22. How to write RTI First Appeal Petition - தகவல் அறியும் உரிமைச்சட்டம் - முதல் மேல்முறையீட்டு மனு
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(1)ன் கீழ்,
முதல் மேல்முறையீட்டு மனு எழுது வது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது எப்படி என்ற வீடியோ லின்க்
• 21. How to write RTI ...
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
I want to download this document..plz tag
@@rnmmiller1894 வாய்ப்பில்லை
ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் படிதாரா.... அவர் அந்த கல்லூரிக்கு எவ்வளவு கல்வி கட்டணம் செலுத்தினர் போன்ற வினக்களை RTI மூலம் கேட்கலாமா...?
@@rameshkumar-zh9hh கேட்கலாம்
அந்த மாதிரி படிவத்தை டிஸ்கிரிப்ஷன்ல போட்டீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் பதிவு செய்து கொள்ளலாம்
நன்றி அய்யா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். நல்ல ஆயுளை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்.
மகிழ்ச்சி
Sir, What type petitions send to whom video potrunthal video number தெரிவிக்கவும்....thank you
மிகச் சிறப்பு அருமையாக தெளிவாக கூறினீர்கள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
மகிழ்ச்சி
ஐய்யா மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்... மேலும் தனிப்பட்ட முறையில் ஓர் உதவியை நாட விரும்பிகிறேன்... தங்களை தொடர்பு கொள்ள வாய்ப்புகள் கிடைக்குமா...
வாய்ப்பில்லை.
தங்களின் பதிவு அருமையாக உள்ளது. கைப்பேசி எண் கொடுக்கவும்.
மகிழ்ச்சி. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள். இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும் எனக்கும் அதுதான் சௌகரியம்.
If 30 days not 1st appeal on wrong information by company but only email i had asked its wrong , then can do appletate or new rti to a company
அய்யா வணக்கம் 🙏
கூட்டுறவு துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் பெற முடியுமா
தாங்களின் விளக்கம் மிக அருமை மிக்க நன்றி அய்யா
எனக்கு பதில் வேண்டுகிறேன்
பெற முடியும்.
அய்யா மிக்க நன்றி 🙏வணக்கம்
அய்யா வணக்கம் 🙏
கூட்டுறவு துறையில் நிதிமுறைகேடு நடந்துள்ளது அதை தகுந்த ஆதரங்களுடன் துறை அதிகரிக்களுக்கு பதிவஞ்சல் மூலம் தெரிவித்தேன் ஆனால் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது நடவடிக்கை ஏதும் இல்லை
இது விஜயமாக
காவல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் தெரிவிக்கலாமா அதற்கு வழிவகை உண்டா
அய்யா pls ஆலோசனை கூறுங்கள்
நன்றி அய்யா 🙏
@@jeyamanijeyamani9047 மகிழ்ச்சி
தெரிவிக்கலாம்
ஐயா வணக்கம், என் பெயர் சங்கர்.திருவண்ணாமலை. நான் 19/ 5 /2022.Rti அப்பளை செய்து இருந்தேன். கடந்த ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுநாள் வரையில் எந்த விதமான பதிலும் வரவில்லை. முதல் மேல் முறையீடு செய்ய வேண்டும். என்ன வெனில் ஜாதி சான்றிதழ் வழங்காதது குறித்து நான் வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு அனுப்பி இருந்தேன். அதனால் இதுநாள் வரையில் எந்தவிதமான பதிலும் இல்லை. ஆகவே தாங்கள் அறிவுரையின் பேரில் நான் முதல் மேல் முறையீடு மனுவை அனுப்ப உள்ளேன். அதற்கு உண்டான தீர்வை எனக்கு சொல்லுங்க ஐயா. நன்றி. மேலும் ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால் எனது மனுவை தள்ளுபடி செய்திருந்தால் எனக்கு எம்முறையில் தகவல் கிடைத்திருக்கும்? நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது
அவர்கள் பிரிவு 7(1)ன் கீழ் ஏதாவது ஒரு பதிலை உங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். அப்படி வழங்காததால் அவர் பிரிவு 7(2)ன் கீழ் குற்றம் செய்தவராகிறார். அதனால், அந்த ஆவணத்தை பிரிவு 7(6)ன் கீழ் உங்களுக்கு அவர் கட்டணமின்றி வழங்க பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டை வட்டாட்சியருக்கு அனுப்புங்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மனுவில் கைரேகை வைத்து அனுப்பலாமா செல்லுபடியாகுமா
ஆகும்
@@selvampalanisamy Tq sir
@@ArdesignStudio0304 மகிழ்ச்சி
3rd person detail ketu மனு potu 34 days பதில் vara vilai 1st apeal பண்ணlaama sir?
Kaditha en yendral yenna
அய்யா வணக்கம்,
பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு பதிவு தபால் மூலம் (Acknowledgement இல்லாமல்) 15.02.2022 தகவல் கோரியிருந்தேன், இன்று 20.03.2022வரை தகவல் கிடைக்கவில்லை. தற்சமயம் நான் எவ்வாறு தகவல் பெற மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
(பதிவு தபால் அனுப்பிய எண் என்னிடம் உள்ளது)
அது போதுமானது அதை வைத்து தபால்துறை இணையதளம் மூலமாக டிராக் செய்து லட்டர் போய் சேர்ந்ததற்கான ஆதாரத்தை பெறலாம்
@@selvampalanisamy அய்யா தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி
@@jkrock6039 மகிழ்ச்சி
அண்ணா வணக்கம்
நான் 4 முறை RTI போட்டு இறுந்தேன் , 3 rti க்கு பதிலில் வந்து விட்டு ஆனால் 1 க்கு மட்டும் இன்னும் வரவில்லை,
நான் வரதா RTI க்கு முதல் மற்றும் 2 ம் மேல் முறையீடு பண்ணி இருந்தேன் (90 நாள் முடிந்தும் அதற்கு இன்னும் தகவல் வரவில்லை வில்லாய்... இதற்கு அப்ரம் என்ன பண்ணனும்னு புரியல நீங்கள் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா...
பொறுமையுடன் காத்திருங்கள். ஆணையத்திருந்து பதில் வரும்.
சிறப்பாக சொன்னீர்கள் நன்றி ஐயா 🙏
மகிழ்ச்சி
Good morning sir
என்னிடம் பட்டா உள்ளது பத்திரம் இல்லை இது தொடர்பாக யாருக்கு நான் RTI எழுதுவது
TO SECTION யாருக்கு எழுதுவது?
EX:
முறையீடு மேல்முறையீடு இரண்டும்
To get proper result the government must appoint only retired high court judges or at least former district judges as information commissioner
வணக்கம் ஐயா இரண்டாவது இடத்தில் நான் கேட்டிருந்த தகவல்
புதிதாக ஒருவர் பெயரில் பத்திரம் செய்யும் போது முந்தைய அவனையும் காட்டவேண்டும் ஆவண எண் காட்டாமல் எவ்வாறு செய்ய முடியும்
பொது தகவல் அலுவலர் அனுப்பிய பதில்
ஆவண பதிவு செய்த நாளான 10.2.2022 அன்று பட்டா பார்க்கப்பட்டன அடிப்படையிலும் உன்ன பார்க்க வேண்டிய வில்லங்கச் சான்று நகலை ஆவண பதிவு ஏதும் காணப்படவில்லை என்பது அடிப்படையிலும் ஆவணம் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது
இரண்டாவது இடத்திற்கு எனது மேல்முறையீடு
நான் கேட்டிருந்த தகவல் முந்தைய ஆவண பதிவின் ஆவண எண்ணை கேட்டிருந்தேன் பொது தகவல் அலுவலர் அவர்கள் அளித்த பதில் சரியானதாக இல்லை திசை திருப்பும் நோக்கில் உள்ளது நான் கேட்டிருந்த முந்தைய ஆவணத்தின் ஆவண எண் 5261/1973 இந்த ஆவணத்தின் பத்திரத்தை மறைத்து போலியாக பத்திரம் செய்ததற்கு இதுவே சான்றாகும். எனவே மேல்முறையீட்டு அலுவலர் அவர்கள் இதன் மீது உள்ள உண்மையை கண்டறிந்து சரியான தகவலை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்
நான் கேட்டிருக்கும் மேல்முறையீடு சரியாக உள்ளனவா அல்லது எவ்வாறு அனுப்ப வேண்டும்
சரியாகத்தான் இருக்கிறது. மேல்முறையீடு செய்யுங்கள்
நன்றி அய்யா
@@kumarmithira1296 மகிழ்ச்சி
வணக்கம்
மேல் முறையீடு மனுவோடு
இணைப்பாக
நாம் ஆரம்பத்தில் அனுப்பி மனுவின் நகல் வைத்து அனுப்ப வேண்டுமா ?
அல்லது
தகவல் அறியும் உரிமை சட்டம் 6(1) கீழ்
விபரங்கள் கோரி அனுப்பிய மனுவின் நகல் மட்டும் வைத்தால் போதுமா ?
தகவல் அறியும் உரிமை சட்டம் 6(1) கீழ்
விபரங்கள் கோரி அனுப்பிய மனுவின் நகல் + இணைப்புகளின் நகல்
Medico legal case என்ற முறையில் என்னுடைய விண்ணப்பம் நிராகரிக்க பட்டது தொடர்பாக மேல் முறையீடு செய்ய வேண்டும் எப்படி செய்வது
இதுபற்றி எனக்கு தெரியவில்லை
Sir nan police stationku anupinen 30 naal agium ithuvarai entha oru pathilum varavillai nan melmuraiidu yarukku anuppavendum eppadianuppa vendum sollunga sir please
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு முதல் மேல்முறையீடு செய்யுங்கள்
Sir enna adipadayil rti potrikinga
@@boologavazhkai6774 தகவல்கள், ஆவண நகல்கள் வேண்டும் என்பதற்காக
சிறப்பு அருமை வாழ்த்துக்கள் ஐயா
மகிழ்ச்சி
நான் அனுப்பிய மனு காப்பி தொலைந்து விட்டது.மனு காப்பி இல்லாமல் மேல்முறையீடு செய்யலாமா?
ஐயா என்னோட பஞ்சாயத்து சம்மந்தமான 2020டு 21 இரண்டு ஆண்டிற்கான வரவு செலவு மற்றும் பஞ்சாயத்துக்கு இதுவரைக்கும் வந்த நிதியினையும் கேட்டிருந்தேன் ஆனால் எனக்கு நான் கேட்டிருந்த எந்த நகளும் எனக்கு வரவில்லை மேற்படி நான் என்ன செய்ய வேண்டும்
மேல்முறையீடு செய்யுங்கள்
ஐயா உங்களது அலைபேசி எண்ணை பதிவிடுங்கள்....
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
@@selvampalanisamy ஐயா ,நான் பஞ்சாயத்து வரவு செலவு கணக்கு கேட்டு 2/11/22 அன்று தபால் அனுப்பினேன்.. 25/11/22 அன்று பொதுத்தகவல் அனுப்பிய பதில் கடிதத்தில் மேற்படி மனுதாரருக்கு உடன் உரிய பதிலினை அளிக்க ஊராட்சி செயலருக்கு இதன் வழி தெரிவிக்கப்படுகிறது என்று கடிதம் வந்தது... கடிதத்தில் பொதுதகவல் துறை அலுவலர் கையெழுத்திட நாள் 14/11/22 என்று உள்ளது.எனக்கு கடிதம் கிடைத்தது 25/11/22... கடிதத்தில் நகல் எண் குறித்திருக்கிறார்கள் ஆனால் நாள் குறிக்கவில்லை...
ஆனால் இதுவரை ஊராட்சி செயலாளரிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை .இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது ஐயா... மேல்முறையீடு எப்பொழுது செய்ய வேண்டும்...
@@sairameshss8809 அந்த கடிதம் உங்களுக்கு கிடைத்த நாளில் இருந்து 30 நாட்கள் கழித்து மேல்முறையீடு செய்யுங்கள்
ஐயா மேல் முறையீடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பலாமா இல்லை ஏற்கனவே அனுப்பிய பொதுத்தகவல் துறை மேலாளருக்கு அனுப்பலாமா?
@@sairameshss8809 முதல் மேல்முறையீட்டு அலுவலரது முகவரி தெரியவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு முதல் மேல்முறையீட்டு மனுவை அனுப்பி வைக்கலாம்.
Sir. நீதிமன்றத்தில் இருந்து rti மூலம் ஆவணங்களை தகவல்களை எப்படி பெறுவது
மற்ற அலுவலகங்களில் இருந்து பெறுவதை போலத்தான்
ஐயா வணக்கம் நான் விக்னேஷ் சேலம் மாவட்டம், உங்களுடைய இந்த காணொளி மிகவும் உதவியாக உள்ளது நான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி தகவல் கேட்டுப் பெறுவதற்கு......
மிக்க மகிழ்ச்சி
முதல் முறையீட்டுக்கு பின்னர் வழங்கும் தகவல்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என்பதை தெரிவியுங்கள் சார்.
முதல் முறையீட்டுக்கு பின்னர் பிரிவு 7(6)ன்கீழ் தகவல்களையும், ஆவணங்களையும் கட்டணமின்றி பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும்.
ஐயா வணக்கம்.
4வது இனத்திற்க்கு நான் கேட்ட தகவல்.
பார்வையில் காணும் திருப்பெரும்பூதூர் வட்டம் பசலி1428தேதி12.06.2019அன்று வருவாய் தீர்வாயத்தில் மனு எண்.2032 மீது தங்கள் அலுவலகம் மேற்கொண்ட மாத வாரியாக நடவடிக்கைகளை வழங்கவேண்டுக்கிறேன்.
பொது தகவல் அலுவலர் அவர்கள் அளித்த தகவல்.
விசாரனண நடவடிக்கையில் உள்ளது.
நான்காம் இனத்திற்க்கு எனது முதல் மேல் முறையீடு.
மேற்படி மனு சம்மந்தமாக திருப்பெரும்பூதூர் மண்டல துணை வட்டாட்சியர் அவர்களின் கோப்பு சம்மந்தமாக அறிக்கை கோராமல் முழூமையற்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது.அதனால் முதல் மேல் முறையீடு செய்யப் படுகிறது.
அனைத்து பொது
தகவல் அலுவலர் முகவரி எப்படி தெரிந்துகொள்வது அய்யா
ஆர்.டி.ஐ. புத்தகங்கள் மூலம்.
Nice
அருமையான பதிவு ஐயா, தங்களின் தெளிவான குரல் பதிவு சிறப்பு.நன்றி
மகிழ்ச்சி
In my rti letter i asked what action has been taken and reason for delay for my patta transfer
Then i got reply letter from them
they mention according to rti-2005 section 2f ,2j tamilnadu information n.s.a.829/2015 cannot give information about the action taken on my patta
My question is:
Did i ask wrong question to them??
What to do next??
Please reply....
சார். தங்களின் போண் நம்பரை பதிவிடுங்கள். முக்கியமாக ஒரு அரசு ஊழியர்களின் தனி விபரக்குறிப்பு சம்ளம் போன்ற வைகலை பெறலாம் என்பதற்கு நீதிமன்றம் உத்தரவு கலை எண் களைபதிவிடுங்கள்
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
ஜமாபந்தி மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த மனுவின் நிலையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிய முடியுமா ???
முடியும். முயற்சி செய்யுங்கள்
ஐயா அரசால் வழங்கப்பட்ட இலவச நத்தம் மனை பட்டாவிற்கான பாதையை தகவலாக கேட்க முடியுமா
கேட்கலாம்.
நன்றி ஐயா
@@ramkumargiri3389 மகிழ்ச்சி
ஐயா வணக்கம் பட்டா சம்மந்தமாக Rti 18-10-2023 அனுப்பினேன்
ஒப்புகை சீட்டு 23-10-2023 கிடைத்தது.
Rti 2005 பிரிவு 6(3)(ii) ன் படி மனுவை அதே அலுவலகத்தில் துறை ( வருவாய் துறை) அனுப்பி இருப்பதாக ஒரு கடிதம் வந்தது தேதி 28-10-2023
இந்த நிலையில் எந்த தேதியை கணக்கில் எடுத்துக் கொண்டு முதல் மேல்முறையீடு செய்வது என்று சொல்லுங்கள் ஐயா - பழனிவேல்
துறைமாற்றம் செய்த நாளில் இருந்து 30 நாட்கள் கழித்து
Sir private company RTI porunthuma? Thagaval irutha sollu ga sir
முடியாது
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் கீழ் ஒரு அரசு அதிகாரியின் சம்பளம் எவ்வளவு என்று கேட்க முடியுமா? (அந்த அரசு அலுவலர் சரியாக வேலை செய்வது இல்லை)
கேட்கலாம்.
@@selvampalanisamy வேலைகளுக்கு நடுவே எங்களுக்கு உடனடியாக பதில் அளித்ததற்கு மிக்க நன்றிகள் 🙏. 🙏. 🙏
@@PJMKumar பதில் சொல்வதையும் ஒரு வேலையாகத்தான் வைத்திருக்கிறேன்
ஐயா வணக்கம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மனு அனுப்பி இருந்தேன் மனு அனுப்பி 30 நாட்கள் கடந்தும் எந்த பதிலும் இல்லை இப்போது முதல் மேல் முறையீட்டு மனு எந்தத்துறைக்கு அனுப்பவேண்டும்.!
அதே அலுவலகத்திலுள்ள உயர் அதிகாரிக்கு அனுப்புங்கள்.
முதல் மேல் முறையீட்டிற்கு பதில் கிடைக்கும் கால அவகாசம் எத்தனை நாட்கள்.
அதிகபட்சம் 45 நாட்கள்
Yethanai natkalukkul mel muraiyeedu seiavendum sir
வீடியோவை நன்றாக பாருங்கள்.அதில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது.
VAO விடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கலாமா?
கேட்கலாம்
Sir, முதல் மேல்முறையீடு செய்ய court stamp ஒட்டவேண்டுமா?
ஒட்டதேவையில்லை என்பதை comment படித்து அறிந்தேன்.
இல்லை
ந,க,எண்..........டாஷில் என்ன எழுதனும் சார் ,எனது.........டாஷில்,1வது இனத்தில், எனது.........டாஷில் என்ன எழுதனும் சார் அதை கொஞ்சம் சொல்லுங்கள் சார் please
உங்களுக்கு கடிதம் ஏதாவது பொது தகவல் அலுவலரால் அனுப்பப்பட்டிருந்தால் அந்த கடிதத்தின் எண் எழுத வேண்டும்
அய்யா பிரிவு 7(1) ல் உயிர் வாழ்வுரிமை தகவல் வரம்புரையாக 48 மணிநேரத்தில் வழங்காவிட்டால் முதல் மேல்முறையீடு கால அளவு எப்போது செய்ய வேண்டும்
அவசரமாக வேண்டும் என்றால் 48 மணி நேரத்திற்குப் பிறகு உடனே செய்யுங்கள்.
சார் மாணவர் சேர்க்கை பற்றி கல்லூரி முதல்வருக்கு முதல் மனு அளித்தேன் அதில் சரியான பதில் வரவில்லை மேல்முறையீடு மனு கல்லூரி முதல்வர் முகவரிக்கு அனுப்ப வேண்டுமா இல்லை பொது தகவல் அலுவலருக்கு அனுப்ப வேண்டுமா
கல்லூரி முதல்வருக்கு அனுப்புங்கள்
ஐயா வணக்கம். எனது ஊா் தேனி மாவட்டம் உத்தமபாளையம். RTI-2005ன்கீழ் கோட்டாட்சியருக்கு மனுச்செய்திருந்தேன். அவா்கள் வட்டாட்சியர் அவா்களுக்கு அனுபபியுள்ளார்கள். வட்டாட்சியர் பதில் 30 நாட்களுக்கு மேல் ஆகியும் பதில் அளிக்கவில்லை. யாரிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
வட்டாட்சியருக்கு
ஐயா,
RTI மனு அளித்து 45 நாட்கள் ஆகியும் தகவல் ஏதும் வரவில்லை.
இப்போது முதல் மேல் முறையீடு செய்யலாமா?
செய்யலாம்
Hi bro Tnpsc inform me second apple only for online with pay ment but online data not use
2 ம் மேல் முறையீடு செய்வதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆபிஸ் அட்ரஸ் வேண்டும் சார்
2ம் மேல்முறையீடு சென்னையிலுள்ள தகவல் ஆணையத்தில்தான் செய்ய வேண்டும்.
வணக்கம் ஐயா எங்களது சொத்தை போலி பத்திரம் செய்துவிட்டார்கள் அதற்காக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு இருந்தேன் அதற்கு பொது தகவல் அலுவலர் தகவல்களை தந்துள்ளார் நான் மேல்முறையீடு போகவேண்டும்
நான் கேட்டிருந்த தகவல்கள் பின்வருமாறு
ஒன்னாவது இனத்தில் நான் கேட்டிருந்த தகவல்.
1. புதிதாக ஒரு நிலத்தை பத்திரம் செய்வதற்கு 50 ஆண்டுகால வில்லங்கச்சான்று தேவைப்படும் போது என்னுடைய நிலத்தின் உரிமையாளர் எனது பெயர் வரும் போது எவ்வாறு எனது அனுமதி இல்லாமல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறார்கள்.
பொது தகவல் அலுவலர் அளித்த பதில்.
பதிவு சட்டப்பிரிவு விதி மற்றும் பதிவுத் துறைத் தலைவர் அவர்களின் சுற்றறிக்கையின் படி ஒரு ஆவணம் பதிவு தாக்கல் செய்யப்படும் போது மூல ஆவணம் ஆவண பதிவு செய்த நாளில் பட்டா மற்றும் வில்லங்கச் சான்று ஆகியவற்றை பார்வையிட்டு ஆவணம் பதிவு செய்யப்பட்டது ஆவண பதிவின்போது பார்க்கப்பட்ட வில்லங்கச் சான்று நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்ற தகவல் வழங்கப்படுகிறது
முதல் இடத்திற்கு எனது மேல்முறையீடு.
முன் ஆவணமான பத்திரம் ஏன் பார்க்கப்படவில்லை பொது தகவல் அலுவலர் அவர்கள் எனக்கு அனுப்பிய வில்லங்கச் சான்றிதழ்1950 முதல் 1970 வரை எடுக்கப்பட்ட வில்லங்கச்சான்று
ஓர் இடத்தை கிரையம் செய்ய தற்கால வில்லங்க சான்று பார்க்காமல் எவ்வாறு புதிய செட்டில்மெண்ட் பத்திரம் செய்தார்கள் அதற்கான சரியான ஆவணங்களின் நகல்களை எனக்கு தகவலாக தர வேண்டுகிறேன்.
ஐயா அவர்கள் நான் செய்யும் மேல்முறையீடு சரியாக உள்ளனவா அனுப்பலாமா அல்லது எவ்வாறு அனுப்ப வேண்டும் எனக்கு பதில் அளிக்க வேண்டும் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா அதற்கு நான் எவ்வாறு அனுப்ப வேண்டும் நாங்கள் இடம் வாங்கியது 1970 வருடம் ஆகும் ஆனால் அவர்கள் காட்டிய வில்லங்கச்சான்று அதற்கு முந்திய வில்லங்கச்சான்று அதை வைத்து எவ்வாறு புதிதாக இடத்தை விற்பனை செய்யசெய்ய முடியும்
Sir Naan 1st appeal la pothuthagaval aluvalar nu 1st rti la potta adress he appeal to address layum pottuten...
Enna pannuvanga...
ஒண்ணும் செய்ய மாட்டாங்க. நீங்க புதுசா மறுபடியும் சரியான முகவரிக்கு அப்பீல் செய்யுங்க
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கண்காணிப்பாளர் தகவல் வழங்கலாமா?
வழங்கலாம்
E savai mayam kattana vivaram how to write RTI receiver address
அண்ணா நான் RTI போட்டு 40 DAYS ஆவுது அண்ணா பதில் கடிததில் எண்ணுக்கு சரியான பதில் தரவில்லை அண்ணா இப்போ நான் மேல் முறையிடு செய்யலாம்னு நினைக்கிறன் அண்ணா அதுக்கு ஒரு வலி சொல்லுங்க அண்ணா
வீடியோவில் சொல்லப்பட்டு இருக்கிறது
சார் முதல் மேல்முறையீட்டு மனு விற்கு கட்டணம் அல்லது நீதிமன்ற வில்லை செலுத்தலாம அல்லது தேவை இல்லையா
முதல் மேல்முறையீடு, இரண்டாம் மேல்முறையீடு எதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
@@selvampalanisamy ok sir மிக்க நன்றி,
உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்
@@vtupdatesmsk6065 மகிழ்ச்சி
நான் RTI மனு செய்தேன் பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு ஒரு மாத முடிவில் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப பட்டதாக கடிதம் வந்தது தற்போது வேறு பதில் ஏதும் வரவில்லை தற்போது 53 நாட்கள் கடந்து விட்டது முதல் மேல் முறையீடு செய்யலாமா ஐயா ?
உங்கள் விண்ணப்பத்தை மாற்றம் செய்யப்பட்ட துறைக்கு மேல்முறையீடு செய்யுங்கள்
மிக்க நன்றிகள் ஐயா !
@@கார்த்திக்-த7ந மகிழ்ச்சி
பொது தகவல் அலுவலர்இருந்துபதில் வரவில்லைஎன்றால் முதல் மேல்முறையீடுசெய்யவது எப்படி ஐயா
இந்த வீடியோவிலேயே பதில் இருக்கிறதே
@@selvampalanisamy நன்றி ஐயா
@@psamy9424 மகிழ்ச்சி
ஜயா வணக்கம் முதல்மேல்முறையிடு செய்த பின்னர் பதில் தரும் நாட்கள் எத்தனை ஜயா. முதல் தகவல் அறிக்கை பதில் வரவில்லை என்றால் இரண்டாவது மேல்முறையீடு செய்யும் நாட்கள் எத்தனை நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் ஜயா
வீடியோவை பாருங்கள்
@@selvampalanisamy அருமையான..விளக்கமான பதிவுகள் சேவை தொடரவாழ்த்துக்கள்.
@@chokkumanikam2951 மகிழ்ச்சி
அய்யா,பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்த விண்ணப்பம் குறித்த , சில தகவல்களை பொதுதகவல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன்.பட்டா மாறுதல் விண்ணப்பம் வட்டாச்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கு பதிவு எண்ணும் 2003ல் கொடுக்கபட்டுள்ளது என்றும்,ஆனால் அந்த பதிவு எண்ணுக்குண்டான எந்த குறிப்பானைகளோ,பட்டா மாறுதல் குறித்து மேற்கொண்ட நடவடிக்கைககள் குறித்த எந்த ஆவணங்களும் தங்களுடைய அலுவலகத்தில் இல்லை என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.மேற்கொண்டு தகவல்களை பெற வழிமுறை தேவை அய்யா...
தவறான தகவல் வழங்கி உள்ளார்கள். முதல் மேல்முறையீடு செய்யுங்கள்
முதல் மேல் முறையீடு செய்தால் எத்தனை நாட்களில் நமக்கு பதில் கிடைக்கும்..
30 நாட்களில். மேற்கொண்டு 15 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதனை அவர்கள் நமக்கு தெரிவித்து இருக்க வேண்டும்
@@selvampalanisamy
பொது தகவல் அலுவலர்
என் வருவாய் கிராம பெயர் எழுதாமல்
என் கிராம பெயர் ஒட்டி இருக்கும் இன்னொரு தாலுக்கா வில் இருக்கும் கிராமத்தின் பெயர் எழுதி அந்த கிராமத்தின் பழய ஆவணங்கள் உள்ளன அதை பெறுவதற்கு வழிமுறைகள் அதற்கு உரிய கட்டணம் பணம் செலுத்த கணக்கு எண் அனுப்பி வைத்தார்
நான் முதல் மேல் முறையீடு
நான் கேட்ட தகவல் தராமல் வேறு முரணாக வேறு கிராமத்தின் தகவல் தருகிறார் அதற்கு உரிய வழிமுறைகள் அனுப்பி வைத்து உள்ளார்
என்னுடைய மனு விற்க்கு உரிய தகவல் தர வேண்டும் இலவசமாக வழங்க வேண்டும் என்று பதிவு தபாலில் அனுப்பி வைத்தேன் அவர்கள் பெற்று கொண்டார் ஏறக்குறைய 25நாள் ஆகி விட்டது
இன்னும் பதில் வரவில்லை..
45கழித்து என்ன செய்ய வேண்டும்
@@mahalingammagaj8769 மேல்முறையீடு வட்டாட்சியருக்கு செய்ய வேண்டும். அப்படி தாங்கள் செய்திருந்தால் அவர்கள் ஏதும் பதில் கொடுக்காவிட்டால் 30 நாட்கள் கழித்து இரண்டாவது மேல்முறையீட்டை தகவல் ஆணையத்திற்கு அனுப்புங்கள்
@@selvampalanisamy மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் கேட்டேன்
சரியான பதில் கிடைக்கவில்லை
அதனால் மாவட்ட வருவாய் அலுவலர் இடம் முதல் மேல் முறையீடு செய்து உள்ளேன்
@@mahalingammagaj8769 வாழ்த்துக்கள்
பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டு அலுவலர் யார்? எந்த அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டு மனுவை அனுப்ப வேண்டும் என்று சொல்லுங்க சார்
இது போன்று சந்தேகங்கள் தோன்றும்போது மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு முதல் மேல்முறையீட்டை அனுப்பி வையுங்கள். அவர்கள் அதை உரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு தங்களுக்கு அதனை கடிதம் மூலம் தெரிவித்து விடுவார்கள்.
@@selvampalanisamy நன்றி அண்ணாச்சி
@@sivananainthaperumalt9515 மகிழ்ச்சி
Vattara valarchi aluvalagam
ஐயா, தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2f என்றால் என்னங்க சார்??
நான் அனுப்பிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1),
6(3) 7(1 )மனுவிற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2(f) இன் படி தகவல் வழங்க முடியாது என்று பொது தகவல் அலுவலர், (APA - நிலம் )மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த இந்தப் பிரிவின் படி தகவல் மறுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்ய முடியுமாங்க சார்??
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2f என்றால் வழங்கக்கூடிய தகவல்கள் என்று அர்த்தம். என்ன தகவல்களை கேட்டீர்கள் என்பதை நீங்கள் இங்கு தெரிவிக்கவில்லை. அதனால், மேல்முறையீடு செய்வது பற்றி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
@@selvampalanisamy நான் அனுப்பிய மனுவையே இரண்டு மூன்று முறை தங்களுக்கு அனுப்பி விட்டேன்ங்க சார்! பின்னூட்டத்தின் அளவு பெரியதாக இருப்பதாலோ என்னவோ வரமாட்டேன் என்கிறது
உங்கள் தொடர்புஎண் கிடைக்குமா?
வாய்ப்பில்லை
நான் அனுப்பிய மனுவிற்கு எந்த ஒரு தகவலும் அனுப்ப வில்லை என்றால் எப்படி மேல் முறையீடு செய்வது என்னிடம் பதிவு தபால் அட்டை மட்டுமே உள்ளது...
மனுவின் நகல் கண்டிப்பாக வேண்டும்.
ஐயா வணக்கம் பொது தகவல் அலுவலர் அவர்கள் பதில் ஒன்று தரவில்லை என்றால் எப்படி முதல் மேல்முறையீட்டு செய்வாது தயவுகூர்ந்து பதில் சார்
வீடியோவை பாருங்கள் அதில் பதில் இருக்கிறது
ஐயா வணக்கம்,
2020 ஆம் ஆண்டு பயிர் கடன் பெற்று பயிர் காப்பீடு செய்யப்பட்டது. அனைவருக்கும்
பயிர் காப்பீடு தொகை வந்துவிட்டது. ஆனால் இன்சூரன்ஸ் தொகை எனக்கு வரவில்லை பல முறை கூ டுரவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும் பலனில்லை. இது பற்றி மாதிரி விண்ணப்பத்துடன் ஒரு வீடியோ பொடல் நன்றாக இருக்கும்.
ஓகே
பொது தகவல் அலுவலருக்கு மனு அனுப்பிய பிறகு அவர்களிடம் ஒப்புகை கடிதம் வந்த தேதியில் இருந்து முதல் 30 நாட்களில் பதில் வரவில்லை எனில் அடுத்த 30 நாட்களுக்குள் முதல் மேல்முறையீடு மனு அனுப்ப வேண்டுமா அல்லது வேறு நடைமுறை விதிகள் உள்ளதா கூறுங்கள் அய்யா
வேறு நடைமுறை விதிகள் இல்லை
வணக்கம் ஒருசில தகவல் எழுதி தெரியவில்லை உங்கள் போன் நன்பர் தந்தங்கள் உதவியாளர் இறுக்கும் தெந்தரவூ செய்யமாட்டான் நன்றி
வாய்ப்பில்லை
Iyya meal muraiyeetu manuvilum court stamp ottanuma.
இந்த சட்டத்தில் மட்டுமல்ல. எந்த ஒரு துறைக்கும், அனுப்புகின்ற மேல்முறையீட்டு மனுவுக்கும் ஸ்டாம்ப் ஒட்ட தேவையில்லை
Thankyou sir.
@@mohandaschinnasamy2066 மகிழ்ச்சி
முதல் மேல்முறையீடு மனு கொடுத்தும் எந்த பதிலும் வரவில்லை என்றால் என்ன செய்வது
45 நாட்கள் கழித்து 2வது மேல்முறையீடு செய்யுங்கள்
பதில் அளிக்க வில்லை எப்படி மனு அனுப்ப வேண்டும்
எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்று முறையீடு செய்யுங்கள். இது போக தனியாக அந்த பொது தகவல் அலுவலர் மீது பிரிவு 18(1)ன்கீழ் தகவல் ஆணையத்தில் புகாரும் அளிக்கலாம்.
பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்கு மேல் தகவல் அளிக்கவில்லை என்றால் எப்படி மேல் முறையீடு செய்வது
வீடியோவில் கூறியுள்ளபடி
Sir applied patta transfer by collector office in Monday petition. So far no response. Then I applied information act on the basis applied to tashildar . So far not reply just passed 20 days. But I wait for another 10 days. Then I want to first appeal to which officer . Kindly reply me sir
தாசில்தாருக்கு 2வது மேல்முறையீடு செய்யுங்கள்
Thank you sir
@@uthirauthira8524 மகிழ்ச்சி
பொது தகவல் அலுவலர்
ஐயா வணக்கம்.
நான் உட்பிரிவற்ற பட்டா மாறுதல் கோரி மனு செய்தேன்
நான் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ளதால் எனக்கு பட்டா வழங்க இயலாது என பதில் வந்துள்ளது
நான் கூட்டுறவு வங்கியில் எவ்வித கடன் வாங்கவில்லை
இது உள்நோக்கம் கொண்ட தாக தெரிகிறது
எனவே இது சம்பந்தமாக எனக்கு பதில் தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
கடன் வாங்கியதாக எதனடிப்படையில் சொல்கிறீர்கள் என்று அவர்களிடம் த.அ.உ. சட்டத்தின் கீழ் தகவல் கோருங்கள்
ஐயா, முதல் மேல் முறையீட்டு மனுவிற்கு, முதல் மேல் முறையீட்டு அலுவலர் மனுவை பெற்ற நாளிலிருந்து எத்தனை நாட்களுக்குள் மனுதாரருக்கு Reply வழங்கிட வேண்டும்.
30 நாட்கள்
70 vayathu ullavar eppadi anupavandum
தனது வயது குறித்த ஆவணத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்
Sir. முதல் RTI மனுவை நேரில் சென்று கொடுத்தேன்,அதற்கு 43 நாட்கள் கடந்து முழுமையற்ற தகவலாக வந்த நிலையில், நான் முதல் மேல்முறையீடு மனுவை கொடுக்க நேரில் சென்றும் கொரோனவால் வாங்க மறுத்ததால் அதை அப்படியே பதிவு தபாலில் அனுப்பினேன்,இதில் என்னவென்றால் அனுப்பிய மனுவில்,பதிவு தபால் ஒப்புதல் அட்டையுடன் என்று எழுதவும் இல்லை அதை வைக்கவும் இல்லை,இதனால் ஏதேனும் தவறுகள் ஏற்படுமா,தகவல்கள் தர தாமதமாகுமா,தகவல்கள் மறுக்கப்படுமா,மனு அனுப்பி இன்றுடன் 13 நாட்கள் கடந்து விட்டது
தவறு இல்லை
சார், நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவர்க்கு rti அனுப்பி வைத்தேன். 30 நாட்கள் ஆகியும் பதில்இல்லை. முதல் மேல்முறையீட்டு மனுவை யாருக்கு அனுப்ப வேன்டும் என்று சொலுங்கள் pls
மாவட்ட ஆட்சியருக்கு
ஐயா வணக்கம், நான் RTI இல் கேட்ட கேள்விக்கு விடை எதுவும் வரவில்லை, கேள்வி ஜனவரி 3இல் கேட்டேன் ஆனால் 2மாதம் மேல் ஆகியும் பதில் இல்லை, என்ன செய்வது?
30 நாட்களுக்கு மேலானவுடன் அடுத்து வருகின்ற 30 நாளுக்குள் முதல் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். மீண்டும் புதிதாக விண்ணப்பியுங்கள்
8(1)(g) இல் reject செய்யப்பட்டுள்ளது appeal போகலாமா கூடாதா
போகலாம்
Sir pdo ku epadi Mel muraiedu podurathu
Sir i got response for first appeal as court stamp fee required to provide the information. What i have to do next
அந்த தகவல் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் இரண்டாவது மேல்முறையீடு செய்யுங்கள்
சார் வணக்கம் தகவல் உரிமைச் சட்டத்தில் அரசு அலுவலகத்தில் நகல் பெறுவது குறித்து சொல்லவும்
தகவல் கேட்பதற்கு பதிலாக ஆவண நகல் கேளுங்கள். அவ்வளவுதான்
ஒரு மாதிரி மனு பீடி எப் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்
small doubt sir
சொல்லுங்கள்
fmp mapக்கும் அளவு குறைத்தும் பட்டாவின்அதிகமும் வித்தியாசம் வருகின்றது இதை எப்படி பட்டாவின் அளவை மாற்றுவது தயவுசெய்து கூறவும் அய்யா.
இதற்கென்று வீடியோ போடப்பட்டுள்ளது. அதனை பார்க்கவும். லின்க் ruclips.net/video/mW4DbM8q4N4/видео.html
ஐயா வணக்கம்,நான் முதல் மேல் முறையீடு செய்து 33 நாட்கள் ஆகியது.ஆனால் பதில் ஏதும் வரவில்லை.நான் இப்பொழுது இரண்டாம் மேல் முறையீடு செய்யலாமா? அல்லது புகார் மனு தெரிவிக்கலாமா?.என்று கூறவும்.அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் மனு போடலாமா? என்ற தகவலை தயவு செய்து எனக்கு தெரியப்படுத்தவும்.
புகார் தனியாகவும், 2வது மேல்முறையீடு தனியாகவும் செய்யுங்கள்
Thanks button எங்கே ஐயா காணவில்லை?
@@shankarr4037 இருக்கிறது
Thanks!
மிக்க மகிழ்ச்சி
Really super sir
UDR க்கு முன்பு உள்ள ஆவணங்கள் SLR,chitta,patta, அடங்கல் எங்கு கிடைக்கும்
சென்னையிலுள்ள நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் . இது சம்பந்தமான வீடியோ போட்டிருக்கிறேன். பாருங்கள்
Amount 10 ruppess pay pannanungala sir
வருவாய் நிர்வாக ஆனையர் அடுத்து மேல்முறையீடு அலுவலர் யாரை குறிப்பிடுவது
முதலில் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக பொது தகவல் அலுவலருக்கு, , அடுத்து முதல் மேல்முறையீடு வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களுக்கு
சார் வணக்கம்.முதல் மேல்முறையீடு க்கு 10 ரூபாய் ஒட்ட வேண்டுமா?
வேண்டியதில்லை
முதல் மேல்முறையீடு மனுவை, நீதிமன்றத்தில் எந்த அலுவலருக்கு அனுப்பனும் சார்
அந்த நீதிமன்ற (தலைமை) நீதிபதிக்கு
போலீஸில் புகார் அளித்தாலும் அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் விசாரணை முடிந்து விட்டது என்று பொய்யான தகவல் அளித்தல் என்ன செய்ய
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி அந்த விசாரணை சம்பந்தமான அறிக்கைகளை கேளுங்கள்
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக அளித்துள்ளார்கள்
@@vijayakandha8464 வழக்கு தொடுங்கள்
@@selvampalanisamy okay sir
@@vijayakandha8464மகிழ்ச்சி
MF செய்யப்பட்ட ஆவணங்களை பற்றிக் கேட்டால் RTI report பொய்யான தகவலை MF செய்யப்படவில்லை என காவல் நிலையத்திலிருந்து தருகிறார்கள் (Inspector And Dsp ). என்னிடம் MF செய்யப்பட்ட online print இருக்கு. அதற்குண்டான ஆவணங்களை தர மறுக்கிறார்கள்.
பிரிவு 18(1)ன் கீழ் தகவல் ஆணையத்தில் புகார் கொடுங்கள்
எனது முதல் மேலிட்டு மனுவிற்கு தான் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அந்த ஆவணத்தை அனுப்பி உள்ளார்கள் தற்போது நான் இரண்டாவது மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டுமா அல்லது மீண்டும் முதல் மேல் இருக்கு செல்ல வேண்டுமா
இரண்டாவது மேல்முறையீடு
தகவலுக்கு நன்றி ஐயா