படம். அதில் கண்ட coliurful சந்திர கலா அலைகள் படத்தில் ரசிகர்கள் மனதில் பதியவில்லை.
கன்னட நடிகர் விஷ்ணு வர்த்தன்.
அவர்கள் தமிழில் அறிமுகமான
படம்.அலைகள்.நடிகை பாரதி
அவர்களின் கணவர்.
இந்த பாடல் கேட்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு ரசவாத உணர்வு நரம்பு மண்டலத்தில் ஊடுருவி புத்துணர்வை மீட்டெடுக்க...புது அவதாரம் எடுத்தது போல் உணர செய்கிறது... கண்டிப்பாக பாடல் முடியும் போது இமை ஓரங்களில் ஓர் துளி ஈரம்... எதனால் தெரியவில்லை
Yes bro.I have the same feelings like as you. Very nice and melody song.
@@MUTHUPANDI-og5pv True in my case also
Same feeling
Me too
எனக்கும் 💕💕❤️
இந்த பாடல் கேட்கும்போது நினைவு எங்கோ செல்கிறது
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமையான இனிமையான பாடல் . எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.
உண்மை நூறு முறை கேட்டாலும் சலிக்காத. தங்கப்பாடல் இந்த பாடலின் கூட்டனனிக்கு தலைவணங்குறேன் அன்பரே !
எங்கு தேடினாலும். கிடைக்காத அரிய பொக்கிசமல்லா இந்த சாரல்
வணக்கம் திரு. வேம்பார் அவர்களே.. இந்த முழுப்பாடலை கேட்க எத்தனையோ வருடங்கள் தவமிருந்தேன். உங்கள் உதவியால் இப்பொழுது உலாவரக் கண்டு, கேட்டு. மிக்க மகிழ்ச்சி.நன்றி பல.
ஐயா நீர் மகா ரசிகன்
நண்பரே. நானும் இதே மனநிலையில் இருந்தேன்.
ஒளி - ஒலிக்காட்சியாக பார்க்கும்போது மனதுக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி. நன்றி. நன்றி.
P
நன்றி!
நன்றி! நன்றி!
திரை இசையை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை இலங்கை வானொலிக்கு உண்டு
அய்யா எம்.எஸ்.வி ன் நினைவு வருகிறது... தமிழ் திரை இசையின் சக்ரவர்த்தி.... எழுபது வரைக்கும் ஒருவிதம்... எழுபதுக்கு அப்புறம் வித்தியாசமான இசை..நான் இளையராஜாவின் ரசிகன்... எனக்கு வயதாக வயதாக எம்.எஸ்வின் மீது ஈர்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது...
எனக்கு இன்று 58 வயது இன்னும் ரசிக்கிறேன் பழைய நினைவுகளுடன் சிலோன் வானொலி யப்பா தெளிவா இருக்கும்
53 வயதில் உங்களை போலவே நானும் ரசிக்கிறேன் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு பிறகு ❤அருமையான பாடல் ❤
@@seemaroshan7658 yes 👌👌👌
இந்த பாடல் முன் தற்போதைய அனைத்து இசை அமைப்பாளர்க
ளும் சரண்டர்.
Fantastic comment, M.S.V beyond comparisson-Haji Haja from Qatar
அருமை, அற்புதம், அபாரம்
WELL SAID
@@hajamohaideen3821 thanks brother..i am also a fan of MSV the greatest
Thanks a lot..i am also a fan of MSV the greatest
எனக்கு அர்த்தம் தெரியாமல் இந்தப் பாடலை நான் எனது சிறு வயதில் கேட்டிருக்கிறேன் ஆனால் அர்த்தம் புரியும் பொழுது இந்தப் பாடலின் வரிகள் அர்த்தங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை எப்படி சொல்வது என்று எனக்கு புரியவில்லை பாடலின் ரசனையில் கரையும் இளங்கோ அன் கோவன் நினைவு பெட்டகம்
திரைப்படம் : அலைகள்;
(சித்ராலயா அளிக்கும், ஸ்ரீதரின்);
ரிலீஸ் : 13th ஜனவரி, 1973;
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்;
உதவி : ஜோசப் கிருஷ்ணா;
பாடல்கள் : கண்ணதாசன்;
உதவி : சுப்பு கண்ணதாசன், அரசு நாச்சியப்பன்;
பாடியவர் : ஜெயச்சந்திரன்;
பாடலுக்கான நடிப்பு : விஷ்ணு வர்தன், சந்திரகலா;
கதை, வசனம், இயக்கம்:- ஸ்ரீதர்.
நல்ல பூரண தகவல்.
நல்ல ரசனை உள்ளவர் மட்டுமே இந்த பாடலை பதிவு செய்திருக்க வேண்டும்.இந்த பாடலை பதிவு செய்த அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி,நன்றி, நன்றி சார்.
Nice to see your comment, i read in Kannada. ವಿಷ್ಣುವರ್ಧನ್ & ಚಂದ್ರಕಲಾ acted in the song. But i can't understand lyrics much. Beautiful and Melodious song. 🌹🌺💐❤️❤️.
எந்தவொரு தொடுதல் இல்லாமல் காதலை அழகாக இயக்கிய இயக்குனர் அருமையான இசை அழகான வரிகள் குரல்வளம் அத்தனையையும் அருமை
But the move was faili CV.Sridhar was a director very good move
அது மனம் தொட்டு வருகின்ற காதல்.
ஐயா என்னை சின்னப்பையனாக்கி பாட்டு முடிந்ததும் மீண்டும் கிழவனாக்கி மீண்டும் பாடலை
கேட்க வைத்து சிறுவனாக்கி
இது என்ன சார் விளையாட்டு
போதும் விடுங்க சார் பதிவுக்கு
நன்றி சார்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
என்ன தவம் செய்தேன் இந்த பாடலை கேட்க ... இசைப்பிரியன்
இலங்கை வானோலி மூலமாக கேட்ட பாடல் மீண்டும் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி
நன்றி வேம்பையன் அவர்களே
Vishnuvardhan & Chandrakala. Am I right? Lovely song and awesome movie too !👍💞
அழகானப் பாட்டு! எம் எஸ் வீ ! ஜெயச்சந்திரன் எத்தனை அழகாய் ப் பாடுறார்?!?!வரிகளும் அருமை! சந்திரகலா அருமை!! விஷ்ணுவர்த்தன் !! இந்தப் படம் நம் இதயத்தை இருக்கும்!! நல்லப் பாடல்!!
Super sir, thanks
@@rajarajan6018 ! ஓ! நான் ஒரு பெண் 👸!! நன்றீ!!,
இசையும் காட்சியமைப்பும்,
பாடலோடு நம்மையும் கூடவே கூட்டிச்செல்கிறது... அருமை அருமை...!
முழுப் பாடலையும் இணைந்து எத்தனை முறை பாடினாலும் சலிக்காத ஜெயச்சந்திரன் விஸ்வா அவர்களின் பொக்கிஷ கீதம்..
படித்த மக்கள் கலைஞன். தலைக்கனம் உயர்வு தாழ்வு இல்லை.
I love you vishnuvardhan good
அழகு பெண்கள் காலை வேலையில் வாசலில் கோலம் போடும் போது நான் அவர்கள் அருகில் சைக்கிலில் சென்று இந்த பாடலை பாடும் போது அவர்களும் என்னை ஆசையாக பார்த்து ஒரு புன்னகை போதும் ஆக இந்த உலகில் இதை விட என்ன பேரின்பம் எண்ணம் தான் அழகு வாழ்கை ❤❤❤❤
மிகவும் அருமையான பாடல்...30 வருடம் பின்னோக்கி அழைத்து செல்கிறது....
Nearly about 48 years. No chance unbeatable song
51 years gone
@@sundaranand6279 வாவ்
பாரதி மேடமின் Husband "கர்னாடக அழகன்.. ஶ்ரீதர் சாரின் கண்டுபிடிப்பு..."True Hero விஷ்ணு வர்தன் " சார் நினைவாக..... இந்தப் பாட்டு நடிகர் விஷ்ணு வர்தன் & பாடகர் ஜெயச்சந்திரன் இருவருக்குமே அறிமுகப் படம் + பாடல்...
தகவலுக்கு நன்றி
மிக மிக அருமையான பாடல். ஜெயசந்திரன் அவர்களின் முதல் Entry தமிழ் படத்தில், அனேகமாக இந்தப்பாடல் தான் இருக்கும். மிக இனிமையான ரம்மியமான குரல். என்றும் அழியாத கேட்கக் கேட்க தெவிட்டாத காலத்தால் அழியாத உன்னத பாடல்.
No Mani Paya is the first film to Jayachandra I think so
ஜெயச்சந்திரன் முதல் பாட்டு ஆசீர்வாதம்
இலங்கை வானொலியில் பாடல்கள் கேட்ட காலம் வானொலி பாடல்களை கேட்ட படியே வீட்டு பாடங்கள் எழுதிய நாட்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இது போன்ற இனிய தருணங்கள் நிச்சயமாக கிடைக்காது.so we Are the Blessed ones😊🤣☺️🦋🌹💕🎉
காதலிக்காத இதயம் கூட 70களில் இலங்கை வானொலியில் இந்த பாடல்களை கேட்டு காதலித்தவர்களில் நானும் தான்
ஜெயசந்திரன் அவர்களுக்கு இதுதான் தமிழில் முதல் பாடல் என்று நினைக்கிறேன்.
...இலங்கை வானொலியலைகளில் இந்த 'அலைகள்'அன்று அடிக்கடி வீசும்..! பெரும்பாலும் இரவின் மடியில் நிகழ்ச்சியில்..மலரும் நினைவுகள் நன்றி.!
இல்லை. மணிப்பயல் என்ற திரைப்படத்தில் "தங்கச்சிமிழ் போல் இதழோ" என்ற பாடல் திரு.பி.ஜெயச்சந்திரன் அவர்களுக்கு தமிழில் முதல் பாடலாகும். இந்தப்பாடல் அநேகமாக தமிழில் இரண்டாவதாக இருக்கலாம்...
மனதிற்கு அரிதான பாடல் இன்றும் இளமையுடன் வைரம்
கண்ணதாசன் பாடல்கள் கோடையிலும் மார்கழிதான்
இந்தப் பாடல் 3 மாநிலத்தின் சங்கமம் ஒன்று கவியரசர் கண்ணதாசன் 2 பாடகர் ஜெயச்சந்திரன் 3 நடிகர் விஷ்ணுவர்தன் இந்த ஒற்றுமை அன்றும் இன்றும் என்றும் நிலைக்கட்டும்
Chadrakala,Andhra, 4,state,
Super
Thanks
Semma comment.super
Ataa. Tay. Realy. Good. Sir
காலேஜ் தேவதை கள் bus ஸ்டாப்ல் நிற்கும் போது பைக்ல் ஸ்பீக்கர் கட்டி பாடும் போது அவர்கள் பார்க்கும் அந்த கள்ள பார்வை இருக்கே அட அட எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ❤❤❤❤❤
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே- ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை- புவி காணாமல் போகாது பெண்ணே! ஒலியோடு நடைபோடும் நீரோடையும். ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் சுகமானது சுவையானது.......,....... உன் வாழ்வும் உயர்வானது........ ஆம் பெண்மையின்பன்பை கண்ணதாசன் எவ்வளவு எளிமையான முறையில் வடித்துள்ளார்...... அருமையான படப்பிடிப்பு... தலைவன் தலைவியின் உணர்வுகளை நளினமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஞீதர்..... என்றும் திகட்டாத பாடல் காட்சி அமைப்பு.... பலமுறை பார்த்தேன் ரசித்தேன்... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வேம்பார் மணிவண்ணன் அவர்களே நன்றி வணக்கம் ஐயா🙏🤗
Super song lyrics.
மறக்க முடியாத
மனம் கவர்ந்த
இனிய கானம்!
எப்போதோ கேட்ட பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்டு மனதில் பதிந்த பாடல் தற்போது முற்றிலும் மறந்து போன பாடல்
ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,
ஆ: மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது,
ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,
ஆ: ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒளியோடு நடை போடும் நீரோடையும்,
ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒளியோடு நடை போடும் நீரோடையும்,
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது,
ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,
ஆ: செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா,
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா,
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா,
ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே....
கவியரசரின் அற்புதமான பாடல் எம் எஸ் விஸ்வநாதன் மயக்கும் இசை ! சந்திர கலா விஷ்ணு வர்த்தன் இளமை தோற்றத்தில் காட்டும் மென்மையான உணர்வுகள் மறக்க இயலாத பாடல் ஜெயச்சந்திரன் ஸ்ரீதர் மறக்க முடியுமா என் மனதுக்கு மிக நெருக்கமான பாடல்களில் இதுவும் ஒன்று என் நெஞ்சார்ந்த நன்றிகள் மணி வண்ணன்
Your observation & comments are Superb.. Especially, the Remarks:. "MSVyin Manadhai Mayakkum Isai."
Arumaiaruputhum
மிக மிக இனிமையான பாடல்
@@srm5909 indha padalai k s rajA vimarsanam pannum ninaivu bandhu vittadhu
nandru
My father brought BUSH radio 1976 MW/SW1/SW2. We hear this type from Ilangai.
அலைகள் படம் பார்த்து ரசித்த இப்பாடலை மீண்டும் கேட்க வாய்ப்பு கிடைத்தது நன்றி
அழகிய வானோலி காலத்து மனதை மயக்கும் சுகமான பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்!!👍👍👍
என்.இளம்.வயதில்.இப்படம்.பார்த்தேன்.வருடங்கள்.பல.கடந்தும்.இந்த.இனிமையானப்பாடலை.மறக்கமுடியாமல்.பல்லவியை.மட்டும்.பாடிக்கொண்டிருப்பேன்.இன்று.கனவுபாடல்.நிஜத்தில்.ஒலிக்கிறது.பொன்.என்ன.பூவென்ன.இந்த.பாடலுக்க.முன்.எதுவும்.இல்லை.நன்றி.
Super
யார் வருவார்
யார் பறிப்பார்
யார் அறிவார்
இப்போது...
இறைவன் கரங்களில்...
மனதை உருக்கி
காதில் இன்பத்தேன்
வந்து பாய்கிறது.
எத்தனை முறை
கேட்டாலும் சலிக்கவில்லை.
மெல்லிசை மன்னர்
ஐயாவின் பாதம் பணிந்து
வணங்குகிறேன்.
ஐயா ஜெய்சந்திரன்
அவர்கள் மிகமிக
அற்புதமாக
இனிமையாக
பாடியுள்ளார்.
🙏🙏👌👌👌🙏🙏
என் உயிரை வருடும் இனிமையான பாடல்.இந்த பாடலைப்போல் எந்த ஒரு பாடலும் என் மனதை கவர்ந்ததில்லை
ஆஹா ஆஹா அற்புதம் இது போன்ற பாடல்களை இரவு நேரங்களில் நான் விரும்பி கேட்கும் பாடல். அருமை
Yes
இந்தப் பாடல் மனதை வருடுகிறது மென்மையான இதமான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் தெரிகிறது 26-12-2022
மெய்மறந்து போகச் செய்யும் பாடல் வரிகள் மனதை மயக்கும் இசை தேன் மதுர குரல் அப்பப்பா 1980 களில் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல் இப்போது காணொளியில் கண்டு மகிழ்ந்தேன் நன்றி
ஜெயச்சந்திரனின் குரலில் மறக்க முடியாத பாடல்
பொன்னான காலம். இந்த பாடல் எங்கோ ரேடியோவில் பாடும். இந்த படம் எல்லாம் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த பாடல் ராகம்பிடிக்கும்.
வாழ்க எம்எஸ்வி ஐயா இனிமையான பாடலை தந்ததற்கு அவரின் புகழ் என்றென்றும் நீடித்திருக்கும் இப்பாடலை தேடி எடுத்து போட்டதற்கு மிகவும் நன்றி
ಹಾಡು superb. ವಿಷ್ಣುವರ್ಧನ acting Super.
பாடல்நல்லாஇருக்குவிஸ்னுவரதன்நடிப்புசூபர்
அட்டகாசமான டியூன்.... கேட்க கேட்க சுகம் தான்....
இதற்கும் டிஸ்லைக்கா ஐயோ
சுத்த ஞான சூனியன்கள் பாவம்....
ஓம்குமார்
மதுரை
நாட்பது ஆண்டுகள் முன்னாள் இலங்கெய் வானொலியில் கேட்ட பாடல்
என் சிறு வயது நாபகம் வந்துட்டு
இசைக்கடவுளின் இசைக்கோர்ப்பு
காலத்தைக் கடந்து நிற்கும்.
இப்படத்தை முன்பு நம் வானொலியில் ஒலி சித்திரமாக கேட்டது இன்றும் பசுமை
இலங்கை வானெலி வழங்கிய
அற்புதமான பாடல் .. teenage யை நினைவு படுத்துகிறது
ಸಾಹಸಸಿಂಹ ವಿಷ್ಣುವರ್ಧನ್... ಚಂದ್ರ ಕಲಾ... ಜೋಡಿಯ ತಮಿಳು ಚಲನಚಿತ್ರ ಗೀತೆ... ಸೂಪರ್... 🌹🌹🌹🙏🙏🙏
❤❤❤ பதிமூன்று வயதிலேயே இதுபோன்ற இனிமையான பாடல்கள் கேட்டு வளர்ந்த தலைமுறை நாங்கள்...!!இன்னும் அதே இளமை உணர்வோடு கேட்டுக்கொண்டேயிருக்கிறோம்..❤❤❤
அற்புதமான பாடல்...
3-ஆம் வகுப்பு மாணவ காலம்...
மனது கலங்குகிறது...
கண்ணில் என் 10 வயது வாழ்க்கை, ஆனந்தக் கண்ணீருடன்...
இப்பாடலில்
காலம் சென்ற என் பெற்றோரை உணர்கிறேன்...
நன்றி சகோ...
- அன்பு பண்டிட் வெற்றிவேல், புதுடெல்லியிலிருந்து...
Excellent song
Very very nice and sweet song .Evergreen great lyrics ,music, sweet voice and natural acting in this song.
அழகான பாடல்
நல்ல பாடல் கேட்பதற்கு இனிமையான பாடல் என் இதயத்தை என் இதயம் தொட்ட பாடல் நன்றாக இருக்கிறது சாகா வரம் பெற்ற பாடல் கேட்க கேட்க இனிமை நெஞ்சம் மறப்பதில்லை இப்படி ஒரு பாடல் இனி யாராலும் எழுத முடியாது நன்றி கோடி நன்றிகள்
எனக்கு மிகவும் பிடித்த ஜெயசந்திரன் பாடல்
ஜெயச்சந்ரன் சேரின் அழகிய பாடலை மறக்கவா முடியும்
திரும்ப கிடைக்காத அந்த பொற்காலம்.ஊஞ்சலில் படுத்துக்கொண்டு இரவில் தனிமையில் இலங்கை வானொலியில் கேட்ட இனிமையான காதல் பாடல்..என்ன ஒரு கண்ணியமான வர்ணனை...
இந்ந பாடல் நான் ஆறாம்வகுப்பு படிக்கும்போது.எங்கள் வானொலியில் கேட்டுமகிந்த நாட்கள் .இன்றும் அந்தநினைவுகள் என்னால் மறக்கமுடியவில்லை.
இந்தப் பாடலை முதன் முதல் இப்போது தான் பார்க்கிறேன், இதற்கு முன் பல தடவை சிறு வயதில் இந்த பாடலை முனு முனுத்துக்கொண்டு இருப்பேன்,நன்றிகள் பல 🙏🏻💐👍
அருமையானா பாடல் நீண்ட வருடங்களுக்கு பிறகு, கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
மெய் மறந்து கேட்க வேண்டிய பாடல் அந்தளவிற்கு P ஜெயச்சந்திரன் அவர்களின் மயக்கும் குரல் வளம்.
அலைகள் விஸ்வநாதன் இசை கண்ணதாசன் பாடல் வரிகள் ஜெயச்சந்திரன் குரல் அற்புதம் அருமை
என்ன இனிமை எம் தமிழ் வார்த்தை மெய் மறக்கிது ஆன்மாவை ரசிக்க வைக்கிறது.இந்த பிரபஞ்சம் எம் தமிழ்ழிற்க்கு கொடுத்த முதன்மை அனுக்கிரம்.
Yes brother. We are blessed people.
ப் ப் ப்பா 10..more lovely lyrics விஷ்ணு sir. வேற லெவல் fully natural
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் எனக்கு பழைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும்💐💐💐💐💐
Handsome Dr vishnuvardhan Gorgeous Mrs chandrakala combination of Messers Kannadasan. PJ Msv
make the song immortal. Thanks a lot Mr Manivannan for uploading this lovely song...