யக்ஷ ப்ரஷ்னம் - கேள்வி 4/124 - ஆத்மா எதில் நிலைபெறுகிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2020
  • யக்ஷ ப்ரஷ்னம் நான்காவது கேள்வி. முதல் நான்கு கேள்விகள், ஒரு தொகுப்பு. மேலோட்டமாக, இவைகள் சூரியனை பற்றி இருப்பதாக தோன்றினாலும், மறைமுகமாக இதில் ஆத்மாவின் பயணம் விவரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நான்கில், மூன்று கேள்வி பதில் விளக்கத்தை பார்த்த நிலையில், நான்காவது கேள்விக்குச் செல்வோம்: kasmimcha prathithishtathi? சூரியன் எதில் நிலைபெறுகிறது?
    இதில், சூரியன் ஆத்மாவை குறிக்கும். ஏன் என்று முந்தய கேள்வியிலேயே பார்த்து விட்டோம். நேரடியாக விளக்கத்திற்கு செல்வோம். சூரியனை, ஆத்மா என்று மாற்றிக் கொண்டு, கேள்வியை மறு உருவாக்கம் செய்தால், ஆத்மா எங்கே நிலைபெறுகிறது? அதன் நிரந்தர குடியிருப்பு எது?
    யுதிஷ்டிரன் பதில் அளிக்கிறார், Sathyaecha prathithishtathi. ஆத்மா சத்தியத்தில் நிலைபெறுகிறது.
    சத்தியம் என்பது பிரம்மத்தை குறிக்கும். பிரம்மம் என்கிற வார்த்தையை நம் வேதங்கள் அடிக்கடி உபயோகப்படுத்துவதை பார்க்க முடியும். அதன் அர்த்தம் தான் என்ன?
    பிரம்மத்தை கடவுளுடன் ஒப்பிட முடியும். ஏன் என்றால், அனைத்துமே பிரம்மம். அதை முழுமையாக புரிந்து கொள்ளவே இயலாது.
    ஏன்?!
    நம் மனித மூளை ஆனது, பிறப்பில் இருந்து, கிரஹித்து வைத்து இருக்கும் தகவல்களை வைத்து மட்டும் தான், சிந்திக்க முடியும், பகுப்பாய்வு செய்ய முடியும். அடிப்படையே இல்லாமல் முற்றிலும் புதியதாக ஒன்றை கற்பனை செய்ய முடியாது.
    நாம் தூங்கும் போது,கனவில் காணும் காட்சிகள் கூட, மூளையில் இருக்கும் தகவல்களின் பகுப்பாய்வாகத்தான் இருக்குமே தவிர, முற்றிலும் புதியதாக இருக்காது.
    அப்படி வரையறுக்கப்பட்ட சிறு அறிவை வைத்துக்கொண்டு, வரையறையே இல்லாத இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியை புரிந்து கொள்ள நினைப்பது சாத்தியம் இல்லாத காரியம்.
    இதை தான் பிரஷ்ணோபநிஷத்தும் வலியுறுத்தும். எப்பொதுழுது நீ பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொல்கிறாயோ அப்பொழுது தான் நீ பிரம்மத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறாய் என்று அறிந்து கொள்.
    மீண்டும் ஒரு முறை சிந்தித்து பாருங்கள்.
    இப்பொழுது பிரம்மம் என்பதற்கான முன்னுரையை பார்த்து விட்டோம். ஆனால்
    பிரம்மத்தை ஏன் சத்தியத்துடன் தொடர்பு படுத்த வேண்டும்?
    இதற்கு Taitreya உபநிஷத்தின் வாக்கியம் பதில் அளிக்கும்.
    பிரம்மத்தை இந்த மூன்று தன்மைகளை வைத்து புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்று அந்த உபநிஷத் கூறுகிறது.
    சத்தியம் ஞானம் அனந்தம் பிரம்மம்
    அனந்தம் - ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் எல்லையற்றதாக இருப்பது... பிரம்மத்திற்கு அந்த தன்மை இருப்பதால், அதை அனந்தம் என்று கூறலாம்.
    ஞானம் ?- பிரம்மம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஞானத்தின் களஞ்சியம். உதாரணமாக, ஆண் பெண் பாலினத்தை இந்த உலகம் சம நிலையில் வைத்து கொள்வதன் ரகசியம் என்ன?, நட்சத்திரக்கூட்டங்களை இயக்கும் சட்டங்களின் அடிப்படை என்ன? ஒரு உயிர், பூமியில் பிறந்து வளர்ந்து அழிந்து போவதன் மூல காரணம் என்ன?
    இது போன்ற அறிவுகளை பிரம்மம் தன்னிடம் மட்டும் மறைத்து வைத்திருக்கிறது. மனித மூளைக்கு எட்டாத இது போன்ற ஞானங்களின் களஞ்சியமாக, பிரம்மம் இருப்பதால், அதை ஞானம் என்றே கூறலாம்.
    இறுதியில் சத்தியம்? சத்தியம் என்றால் என்ன? எது மாறுதலுக்கு உட்படாதோ அதை சத்தியம் என்று கூறுவோம். உதாரணமாக சத்தியத்தை பேசு, என்றால், எது மாற வில்லையோ, அதை கூறு என்று அர்த்தம். பிரம்மம் , அது போன்ற ஒன்று. அதற்கு மாறுதல் கிடையாது, விகாரம் கிடையாது.
    avikArAya SuddhAya nityAya paramAtmane.
    எவ்வித மாறுதலுக்கும் உட்படாமல் அதே போன்று நிலைத்திருப்பதால், பிரம்மத்தை சத்தியம் என்றும் அழைக்கலாம்.
    அப்படி என்றால் எது மாறுதலுக்கு உட்படுகிறது? ஆத்மா மாறுதலுக்கு உட்படுகிறது. ஆத்மா என்று பொதுவாக சொன்னால் அது ஜீவாத்மாவை குறிக்கும், அதற்கு சுபாவ விகாரம் உண்டு. எடுத்துக்கொள்ளும் உடலுக்கு ஏற்றார் போல், அதன் தன்மையை மாற்றி கொள்ளும்.
    சேர்த்து படித்தால், மாறுதலுக்கு உட்படும் ஆத்மா மாறாத பரமாத்மாவுடன் இணையும் என்பது தான் பொருள்.
    இதை நன்றாக புரிந்து கொள்ள, ஒரு வானவில்லை நினைத்துக் கொள்ளுங்கள், சூரிய ஒளி, நீர் துளியின் வழியாக செல்லும் பொழுது, நீர் துளி அதை வண்ணங்களாக பிரித்து விடுகிறது. இதனுள், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து வண்ணங்களும் அடங்கி விடும்.
    இதே விஷயத்தை எதிர் மறையாக பார்த்தால், அணைத்து வண்ணங்களும் சேர்ந்தால் வெண்மை நிறமாக மாறி விடும், அல்லவா.
    அப்படி என்றால், நீல நிறம், வெண்மை நிறத்திற்குள் இருக்கிறது. மஞ்சள் நிறமும் வெண்மை நிறத்திற்குள் இருக்கிறது என்று சொல்லலாம் சரி தானே.
    ஆக, எப்படி கோடிக்கணக்கான நிறங்கள், வெண்மை நிறத்திற்குள் வாசம் செய்கிறதோ, அதே போல், கோடிக்கணக்கான ஆத்மாக்கள், மோக்ஷத்தை அடைந்த பிறகு, பிரம்மம் என்கிற பரமாத்மாவில் வாசம் செய்யும் என்பதை வலியுறுத்துவது தான் யக்ஷ பிரஷனத்தின் நான்காவது கேள்விக்கான விளக்கம் ஆகும்.

Комментарии • 21

  • @sumathikumara81
    @sumathikumara81 3 года назад +1

    நன்றி

  • @jaivigneshjaivignesh7335
    @jaivigneshjaivignesh7335 3 года назад +1

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @jayabala.s8809
    @jayabala.s8809 3 года назад +1

    👍🙏🙏🙏🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад +1

    அருமை👌👌👌

  • @kalyanir3679
    @kalyanir3679 3 года назад +1

    Super 👌

  • @Balakrishnan-ro3rn
    @Balakrishnan-ro3rn 2 года назад +1

    வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் சொல்கின்ற உயர்ந்த விசயங்களை தெரிந்து கொள்ள ஆசை உள்ளது அதனால் தயவு கூர்ந்து தங்களின் இந்த கைங்கரியத்தை தொடர்ந்து செய்யுங்கள் சுவாமி 🙏🙏🙏

  • @actorsubash5965
    @actorsubash5965 3 года назад

    My favorite number 4

  • @rathnajas6540
    @rathnajas6540 3 года назад

    Really Interesting.. keep upload all 124...

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад

    மிக அருமை👌👌

  • @raghavvenkatesh7366
    @raghavvenkatesh7366 3 года назад

    Waiting for your next one! 🙏

  • @ramanujank621
    @ramanujank621 Год назад

    Please upload the next videos, I'm eagerly waiting for your next videos all are awesome.

  • @radhakrishnang6529
    @radhakrishnang6529 Год назад

    5 வது கேள்வி பதில்

  • @dharanisubramanian919
    @dharanisubramanian919 3 года назад

    Super sir... Awaiting for your next video... upload all yaksha prasnas... thank you

  • @harikrishnan532
    @harikrishnan532 3 года назад +1

    Waiting for next video with great eager sir

  • @actorsubash5965
    @actorsubash5965 3 года назад

    Simple la pesitinga . நீங்க நல்லா இருக்கணும் நூறு வருஷம். இந்தப்பதிவு எல்லா மக்களையும் போய் சென்றடைய வேண்டும்.

  • @vishnuvijayan7224
    @vishnuvijayan7224 3 года назад +1

    Which explainer video tool are you using ? Thanks.

  • @rajappagunaseelan7381
    @rajappagunaseelan7381 3 года назад

    Waiting for next one,Sir.

  • @Balakrishnan-ro3rn
    @Balakrishnan-ro3rn 2 года назад

    சுவாமி அடியேன் இந்த சேனல் இப்போது என் வீடியோ போடுவதில்லை நல்ல தகவல்களை தானே கூறி வந்தீர்கள் என்னாயிற்று பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад

    ப்ரஹ்மன்(Brahman) என்ற சொல்லுக்கு விரிதல் அல்லது பரவுதல் என்று சம்ஸ்கிருதம் பொருள் சொல்லுகிறது.தென் இந்திய மொழிகளில் குறிப்பாக மலையாளம் மற்றும் தெலுங்கில் ப்ரஹ்மம்(Brahmam) என்றும் தமிழில் பிரமம் என்றும் சொல்லப்படுகிறது.

  • @user-fh3gq5ot4d
    @user-fh3gq5ot4d 3 года назад +1

    வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க.